Contact us at: sooddram@gmail.com

 

பிரதேச சுயாட்சிக்காக குரல் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி

(து. குகதாஸ்)

1943 ஜுலை 03ம் திகதி உத்தியோகபூர்வ மாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ்வருடம் தனது 67வது ஆண்டு நினைவைக் கொண் டாடுகின்றது.  இக்கட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இதன் தலைவர்கள் மாக்ஸிச, லெனினிஸ தத்துவத்தை இலங்கை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இதன் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ். ஏ. விக்கிரம சிங்க லண்டனில் தன் மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு 1928ல் தாயகம் திரும்பினார். மருத்துவரான இவர் மக்களுக்கு சிகிச்சை செய்வதை விட முழுச் சமூகத்தையும் வெள்ளை யர்களின் ஏகாதிபத்தியத்திற்கெதிராக அணிதிரட்டுவதில் அரும்பாடுபட்டு வந்தார்.

தேசத்தின் விடுதலை, பூரண சுதந் திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன் றவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார். இவரின் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில்தான் கலாநிதி என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன, கலாநிதி கெல்வின் ஆர். டி. சில்வா போன்ற பலர் வெளிநாடுகளில் தங்கள் பட்டப்படிப்பை முடித்து தாயகம் திரும்பினார்கள்.

அனைவரும் அரசியலில் ஆழமாகச் செயற்பட்டார்கள். அத்துடன் இவர்கள் அனைவரும் சேர்ந்து லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கினார்கள். இதில் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்க, அ. வைத்தியலிங்கம், எம். ஜி. மெண்டிஸ் போன்ற கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து செயற்பட்டார்கள்.

இக்கட்சி ஆரம்பித்து செயற்பட்டு வந்த காலகட்டத்தில்தான் இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் நிலைப்பாட்டை இக்கட்சி ஆதரித்தது. இருந்தும் கட்சியிலுள்ள சிலர் இதற்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டி ருந்தார்கள். இந்நிலையில் கட்சிக்குள் கருத்து மோதல்கள், சித்தாந்த வேறுபாடுகள் ஏற்பட்டு, இதன் பிரதிபலிப்பு சோவியத் ஆதரவாளர்கள் என்று சிலர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுள் லண்டனில் இருந்து கல்விகற்று தாயகம் திரும்பிய பீட்டர் கெனமன், பொன் கந்தையா போன்றவர்கள் இணைந்து 1940ல் ஐக்கிய சோசலிச கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து செயல்பட்டார்கள். சிறிது காலம் சென்றதும் இவர்கள் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

இக்கட்சி 1943 ஜுலை 03 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இக்கட்சி உலகளாவிய கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டது. சகல அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தேசிய விடுதலையையும் இக்கட்சி ஆரம்பித்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், தேசிய இனப்பிரச்சினையும்

1944ல் புதிய அரசியல் யாப்பிற்காக சில யோசனைகளை இலங்கை கம் யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இல ங்கையில் பல்லின, மொழி, கலாசார மதங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் அனைவரும் சமமாக நடாத்தப்பட வேண்டும் என் றும், சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று 1944 அக்டோபர் 15ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை தேசிய காங்கிரஸின் பிரஜை கள் மாநாட்டிற்கு அனுப்பிவைத்தது.

பிரதேச சுயாட்சிக் கோரிக்கை

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே ஒற்றையாட்சி முறையை ஆதரித்தது இல்லை. 1954ல் வடபகுதி கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வல்வெட்டித் துறை சிவகுரு வித்தியாலயத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பிரமுகர்கள் குறிப்பாக அ. வைத்தியலிங்கம், பொன் கந்தையா, மு. காத்திகேயன். ஐ. ஆர். ஆரியரத்தினம் ஆகியோர் பிரதேச சுயாட்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

தமிழர்கள் தொன்றுதொட்டு பாரம் பரியமாக வடக்கு கிழக்கில் தமக்கென உரித்தான கலாசாரத்தையும், பொருளாதார கட்டமைப்பையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எனவே இவர்கள் தங்களைத் தாங்ளே ஆளக்கூடிய ஒரு நிர்வாக முறையை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்றதுதான் பிரதேச சுயாட்சிமுறை.

