Contact us at: sooddram@gmail.com

 

மகிந்தவின் வீழ்ச்சி மற்றும் வரலாற்றின் முடிவு

(தயான் ஜயதிலகா)

“போர்களில் வெற்றி அல்லது தோல்வி ஏற்படலாம் --- ஆனால் போராட்டம் நடந்துள்ளது - சேகுவேரா

வருடக்கணக்கில் விவாதிக்கப்பட்ட விடயமான (1) மகிந்த ராஜபக்ஸவின் mahinda 2015-1கீழுள்ள ஸ்ரீலங்காவில் நிலவுவது சர்வாதிகாரம் அல்ல, ஆனால் ஒரு பலம் பொருந்திய ஜனநாயகம், ஏனென்றால் மத்திய வலதில் உள்ள ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையின் கீழுள்ள ஐதேக உருகும் நிலையில் உள்ளது, மற்றும் (2) மாறாக எதிர்க்கட்சியானது ஒரு தாரண்மையான தேசியத்தை முன்னிறுத்தியிருக்க வேண்டும், இந்த வகையில் எனது முன்னோக்கங்கள் குறைந்த பட்சம் பகுதியளவிலாவது நிரூபிக்கப் பட்டுள்ளது. அப்படியானால் ஏன் திரு. சிறிசேன என் முதல் தெரிவு ஆகாமல் இரண்டாவது தெரிவாக இருந்தார்? அதற்கான வெளிப்படையான காரணம் ரணில் - சந்திரிகா காரணி (அல்லது காரணிகள்). இரண்டாவது அவரது திட்டமான விரைவான வழியில் அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சாத்தியமான மையவிலக்கு விளைவுகளுமே.

எதிர்க்கட்சி உத்திகள் சரியான வழியில் சென்றுள்ளன மற்றும் அதனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் மகிந்த ராஜபக்ஸவையும் அவரது முகாமையும் திணறடித்து அவர்களைவிட விஞ்சி நின்றார்கள், மற்றும் அந்தக் கருத்தில் அவர்கள் வெற்றி பெறத் தகுதியுள்ளவர்களாவார்கள். எதிர்க்கட்சியின் வியுகமானது சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளையும் மற்றும் பெரும்பான்மையோரின் வாக்குகளில் ஒரு பிளவை ஏற்படுத்தி பெரும்பான்மையினரின் சிறுபான்மை வாக்குகளையும் வெல்லவேண்டும் என்பதாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கான திட்டம் வெளிப்படையானது மற்றும் பல மாதங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிறு பத்திரிகையில் மங்கள சமரவீரவினால் தெரிவிக்கப் பட்டிருந்தது. கலாநிதி. ராஜித சேனரத்னவின் 2012ம் ஆண்டின் காணொளியானது உண்மையாக இருப்பின் (அதற்கு முரணாக எந்த அறிக்கையும் நான் கேள்விப்படவில்லை) இந்த திட்டம் சில வருடங்களுக்கு முன்னதாக நடந்திருக்க வேண்டும் மற்றும் ஆரம்பத்தில் குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட தோற்றுவாய் அதிலிருந்திருக்கிறது. அந்த வருடத்தில், முக்கியமான புலம்பெயர் புலிகள் சார்பு செயற்பாட்டாளர் சாள்ஸ் ஞானக்கோன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை புகழ்பாடி மோசம் செய்வதற்கு பாரிய நிதியை பயன்படுத்தினார் என்பதை ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜித வெளிப்படுத்தினார், அந்த விடயத்துடன் இணைந்து “அவர்கள்” ராஜபக்ஸ நிருவாகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார்கள் என்கிற ஒரு கதையும் உலாவியது, அதன்படி திரு.விக்கிரமசிங்காவும் மற்றும் சமரவீராவும் தற்சமயம் களத்தில் உள்ளார்கள். மேலும் பொருத்தமான தருணத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சியை உடைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்காவும் ஸ்ரீலங்காவுக்கு வருகை தருவார் என்றும் கூறப்பட்டது.

