Contact us at: sooddram@gmail.com

 

ஏன் வரதராஜப்பெருமாள் யாழ்பாணம் வந்தார்?

வரலாற்றில் இருந்து பாடத்தை படித்தாக வேண்டும்

(அரவிந்தன்)

நான் டில்லியில் இருந்தபோது மட்டும் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கவில்லை. அங்கேயும் சாவு துரத்திக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். ஏனென்றால் எங்களுடைய கடந்த கால அரசியல் வழிமுறைகள் அப்படித்தான் பகைமையை விதைத்துக்கொண்டும் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டுமிருந்தன. இப்போது எல்லாவற்றிற்கும் பதிலாக நாங்கள் துக்கத்தையும் கழிவிரக்கத்தையும் பெற்றிருக்கின்றோம்.

சாவைப்பற்றிய எண்ணத்தோடு வாழ்வதை விட, சனங்களின் அவலத்தைப் பற்றிய துயரத்தோடு, வரலாற்றின் துக்கத்தோடு வாழ்வது சிரமம், ஆனால், இன்று அதுதான் நிகழ்ந்திருக்கிறது. இது எவ்வளவு கொடுமையான விஷயம்? இதற்காகவா நாங்கள் இதுவரையிலும் போராடினோம். இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலைமைச்சர் வரதராஜப்பெருமாள் சொன்ன கருத்துக்களின் சாராம்சம் இது. அல்லது வாய்மொழிக்கூற்றின் சாராம்சம் இவை.

அவருடைய அபிப்பிராயங்கள் மேலும் இப்படி இருந்தன. ஒரு காலம் நாங்கள் போராட்டத்தில் ஆர்வத்தோடு, முழு மூச்சோடு செயற்பட்டோம். போராட்டத்தில் இறங்கிய எவராவது மக்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும், மற்றவர்களை அழிக்க வேண்டும், தாங்களே முதன் நிலை ஆளாக வரவேண்டும், வரலாற்றின் புகழை எல்லாம் தாமே சூடிக்கொள்ள வேண்டும், இப்படி ஒருவரோடு ஒருவர் அடிபட்டுச் சாக வேண்டும். தங்களுக்குள் பகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிந்திக்கவும் இல்லை. அப்படிச் செயற்படவும் இல்லை.

ஆனால், என்ன நடந்தது? போராடுவதற்குப் பதிலாக எங்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக்கொண்டு, எங்களுக்கிடையில் அடிபட்டுக்கொண்டு, எங்களுக்கு நாங்களே அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டு, நல்ல அபிப்பிராயங்களுக்கு இடமளிக்காமல், விமர்சனங்களை மறுத்துக்கொண்டும் அவ்வாறு வெளிப்படையாக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்காக, அந்தக் கருத்துக்களை வைத்தவர்களை பழிவாங்கிக் கொண்டும், அப்படி கருத்து வைத்தவர்களின் மீது அவதூறுகளைப் பரப்பிக்கொண்டும் எங்களை நாங்கள் தோற்கடித்திருக்கிறோம். இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், உண்மை இதுதான்.

இப்பொழுது எங்களின் முன்னே இருக்கின்ற யதார்த்தம் என்னவென்று பார்க்க வேண்டும்.  மக்கள் வரலாற்றில் சந்தித்திருக்காத பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். இதற்கு மக்கள் பொறுப்பாளிகளே இல்லை. அவர்கள் எப்போதையும் விட அதிகமான இழப்புக்களையும் அவலங்களையும் சந்தித்திருக்கினறனர். இந்த இழப்புக்களை அவர்கள் சந்தித்திருப்பதற்கு அவர்கள் முழுக்காரணர்களல்ல. இதை எல்லோரும் உணர வேண்டும். இதை அனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம்.

