Contact us at: sooddram@gmail.com

 

தைப்பொங்கல்

செய்தி:- தைப்பொங்கல் என்றவுடன் சக்கரைப்புக்கை, வடை, பாயாசம், வெடிகள் என குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கொண்டாட்டமாகவே இருக்கும். தமிழர்க ளால் கொண்டாடப்படும் இத்தைப்பொங்கலை பலரும் பல மாதிரிப் புனைகிறார்கள். தைப்பொங்கலை தமிழர்திருநாள் என்றும் உழவர்திருநாள் என்றும், தமிழர்களின் வருட ப்பிறப்பு என்றும் பலமாதிரிப் புனைவுகளுடன் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படியானால் தைபொங்கல் என்றால் என்ன?. இதற்கு விடைகாண விளைகிறது பார்வையின் கோணங்கள்.

பொங்கும் முறை

சூரியன் எழுவதற்கு முன்னர் எழுந்து குளித்து தோய்து உலர்ந்த ஆடை அணிந்து, கோலம் போட்டு, பொங்கும் பகுதி மா, மாக்குறுணல், செங்கட்டி தூள் கொண்டு வரை யறுக்கப்பட்டபின், முத்தத்தில் சூரியன் எழும்திசையை நோக்கி பொங்கல்பானை வைக்கப்படும். வரையறுக்கப்பட்ட பகுதியின் வடகிழக்கு முலையில் தலைவாழை யிலையில் நெல்லிட்டு அதன்மேல் நிறைகுடம் கும்பம், வாழைப்பழம், வாழைப்பழத்தில் சாம்பிறாணிக்குச்சி, வெற்றிலையில் பாக்குசீவல் சாணத்தில் பிடிப்கப்பட்ட அறுகம்பு ல்லுப்பிள்ளையார் ஒரு குவளையில் பசும்பால் அறுகம்புல்லுடன் வைக்கப்படும். முக்கியாக வசதி உள்ளவர்கள் வெண்பொங்கலுக்கு ஒருபானையும் சக்கரைப் பொங்க லுக்கு ஒருபானையும் வைத்தாலும் வெண்பொங்கலே விழாவின் முக்கியஸ்தர் ஆவார்.

பொங்கலுக்கென்று களிமண்ணில் அடுப்புப்பிடிக்கப்பட்டு சாணியினால் மெழுகப்பட்டுத் தாயாராக இருக்கும். இதுகாலப்போக்கில் செங்கட்டியில் தொழிற்சாலை அச்சுக்களில் வார்த்த அடுப்புகளாக மாறியதுமுண்டு. ஆரம்பகாலங்களில் 3கல்லிலேயே வைத்துப் பொங்கினார்கள். அதாவது காலத்துக்கேற்ற மாற்றங்களையும் பொங்கல் கிரகித்து வந்திருக்கிறது என்பதையும் காணலாம். பானையில் நீருடன் பசுப்பாலும் சேர்ந்து விடு வார்கள். தண்ணீர் கொதித்துப் பொங்கிவழிவதற்காக நெருப்பை கொஞ்சம் அதிகமா கவே வைப்பார்கள். பால்விட்ட காரணத்தினால் நுரை வரைகட்டி ஒருபக்கம் சரியும். அப்போ குஞ்சு குருமன்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பொங்கல் சரியும் போதுதான் வெடி கொழுத்த அனுமதி தருவார்கள். அப்போது அயல்வீடுகளுக்கும் ஏன் ஊருக்கே தெரியும் பொங்கல் இந்தவீட்டில் சரிந்து விட்டது என்று. பொங்கல் எந்தப்பக்கம் சரிகிறது என்பதை வைத்து அடுத்துவருடம் விளைச்சல் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள். முக்கியமாக பொங்கல் சரிவது வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு என்பதே விருப்புக்குரியதாக இருக்கும். இதற்கும் பல காரணம் உண்டு