உண்மையில் என்ன நடந்தது என்பதற்கும் இதற்கும் மிகச் சரியான ஒற்றுமை உள்ளது. அது நன்றாக வேலை செய்தது ஏனென்றால் வெற்றியை ஈடுசெய்வதற்கு பெரும்பான்மையினரிடம் இருந்து கிடைக்கும் வாக்குகள் போதுமானவை அல்ல, எனவே மொத்த இழப்பையும் சரியாக ஈடு செய்வதற்கு சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதும் மற்றும் பெரும்பான்மையினரின் வாக்குகளைத் துண்டாடுவதும்தான் பொருத்தமானது என முடிவு செய்யப்பட்டு அதைத் திரட்டுவதற்கு ஏற்ற சிறந்த தெரிவாக மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக தேர்வானார். இதை வலியுறுத்தும் விதமாக எதிரணியின் திட்டம் சிறந்த ஒன்றாக நிரூபிக்கப் பட்டது. மற்றும் அது வெற்றியும் அடைந்தது.

மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதித்துவ ஆட்சியில் உள்ளார்ந்த பலவீனம் இல்லாமலிருந்தால் அப்படியான நிலமை ஏற்பட்டிருக்காது. ஜனாதிபதி ராஜபக்ஸ தனது குடும்பத்தின் பாவங்களுக்காக அதிகமான விலையை செலுத்தியுள்ளார். ராஜபக்ஸ நிருவாகத்தின் யுத்தத்தின் பின்னான மாதிரி ஆட்சி, சமாதான காலத்தின் சமூகத் தேவைக்கு ஏற்றபடி இருக்கவில்லை. அந்த யுத்தத்தின் பின்னான மாதிரி கொள்கை, அணுகுமுறை, மனப்போக்கு என்பனவற்றை அளவுக்கு மீறி செயற்கைத் தன்மையுள்ளதாக ஆக்கியிருந்தது, மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் பிரசங்கங்களைவிட கோட்டபாயா ராஜபக்ஸவின் பிரசங்கம் அளவுக்கு மீறியதாக இருந்தது. மகிந்த ராஜபக்ஸ கோட்டபாயாவின் நிர்வாக அர்ப்பணிப்பின் உதவியுடன் யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தால், அவர் சமாதானத்தை இழந்ததுடன் அதன் காரணமாக தேர்தலிலும் தோல்வி அடைந்தார் ஏனென்றால் அந்த நேரத்தையும் மற்றும் இயல்பு நிலையை நோக்கிய முன்னேற்றத்தையும் மீறிச் செல்வதற்கு ஆளுமை மற்றும் கொள்கை கட்டுப்பாடுகள் தவறி விட்டன.

ரி.என்.ஏ தலைமை, நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக அமர்த்துவதற்கு முன்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து வடக்கு மாகாணசபையை இயங்கு நிலைக்கு கொண்டு வந்தால் தங்களால் ஒரு மில்லியன் வாக்குகளைப் பங்களிப்புச் செய்ய முடியும் என்று சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி நிரலில் இருந்த முதலாவது விடயம் தற்பொழுது பதவியில் உள்ள ஆளுனர் ஜெனரல். சந்திரசிறிக்குப் பதிலாக ஒரு சிவிலியன் ஆளுனரை பதவியில் அமர்த்துவது என்பதாகும். அந்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டதுடன், ஜெனரல் சந்திரசிறியை தொடர்ந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அவருக்குப் பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அந்த முடிவு கோட்டபாயாவினால் முன் தள்ளப்பட்டது. அதன்படி ரி.என்.ஏயின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை மகிந்த ராஜபக்ஸ பெற்றுக் கொள்ளவிருந்த கடைசி வாய்ப்பும் கை நழுவியது.