வரலாறு என்பது சரி பிழைகள் வெற்றி தோல்விகள் சீர்படுத்தல்கள் எல்லாவற்றோடும் இணைந்து எங்களுக்கு வரலாறு தந்திருக்கும் மகத்தான படிப்பினைகளோடு நாங்கள் செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் நிபந்தனையாகும். என்றவாறாக உண்மைதான் வரலாறு திரும்பத் திரும்ப ஒரே செய்தியைச் சொல்லுகிறது. வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி. வரலாறு என்பது அனுபவங்களினதும் கடந்த கால நிகழ்வுகளினதும் தொகுப்பு. வரலாறு என்பது திரட்டப்பட்ட செழுமையான அறிவு, மகத்தான உண்மைகளின் திரட்சியே வரலாறு.

இப்படி வரலாற்றைப்பற்றி, அதனுடைய முக்கியத்துவத்தையும் பெறுமானத்தையும் பற்றி பல அர்த்தமுள்ள பதிவுகள் உண்டு. இந்தப் பதிவுகள் அர்த்தமுள்ளவை மட்டுமல்ல அவசியமானவையும் கூட. அதுவும் வாழ்வுக்கு எதிர்காலத்துக்கு அடிப்படையான - அவசியத்துக்குரியவை.

வளர்ச்சியடைந்த எந்த நாட்டிலும் வரலாற்றுக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சீனா, யப்பான், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் சமயக் கல்வியைப் பற்றி அக்கறைப்படுவதே இல்லை. ஆனால் வரலாற்றுக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பல நாடுகளில் வரலாற்றைக் கட்டாயம் படித்தே ஆகவேண்டும். அதன் நோக்கம் வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

வரலாற்றிலிருந்து பாடங்களைப் படித்துக் கொள்வது என்பது நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையில் சேதாரங்களையும், பின்னடைவுகளையும் தவிர்ப்பதற்காகவே. அத்துடன் காலவிரயத்தைத் தவிர்த்து மனித உழைப்பின் பெறுமானத்தை மேலும் அதிகரிப்பதற்காகவும் ஆகும். வரலாற்றின் படிப்பினைகள் ஒரு சமூகத்தை ஈடேற்றும்.

ஈழத்தமிழரின் அரசியலில் ஒரு காலத்தில் அதிகம் பேசப்பட்டவராக இருந்தவர் வரதராஜப்பெருமாள். அதேவேளை, அதிகமதிகம் சர்ச்சைக்குரியவராகக் கருதப்பட்டவர் அவர். ஆரம்பத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் முன்னணி ஆளாகச் செயற்பட்டவராக இருந்தவர் வரதராஜப்பெருமாள். பின்னாளில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) மையச் செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்தார். 1987ல் நடைபெற்ற இந்திய இலங்கை உடன்படிக்கையின் விளைவான வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் பொறுப்பேற்றிருந்தார். இடையில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து நீண்ட காலம் இலங்கைக்கு வெளியே, இருந்துவிட்டு இப்பொழுது மீண்டும் இலங்கைக்கு வந்திருக்கிறார் பெருமாள். அதுவும் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார்.

வரதராஜப்பெருமாளுடைய வருகையின் நோக்கமென்ன? மீண்டும் அவர் அரசியலில் ஈடுபடுவாரா? அவ்வாறாயின் அது என்ன அடிப்படையில் அமையப்போகிறது? அவர் அரசியலில் ஈடுபட்டால் ஈழத்தமிழரின் அரசியல் முன்னெடுப்புகளில் அவருடைய பாத்திரம் எப்படி இருக்கும்? அல்லது அவர் அரசியலை விட்டு ஒதுங்கப் போகிறாரா? என்ற கேள்விகள் வரதராஜப்பெருமாளின் வருகையையொட்டிப் பலருக்கு எழலாம். என்றாலும் தான் அரசியல் போட்டிகளில் (வரவுள்ள தேர்தல்களில் இறங்கப்) ஈடுபடப் போவதில்லை என்று பகிரங்கமாகவே வரதராஜப்பெருமாள் சொல்லியிருக்கிறார். நான் ஒரு அரசியல் தலைமைக்குரியவர் என்று சொல்வதை விடவும் அரசியல் செயற்பாட்டுக்காரர் என்ற புரிதலே தனக்குண்டென்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் வட்டாராத்தில் கூறியிருக்கிறார்.

