Contact us at: sooddram@gmail.com

 

மொழி எப்படிப் பிறந்திருக்கும்?

மொழியின் தோற்றம் என்று சொன்னதும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும்.

ஆனால் இங்கு நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தை அறியப்போவதில்லை. மனிதர்களின் மொழி, மனிதன் தனது இனத்தோடு தொடர்புகொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்.

அறிவியலாளர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே. ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மேம்பட்டவர்கள், பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கிறோம். சமூக அவலங்களை பார்க்கும்போது, மற்ற விலங்குகளிலிருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பலமுறை எழத்தான் செய்கிறது.

விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுபவை சிம்பன்சி, போனோபோ ஆகிய குரங்கினங்களாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.

ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்று சக இனத்தவரிடம் கேட்கும்போதும் சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும் போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்கினத்தோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியாகப் பிரிந்து சொல்வோம், நண்பர்களாவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி, திறந்த கைகளை நீட்டுகின்றனவாம்.

அதாவது ஒரே ஒரு அசைவுதான். ஆனால் இடத்திற்கு ஏற்றாற்போல் அது வெவ்வேறு பொருள்கொள்ளப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா, முக பாவங்களைக் காட்டிலும், குரல் எழுப்பி தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை, அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் இயல்பாகவே அதிகம் அங்க அசைவுகளும், சைகைகளும் மூலம் தொடர்புகொள்ளக் கூடியவர்கள். அனேகமாக மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியிருக்கும். பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்தபின் பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் குரங்குகள் உள்ளிட்ட முலையூட்டிகளின் உயர்நிலை இனங்கள் தொடர்பான முதனியிய லாளராக உள்ள பிரான்ஸ் தேவால் இந்த ஆய்வுக்காக சான்டியாகோவி லுள்ள வனவிலங்கு பூங்காவின் 13 போனோபோக்களையும், யெர்கெஸிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 34 சிம்பன்சிகளையும் கூர்ந்து கவனித்து ஒளிப்பதிவு செய்தார் தேவால்.

அவரது உதவியாளர் ஏமி பொல்லாக்கும் அவருமாக மொத்தம் 31 கை மற்றும் கால் சைகைகளையும், 18 முக முகபாவ உணர்ச்சி வெளிப்பாடுகளையும். குரலெழுப்பலையும் பதிவு அவதானித்தனர். இதில் இரண்டு வகை குரங்கினங்களுமே முகபாவங்கள் குரலெழுப்பல்கள் இவற்றை ஒரே வகையானசூழலில், நம்மால் கணிக்கக்கூடியதாக பயன்படுத்தியதையும், குறிப்பாக வலி மற்றும் பயம் ஏற்பட்டால் சத்தமாக கத்தின என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டனர்.

ஆனால் சைகைகளை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட அங்க அசைவு வேறுபட்ட இடங்களில், சூழலில் வெவ்வேறு பொருள் கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டனர். உயர் நிலை முலையூட்டி இனங்கள் எல்லமே முக பாவங்கள், குரலெழுப்பல்கள் மூலம் தொடர்புகொள்கின்றன. தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன.

ஆனால் மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள், உராங்குட்டான்கள், கெரில்லாக்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறு சைகைகளை வெவ்வேறு பொருள் கொண்டவையாக பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால், இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன என புரிகிறது.

மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது சையையே பயன்படுத்துகின்றனவாம் வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதல் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்படும்போது, வருத்தப்படத் தேவையில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com