Contact us at: sooddram@gmail.com

 

காந்தி ஒரு தீவிரவாதி

மாறாகக் கொலைகாரர்களை தீவிரவாதி என்பது சரியல்ல.

பாரிஸ் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் போன்றவர்களை “தீவிரவாதிகள்” என்ற சொல்லால் சித்தரிப்பதே தவறு என்று நினைக்கிறேன். ஒரு நல்ல நோக்கமும் கொள்கையும் உள்ள ஒருவர் அதற்காக முனைப்புடன் செயல்படுவதும், அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பதும்தான் தீவிரவாதம். அந்த வகையில் காந்தி ஒரு தீவிரவாதி எனலாம். மாறாகக் கொலைகாரர்களை தீவிரவாதி என்பது சரியல்ல. அவர்கள் பயங்கரர்கள், மனிதகுல விரோதிகள். உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்ட முறையில் இப்படிப்பட்ட சொற்களை உருவாக்கிப் பரப்புகிறார்கள், நாமும் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இறைவனுக்கு உருவம் இல்லை என்பது இஸ்லாமிய நம்பிக்கை. உருவமே இல்லாத இறைவனை ஒருவர் உருவமாக வரைந்தார், கேலிச்சித்திரம் தீட்டினார் என்பதற்காக அவரைத் தாக்குகிறார்கள் என்றால் அவர்களுக்குத்தான் தங்களுடைய மார்க்கம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்று அர்த்தம். உருவமில்லா இறைவனுக்கு உருவம் கொடுப்பது தவறென்றால், அதற்காக ஆத்திரமடைவதும் தவறுதான். அப்படி ஆத்திரப்படுகிறவர்களும் வன்முறையில் இறங்குகிறவர்களும்தான் தங்களுடைய இறைவனை அவமதிக்கிறார்கள்.
அந்தப் பத்திரிகை செய்தது சரியா, கருத்துச் சுதந்திரம் எதுவரை என்று கேட்கிறீர்கள். ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பு - உங்கள் கருத்தோடு முரண்படுகிறேன், ஆனால் உங்கள் கருத்தை வெளியிடும் உரிமையை மதிக்கிறேன், அதறகாக நான் நிற்கிறேன் என்பதே. எனது சுதந்திரம் இன்னொருவரின் சுதந்திரத்திற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற உணர்வு எனக்கு இருக்க வேண்டும். ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கு அந்தக் கருத்து மக்களிடையே பரவ வேண்டும் என்ற நோக்கம் இருக்குமானால் அதைப் பக்குவமாகத்தான் செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் உலகத்தில் ஒரு மதம் கூட இருக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பம். மதம் இல்லாத உலகமே என் கனவு. ஆனால், அதைச் சொல்கிறபோது உங்கள் மத உணர்வை இழிவுபடுத்தக்கூடாது, உங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தக்கூடாது என்ற பொறுப்போடும்தான் என் கருத்தை வெளிப்படுத்துவேன். எனது நாத்திகக் கருத்துகளைக் கருத்துகளைக் கூறுகிறபோது, நம்பிக்கை உள்ளவர்களோடும் உரையாட வேண்டும் என்ற கவனத்தோடுதான் சொற்களைக் கையாளுவேன்.

அப்படித்தான ‘சார்லி ஹெப்தோ’ போன்ற பத்திரிகைகளும் செயல்பட வேண்டும். இது அவரவர் சமூக அக்கறையோடு சம்பந்தப்பட்டது. அரசியல, மதம், பொருளாதாரம் என அனைத்தையும் விமரிசிக்கிற கார்ட்டூன்கள் அந்தப் பத்திரிகையில் வெளியாகின்றன. ஒரு கார்ட்டூனால் ஒரு பிரிவினர் தங்கள் நம்பிக்கை அவமதிக்கப்படுவதாக நினைக்கிறார்கள் என்று அந்தப் பத்திரிகைக்கு ஏற்கெனவே தெரியும் என்கிறபோது, அந்தப் பொறுப்பும் சமூக அக்கறையும் மேலோங்க வேண்டும்.

ஆனால் அந்தப் பொறுப்பு சமுதாய அக்கறையிலிருந்து வரவேண்டுமேயல்லாமல், சட்டத்தால் வரையறுக்கப்பட்டதாக ஆயுதங்களால் அடக்கப்பட்டதாக வரக்கூடாது. தூரிகையையே ஆயுதமாக ஏந்தியவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்குவது அநாகரிகத்தின் உச்சம்.
இஸ்லாமிய தலைவர்கள் இதைக் கண்டிக்க வேண்டாமா என்று கேட்கப்படுகிறது. பிரான்ஸ் உட்பட உலகெங்கும் இஸ்லாமிய தலைவர்கள் இதைக் கண்டித்திருக்கிறார்கள். முதலில், சிலர் செய்கிற இப்படிப்பட்ட அத்துமீறல்களிலிருந்து இஸ்லாமிய அமைப்புகள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலேயே கூட ஒரு நிர்ப்பந்தம் இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதவிரோத வன்முறைகள் எல்லோராலும் கண்டிக்கப்பட வேண்டியவை. அது ஒரு புறமிருக்க, தமிழகத்தில் அண்மையில் ஒரு இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத எதிர்ப்புப் பேரணி நடத்தியது. அந்த அமைப்பின் பல நிலைபாடுகளோடு எனக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும், எத்தனை ஊடகங்கள் அந்தப் பேரணிக்கு முக்கியத்துவம் கொடுத்தன என்று கேட்க விரும்புகிறேன்.

இது போன்ற செயல்களில் இறங்குகிறவர்களை “லோன்லி உல்வ்ஸ்” அதாவது “தனிப்பட்ட ஓநாய்கள்” என்று மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் இப்படி ஆயுதம் தூக்குகிறவர்களின் பின்னால், மதவாதம் ஊறிய சிந்தனைகளை விதைக்கிற கூட்டங்க்ள் இருக்கின்றன. காந்தியைக் கொன்ற கோட்ஸே ஒரு லோன்லி உல்ஃப் என்று சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் திருச்செங்கோட்டில் ஒரு எழுத்தாளரை அச்சுறுத்துகிறவர்கள் லோன்லி உல்வ்ஸ் என்று சொல்ல முடியுமா? உலகம் முழுவதும் கடவுளின் பெயரால் இப்படிப்பட்ட செயல்களில் இறங்குகிறவர்கள் நிச்சயமாக லோன்லி உல்வ்ஸ் அல்ல, அவர்கள் “கிரௌடட் உல்வ்ஸ்” (கூட்டமாக உள்ள உல்வ்ஸ்)என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலஸ்தீன மக்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசு, இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்திய அமெரிக்க அரசு... பல நாடுகளிலும் தலைதூக்கியிருக்கிற வலதுசாரி அரசியல்... அதிலே குளிர்காயும் உலகச் சுரண்டல் கூட்டங்கள்... இந்த கிரௌடட் உல்வ்ஸ் பற்றியும் விவாதித்தால்தான் எதிர்காலத்திலாவது இப்படிப்பட்டவர்கள் உருவாவதைத் தடுக்க முடியும்.
(‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியில் ஜனவரி 10 அன்று இரவு நடந்த விவாதத்தில் நான் கூறிய கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. உடன் பங்கேற்றோர் மத்திய புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநர் ரகோத்தமன், தமுமுக செயலாளர் ஹாஜா கனி.)

Kumaresan Asak

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com