மகிந்த ராஜபக்ஸ வெளிநாட்டில் இருந்தபடியே அளுத்கம சம்பவத்தில் கலகம் ஏற்படுத்தும் பொது பல சேனா அணியினரை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார் என கலாநிதி. ராஜித சேனரத்னதான் என்னிடம் சொன்னார். ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவரிடம் கையளிக்கப்பட்ட ஒரு புலனாய்வு அறிக்கை மூலம் அந்தக் கைது கைவிடப்பட்டது, அப்படியான ஒரு கைது அநேகமாக நாடு தழுவிய ஒரு கலவரத்தை தூண்டிவிடும் என அந்த அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. அந்த கைவிடல் கொள்கை பொது பல சேனாவின் உயர்மட்ட பிக்குகள் கோட்டபாயாவை சந்தித்த நிகழ்வு ஒன்றின் பயனாக மேற்கொள்ளப் பட்டது, அரச கருவிகள் பொது பல சேனாவுக்கு ஆதரவளித்திருக்காவிட்டால், சகிப்புதன்மை உணர்வுகளின் எல்லை மீறிய விளைவின் காரணமாக கிட்டத்தட்ட முழு முஸ்லிம்களின் வாக்குகளையுமே இழக்க வேண்டியதாயிற்று.

மிகவும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட தவறான வெளிநாட்டுக் கொள்கைகளினால் திரும்பவும் கடும் போக்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செய்யப்பட்ட இறுதி ஆய்வு காரணமாக இந்தியாவின் ஆதரவை நாங்கள் இழந்தோம், அதேவேளை பொதுபல சேனா காரணியால் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமான ஓ.ஐ.சி யின் ஆதரவையும் இழக்க நேர்ந்தது. இது பரந்த இந்தோ – அமெரிக்க - இஸ்லாமிய வெளியக கூட்டினை கணிசமானளவு உள்நாட்டு சொத்துக்களுடன் சேர்த்து உருவாக்கியது, மற்றும் அதில் ஆட்சி மாற்றத்துக்கான ஆர்வமும் இளையோடியிருந்தது. அது வேலை செய்தும் விட்டது.

ஜனாதிபதி சிறிசேன முகங்கொடுக்க வேண்டிய பிரதான சவால்களாக இரண்டு உள்ளது. ஒன்று உள்நாட்டு பூகோள அரசியல். பெரும்பான்மையினரில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் இன – மத சமூகத்தவர்களான, தீவின் மையப் பகுதியில் உள்ள மக்கள் முதன்மையாக அவருக்கு வாக்களிக்கவில்லை, மாறாக அவரது போட்டியாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களித்திருந்தார்கள். மற்றைய சவால் ஜனாதிபதி சிறிசேன ஈடுபடவுள்ள திட்டம் மற்றும் மேடை, அதாவது பரீட்சித்துப் பார்க்காத அமைப்பு முறையின் மாற்றம், அதன் விளைவாக ஸ்திரமற்ற பல்முனை ஏமாற்று முயற்சிகள் இடம்பெறலாம் மற்றும் வெளியக மற்றும் சிறுபான்மை குழுக்களின் அழுத்தம் காரணமாக அது பாதிப்பற்றது என்று நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதையும் மற்றும் அதற்கான விரைவான அணுகுமுறையையும் கைவிடும்படி நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மாறாக அவர் ஒரு சாதாரண ஜனாதிபதியாக இருந்து தனது தவணைக்காலத்தில் சேவை செய்யும் அதேவேளை நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அளவுக்கு மீறிய நிறைவேற்று அதிகாரங்களை படிப்படியாகவும் மற்றும் ஒரு நியாயமான அணுகுமுறையுடன் குறைத்துக் கொள்ளலாம். நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமா, தொடரவேண்டுமா, அல்லது மறுசீரமைக்கப்பட வேண்டுமா என்பதற்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது நல்லதொரு யோசனை. ஒரு விரைவு வழி ஒழித்தலை அவர் தொடர்ந்தும் பின்பற்றுவாரானால் (மற்றும் அதேபோல நவ தாராண்மைவாத பொருளாதாரக் கொள்கைகளை அனுமதிப்பாரானால்), ஸ்ரீலங்கா தேசம் அது இருக்கவேண்டிய நிலையிலிருந்து சுத்தமாக துடைக்கப்பட்டு விடுவது மட்டுமல்லாது ஒரு பலவீனமான மையவிலக்கு அழுத்தத்துக்கும் உட்படும் (விசேடமாக அதன் இனச் சுற்றாடலில்) அதன்படி பலவீனமடைந்து, வேலை இழப்புக்கள்; இடம்பெற்று சுருங்கி விடும். அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான தேடா ஸ்கோப்பல் மிகவும் கடினமாக உழைத்து மேற்கொண்ட சமூக – வரலாற்று ஆராய்ச்சிப்படி நாட்டில் ஏற்படும் அத்தகைய வேலையிழப்பு தீவிர வன்முறை எழுச்சிக்கு காரணமாகிவிடலாம்.

