Contact us at: sooddram@gmail.com

 

திரைப்பட விமர்சனம்

கயல்

ஆறு மாதம் வேலை செய்து பணம் ஈட்டுவது, ஆறு மாதம் எங்கே வேண்டுமானாலும் பயணம் செல்வது என்று கிளம்பிவிடுகிறவர்கள் ஆரோன், சாக்ரடீஸ். ஒருவனது பெயர் முதலெழுத்தையே இன்னொருவன் தன் பெயருக்கான முன்னெழுத்தாக வைத்துக்கொள்கிற அளவுக்கு நெருக்கமான அந்த நண்பர்கள் கலகலப்பானவர்கள், வரக்கூடிய சூழல்கள் எதையும் அனுபவமாக ஏற்கத் தெரிந்தவர்கள். மற்றவர்களுக்கு ஏதோ பயன்படும் வகையில் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு பொருளாதாரம், அதிகாரம் சார்ந்த சொந்த லட்சியம் எதுவும் தேவையில்லை என்று சிறகடிக்கிற இருவரையும் பார்க்கிறபோது கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கிறது. ஊர் சுற்றிகள்தான் உலகத்தைக் கண்டுபிடித்தார்கள் என் ராகுல சங்கீர்த்தியாயன் தமது ஊர்சுற்றிப் புராணம் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது நினைவுக்கு வருகிறது.

குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி பகுதியில் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த பரம்பரைப் பணக்காரக் குடும்பம். அந்த வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகி தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிற நிலையில், அவள் தன் காதலனோடு ஊரைவிட்டு ஓடுகிறாள். அவர்களைப் பிடிக்க ஒரு கும்பல் விரட்டுகிறது. குடும்ப கவுரவக் கொந்தளிப்போடு இருக்கிற அந்த வீட்டுக்குள் நண்பர்கள் வந்து சேர்கிற பின்னணி கதைக்கு சுவை கூட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதை வளர்த்துச் செல்வதில் சந்திரன், ஆனந்தி, வின்சென்ட் உள்ளிட்ட நடிகர்கள் நன்றாகவே பங்களித்திருக்கிறார்கள்.

காதலர்கள் ஓடிப்போகத் துணை செய்தவர்கள் என்று இவர்களை நினைத்து உதைத்துத் துவைக்கிறவர்களைப் பார்த்து ஆரோன், இவர்கள் 1950களையும் 60களையும் சேர்ந்த கடைசித் தலைமுறைகள், இவர்கள் செத்துப்போனால் இவர்களோடு சாதியும் ஒழிந்துபோகும், என்கிறான். சாதியின் பெயரால் கட்டப்பட்ட வெற்றுப் பெருமிதங்கள் நுட்பமாக நையாண்டிக்கு உட்படுத்தப்படுவது ரசிக்கத்தக்கது. ஆனால், இன்றைய அரசியல்-பொருளாதார-சமூகக் கட்டத்தில், 2010களைச சேர்ந்த இளம் குருத்துகளின் மனங்களில் கூட பாகுபாடுகளும் வன்மங்களும் ஆழமாக ஊன்றப்பட்டு, சாதியம் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருப்பதை ஆரோனோ, அவனை உருவாக்கிய இயக்குநரோ புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நண்பர்களிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அனுப்பிவைக்கப்படுகிற வேலைக்காரப் பெண்தான் கயல். அவளைப் பார்த்ததும், உனக்கொரு வெளிச்சம் கிடைக்கும் என்று தன் தந்தை எழுதிய கடித வரிகளுக்கு உரியவள் அவள்தான் என்று கதாநாயகன் முடிவு செய்கிறான். அந்த நொடியிலிருந்து படம் காதல் பற்றிய வெறும் கற்பனாவாத கதையாடலுக்குத் தடம் மாறுகிறது.

பெயர் மட்டுமே தெரிந்த, ஒரே ஒரு நாளில் குறுகிய நேரம் மட்டுமே அறிமுகமான ஒருவன் என் உசுரு உன்கிட்டயேதான் இருக்கும் என்று சொன்னதை நம்பி ஒரு பெண் அவனைத் தேடி முன்பின் தெரியாத நகரத்திற்குப் புறப்பட்டுவிடுவாளா? இப்படியெல்லாம் யோசிப்பதை விட, அப்படிப் புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை இது என்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான்.
அந்தக் கற்பனாவாதம் கடைசியில் அந்த சுனாமியின் தாக்குதல் வரையில் தொடர்கிறது. அதைக்கூட, சுனாமியில் இப்படியெல்லாம் தப்பித்துவிட முடியுமா என்று கேட்பதற்கு மாறாக, அப்படித் தப்பியவர்களின் கதை இது என்பதாக ஏற்கலாம்தான். ஆயினும் எளிய ஆரம்பக் காட்சிகளில் ஏற்பட்ட மனப்பதிவுகள் வலிய இறுதிக்காட்சிகளில் ஏற்படவில்லையே... காதலுக்குத் தடையாகும் வேலிகளைத் தகர்ப்பதற்கான போராட்டங்கள் வலுவாகச் சொல்லப்படுவது எவ்வளவு தேவையோ, அதே அளவுக்கு காதல் பற்றிய உள்ளீடற்ற கற்பனைகளை வளர்த்துவிடக்கூடாது என்ற கவனமும் தேவை.

கன்னியாகுமரி கடற்கரையைத் தாக்கும் சுனாமி அனைத்தையும் உருக்குலைத்துப் போடுகிறது. ஒரு இயற்கைச் சீற்றத்தை இவ்வளவு நேர்த்த்தியாகப் பதிவு செய்த படம் தமிழில் இதற்கு முன் வந்ததாக நினைவில்லை. அந்த அதிர்ச்சி, பதைப்பு, அவலம், பரபரப்பு ஆகியவை உண்மையிலேயே அன்று சுனாமியின் பிடியில் சிக்கியவர்கள் நேரில் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்ற துடிப்பை ஏற்படுத்துகின்றன. காட்சி சிறப்பாக அமைத்த இயக்குநர் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் உள்ளிட்ட கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

சுனாமிகளும் புயல்களும் பூகம்பங்களும் இன்ன பிற இயற்கைப் பேரிடர்களும் திரும்பத் திரும்ப மனிதர்களுக்குச் சொல்வது ஒரு சேதிதான். காலுக்கு அடியில் சிக்கிய சிறு பூச்சிகளாய் உங்களை நசுக்கி விடுவோம். இப்படியொரு அற்ப வாழ்க்கையை வைத்துக்கொண்டு உங்களுக்கு அப்படி என்னடா சாதி, மதம், பணம், பதவி, எல்லை என்று வேற்றுமைகளும் பகைமைகளும் வேண்டிக்கிடக்கிறது? எல்லோரும் சமமென்று உணருங்களடா, என்பதே அந்தச் சேதி. சுனாமி அலைகளை விடவும் பெரிதாக மானுடப் பேரலைகள் எழுவதில்தான் வாழ்க்கையின் பொருள் பொதிந்திருக்கிறது என்ற கருத்தை ஆரோன்கள், கயல்கள், சாக்ரடீஸ்கள் மூலம் சொல்லியிருக்க முடியும்.. அந்த இலக்கைத் தவறவிட்டுவிட்டது படம்.
(தீக்கதிர் நாளேடின் ஜனவரி 11 இதழ்வண்ணக்கதிர் இணைப்பில் வெளியாக உள்ள எனது விமர்சனம்)

(Kumaresan Asak)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com