Contact us at: sooddram@gmail.com

 

எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை இனி என்ன செய்யலாம் சி.சிவன்சுதன்

சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் பொறிமுறையிலே ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா? அல்லது இடைக் காலங்களிலே இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லையா? அல்லது அண்மைக்காலத்து நடவடிக்கைகளில் ஏதாவது கவனக் குறைவுகள் இருந்தனவா? என்பன பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, இந்த நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.

இந்தப் பிரதேசங்களில் காணப்படும் சில கிணறுகளில் எண்ணெயின் செறிவு லீற்றர் ஒன்றுக்கு 30mg வரை காணப்படுகிறது. பல கிணறுகளில் இதன் செறிவு 3mg தொடக்கம் 4mg வரை வேறுபடுகிறது. இந்த எண்ணெய்ச் செறிவு உடல் நலத்துக்குப் பாதுகாப்பானது அல்ல. உலக சுகாதார நிறுவனங்கள் நீரிலே இவ்வாறான எண்ணெய்களின் செறிவு 0.2mg இற்கு மேற்படாது இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. சுன்னாகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட எத்தனை கிலோ மீற்றர் சுற்றுவட்டாரப் பகுதி நிலத்தடி நீரிலே இந்த எண்ணெய் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. என்பது இன்னும் துல்லியமாக அறியப்படவில்லை.

இந்த நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் கழிவு எண்ணெயில் காணப்படும் மீனேல், பென்சீன் போன்ற அறேமற்றிக் ஐதரோகாபன்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியன. இந்தக் கழிவு எண்ணெய்கள் தொடர்ச்சியாக உள்ளெடுக்கப்பட்டடால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று நமபப்படுகிறது. அத்துடன் இவை சில தோல் நோய்களையும் ஏற்படுத்தவல்லவை.

இந்த எண்ணெயில் கரைந்து காணப்படும் சில உலோகங்களும் நாளடைவிலே பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க வாய்ப்புண்டு. இந்த எண்ணெயிலே ஈயத்தின் செறிவு அதிகமாக இருந்தால் பல நரம்பு சம்பந்தமான நோய்களையும் குறோமியம் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்த முடியும். அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களிலும் இந்த எண்ணெய் பல்வேறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

எனவே இந்தப் பகுதியில் வாழும் மக்கள் கிணற்று நீரைக் குடிப்பதையும் சமையலுக்குப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடலை நோக்கிய இயற்கையான நிலத்தடி நீரோட்டம் காரணமாக சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் வடக்கு நோக்கிய பகுதிகளிலே இந்த எண்ணெய் கூடுதலாகப் பரம்பலடைந்திருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் மாற்றுக் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த முயற்சி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதிகளிலே பெருமளவு விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. இந்த விவசாய விளைபொருள்களிலே இந்த எண்ணெய் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. சில சேர்வைகளும் மூலகங்களும் மண்ணிலே குறைந்த செறிவிலே காணப்பட்டாலும் அந்த மண்ணில் வளரும் தாவரங்களிலே அவற்றின் செறிவு அதிகரிப்பதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. இந்தத் தொடர் செறிவாக்கல் பொறிமுறை காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து பெறப்படும் விவசாய விளைபொருள்களிலும் பழவகைகளிலும் வேண்டப்படாத ஏதாவது சேர்வைகளின் செறிவு அதிகமாகக் காணப்படுகின்றதா? என்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட வேண்டி இருக்கிறது.
பொன்கொழிக்கும் பூமியாக பரந்த விவசாய நிலங்களையும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சுன்னாகம் மண்ணின் நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரம் லீற்றர் கழிவு எண்ணெயை எவ்வாறு அகற்றப் போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு அகற்றப்போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றோம். இதனால் மனிதனில் ஏற்படக்கூடிய பெரிய சுகாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும்? இந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களிலும் தாவரங்களிலும் இந்த எண்ணைய் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது? இந்தப் பகுதியில் வளரும் தாவர உற்ப்பத்திப் பொருள்களை மனிதன் உட்கொள்வது பாதுகாப்பானதா? இந்த மாசு பட்ட நீரை அருந்தும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களிலே இந்த எண்ணெய் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்? இவற்றின் இறைச்சிகளையும் முட்டைகளையும் மனிதன் உணவாக உள்கொள்வது பாதுகாப்பானதா?

இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை காண்பதற்கு பல்துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் பெறப்படவேண்டிய கட்டாய நிலை தோன்றி இருக்கிறது.