எதிர்மறையான யுத்தத்தக்கு பின்னான போக்குகள் பற்றிய ஆரம்பகால விமர்சகன் என்கிற வகையில் அப்படியான ஒரு நிலை வருவதை என்னால் காண முடிகிறது. எப்படியாயினும் தடைகளை விலக்கி ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு ஆதரவு அளிப்பதையே நான் தெரிவு செய்கிறேன் (ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு நான் செய்ததுபோல), ஏனென்றால் பாவம் செய்வதற்கு எதிராக அதிக பாவங்களை செய்தவர் என்று நான் அவரை கருதியிருந்தேன் இன்னமும் கருதுகிறேன், அவருடைய தகுதிகள் அவருடைய தகுதியின்மையை பெருமளவு நீக்கி விடுகின்றன. இதை சாதாரண பாஷையில் சொல்வதானால் நான் ஒரு ஹீரோவை ஆதரிக்க விரும்புகிறேன் - அல்லது இந்த விடயத்தில் ஒரு வில்லனை – விசேடமாக அவர் ஒரு தோல்வியுற்ற நிலையில் இருக்கும்போது (புலிகளைப் போலவோ அல்லது 80 களில் இருந்த ஜேவிபி போலவோ வெறிபிடித்த நிலையில் இல்லை). இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

நடந்திருப்பது சாதாரணமாக ஒரு ஜனாதிபதியின் தோல்வி அல்ல. அது ஒரு சுழற்சியின் முடிவு, ஒருவேளை ஒரு காலத்தின் முடிவு என்றும் சொல்லலாம். விடிந்திருப்பது புதிய ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது பழைய யுத்தத்துக்கு முந்திய காலத்துக்கு திரும்புவதாகவும் இருக்கலாம். அதை பொறுத்திருந்து காணவேண்டும். இன்னமும் இதற்கு அப்பால் வேறொன்றும் உள்ளது. அது சில யோசனைகள், திட்டங்கள், என்பனவற்றுக்கு ஏற்பட்ட தோல்வி, முன்னுதாரணங்கள் என்ற வகையில் ஆராய்ந்து கண்டு பிடிக்க கூடியதாக உள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிரான அரசியல் போராட்டம் மற்றும் கடந்த போரின் உச்சக்கட்டமாக இராணுவ வெற்றி மற்றும் இராஜதந்திர வெற்றிகளை அடைந்தது. அது யுத்தகால பண்பாடாக கருதப்படுகிறது அல்லது இன்னும் வியத்தகு முறையில் சொல்வதானால் 2009ன் இலட்சியத்தை குறிக்கிறது. என்னுடைய எல்லா விமர்சனங்களையும் மீறி நான் மகிந்த ராஜபக்ஸவை அவரது மூன்று தேர்தல்களிலும் - 2005, 2010 மற்றும் 2015 - ஆதரித்தேன், ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவருடைய போட்டியாளர்களைக் காட்டிலும் அதிகமாக அந்த மதிப்புகளை நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். இந்த முறை ஐந்து மில்லியன மக்கள் அந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் அது போதமானதாக இருக்கவில்லை.