எனவே, இவ்வாறான பின்னணியில் வைத்து, அவர் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய நண்பர்கள், தோழர்களிடத்திலும் மற்றும் அவர் கலந்துகொண்ட கூட்டங்கள் கருத்தரங்குகளிலும் அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் இருந்து தொகுக்கப்பட்ட ஒரு சித்திரத்தை இந்தப் பத்தி பதிவு செய்கிறது. கூடவே வரலாற்றின் பக்கங்களோடும்.

யாழ்ப்பாணத்துக்கு வந்த வரதராஜப்பெருமாள், தான் வாழ்ந்த இடங்கள், தனக்குப் பழகிய கடைகள், தான் திரிந்த தெருக்களையெல்லாம் பார்த்திருக்கிறார். தெரிந்த ஆட்கள், பழகிய நண்பர்கள், சேர்ந்திருந்த தோழர்கள் எல்லோரையும் சந்தித்திருக்கிறார். நீண்டகாலமாக எல்லாவற்றிலிருந்தும் தூர இருந்த பின்னர், மீண்டும் அவற்றோடு பழகுவது ஒரு புதிய பரவச நிலையை ஏற்படுத்துவதுண்டு. அது எந்த நிலையில் இருந்தாலும் (நீண்ட நாட்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த எனக்கும் அப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருந்தது. அதுவும் நான் அகதி நிலையில் இருந்தபோது, ஆனாலும் அந்த அனுபவம் வித்தியாசமானதே).

வரதராஜப்பெருமாளைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களின் இன்றைய அரசியல் நிலவரங்கள் அத்தனைக்கும் எல்லோரும் ஏதோ வழிகளில் பொறுப்பானவர்களாகவே இருந்துள்ளனர். அவரவருடைய பாத்திரங்களுக்கு அமைய இந்த விகித வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எல்லோரும் பொறுப்பாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்பது அவருடைய கருத்து.

முதலில் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த மதிப்பீட்டில் காணப்படும் சரி பிழைகள் என்ன என்று காணப்பட வேண்டும். முக்கியமாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் தவறுகளுக்கும் நேர்மையான முறையில், அந்த நிகழ்வுகளோடும் வரலாற்றோடும் ஏதோ ஒரு வகையில் நாம் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில், அவற்றுக்கு வருந்துவதும் மன்னிப்புக் கேட்டு;க் கொள்வதுவும் அவசியம்.

எங்களுடைய விருப்பங்கள், தேர்வுகள் என்பதையெல்லாம் விட எங்களுக்கு முன்னே இருக்கின்ற உண்மை பலமானது. அது எங்கள் கடந்த காலத்தின் செயற்பாடுகளுக்கான விளக்கத்தை எங்களுக்கு தந்திருக்கிறது. அது இனி வரவுள்ள எங்களுடைய எதிர்காலத்துக்கான பாதையையும் பயணத்தையும் காட்டுகிறது.

எங்களுக்கு முன்னே இருக்கின்ற அரசியல் யதார்த்தம் என்னவென்று பார்க்க வேண்டும். எதையும் பெறாமலே இழப்புகளுடன் இருப்பதை விடவும் பெறக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு, அதற்கப்பால், பெறவேண்டியவற்றுக்கான வழிகளில், அவற்றுக்காக முயற்சிக்க வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். அதை விடுத்து அவலங்களைச் சொல்லிக்கொண்டும், பிரச்சனைகளைப் பற்றியே கதைத்துக்கொண்டும் இருந்தால் மக்களின் கவலைகள் தீரப்பேவதேயில்லை. அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படப் போவதுமில்லை.