2012ஆம் ஆண்டளவிலே சுன்னாகத்து நிலத்தடி நீரிலே எண்ணெய் கலந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து புதிதாக எண்ணெய் மண்ணில் சேருவதைத் தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படிருக்கின்றன. இது சம்பந்தமான ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பொதுமக்களுக்கு இது சம்பந்தமான தெளிவான அறிவூட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டிய அவசர அவசிய தேவை எழுந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கான அறிவூட்டல், ஆலோசனை நிகழ்வுகள் விரிவுபடுத்தப்படவேண்டும். இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய இடர்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக அமையும்.

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் 50 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகின்றது. இதில் பணியாற்றுபவர்களின் கடின உழைப்பு பாராட்டுதற்குரியது. இந்த நிலையத்தின் தொழிற்பாட்டின் போது வளிமண்டலத்துக்கு விடப்படும் எண்ணெயத் துகள்கள், காபன்கள் மற்றும் கான்சேர்வைகளின் தாக்கம் மக்களுக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு பொறிமுறைகள் மூலம் அந்தப்பிரதேசத்து வளிமண்டலம் அசுத்தமடைவது முற்றாகத் தடுக்கபட்டிருக்கிறதா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்வது நல்லது. இது அங்கு தொழில்புரிபவர்களினதும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வாழ்பவர்களினதும் சுகாதார நிலையைப் பாதுகாத்துக்கொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். வளிமண்டலம் இவ்வாறு அசுத்தமடையுமாயின் அது நுரையீரல், சுவாசத் தொகுதி மற்றும் உடல் சம்பந்தமான பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும்.

இந்த பிரதேசத்து மக்கள் மழை காலங்களில் நிலத்தடி நீரிலுள்ள எண்ணெயின் செறிவு குறைவாகவும், கோடை காலங்களில் இதன் செறிவு கூடுதலாகவும் இருப்பதை அவதானித்திருக்கிறார்கள். இந்த நிலத்தடி எண்யெ் கலப்பு பிரச்சினைகள் காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட மன உளைச்சல்களுக்கும் ஆட்பட்டு இருக்கிறார்கள் இந்தப் பிரச்சினையில் தாம் தனித்துவிடப்பட்டு விட்டோமோ? எவரது உதவியை நாடுவது இனி என்ன செய்வது? எமக்கு ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும்? போன்ற பல விடைதெரியாத வினாக்களினால் மனக்குழப்பத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரதும் கூட்டு முயற்சி அவசியமாகின்றது.

நிலத்தடி நீரில் கலந்திருக்கும் எண்ணெயின் துல்லியமான இரசாயனக் கட்டமைப்புகளும் அவற்றின் வீதாசாரமும் அறியப்பட வேண்டும் அத்துடன் அந்த எண்ணெயில் கரைந்திருக்கும் இரசாயனப் பொருள்களும் மூலகங்களும் எவை? அவற்றின் செறிவுகள் என்ன? என்பது சம்பந்தமாகவும் ஆராய்ச்சிகள் செய்து அறிப்படவேண்டும். இவை அறியப்படின் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் பொருத்தமான தடுப்பு முறைகளையும் வினைத்திறனுடன் செய்வதற்கு இது உதவியாக அமையும்.

இது பல மக்களைப் பாதிக்கப்கூடிய பிரச்சினையாக இருப்பதாலும், பல்துறை வல்லுநர்களின் பங்களிப்புத் தேவையாக இருப்பதாலும், பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பெருந்தொகையான பணம் தேவைப்படுவதாலும் இதனை ஒரு தேசியப் பிரச்சினையாகப் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது பயனுடையதாக அமையும்.

சுன்னாகம் மண்ணிலும் அதன் நிலத்தடி நீரிலும் கலந்துபோயிருக்கும் பெருமளவிலான எண்ணெய்ப் படிவுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் இந்த மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கும் இனி என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும்.