பொங்கல் சரிந்ததும் புத்தரிசி (சிவப்பரிசி) இட்டு பொங்கல் தொடரும்பேளை அருகில் வடை மோதம் முறுக்கு சிப்பி எனத் தின்பண்டங்களும் தயாராகும். பொங்கல் தயாரானதும் வடக்குத் தெற்காக சூரியனுக்கு எதிராக தலை வாழையிலையில் பொங்கல் படைக்கப்பட்டு தின்பண்டங்களும் வைக்கப்படும். வடக்குத் தெற்காக தலை வாழையிலையில் படைப்பதற்கும் காரணம் உண்டு. அதாவது சூரியன் வடக்குத் தெற்காக உள்ள அச்சிலே கிழக்கு மேற்காகவே உலககை வலம்வருவார். குடும்பத்தி லுள்ள அனைவரும் சூரியனை நோக்கி நின்று தேவாரங்கள் பாடி உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள். சூரியனுக்காய் படைக்கப்பட்ட படையல் நீர் தெழித்தபின் அனைத்திலும் சிறிது சிறிது எடுத்துப்போய் முதலில் காகத்தை அழைத்து அவற்றைக் கொடுப்பார்கள். பொங்கல்நாளில் காகங்களும் பிசியாகவே (நேரமின்றி) இருக்கும். பின்னர் வீட்டுப்பிராணிகள் அனைத்துக்கும் கொடுத்த பின்னர். அயலவர்களுக்கும் உளவில் உதவிய தொழிலாளருக்கும் முக்கியமாக ஊரில் பொங்காதவர்களுக்கும் (மரணம் சம்பவித்த வீடுகளுக்கு), வேற்று மதத்தவர் களுக்கும் படையல் அனுப்பப்படும்.

தைப்பொங்கலை சரியாக அவதானிப்பீர்களானால் பல சமூகம்சார் விழுமியங்கள், கலாசாரம், பண்பாடுகள், மனிதநேயம், ஒன்றுமை, மேம்பாடு, பலநற்குணங்களையும் பல ஆளமான விழுமியத் தொடரையும் காணலாம். இதை தமிழர் திருநாள் என்று யாரும் கூறியதில்லை. தமிழர்களின் உழவர் திருநாள் என்றே இது வழங்கப்பட்டு வந்தது.

பார்வையின் கோணம்கள்

இன்று இப்பொங்கல் பலரால் தமக்கேற்றமாதிரி, தத்தமது வசதிகளுக்கு ஏற்றவாறு, அரசியல் பிரமுகத்துவற்துக்கு ஏற்றவகையில் பொதுமக்கள் குழப்பப்படுகிறார்கள். இது எமது வருங்காலச்சந்ததியை இன்னும் குழப்பங்களுக்கு உள்ளாக்கி ஒர் ஒழுங்கில்லா தன்மை வெறுப்பு மனப்பான்மையை உருவாக்கும். அதனால் தான் நாம் எப்படித் தைப்பொங்களைக் கொண்டாடி வந்தோம் என்பதை எழுதவேண்டி இருந்தது

தையில் வருவதால் தைப்பொங்கல் என்றால் அது ஏன் 14, 15ல் வரவேண்டும்? சரி மாதத்தின் நடுநாள் என்றால் 15, எதற்குப் 14 திகதி? எதற்காக சூரியனை நோக்கிப் பொங்கப்படுகிறது? உழவுக்கு உதவியவர்களுக்கு சம்பளம் கொத்தபின்னர் அவர்களு க்கு எதற்கா படையலும் புதுப்புடவைகளும்? தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் எதற்கு மாட்டுப்பொங்கல்? போகிப்பொங்கல்? எமது காலங்களில் உயரமாக வளர்ந்து வெள்ள த்தின் மேல் படுத்துக்கிடக்கக் கூடிய பெரும்போகப் பெரியநெற்களே விளைவிக் கப்பட்டு வந்தன. காலப்போக்கில் சிறுபோக 3மாதத்தில் விளைச்சல் தரும் நெல்வகை கள் கண்டு பிடிக்கப்பட்டன. இருப்பினும் தைமாதக்கடசி வரை வெள்ளம் நிற்பதனால் விளைச்சல் தைமாத்தின் பின்னரே கிடைக்கும். அப்போ எதற்கு இந்தப்பொங்கல் தை மாதத்தில் வருகிறது என்ற கேள்வியும் எழலாம்.