எனவே இனி வருகின்ற அரசியற் தெரிவுகளும் அரசியற் செயற்பாடுகளும் மக்களின் கவலைகளைத் தீர்த்துக்கொண்டு, அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான பயணத்தை நோக்கியதாக அமைவது நல்லது.

தேர்தலை புறக்கணிப்பதை விடவும் மக்கள் அவற்றில் பங்கேற்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஜனநாயகத்துக்குப் பழக்கப்படுவதற்கு தேர்தல்களும் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகின்றன. ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு தேர்தல்களும் ஒரு வழிமுறையாகும்.

ஆகவே, வருகின்ற தேர்தல்களில் மக்கள் பங்கேற்கும் நிலை வளர்க்கப்பட வேண்டும். ஒரு தரப்பின் ஆதிக்கம், ஏகப்பிரதிநிதித்துவம் என்பவை மக்களின் மாற்று அரசியல் தெரிவுகளுக்கு இடமளிப்பதில்லை. ஆனால், ஏகப்பிரதிநிதித்துவ மனப்பாங்குடன் தான் பல தரப்பினரும் இருக்கின்றனர்.

கடந்த காலத்தின் அனுபவங்களைப் பாடமாகக் கொள்ளவேண்டிய தேவை மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அவசியம். இதற்கு ஊடகங்களும், சமூக அமைப்புக்களும் மக்கள் அமைப்புக்களும் புத்திஜீவிகளும் கூடுதலான பங்களிப்பையும் செய்யவேண்டும். இது பல தரப்பினரின் கூட்டுச் செயற்பாடுகளின் விளைவாகவும் பலருடைய பொறுப்புணர்வுகளின் அடிப்படையிலும் உருவாக வேண்டிய அரசியற் பயணம்.

இவ்வாறான தரப்பினரின் பங்கேற்பும் பங்களிப்பும் காலப்போக்கில் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஒர் அழுத்தத்தை உருவாக்கும். அந்த அழுத்தமானது மக்களின் தரப்பிலிருந்து வருகின்ற அழுத்தமாக அமையும். அவ்வாறு வருகின்ற அழுத்தம் பல தரப்பினருடைய கூட்டு அனுபவங்களின் வழியாகவும் பரந்த அறிவின் அடிப்படையிலும் இருக்கும். அது செழுமையைத் தரும் அப்படியான நிலையில் முன்னெடுக்கப்படும் அரசியல் முன்னெடுப்பானது நிச்சயமாக யதார்த்தமானதாகவும் தேவையானதாகவும் இருக்கும். ஏனெனில் அது மக்களின் தரப்பில் இருந்துவரும் அபிப்பிராயங்கள், நோக்குகளில் இருந்தல்லவா முன்னெடுக்கப்படுகிறது!

இவ்வாறான அடிப்படையில் அவருடைய அபிப்பிராயங்கள் உள்ளன. அல்லது அவருடைய நிலைப்பாடு இருக்கிறது. இவை என்ன புதிய சங்கதிகளா, இதைத்தானே தொடர்ந்து சொல்லிவருகிறோம் என்று ஒரு சாரார் சொல்லக்கூடும். வரதராஜப்பெருமாளுக்கு எப்போ இந்த ஞானோதயம் வந்தது? எனவும் அவர்கள் கேட்கக்கூடும்.

இதுவரையிலும் எங்கோ இருந்துவிட்டு வந்தவர். இப்பொழுது புதிய பாடங்களை நடத்துகிறாரா? என வேறு சிலர் இதையிட்டுக் கேட்கலாம். இந்த மாதிரி அபிப்பிராயங்களும் கேள்விகளும் பலதரப்பிலிருந்தும் எழுவதொன்றும் புதிதல்ல இதை வரதராஜப்பெருமாளும் எதிர்பார்த்திருப்பார். விளங்கியிருப்பார். கடந்தகால செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட பாடங்களின் அடிப்படையில் புதிய அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மை மிக முக்கியமானது. அதற்காக அவருடைய அணுகுமுறையைத்தான் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை.