முதலாவதாக எண்ணெய்க்கலப்பு நடந்திருக்கும் பகுதிகள் தெளிவாக இனம் காணப்பட்டு அந்தப்பகுதி மக்களுக்கு மாற்று குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுவது நல்லது. அத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நிலத்தடி நீரை குடிப்பதற்கோ சமையலுக்குப் பாவிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இதற்கு மேலதிகமாக புதிதாக சுற்றாடலிலோ அல்லது நிலத்தடி நீரிலோ எண்ணெய்க்கலப்பு நடத்துகொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொண்ணப்பட்டு, சுற்றாடல் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது முக்கியமானதொன்றாகும். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையப் பகுதியின் மண்ணிலே எங்காவது எண்ணெய் செறிவு மிக அதிகமாகக் காணப்பட்டால் அந்தப்பகுதி மண்ணை அகழ்ந்து எடுத்து அப்புறப்படுத்துவதன் மூலம் புதிதாக எண்ணெய் நிலத்தடி நீரைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தப் பிரதேச மக்களுக்கு வேறு பகுதிகளில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பதை விட எண்ணெய்க் கலப்பு இடம்பெற்றுள்ள பகுதி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அதனைச் சுத்திகரித்து மக்களுக்கு விநியோகித்தால் அந்தப் பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவை பூர்த்தி அடைவதுடன் நிலத்தடி நீரிலே கலந்து போயிருக்கும் எண்ணெய்ப் படிவங்களும் படிப்படியாக அகற்றப்படுவதற்கு வசதியாக அமையும். அத்துடன் தொடர்ச்சியாக உறிஞ்சி எடுக்கும் பகுதியை நோக்கி நிலத்தடி எண்ணெய் படிவங்கள் நகரும். இது நிலத்தடி எண்ணெய்ப படிவங்கள் அகற்றப்படுவதை இலகுவாக்கும். கடல் நீருடன் கலந்திருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு சில பக்றீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நிலத்தடி நீரில் கலந்துபோயிருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு இந்த முறையைப் பயன்படுத்த முடியாது.

இந்தப்பிரதேச மக்களுக்குப் புதிதாக ஏதாவது சுகாதாரப்பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா என்று மருத்துவக் குழுக்கள் வழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்துடன் இந்தப் பிரதேசத்து மக்களிடையே அவர்களின் ஆரோக்கிய நிலை சம்பந்தமான ஆய்வுகளும், மருத்துவக் குழுக்களினால் ஆரம்பிக்கப்படவேண்டிய நிலை எழுந்திருக்கிறது. ஏதாவது சுகாதாரப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டால் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் ஆய்வுகளும் விரிவு படுத்தப்படவேண்டும். இந்தப் பகுதி நிலத்தடிநீரை விலங்குகளோ அல்லது பறவைகளோ அருந்த விடுவதற்கு முன்னர் அந்த நீரை சிறிதளவு நேரம் ஒரு பாத்திரத்திலோ அல்லது வாளியிலொ வைத்திருக்கும் பொழுது எண்ணெய்க் கலப்பின் பெரும்பகுதி நீரின் மேற்பரப்புக்கு வந்து சேரும். அதன்பின்னர் அந்த மேற்படலத்தை அகற்றியபின் அதனை பறவைகளும் விலங்குகளும் அருந்த விடலாம். இதன் மூலம் கோழி, ஆடு, மாடு போன்றவை இந்த எண்ணெய் கலப்பினால் தாக்கப்படும் வீதத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இவற்றிலே எண்ணெய்த் தாக்கம் ஏற்பட்டால் அவற்றிலிருந்து பெறப்படும் முட்டை, இறைச்சி, என்பவற்றின் தரத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்தப் பிரதேசத்திலே விளையும் விவசாய உற்பத்திப் பொருள்களான மரக்கறி வகைகள், பழ வகைகள், தேங்காய் என்பவற்றிலே கழிவு எண்ணெயில் காணப்படும் ஏதாவது இரசாயனப் பதார்த்தங்கள் செறிவடைந்திருக்கின்றனவா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். இந்த விவசாய விளை பொருள்களை மனிதர்கள் பாவிப்பது பாதுகாப்பானதுதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் எண்ணெய், இயற்கையான நிலத்தடி நீரோட்டத்தால் கழுவப்பட்டு கடலைச் சென்றடைய நீண்டகாலம் எடுக்கும். அதுவரை காத்திருக்க முடியாது. அவ்வாறு காத்திருப்போமாயின் அது பல சூழல் பாதிப்புகளையும், சுகாதாரப் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். எனவே பலமுனைகளில் பல்துறைசார் விற்பன்னர்களின் வழிகாட்டலில் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. எண்ணெய்ச் செறிவு கூடிய பிரதேசங்களின் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் தூய்மையாகும் வேகத்தை விரைவு படுத்த முடியும்.

ஒருதுறையினர் இன்னொருதுறையினர் மீது குற்றம் காண்பதை விடுத்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் இந்த எண்ணெய்க்கலப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து அல்லது தவிர்த்து இந்த நிலையை வெற்றிகரமாகக் கையாள முடியும். அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளவும் முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com