Contact us at: sooddram@gmail.com

 

பிரான்ஸில் பகையான 'நையாண்டி''

"சார்லி ஹெப்டோ'' என்ற வாயில் நுழையாத பெயர் பிரான்ஸில் வாரம் ஒருமுறை வெளியாகும் நையாண்டி பத்திரிகை ஒன் றின் பெயர். பத்திரிகை என்பதற்காக நாம் நினைப்பது போல மரம் வெட்டிய, கால்வாய் தோண்டிய செய்திகளை பிர சுரிக்கும் சாதாரண பத்திரிகையல்ல. சம கால நிகழ்வுகளை நையாண்டியாக சொல் லும் கேலிச் சித்திரங்கள் கொண்ட ஒரு பத்திரிகை. இந்த பத்திரிகையை அங்குள்ள அர சியல்வாதிகள் பார்த்து கோபமடையாத நாட்களில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த பத்திரிகை எல்லாவற் றையும் நையாண்டி செய்கிறது. கடந்த புதன்கிழமை காலை சார்லி ஹெப்டோ பத்திரிகையின் டுவிட்டர் பக்கத்திற்கு ஒரு கேலிச்சித்திரம் வந்தது. கேலி சித்திரம் என்பதனால் அது கேலியாக இருக்கவில்லை. ஏனென்றால் அந்த சித்திரத்தில் இருந்தது அமெரிக்காவு க்கே பூச்சாண்டி காட்டு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி. அந்த சித்திரத் தில் புதிரான சம்பா'னையும் போடப்ப ட்டிருந்தது.

அதிலே பக்தாதி கூறுவது போல, ~~நல் வாழ்த்துக்கள்" என்று எழுதப்பட்டிருக்கி றது. அதற்கு பதிலாக மேல், "உங்களு க்கும் உரித்தாகட்டும்" என்று கட்டம் போட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த புதி ரான படத்தை பார்த்து எவரும் அலட்டி க்கொண்டதாக தெரியவில்லை. எவனோ தலை குழம்பியவன் போட்டிருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் இந்த கேலிச் சித்திரம் வெளி யாகி ஒருசில நிமிடங்கள் கூட கழிந்தி ருக்காது. புதன் காலையில் பத்திரிகை ஆசிரியர் பீட கூட்டம் நடந்துகொண்டிரு ந்தது. கறுப்பு முகமூடிய அணிந்த இரு வர் இயந்திர துப்பாக்கிகளுடன் பத்தி ரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து கண் டமேனிகு; சுட ஆரம்பித்தனர்.

அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டீபன் கார்போனியர், அவரது பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி, பத்திரிகைக்கு வந் திருந்த ஒருவர் மேலும் ஏழு ஊடகவி லாளர்கள் சம்பவ இடத்திலேயே கொல் லப்பட்டார். வந்த இரு துப்பாக்கிதா ரிகளும் அரபு மொழியில் ~~அல்லாஹ{ அக்பர்" என்று கூச்சலிட்டுக்கொண்டு சுட் டதால் வந்தவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது இலகுவாக இரு ந்தது. ~~இறைத்தூதர் முஹமதுவுக்காக பழிதீர்க்க நாம் வந்திருக்கிறோம்" என்று வேறு அந்த துப்பாக்கிதாரிகள் கூச்சலிட்டிருக்கிறார்கள்.

அலுவலகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அறிவுறுத்தப்பட்டதை அடு த்து பொலிஸாரும் அங்கு விரைந்தார் கள். அந்த குறுகிய விதியிலிருந்து ஆயு ததாரிகள் தப்பித்துச் செல்லாமல் இரு க்க பொலிஸார் அந்த பகுதியை சுற்றி வளைக்க முயன்றார்கள் ஆனால் வெளியே வந்த ஆயுததாரிகள் இரு பொலிஸாரை சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றார்கள். இந்த துப்பாக்கிதாரிகள் மொத்தம் 12 பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் பிரான்ஸ் எங்கும் பத ற்றத்தை ஏற்படுத்தியது. தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம்கள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அங்கு பள்ளி வாசல்கள் மீது பெட்ரோல் குண்டு எறியப்பட்டது. இத்தோடு முடியவில்லை கடந்த வியாழனன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் பொலிஸார் கொல்லப்பட்டார். கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஹொலி வ+ட் திரைப்படம் போல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்ளும், தப்பி ஓடும் கட்சிகளும், கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து வந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான கேள்வி, ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதாகும். அதற்கு முன்னர் இந்த தாக்குதலை நடத்தி சந்தேக நபர்களை பார்த்தால் இந்த சாகசத்தை செய்தவர்கள் ஒரு சகோ தரர்களாவர். இவர்கள் சயித் மற்றும் செர்ரிப் குவாச்சி சகோதரர்களாவர்.

இதிலே 32 வயதான செர்ரிப் என்பவர் ஒரு இஸ்லாமியவாத செயற்பாட்டாளர் என்பது அங்கிருக்கும் பொலிஸாருக்கு நீண்டகாலமாக தெரியும். ஈராக்கிற்கு ஜpஹாத் போராளிகளை அனுப்பும் குழுவொன்றுடன் தொடர்புபட்டதற்காக இவர் 2008 ஆம் ஆண்டில் சிறை அனுபவித்திருக்கிறார். இவரது சகோ தரர் பீட்சா உணவு விநியொகிப்பவராக வேலைபார்த்தவர் என்று அந்த நாட்டு ஊட கங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

ஆனால் இந்த சகோதரர்களின் தாக்குதல்கள் அவர்கள் தப்பியோடி முறைகளை பார்த்தால் நன்றாக பயிற்சி பெற்றவர்கள் என்று அவதானிகள் கூறுகிறார்கள். எனவே இவர்கள்; சிறந்த முறையில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் என்பதில் மறுப்பதற்கு இல்லை.

மேற்குலக நாடுகளில் அண்மைக் காலங்களில் ஓரிருவர் ஒன்று சேர்ந்த தாக்குதல் நடத்திவருவது அதிகரித் திருக்கிறது. அவுஸ்ரேலியாவில் உண வகத்திற்குள் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி ஒருவர் தாக்குதல் நடத்தி யதை எவரும் மறந்திருக்கமாட்டார் கள். அதற்கு முன்னர் கனடா பாராளு மன்றத்திற்குள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரிட்டன், அமெரிக்காவிலும் இப்படி யான தாக்குதல்கள் அடிக்கடி நிகழ் கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த பிரான்ஸ் தாக்குதலை பார்க்கின்றபோது இந்த தாக்குதலுக்கு இலக்கான இடத் தின் பின்னணியும்; கருத்துச் சுதந்திரம் பற்றிய ஒரு கதையும் இருக்கிறது.

~~நான் உனது கருத்தை ஏற்கப் போவதில்லை. ஆனால் அந்த கருத் தை சொல்வதற்கு உனக்கு இருக்கும் உரிமையை பாதுகாக்க எனது உயி ரையும் கொடுப்பேன்" என்று சொன்ன வர் அயர்லாந்து எழுத்தாளரும் கவிஞ ருமான ஒஸ்கார் வைல்ட். கருத்துச் சுதந்திரத்திற்கு கூறப்படும் ஒற்றைச் சொல் மந்திரம் இதுதான்.

இவ்வாறான கருத்துச் சுதந்திரத்திற் கும் மதங்களுக்கும் இடையில் எப்போ துமே ஒத்துப் போவதில்லை. ஐரோப்பா வின் இருண்ட காலம் என்று வர்ணிக் கப்படும் மத்திய காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை கருத்துச் சுதந்திரத்தின் வாயை இறுக தைத்து வைத்திருந்தது. ஆந்த தையலை அறுத்த பின்னர் ஐரோப்பா கருத்;துச் சுதந்திரத்தை தன் பாட்டுக்கு இயங்க விட்டு விட்டது.