ஆனாலும் அவர் இவற்றை வெளிப்படையாகப் பேசுவதும் கடந்த காலச் செயற்பாடுகளின் விளைவுகளையிட்டு தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதும் இங்கே முக்கியமானவை. இது தான் இங்கே கவனிக்கவேண்டிய அவசியமான விடயம். நமது கடந்த காலம் பலரையும் பொறுப்பாளிகளாக்கியுள்ளபோதும் அந்தப் பொறுப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாமல் இருக்கும் போக்கே தொடருகிறது. இது தான் அவலம். இந்தப் போக்கு தொடருமானால், நிச்சயம் இன்னொரு முள்ளிவாய்க்கால் நிலைமை தான் தமிழர்களுக்கு ஏற்படும்.

வரதராஜப்பெருமாளின் இந்தக் கருத்துக்கள் தனியே தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது சிங்களத் தரப்புக்கும் முஸ்லிம்களுக்கும் உரியது. வரலாற்றின் பாடங்கள் அவருக்குள் இத்தகைய ஒரு அனுபவ நிலையை உருவாக்கியிருக்கலாம். அதைவிட அவர் எல்லாவற்றிலிருந்தும் சற்றுத்தூர நின்றமையால் இவ்வாறு எல்லாவற்றையும் கணக்கிடக்கூடிய ஒரு சந்தர்ப்பத்த  அளித்திருக்கலாம்.

ஆகவே, பெருமாளின் இந்தக் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. இதுபோல பல கருத்துக்களும் விமர்சனங்களும் சுய மதிப்பீடுகளும் இப்போது வந்துகொண்டு இருக்கின்றன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்தவர்களாலும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்களாலும் கூட வேறுபட்ட கோணங்களில் பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பின்னடைவுக்குப் பின்னர், ஒரு வீழ்ச்சிக்குப் பின்னர், ஒரு அரசியற் தளமாற்றம் நிகழும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான சுயமதிப்பீடுகளும் விமர்சனங்களும் வருவது வழக்கம்.

அந்த வகையில், இப்போதுள்ள நிலையில், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பல தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டு வரும் இத்தகைய அபிப்பிராயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டால் நிச்சயம் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி விரைவில், அதிக சேதாரங்கள் இல்லாமல் பயணிக்க முடியும்.

 இங்கே இன்னொருவர் குறிப்பிட்ட விடயத்தையும் பொருத்தம் கருதி இங்கே தெரிவிக்கலாம். இப்பொழுது பாதிக்கப்பட்டிருக்கும் எங்களுடைய மக்களுக்கு நிச்சயம் வீடு தேவை. ஆனால், அவர்கள் வழங்கப்படும் தரப்பாளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். அவர்கள் தங்களுடைய இழந்துபோன வீட்டுக்குப் பதிலாக தரப்பாளை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமலும் அதை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. அல்லது அறியாமையாலும் அவர்கள் அதை வாங்கவில்லை. அவர்களுக்குத் தெரியும். உடனடியாக வீட்டைப் பெற முடியாது.

உடனடியாகத் தரப்பாளைத்தான் பெற முடியும் என்று. அவர்கள் அந்த தரப்பாளுடனே தங்களுடைய வாழ்க்கையைக் கழிக்கப் போவதில்லை. அவர்கள் அந்தத் தரப்பாளில் இருந்து கொண்டே தங்களுக்கான வீட்டைக் கட்டுவார்கள். தங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வார்கள். இப்பொழுது தரப்பாளைக் கொடுப்பது தவறுதான். கொடுமையான விஷயம் தான். ஆனால், அதுதான் யதார்த்தம். அதுதான் உண்மை.

(நன்றி : வீரகேசரி 04.07.2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com