நடந்தது ஒரு முன்னுதாரணத்தின் முடிவு மட்டுமல்ல ஆனால் மிகவும் அடிப்படையான சமூகவியல் நிகழ்வு. உயரடுக்கு கோட்பாட்டின் தந்தையான இத்தாலியை சேர்ந்த வில்பிரட் பரேட்டோ சமூகங்களின் வரலாற்றில் இரண்டு பிரதான வகையான உயரடுக்கினரின் மாற்றம் அல்லது சுழற்சி பற்றி ஒரு மாதிரியை எழுதியுள்ளார், அதற்காக அவர் மச்சியவெல்லியின் “இளவரசன் மற்றும் கலவையாக்கப்பட் சிங்கங்கள் மற்றும் நரிகள்” என்பதில் காணப்படும் குறியீடுகளைக் கடன் வாங்கியுள்ளார். மகிந்த ராஜபக்ஸ ஒரு சிங்கம் அவர் சிங்கத்தின் காலத்தை பிரதிநிதித்துவப் படுத்தினார். இப்பொழுது அவரையும் அவரது காலத்தையும் நரிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பிரான்சிஸ் பக்யுமா தனது “வரலாற்றின் முடிவும் மற்றும் கடைசி மனிதனும்” என்கின்ற நூலில் தாராண்மைவாத ஜனநாயகத்தின் நிச்சயமான வெற்றி ஆட்சியை அமைப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனை என்று புகழ்ந்து பாராட்டுகிறார், ஆனால் அவரது பாராட்டு ஆழமான வருத்தத்தை ஒலிக்கிறது. இந்த வெற்றி ஒரு கதாநாயகனின் பலம் மற்றும் மதிப்புகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதாக அவர் கருதுகிறார், அதை ஹோமரின் கிரீஸ் காவியத்தில் நீட்சேயும் புகழ்ந்து சொல்கிறார். உடனடி வெற்றியை குறித்து கசப்பான அவநம்பிக்கை கொண்ட நீட்சே அதைப்பற்றி தனது வார்த்தைகளில் “ஒரு தௌ்ளுப் பூச்சியின் காலம்” எனக் குறிப்பிடுகிறார் மற்றும் வீரத்தனமற்ற கடைசி மனிதனின் வருகை மற்றும் அவனது உணர்வின் அடிப்படையில் அவன் ஒரு நுகர்வோனாகவே இருப்பான் என்றும் சொல்கிறார். தாராண்மைவாதியான பக்யுமா, தாராண்மைவாத ஜனநாயக முதலாளித்துவத்தின் வெற்றியை பாராட்டுகிறார், இருப்பினும் ஒரு தத்துவவாதி அதன் வருகைக்காக புலம்புவது போதும் என்றாகிவிடுகிறது.

இவைகளைச் சொன்னது மைத்திரிபால சிறிசேன ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் ரணில் விக்கிரமசிங்காவையோ அல்லது சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவையோ அந்தப் பாத்திரங்களில் எல்லையற்ற காலம்வரை வைத்திருப்பதை விரும்பக்கூடும். மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளார்கள் மற்றும் ஒற்றைமுனை நிலைப்பாடு முடிவடைந்து விட்டது. புதிய தலைமை விரைவு வழி முறையான மாற்றங்களை மீள் பரிசீலனை செய்வதுடன் அதற்குப் பதிலாக அரசியலமைப்பில் எந்தவித சாகஸப் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கு முன்பாக ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் மக்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

(தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com