Contact us at: sooddram@gmail.com

 

சுரேஸுக்கு ஆனந்த கண்ணீர், சுமந்திரனுக்கு சோக கண்ணீர்!

சுமந்திரன் மீது சுரேஸ் பாய்ச்சல் …………………?

(அருந்ததி)

“அரசியல் என்றால் அங்கு குழிபறிப்பும் கூத்தாட்டமும் அளவுக்கு மிஞ்சி நடக்கும். தன்னோடு சேர்ந்திருப்பவனை கூட உய்ய விடாமல் காவல் காத்து நிற்பதிலேயே அரசியல் வாதிகள் கண்ணும் கருத்துமாக காரியமாற்றுவார்கள். இத்தகைய அரசியலுக்கு பெயர் போனவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முரண்பாட்டு மூட்டை. அதற்குள் குடி புகுந்திருப்பவர்களில் சிலர் அடுத்தவனுக்கு குழிபறிப்பதில் விண்ணாதி விண்ணர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சாளராக இருப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே. ஆனாலும் சுமந்திரனின் வருகைக்கு பின்னால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பிடி தளர்ந்து விட்டது.

இதனால் இந்த இருவரும் அந்த அமைப்புக்குள் முகத்துக்கு நேரே புன்னகைத்து பேசினாலும் நீயா?.. நானா?... என்ற கயிறிழுப்பில் இறங்கியுள்ளனர். அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் போது சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சுமந்திரன் அமைச்சரானால் தனக்கே ஆபத்து என்று கொதித்தெழுந்தார் சுரேஸ். தன்னிடம் எஞ்சியிருக்கும் ஆளுமையும் பறி போகும் ஆபத்து நேரிடும் என்று சுடு நீரை பருகி விட்ட குட்டி நாய் போல் துடி துடித்து ஓடித்திருந்தார்.

ஏனென்றால் அமைச்சுப்பதவி என்றால் அதன் மீது ஒட்டுண்ணி போல் ஒட்டிக் கொள்ளவே சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அலாதிப்பிரியம். தனக்கு கிடைக்காத அமைச்சு வேறு ஒருவருக்கும் கிடைக்க கூடாது என்பதே அவரது விருப்பம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை ஆட்சி உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது இந்திய தூதுவராக இருந்தவர் டிக்ஸித். கொழும்பு இந்திய தூதகரத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபாதான் முதலமைச்சர் என்றார் டிக்ஸித். ஆனாலும் அதை பெருந்தன்மையோடு பத்மநாபா ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து துள்ளி குதித்த சுரேஸ் தானே முதலமைச்சர் என்றார். அதற்காக டிக்ஸித்தின் காலைப் பிடிக்காத குறையாக தன்னையே முதலமைச்சராக நியமிக்குமாறு மன்றாடினார். ஆனாலும் அதை ஏற்க மறுத்த டிக்ஸித் வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் என்று உறுதிபட தெரிவித்து விட்டார். சுரேசுக்கு முகம் மெல்ல கருக்கத்தொடங்கி விட்டது. அடுத்த அமைச்சர்கள் யார்?.. என்ற விவாதங்களின்போது முதலமைச்சர் பதவி தராவிட்டாலும் ஒரு அமைச்சராவது தாருங்கள் என்று கெஞ்சினார். அதையும் டிக்ஸித் நிராகரித்ததோடு அமைச்சரவையில் ஒரு முஸ்லிம், ஒரு சிங்களவர் என கட்டாயம் உள்ளடங்க வேண்டும் என்று கூறிவிட்டார். முஸ்லிம்களில் ஒருவரான அபூயூசப், சிங்களவரில் ஒருவரான தயான் ஜெயதிலகா என்று இரு அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் நீங்கலாக மொத்தம் நான்கு அமைச்சர்களில் நிரப்பப்பட வேண்டியது இன்னும் இரண்டு இடங்களே. கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் அடுத்து கிருபாகரனை தெரிவு செய்தனர். எஞ்சிய ஒரு இடம் தனக்கு கிடைக்கும் என காத்திருந்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஆனாலும் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்திற்கு ஒன்று ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் அது கணேசலிங்கத்திற்கு வழங்குவதாக முடிவாகி விட்டது. இடிந்து விழுந்த சுரேஸ் இந்திய தூததகர் டிக்ஸித் முன்பாக கண்ணீர் விட்டு மன்றாடியும் வட கிடக்கு மாகாணசபையில் அவருக்கு அமைச்சு பதவியும் கிடைக்கவில்லை. சுரேஸ் கண்ணீர் விட்டார் என்பது வெறுமனே ஒரு சோடிப்புக்காக சொல்லப்படும் கதையல்ல. தமிழரின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சு பதவிக்காக கண்ணீர் விட்ட ஒரேயொரு அரசியல்வாதி சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும்தான்.

ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு மாகாணசபையும் மண்ணாங்கட்டியும் என்று தேர்தலில் மோசடி செய்து 89 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சென்றார். ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினரானபோதும் மாகாண சபைக்குச் சென்று ஒரு மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட பெருமையும் சுரேஸையே சாரும். பாராளுமன்றத்தேர்தலில் சுரேஸ் தோல்வியடைந்தார் சந்திரிகா 94 இல் ஆட்சிக்கு வந்தார். அதில் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் கெஞ்சி மன்றாடி ஒருவாறு மஹிந்தவின் மீன் பிடி அமைச்சின் ஆலோசகராக பணி புரியத் தொடங்கினார் சுரேஸ். ஒரு கட்சியின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர் அமைச்சின் ஆலோசகராக இருந்து பணம் தேடிய கதை அது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2001 இல் நடந்த சம்பவம்தான். அப்போது யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது கட்சி சார்பில் வன்னியில் போட்டியிட்டு வென்ற சிவசகத்தி ஆனந்தனின் பதவியை தனக்கு தருமாறு வற்புறுத்தியதை யாரும் மறக்கப் போவதில்லை. தானே கட்சியின் தலைவர் என்றும் தனக்கே அந்த நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தனிடம் இருந்து சுரேஸ் அந்த பதவியை பிடுங்கி எடுக்க படாத பாடு பட்டார். ஆனாலும் சிவசக்தி ஆனந்தன் அதற்கு அசைந்து கொடுக்கவே மறுத்து விட்டார். இவ்வாறு ஒவ்வொரு குறுக்கு வழிகளை கையாண்டும் பதவி கிடைக்காத சுரேஸ் தனது பதவி நாற்காலிக்காக தனது தலைவரையே கொன்றொழித்த புலிகளின் தலைவர் பிரபாகரனை வழிபடத் தொடங்கினார்.

யாழில் நடந்த புலிகள் அமைப்பின் ஊர்வலம் ஒன்றின் போது பிரபாகரனின் படத்தை தாங்கிய சுலோக அட்டை ஒன்றை தூக்கியபடி சுரேஸ் நடந்து வந்ததை ஊடகக்காரர்கள் கண்டு விட்டனர். அவரை படம் பிடிக்க எத்தனித்தபோது பிரபாகரனின் படம் பொறித்த சுலோக அட்டையால் தனது முகத்தை மறைத்துக்கோண்டு சுரேஸ் கூனிக்குறுகி நடந்த காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை. உண்மையாகவே தமிழ் தேசியம் என்றாலோ அல்லது புலிகள் என்றாலோ சுரேஸுக்கு கீரியை கண்ட பாம்பு மாதிரி வெறுப்பு. ஆனாலும் பதவியே போற்றி போற்றி சங்கரா என்று ஊடகவியலாளர் தராக்கியுடன் கொக்கட்டிச்சோலைக்கு சென்று புலிகளின் தளபதிகளில் ஒருவரான கரிகாலனை சந்தித்து பாவ விமோசனம் பெற்றுக் கொண்டார் சுரேஸ்.

வன்னிக்காடு இருக்கும் திசை நோக்கி விழுந்து கும்பிட்டு புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கமானார் சுரேஸ். சுரேஸின் இந்த அந்தர் பல்டிக்குப் பின்னரே ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தோழர் சுபத்திரனும், தோழர் சுகுவும் சுரேஸை விட்டுப் பிரிந்து ஈ.பி.ஆர்.எல.எப் நாபா அணியை உருவாக்கினார்கள். அன்றிலிருந்து அடித்தது அவருக்கு வெள்ளி திசை. இல்லையென்றால் இன்றும் சில நூறு வாக்குகளை மட்டும் பெற்று பணமிருந்தால் நானும் எம்பியாகலாம் என்று இப்பவும் புலம்பிக்கொண்டேயிருந்திருப்பார்.

இறுதியாக வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடைத்த போது தனது தம்பியார் சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி தரவேண்டும் என்று சுரேஸ் அலைந்து திரிந்ததும் கிடைக்கவில்லை. பதவியேற்பு வைபவத்தின்போது தம்பிகளுக்கு அமைச்சு பொறுப்பு இங்கு யாரும் கேட்கக்கூடாது என்று முதல்வர் விக்கியர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சின்னத்தனமான செயல் மீது சீறிப்பாய்ந்ததும் இதனால் ஏமாந்து போன சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களை முதல்வர் விக்கியர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டதும் உலகறிந்த உண்மை.

தனது தம்பியார் சர்வேஸ்வரனுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சு பதவி ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்டதால் ஐங்கரநேசனையே தனது கட்சியில் இருந்து வெளியேற்றி அமைச்சு பதவியின் மீது தனக்கிருந்த அடங்காத ஆசையை வெளிப்படுத்தியவரே சுரேஸ் பிரேமச்சந்திரன். இவ்வாறு கால காலமாக அமைச்சுக்கும் பதவிக்கும் அலைந்து திரியும் சுரேஸ் பிரேமச்சந்திரன் “சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி” என்று வந்த கதையை நம்பி தன்னை தூற்றி திரிவதாக சுமந்திரன் குமுறுகிறார். இதை வெளியில் சொன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெட்கம். சொல்லாவிட்டாலும் தனக்கு துக்கம் என்று முணுமுணுக்கிறார் சுமந்திரன். ”

(இந்தக் கட்டுரையில் மாகாணசபை அமைச்சர்கள் நியமனம் சிறப்பாக சிங்கள் முஸ்லீம். கிழக்குமாகாண பிரதிநித்துவம் முதல் அமைச்சர் என்பன தோழர் பத்தமநாபாவின் சிந்தனையிலிருந்து உதிர்த்து ஈபிஆர்எல்எவ் இன் பெரும்பான்மையினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்தே உண்மை. ஆனாலும் சுரேஷ் இன் பதவி ஆசைப் பற்றிய கருத்தோட்டம் முழுமையாக உண்மையானது என்ற வகையில் இங்கு இது பிரிசுரம் ஆகின்றது. - சாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com