வடபகுதி கம்யூனிஸ்ட்டுகளால் நிறைவேற்றப்பட்ட பிரதேச சுயாட்சிக் கோட்பாடு 1955ல் மாத்தறை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மையில் முதன் முதலில் பிரதேச சுயாட்சியம் என்ற எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். அதன் பின்புதான் ஏனையோர் பேச ஆரம்பித்து இன்று பலரும் பேசுகின்றார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்விற்காக காலத்திற்கு காலம் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களுக்கு கட்சி, பேதங்களுக்கு அப்பால் ஆதரவு நல்கியே செயற்பட்டது.

பண்டா - செல்வா ஒப்பந்தம்

1958 இனப்பிரச்சினை தீர்வுக்காக அப்போதைய பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்காவும் தந்தை செல்வநாயகமும் ஒரு குறைந்தமட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில்மாவட்ட ஆட்சிமுறைஎன்றதொரு விடயத்தில் உடன்பாடு கண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதனையும் எவ்வித எதிர்ப்புமின்றி கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.

துரதிஷ்ட வசமாக இதை எதிர்த்து ஜே. ஆர். ஜெயவர்தனா கண்டி யாத்திரையை மேற்கொண்டார். இனவாதம் ஊட்டப்பட்டது. இனவாதிகள் கிளர்ந்தெழுந்தார்கள். ஒப்பந்தம் கிளித்தெறியப்பட்டது. ஈற்றில் இனக்கலவரம் வெடித்து ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் ஐக்கிய தேசிய கட்சியே.

இந்திய - இலங்கை உடன்படிக்கை

இலங்கையில் இனமோதல் வெடித்து அது நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றதுடன் தமிழ் இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் வடபகுதி மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். இந்நிலையில் இந்தியா இலங்கையின் இறைமை என்றவிடயத்தை கேள்விக்குறியாக்கி உணவுப் பொட்டலத்தை விமானத்தி லிருந்து போட்டது. இதன் விளைவுதான் இலங்கை இந்திய உடன்படிக்கை ஆகும்.

இதனையும் கம்பயூனிஸ்ட்கட்சி ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியது உடன்படிக்கையாக மாகாண ஆட்சியை நிறுவும்படியும், மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை வழங்கும் வழங்கும்படியும் கட்சி குரல் கொடுத்தது இதற்காக பல தோழர்கள் (ஜே. வி. பி.) மக்கள் விடுதலை முன்னணி சுட்டக் கொன்றது. இருந்தும் எதற்கு பயப்படாது மாகாணசபைத் தேர்தலில் கட்சி போட்டியிட்டதோடு மத்தியிலி ருந்து மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்கும்படியும் வலியுறுத்தியதுடன், வற்புறுத்தியும் வந்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலங்களில் வடபகுதியில் நிலவும் சாதி ஒழிப்புப் போராட்டங்களில் பங்கேற்றது. கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட போராட்டங்களை ஆதரித்ததோடு அவற்றில் பங்கேற்றதும் யாவரும் அறிவர். தேனீர் கடை பிரவேசத்திற்காக உழைத்த நமது கட்சித் தோழர்களின் சேவையை யாரும் மறக்கமாட்டார்கள். தோழர்கள் எம். கார்த்திகேயன், வ. பொன்னம்பலம், ஐ.ஆர். ஆரியரத்தினம் மற்றும் பல தோழர்கள் இந்தப் போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றார்கள்.

பல அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றது எமது கட்சி. நெற்காணி மசோதா நிலச்சீர்திருத்தம் மற்றும் தேசியமயக் கொள்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. சுருக்கமாகக் கூறினால் சாதாரண மக்களின் வாழ்வு வளம்பெற தொழிலாளர்கள் உரிமையுடன் வாழ விவசாயிகள் வீறுகொண்டெழ அரும்பாடுபட்டது கம்யூனிஸ்ட் கட்சி. இதை யாரும் மறக்கமாட்டார்கள்.

இலங்கை வாழ் மக்கள் இன்புற்று வாழ சகல அதிகாரங்களும் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதுவே இன்றைய முக்கிய கடமை என கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com