Contact us at: sooddram@gmail.com

 

யாழ்‬.குடாநாட்டை அச்சுறுத்தும் கழிவு ஒயில் !!

யாழ்.குடாநாட்டில் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலத்தடி நீரில் கழிவு எண்ணைய் கலக்கும் விடயம் தொடர்பாக பலவிதமான கதைகள் அடிபடுகின்றன. வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதியில் இக்கழிவு ஒயில் கசிவு மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்களின் தண்ணீர் மற்றும் குடிதண்ணீர்த் தேவைப் பாதிக்கப்பட்டு வருகின்றமை உண்மையான விடயம். இதனை யாரும் மறுக்கவோ மறுக்கவோ முடியாது. ஆரம்பத்தில் சுன்னாம் பகுதிகளில் பரவி வந்த இவ் எண்ணைக் கசிவு சுமார் 4 மாதங்களுக்குள்ளேயே தெல்லிப்பழை யூனியன் கல்லூரிப் பிரதேசம் வரை சென்றுவிட்டது. நிலத்தின் சுண்ணாம்புப் பறைகளின் இடுக்குகளுக்கு இடையினால் கசிந்து செல்லும் இக்கழிவு எண்ணைய் நிலத்தடி நீரூற்றுக்களில் கலந்து கிணறுகளில் போய் விழுகின்றன. இதனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும் கிணற்று நீர்களுடன் கழிவு எண்ணையும் சேர்ந்து உள்ளது. இதனால் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கழிவு எண்ணைய் சுன்னாகத்தில் அமைத்துள்ள மின்சார நிலையத்திலிருந்து தான் வருகின்றது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கு நிலத்தில் கொட்டப்படும் கழிவு எண்ணைய் தான் இவ்வாறு நிலத்துக்குள் சென்று நீருடன் கலப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அங்கு தற்பொது இயங்கி வரும் நொதேன் பவர் நிறுவனத்தை மூடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இங்கே கவனிக்க வேண்டிய இரு விடயங்கள் உள்ளன.

பழைய‬ கழிவு ஒயிலா..? புதிய கழிவு ஒயிலா..? !!

தற்போது ஏற்பட்டிருக்கும் எண்ணைக் கசிவு 1996 க்குப் பின்னர் இயங்கி வரும் நோதேன் பவர் நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணையா..? அல்லது அதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டில் இதே இடத்தில் இயங்கிய அனல் மின் நிலையம் விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமாகியதால் வெடித்துப் பரவிய எண்ணைய்க் கசிவு தானா..? என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.நோதேன் பவர் மின்நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த இடத்தில் ஏற்கனவே எண்ணைய்க் குதம் இருந்ததாகவும் பின்னர் அதற்கு என்ன நடந்தது எனவும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் போர் நடைபெறும் இடமாக இருந்த யாழ்.குடாநாட்டில் பரவலாக விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய இலக்குகள் மீது இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறானதொரு விமானத்தாக்குதலுக்கு 1990 ஆம் ஆண்டளவில் சுன்னாகத்திலிருந்த எண்ணைய்க் குதங்களும் இலக்காகி அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதனால் அதனுள் இருந்த எண்ணைய் நிலத்தில் பரவியதாகவும் கதைகள் அடிபடுகின்றன. நொதேன் பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அங்கு எண்ணைய்க் குதங்கள் இருந்தன. அவை பின்னர் என்ன நடந்தது எனத் தெரியாது எனச் சுட்டிக் காட்டியுள்ளது. இதன் கூகுள் வரை படத்தையும் தாம் விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தாகத் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் என்ன நடந்தது எனத் தெரியாது என நொதேன் பவர் நிறுவனமும் தெரிவித்து தப்பிக்கொள்வதன் மூலம் வடக்கில் விமானத்தாக்குதல்கள் நடந்தன என்பதை மறைக்க முற்படுகின்றது. விமானத்தாக்குதல்களால் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன என்பதை எவரும் முன்வந்து சொல்ல முற்படவில்லை. எண்ணைய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதலால் நிலத்தில் பரவிய எண்ணையினாலும் தற்பொது முறையான கழிவகற்றல் முகாமைத்துவமின்றி வெளியேற்றப்படும் கழிவு எண்ணையினாலும் யாழ்.குடாநாட்டு மக்களுக்குத்தான் பாதிப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அழிக்கப்பட்ட குதங்கள் மண்போட்டு மூடப்பட்டதால் அதனுள் இருந்த எண்ணைய் நிலத்தினுள் சென்றிருக்க வாய்ப்புள்ளது. இப்போது அடுத்தபடியாக நோக்க வேண்டியது சும்மார் 19 வருடங்களுக்கு முன்னர் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலினால் எண்ணைக்குதங்கள் தகர்ந்து நிலத்தில் பரவிய எண்ணைய்களா இவைகள்..? அல்லது தற்போது இயங்கும் நொதேன் பவர் மின் நிலையத்தினால் வெளியேற்றப்பட்டு வரும் கழிவு எண்ணைய் கசிவா இவைகள் என ஆராயவேண்டும். ஆய்வுகளில் எண்ணையின் காலத்தை அறிய முடியுமா...?

யாருடைய எண்ணைய் என்பதைக் கண்டறிவதற்கு முன்னர் யாழ்.குடாநாட்டு மக்களைப் பாதித்து நீரில் கழிவு எண்ணைய் கலக்கும் அபாயத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அன்று நடந்ததோ அல்லது இன்று நடப்பதோ எதுவானாலும் அது தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் அல்லது அவர்களை இடம்பெயர வைக்கும் அபாயகரமான செயலாகவே உள்ளது. மனிதனின் வாழ்வாதாரத்திக்கு மூலாதாரமான நீரை அசுத்தப்படுத்தும் கழிவு எண்ணைக் கசிவைத் தடுக்கும் வழியைக் கண்டறிந்து பேரிடர் நடவடிக்கையின் கீழ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் முன்வர வேண்டும்.
(அஸ்வின்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com