இப்போதெல்லாம் கருத்துச் சுதந்திரத ;திற்கும் இஸ்லாத்திற்கும் தான் அடிக் கடி மோதல் ஏற்படுகிறது. காலத்திற்கு காலம் ஒரு சல்மான் ருஷ்டி என்றும் தஸ்லீமா நஸ்ரீன் என்றும் மேற்குலக அளவுகோளில் கருத்துச் சுதந்திரத்தை பார்ப்பவர்கள் உருவாகிக் கொண்டிருக் கிறார்கள்.

கடந்த 2005ம் ஆண்டு இறைத்தூதர் முஹமது நபியை மோசமாக சித்திரிக் கும் கேலிச் சித்திரத்தை டென்மார்க் கின் nஜய்லான்ஸ்-போஸ்டன் பத்தி ரிகை வெளியிட்டது சர்வதேச பிரச் சினையாக மாறியது. அதேபோன்று 2012ம் ஆண்டு 14 நிமிடங்கள் கொண்ட அமெரிக்க திரைப்படம் ஒன்றின் முன் னோடி காட்சிகள் ய+டியுப் இணை யதளத்தில் வெளியானது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படமும் இறைத்தூதர் முஹமது நபியை மிக மோசமாக சித்தரித்திருந்தது.

இந்த வரிசையில் சார்லி ஹெப்டோ பத்திரிகை 2011ம் ஆண்டில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி வெளியான பத்திரிகையின் முதல் பக்கத்தில் இருந்த கேலிச் சித்திரத்தி ற்கு 'ரியா சட்டம் என்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. அதிலே முஹமது நபி என குறிப்பிட்டு ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது. அந்த கதாப்பாத்திரம் குறிப்பிடுவதாக, ~~சிரித் துக் கொண்டே இறக்காவிட்டால் 100 கசையடி வழங்கப்படும்" என்று எழுதப் பட்டிருந்தது.

இந்த கேலிச் சித்திரம் சர்வதேச அளவில் பிரபலம் அடையவில்லை. ஆனால் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது ஒரு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பத்திரிகையின் இணையதளப் பக்கம் ஹெக் செய்யப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சார்லி ஹெப்டோ பத்திரிகை விசேட வெளியீடொன்றையே பிரசுரித்தது. அந்த இதழுக்கு இறைத்தூதர் முஹமது நபியே தலைமை ஆசிரியர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த சிறப்பு இதழின் முகப்பு பக்கத்தில் வெளியான முஹமது நபியை சித்தரிக்கும் கேலிச் சித்திரம் சமூக தளங்களில் பல தினங்கள் பிரபலமாக இருந்தது.

2012ம் ஆண்டு இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படம் காரணமாக சர்வதேச அளவில் வன் முறைகள் வெடித்து லிபியாவில் இருக் கும் அமெரிக்க துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில தினங்களிலேயே இறைத் தூதரை அவ மதிக்கும் அந்த பிரசுரம் வெளியானது. இந்த பத்திரிகையில் ஒரு சில சித்தி ரங்களில் நிர்வாணமாகவும் வர்ணிக்கப் பட்டிருந்தது.

இந்த கேலிச் சித்திரம் வெளியா னதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பல நாடுகளிலும் தூதரகங்களின் பாது காப்பை அதிகரித்தது. இதில் 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங் கள், துணைத் தூதரகங்கள், கலாசார மையங்கள் மற்றும் பிரான்ஸின் சர்வ தேச பாடசாலைகள் மூடப்பட்டன. கேலிச் சித்திரங்களை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பாரிஸ் அலுவலகத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதிலே ஒரு கேலிச் சித்திரத்திற்கு 1963ம் ஆண்டு வெளியான 'கொன்ட ம்ப்ட'' என்ற திரைப்படம் பின்னணியாக அமைந்திருந்தது. இதில் இறைத்தூதர் என்று சித்தரிக்கப்படும் கேலிச் சித்திரம், இயக்குனரைப் பார்த்து, 'எனது பின் புறம் அழகாக இருக்கிறதா' என்று கேட்பது போல் அமைந்துள்ளது. மற் றொரு கேலிச் சித்திரத்தில் இறைத் தூதர் என சித்தரிக்கப்படுபவர் குனிந் திருப்பது போன்றும் அவருக்கு பின் னால்; திரைப்பட நட்சத்திரங்கள் வரி சையில் நிற்பது போன்றும் வரையப் பட்டுள்ளது. அதில் 'நட்சத்திரம் ஒன்று பிறக்கிறது' என வசனம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