தைப்பொங்கல் என்ற பெயரிலேயே அதனுடைய அர்த்தம் ஆழமாகப் பொதிந்திரு ப்பதைப் பார்க்கலாம். தையில் வரவேண்டியது பொங்கப்படவேண்டியது என்பது கண்கூடு. பொங்கலுக்கு அரசி, நெல்லு என்பன முக்கியமாகிறது. இதை தமிழ்வருடப்பிறப்பு என்றால் பதனி (கேக்) வெட்டியோ, மிருகங்களை வதைத்தோ, தண்ணியடித்தோ மேசை கதிரைகளில் இருந்தோ கொண்டாடி வந்திருக்கலாமே. ஏன் இப்படி பழக்க வளங்கங்கள் இருக்கவில்லை என்பதை குழப்பங்களை எற்படுத்துபவர்களும் குழப்பிப் போனவர்களும் கவனிக்க கடவது. இது எப்படிக் கொண்டாடப்படவேண்டும் என்று தனிமுறை உண்டு. இது இலங்கை இந்தியாவில் தமிழர்களால் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

முழுவிளைச்சலானது தைமாதத்தின் பின்பு கிடைத்தாலும் பயிர் பால்கட்டி அவலுக்குத் தயாராக இருப்பது தைமாத நடுப்பகுதியிலாகும். முளங்காலளவு வெள்ளத்தில் முற்றிய கதிர்களை அறுத்துவந்து வணக்க அறையில்(சாமியறையில்) தொங்க விடுவார்கள். இதை புதிர் எடுப்பு என்பர். நெற்பயிர் செய்கையை வெள்ளாமை என்பர். வெள்ளத்தை ஆண்டுதான் பயிர்செய்யமுடியும். வெள்ளத்தை ஆள்வதற்கு வரம்பு உயரமாக இருந்தல் அவசியல். இதனால்தான் அரசனை வாழ்த்தும் போது 'வரப்புயர்க' என்றார் ஒளவையார். வரப்புயர நீர் உயரும். நீருயர நெல்லுயரும், நெல்லுயர குடி உயரும், குடி உயர்ந்தால் கோல் உயர்வான். வள்ளுவன் கூட 'உழுதுண்;டு வாழ்வோரே வாழ்வார் மற்றையோர் தொழுதுண்டு பின்செல்வர்' என்றார். ஆக உழவு என்பதன் முக்கியத்துமும் அத்தியாவசியமும் அன்று எப்படி என்பது அறிதகு நிலையாகிறது. இங்கே விளைச்சலே கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதை தைபொங்கல் அல்லது உழவர் திருநாள் என்றார்களே தவிர தமிழ் வருடப்பிறப்பு என்று யாரும் கூறியதில்லை. இவ்வரசியில் புழுகுகளும் தேவையில்லை.

இறை நிந்தகர்கள், உழவுத்தொழில் செய்யாதோர், அரசியல் போக்குக் காட்டுவோர், மதம்மாறியோர், மாற்றோர், வேற்றுமதத்தவர்கள் எனப்பலதும் தமக்கு ஏற்றால் போல் உழவர்திருநாளை வரையறுக்கு முயல்கிறார்கள். அன்று பெரும்பான்மையாக இந்துக்கள் உழவர்களாக இருந்த காரணத்தினால் இந்துமத்தின் ஆதிக்கம் தைப் பொங்கலில் இருப்பதைக் காணலாம். தமிழர்க்கு என்று ஒரு தனி வருடப்பிறப்பு இல்லாத காரணத்தினால் தைப்பொங்கலை வருடப்பிறப்பாக அறியாமையினர் அறிவிக்க முயல்கின்றனர்.

