Contact us at: sooddram@gmail.com

 

பேரரசர் ஒகஸ்டஸ் சீசர்

ஒரு சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்..... மீண்டும் எழுச்சியும
(கு.வெ.கி. ஆசான)

ர் ஆண்டிற்கு உரிய மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஜூலை, ஆகஸ்ட் என்பவை ஏழாவது, எட்டாவது மாதங்கள். அவற்றில் ஒன்று ஜூலியஸ் சீசர் பெயரிலும், மற் றொன்று ஒகஸ்டஸ் சீசர் பெயரி லும் அமைந்தவை. பண்டைக் காலத்தில் உரோமப் பேரரசை நிறுவியதில் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஒகஸ்டஸ் என்பது பட்டப் பெயர். அவருடைய இயற்பெயர் ஒக்டேவியன். சீசர் என்பது குடும்பப் பெயர். ஜுலியஸ் சீசருக்கு ஆண் வாரிசு இல்லை. ஆகையால் தம்முடைய அண்ணனின் மகள் வழிப் பேரனாகிய ஒக்டேவியனைத் தமது மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். போரை நடத்துதல், மற்றும் நிருவாகம் செய்தல் முதலியவற்றில் ஒன்றுவிட்ட பேரனாகிய ஒக்டேவியனுக்கு ஜுலியஸ் சீசர் தகுந்த பயிற்சி அளித்தார்.

கி.மு. 63 இல் பிறந்து கி.பி. 14 இல் மறைந்த ஒகஸ்டஸ் எனும் ஆக்டேவியன் 77 ஆண்டுகள் வாழ்ந்தார். வாழ்நாளில், கி.மு. 29 முதல் கி.பி. 14 வரை 43 ஆண்டுகள் உரோம் பேரரசைத் திறம்பட ஆட்சி செய்து புகழ் பெற்றார்.

ஆக்டேவியன் தொல்லைகள் பலவற்றைக் கடந்து ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது. அவருடைய ஒன்றுவிட்ட பாட்டனாராகிய ஜுலியஸ் சீசர், கி.மு. 44 மார்ச் 15 இல் கொல்லப்பட்டார். அதை அடுத்து உள்நாட்டுப் போர் மூண்டது. புரூட்டஸ் கசியஸ் முதலிய சதிகாரர்கள் ஒரு புறமும், மார்க் அன்டனி, ஒக்டேவியன் முதலியோர் மறுபுறமும் இருந்து போரிட் டனர். ஃபிலிப்பி என்ற இடத்தில் நடந்த போரில் சதிகாரர்கள் தோற்றனர், இறந்தனர். அன்டனி, ஒக்டேவியன், ஆகியோருடன் லெபிடஸ் என்பவரும் இணைந்து மூவர் ஆட்சி ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குபின்பு மார்க் அன்டனியும் ஒக்டேவியனும் ஆட்சிப் பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர். கிழக்குப் பகுதியை அன்டனியும், மேற்குப் பகுதியை ஒக்டேவியனும் ஆண்டனர். பேரரசின் தென்கிழக்குப் பகுதியாக எகிப்து இருந்தது. கிளியோபாட்ரா என்ற அழகி அதன் அரசி, அவளுடைய மையலில் முன்பு ஜுலியஸ் சீசர் மயங்கியதைப் போன்றே அன்டனியும் மயங்கினார். ஆட்சிப் பொறுப்பில் தவறினார்.

ஒக்டேவியன் இதற்கு மாறான இயல்பினன், கட்டுப்பாடும், கடமையுணர்வும் மிக்கவன். காலத்தை வீணாக்காமல், அதை வென்று நின்றவர். இதை வெளிப்படுத்தும் வகையில் தம்முடைய Antony and Cleopatra எனும் நாடகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஷேக்ஸ்பியர் அமைத்திருக்கிறார். கப்பல் ஒன்றில் கேளிக்கை விருந்து நடக்கிறது. மார்க் அன்டனி உள்ளிட்டோர் அதில் கலந்து மூழ்கியுள்ளனர். ஒக்டேவியன் மட்டும் தனித்த நிலையில் இருக்கிறார். கேளிக்கை விருந்துக்கு வருமாறு அவரை ஒருவர் அழைக்கிறார். நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் (Be a Child of time) என வேண்டுகி றார். அதற்கு ஒக்டேவியன், காலத்தின் கைப்பிள்ளையாக மாட்டேன். அதைக் கைக்குள் அடக்குவேன் (Possess it) என மறு மொழி கூறுகிறார்.