இதன் அட்டைப் படத்தில்; பிரசுரிக்கப் பட்டிருந்த கேலிச் சித்திரத்தில் பழை மைவாத ய+தர் ஒருவர் தலைப்பாகை அணிந்த ஒருவரை சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வது போன்றும், அந்த யு+தரை சக்கர நாற்காலியில் இருப்பவர் 'நீ ஒரு முட்டாள்'' என கூறுவது போன் றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கேலிச்சித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, சார்லி ஹெப்டோ பத்திரி கையின் இணையத் தளத்தில் பலர் எச் சரிக்கை விட்டு கருத்துகளை வெளி யிட்டனர்.

ஆனால் அப்போது உலகமே அமெ ரிக்க திரைப்பட சர்ச்சையில் நேரம் இல்லாமல் இருந்ததால் இந்த கேலிச் சித்திரங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை.

பிரான்ஸ் என்பது ஐரோப்பாவில் அதிக முஸ்லிம் சனத்தெகை கொண்ட நாடாகும். அங்கு சுமார் 4 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களின் மனங்களையும் புண் படுத்தும் வகையில் கேலிச் சித்திரங் களை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டீபன் கார் போனியர், "எனது நம்பிக்கைக்கு எதி ரான கருத்துக்களை கேட்க நான் பள் ளிவாசல்களுக்கு செல்லமாட்டேன். அதேபோன்று கடும்போக்கு முஸ்லிம்க ளும் எமது சார்லி ஹெப்டோ பத்திரி கையை வாசிக்குமாறு நான் கோர வில்லை'' என்று நியாயம் கூறி இருந் தார். ஸ்டீபன் கார்போனியரும் கடந்த புதன் தாக்குதலில் பரிதாபமாகக் கொல் லப்பட்டிருக்கிறார்.

சார்லி ஹெப்டோ பாத்திரிகை தாக்கு தலின் பின்னணியில் கருத்துச் சுதந்தி ரக் கதை மாத்திரமே இருக்கும் என்றும் சொல்ல முடியாது. தாக்குதல் நடத்து வதற்கு வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு காரணமாகக் கூட இது இருக்கக் கூடும்.

ஈராக் மற்றும் சிரியாவில் கணிசமான நிலத்தை கைப்பற்றி சுயமாக இஸ்லா மிய கிளாபத்தை உருவாக்கிக் கொண் டிருக்கும் ஐ.எஸ். குழுவுக்கு ஐரோப்பா வெங்கும் ரசிகர்கள் அதிகம். இந்த ஐ.எஸ். குழு ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த தம்மை பின்பற்றுபவர்களுக்கு வலுயுறுத்தி வருகிறது. இந்த பின்னணி யில் ஐரோப்பாவில் தனிப்பட்ட தாக்கு தல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த வரிசையிலும் பத்திரிகை மீதான தாக்கு தலை எடுத்துக் கொள்ள முடியும்.

ஐ.எஸ். குழுவுக்கு எதிராக கூட்டணி அமைத்து வான் தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முகாமில் பிரான்ஸ{ம் முக்கிய கதாப்பாத்திரம் வகித்து வரு கிறது. எனவே பிரான்ஸ் ஐ.எஸ். அல் லது அதுபோன்ற ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு இலக்காகும் அச்சுறுத் தல் இருக்கும் நாடுகளில் ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும்.

(எஸ். பிர்தௌஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com