தைப்பொங்கலில் மட்டுமல்ல தமிழர்களிலும், தமிழிலும், இந்துமதத்தின் பாதிப்பு இரு ந்து வந்திருக்கிறது. முக்கியாக தைப்பொங்கலை திதியை பார்த்தே கணித்தார் கள். இதனால் சிலவேளை 14ம்திகதியும் சிலவேளைகளில் 15ம் திகதியும் பொங்கல் வருகிறது. நாம் இலங்கையில் பாவிக்கும் பஞ்சாகமானது தமிழ்வருடக் கணிப்பீட்டுடன் இரகுநாதையருடையது. ஆனால் இந்தியாவில் திருக்கணிதம் என்றமுறை பயன்படுத்த ப்பட்டு வருகிறது. இவற்றிலில் சிலமணித்தியாலங்கள் ஒரிரு நாட்கள் வேறுபாடு உள்ளது. அதாவது நாம்வாழும் பகுதி எந்த கிடை நெடுங்கோடுகளுக்கு இடையில் அமைகிறது என்பதைப் பொறுத்தே கிரகங்களின் நிலை இருக்கும். இந்தப் பஞ்சாங் கங்களின் வேறுபாடுகளாவன ஒருவர் தெருவில் வந்தவுடன் வந்துவிட்டார் என்பார். மற் றையவர் வீட்டுக்குள் வந்ததும் வந்துவிட்டார் என்பார். இதுவே நேர நாள்மாற்றத்துக்கு காரணமாகிறது.

இனிச்சாத்திர முறைப்படி எப்படி தை14,15ல் பொங்கல்நாள் பொங்கும்நாள் ஆகிறது? உழவுக்கும், உழவர்களுக்கும், தைப்பொங்கலுக்கும் சூரியனே காரணகர்த்தா என்ற பின் சூரியனுடைய சுழற்சி என்பது முக்கியமாகிறது. சூரியபகவான் சித்திரை 14 மேடராசியில் இருந்து ஒவ்வொரு மாதமாக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து வருவார். சரியாக தை14,15 லே தனுராசியில் இருந்த சனிபகவான் தன் ஆட்சிவீடான மகரத் தினுள் நுளைவார். சனீஸ்வரனே தானியங்களுக்கும், விளைச்சலுக்கும் அதிபதியாவார். இங்கே கவனியுங்கள் நெல்விளைந்து அறுவடையாகும் காலங்கள் தை ,மாசி இந்த இரண்டு மாதமும் சனியின் ஆதிக்கத்துக்குரிய மாதங்களாக உள்ளதைக் காண்க. கிரகங்களும் அதன் பலன்களும் எப்படி ஒற்றுமைப்படுகிறது என்பதையும் அறிக.

இதேபோன்று இராசிகளின் முதல்வீடான மேடத்துக்குள் சூரியன் பிரவேசிப்பது அதா வது ஒரு சுற்று முடிந்து புதுச்சுற்று ஆரம்பிப்பதே தமிழ், சிங்கள, இந்து, பௌத்த வருடப்பிறப்பாகும். என்றும் சுற்றின் ஆரம்பம்தானே புதியது அதுதானே புது வருடமாக இருக்க முடியும்.

தைப்பொங்கலை தமிழ்வருடப்பிறப்பு என்று மக்களைக் குழப்புவோரின் கவனக்கவும் தைப்பொங்கலுக்கு அடுத்தடுத்து நாட்களில் மாட்டுப் பொங்கல் போகிப்பொங்கல் வருகிறதே. அது எதற்கு? எதற்கு மாட்டுக்கு மட்டும் பொங்கல் பன்றிப்பொங்கல் பூனைப்பொங்கல், நாய்பொங்கல் என்று தமிழ்ழினம் தொடர்ந்து பொங்கிப் பெருகியிருக்கலாமே. வருடம் பூராக பொங்கலாகவே இருந்திருக்குமே. என் அப்படி யில்லை என்பதையும் அறிக.