அன்டனியும் ஒக்டேவியனும் தவிர்க்க முடியாத வகையில் எதிரிகள் ஆகின்றனர். ஏக்டியம் என்ற இடத்தில் கி.மு. 31 இல் அவர்களுடைய கப்பற்படைகள் மோது கின்றன. அன்டனியின் படை தோற்கி றது. அதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொள் கிறார். அதற் குப் பின்பு கிளியோ பாட்ராவும் தற்கொலைப் பாதையில் சென்று மறைகிறார்.

ஜுலியஸ் சீசருக்கு முன்பு இருந்தே பல ஆண்டுக் காலம் உராம பேரரசு உள்நாட் டுப் போரி னால் அலைக் கழிக்கப்பட்டது. மக்கள் மிகப் பெரும் இடர்களுக்கு ஆட்பட்டனர். ஒக்டேவியன் உறுதியான வகையில் ஆட்சிப் பீடம் ஏறினார். அமைதியை ஏற்படுத்தினார். அவர் தன்னைச் சர்வாதிகாரி என்றோ அரசர் என்றோ அறிவித்துக் கொள்ளவில்லை.

குடியரசு முறைக்கு உரிய சட்ட மன்றம், ஆட்சிமன்றம் (செனட்) ஆகியவற்றைக் கலைக்கவில்லை. அந்த மன்றங்களும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நடக்கவில்லை.

மக்கள் நலம் நாடிய மா மன்னர் போன்றே நடைமுறையில் அவர் ஆட்சி செய்தார். அவருக்கு அகஸ்டஸ் (பெருமிதமானவர்) என்ற பட்டத்தைச் செனட் சபை அளித்தது.

பேரரசு மேலும் விரிவடைய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ந்து போர்களை நடத்துவதை அகஸ்டஸ் நிறுத்திக்கொண்டார். மேற்கில் அய்பீரியன் தீபகற்பம் (ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளைக் கொண்டது). வடக்கில் ரைன், மற்றும் டான்யூப் ஆறுகள், கிழக்கில் கருங்கடல், தென் கிழக்கில் யூப்ரடிஸ் ஆறு, அரேபியா, தெற்கில் சகாரா பாலை வனம் ஆகியவை ரோம் பேரரசின் நிலையான எல்லைகள் ஆயின. ஒகஸ்டஸ் ஏற்படுத்திய அமைதி 200 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ரோம் பேரரசின் மாநிலங்களில் நிருவாகம் சீர்பெற்றது. ஊழல் ஒழிந்தது, திறமை மிகுந்தது. சிறந்த சாலைகள் போடப்பட்டன.

நேர்த்தியான பல வகைக் கட்டடங்களால் ரோம் நகரம் அழகும் பொலிவும் பெற்றது. உழவும் தொழிலும் வாணிகமும் வளர்ந்தன. வாணிகத் தொடர்பு தமிழகம் வரை நீண்டது.

லத்தின் மொழி இலக்கியம் பொற்காலம் கண்டது. ஏனியஸ் எனும் வீரனின் சாகசங்களைக் கூறும் ஏனீத் என்ற காவியத்தை வெர்ஜில் படைத்தார். ஹொரேஸ், மற்றும் ஓவிட் என்ற பெருங் கவிஞர்கள் எழுதினர். லிவி எனும் வரலாற்றாசிரியர் வாழ்ந்த காலமும் இதுவே.

ரோம் பேரரசின் கிழக்கு எல்லையில் இருந்த அதன் மாநிலம் பலஸ்தீனம். அகஸ்டஸ் ஆண்ட காலத்தில் அங்கு பெத்ல காம் என்ற இடத்தில் உலகம் மறவாத பெருமகன் பிறந்தார், அவர் தான் யேசு கிறிஸ்து.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com