Contact us at: sooddram@gmail.com

 

நேதாஜியின் மரணம்

வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள் !

இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் போரிட்டவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்பவர். ஆனால் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஒரு நாட்டின் வரலாறு பற்றி அறிய அந்த நாட்டு குடிமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தேசியத் தலைவரான சுபாஷ் சந்திர போஸின் கடைசி நாட்களைப் பற்றிய மர்மத்தை மக்களுக்கு தெரிவிக்க எந்த இந்திய அரசும் உண்மையாக முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை.

இதுவரை நேதாஜி பற்றிய ரகசியத்தை அறிய இந்தியாவில் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக 1956 ஆம் ஆண்டு நேரு, ஷா நவாஸ் கமிட்டி-ஐ அமைத்தார். இரண்டாவதாக கோசலா கமிட்டி அமைக்கப்பட்டது. 1999 – ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு முகர்ஜி கமிஷன்-ஐ அமைத்தது. இந்த விசாரனை கமிஷன் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி M.K. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கமிட்டி தனது அறிக்கையை 8-11-2005 அன்று அப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக சிவராஜ் பட்டீல் அவர்களிடம் அளித்தது. இந்திய பாராளுமன்றத்தில் 17-05-2006 அன்று அவ்வறிக்கை முன் வைக்கப்பட்டது.

முதல் இரண்டு கமிஷன்களின் முடிவுகளுக்கு எதிராக முகர்ஜி கமிஷன் முடிவு இருந்தது அது நேதாஜி 18-08-1945 அன்று விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஏற்கவில்லை. . நேதாஜி ரஷியா தப்பி செல்வதற்காகவே விமான விபத்து நடந்தது போல் நாடகம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக, 14-08-1945 முதல் 20-09-1945 வரை தைவானில் விமான விபத்து நடந்ததாக ஆவணங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என்ற தைவான் அரசின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டது.. அதே சமயத்தில் நேதாஜி ரஷியாவில் இருந்ததை உறுதிப்படுத்தவும் முடியவில்லை எனவும் கமிஷன் தெரிவித்தது. முகர்ஜி கமிஷன் அறிக்கையை காங்கரஸ் அரசு நிராகரித்தது. மேற்கண்ட மூன்று கமிஷன்களின் அறிக்கையுமே மக்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதிலாக மர்மத்தை அதிகரிக்கவே செய்கின்றன.

நேதாஜியின் மரணத்தை பற்றி பல புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக சமர் குஹா எழுதிய Netaji: Dead or Alive? மற்றும் அனுஜ் தார் எழுதிய Back from Dead: Inside the Subhas Bose Mystery ஆகியவைகளை சொல்ல முடியும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள அனுஜ் தார் எழுதிய India's Biggest Cover-up என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகமாக கருதப்படுகிறது.இப்புத்தகமானது 65 வருடங்களாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இந்திய ரகசிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தருகிறது. நேதாஜி 1985 வரை உயிரோடு இருந்தார் என்பதற்கான ஆதாரமாக மிக ரகசிய (top secret) ஆவணங்களையும், புகைப்படங்களையும் தருகிறது.
கூடுதலாக தற்போது இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது நேதாஜி பற்றிய உண்மைகள் வெளிவருவதை தடுக்கும் அல்லது மூடி மறைக்கும் வகையில் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கிறது.

பிரணாப் முகர்ஜி வெளி உறவு அமைச்சராக இருந்த பொது நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை போதிய ஆதாரங்கள் இல்லாத போதும் தேவைக்கும் அதிகமாக ஆதரித்தார் என்று புத்தகத்தின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 1996 –ல் நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறார். 1996 –ல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தனது ரகசிய குறிப்புரையில், ரஷிய உளவு நிறுவனமான KGP –இன் ரகசிய ஆவணங்களில் நேதாஜி பற்றிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதனை அறிய தேடுதல் நடவடிக்கை எடுக்கும்படி ரஷிய கூட்டமைப்பிடம் இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி அக்குறிப்புரையை படித்ததாகவும், அதன்பின் அப்போது வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சல்மான் ஹைதரை அழைத்து குறிப்புரை எழுதிய இணை செயலாளரை சந்திக்கும்படி அறிவுறித்தினார் என்றும், அச்சந்திப்பிற்கு பின்னர் அதே இணை செயலாளர் ஆவணங்களை ரஷியா அரசிடம் கேட்பது இந்திய ரஷிய நல்லுறவை பாதிக்கும் என்று குறிப்புரை எழுதினார் என்றும் அனுஜ் தார் கூறுகிறார். மேலும், நேதாஜி தைவானில் விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஆதரிக்கும் மிகப் பெரும் ஆதரவாளராக பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்றும் கூறுகிறார்.
மேலும் நேதாஜி 1945 ஆம் ஆண்டு விமான விபத்துக்கு பின்னர் ரஷியாவில் காணப்பட்டார் என்றும், அதுபற்றி இந்திய அரசாங்கம் ரஷிய அரசிடம் விளக்கம் ஏதும் கோரவில்லை என்றும் கூறுகிறார்.

1994-ல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம் ஜப்பானிய அரசாங்கம் முறையான இறப்பு சான்றிதழ் வழங்கி நேதாஜியின் இறப்பை உறுதி செய்துள்ளதா என் விளக்கம் கேட்டபோது வெளியுறவு அமைச்சகம் எதிர்மறையாகவே பதில் அளித்ததாகவும், ஏனென்றால் ஜப்பானின் ஆவணங்கள் வெளிப்படையாகவே போலியாக இருந்தது என்றும் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.

1945 விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றால் அவர் எப்போது இறந்திருப்பார்? என்று அனுஜ் தாரிடம் கேட்ட போது பைசலாபாத் நகரில் அவர் இறந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என்றும், ஆனால் இந்திய அரசு தனது உளவு நிறுவனங்களிடம் உள்ள மிக ரகசிய ஆவணங்களை வெளியிட்டால்தான் நேதாஜி பற்றிய மர்மங்களை முழுமையாக அவிழ்க்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் உட்பட இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுத்துவிட்டன. அவ்வாறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

நேதாஜி உயிருடன் இருந்தால் அல்லது உயிருடன் இருந்திருந்தால் யாருக்கு பிரச்சினையாக இருந்திருக்கும்? இந்திய அரசாங்கங்கள் குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் ஏன் நேதாஜி பற்றிய உண்மையை மக்களுக்கு அறிவிக்க முயற்சிக்கவில்லை?. நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார் என்ற வாதத்தை காங்கரஸ் தலைவர்கள் உரிய ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்துவது ஏன்?. நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுவது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்றால், நேதாஜியின் மரணம் என்பது மிக பெரிய ரகசியங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டால் அந்த ரகசியங்களுக்கு விடை கிடைக்கலாம்.
(Arun Kumar)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com