இனியாவது குளப்பங்களை விடுத்து யாதார்ந்தம், உண்மைநிலை, பண்பாடு, கலாசாரம் விழுமியங்கள் என்பனவற்றை உணர்ந்து எதிர்கால எம்சமூகத்துக்கு வழிகாட்டுங்கள். உழவுக்கு சூரியன் அவசியம் என்பதை உலகிலுள்ள அனைத்து இனமும் காலா சாரங்களும் அறிந்திருக்கின்றன. வடஐரோப்பா, வடதுருவநாடுகளில் சூரியனை வரவேற் கும் ஒளிநாள்பற்றி இணையத்தில் எழுதியிருந்தேன். இன்று அந்த ஒளிநாள் கிறிஸ்த வத்தின் ஆக்கிரமிப்பில் நத்தாராக மாறியுள்ளது. இந்த சூரியனை வரவேற்கும் ஒளிநாளை எவரும் வருடப்பிறப்பு என்பதில்லை. இந்துக்கள், தமிழர்கள், முக்கியமாக உளவர்கள் சூரியனை மையமாகக் கொண்டே வாழ்ந்தார்கள். தமிழர்கள் இந்துக் கள், பௌத்தர்களின் நூர்டன் மித்தலெகி (வடதுருவமித்துக்கள்) வழிபாடுகளில் சூரியனும் ஒரு இயற்கைத் தெய்வமாகவே வணக்கப்பட்டிருக்கிறது. நோர்வே போன்ற துருவநாடுகளுக்கு வடக்கே வாழும் ஒருவகை மங்கோலிய அடியைக் கொண்ட சாமர் களும் சூரியவணக்கதையே கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இதனால் தான் இந்துக் களின் முதல் வேதமான இருக்குவேதத்தில் இயற்கை வணக்கமே அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. அதாவது தமிழுக்கு தை அதாவது ஆங்கிலத்துக்கு தை 14 சூரியன் மகரராசியினுள் பிரவேசிக்கும் நாளாகும். இதுவே தைப்பொங்கல் உழவர்திருநாள் ஆகும்.

பொங்கலுக்கு ஊரில் நாம் வெடிகொழுத்திக் கொண்டாடினோம். அரசியல் மூளைச் சலவையில் பின் ஒருவருக்கு ஒருவர் வெடிகொழுத்தி விளையாடினோம். பின் துரோகி கள், இராணுவம் என்று வெடிகொழுத்தல் வளர்ந்து மனிதர்கள் அனுமார்களாகி நாடே வெடிகளால் கொழுத்துப்பட நாட்டை விட்டு ஓடிவந்து புலத்தில் புதைந்து கொண் டோம். ஊரில் ஒரு குடிசை என்றாலும் சிறுமுற்றமாவது இருக்கும். எம்மில் பலர் முற் றமேயில்லா தொடர்மாடி கட்டிடங்களிலும், முற்றம் முழுவதும் பனிகொட்டிக்கிடக்கும் தேசங்களில் வாழ்கிறோம். இதனால் புலத்தில் புலனற்று பொங்கல் அடுக்களைகளில் (சமையலறைகளில்) மின்சாரத்தில் பொங்கப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்க ளால் மாற்றங்களை ஏற்றாலும் பொங்கலின் பெருமையையும், உழவின் மகத்து வத் தையும், மனிதர்களின் நன்றி மறவாகுணத்தையும,; பகிர்துண்ணும் பழக்கங்களையும், மிருகங்களின் மீதான நேசிப்புக்களையும,; பொங்கலூடாக உங்கள் புதிய பரம்பரைக்கு எடுத்தியம்புங்கள். பொங்கல் தமிழர்களினதும் இந்துக்களினதும் உழவர்களினதும் பண்பாட்டு கலாசார விழுமியத் திருநாளாகும். இது ஒர் உழவர் திருநாள்.

(பொங்கல் வாழ்த்துக்கள் கொண்டுவரும் நோர்வே நக்கீரா 14.01.2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com