Contact us at: sooddram@gmail.com

 

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உருவான தருணங்கள்

(சி. குமாரபாரதி)

யூரேக்கா, யூரேக்கா கண்டுபிடித்து விட்டேன்’. ஆர்க்கிமிடிசு இந்தச் சொல்லை உற்சாகமாகக் கூவிக்கொண்டு குளியல் தொட்டியிலிருந்து வெளியேறி அப்படியே சைரக்கூஸ் தெரு வழியே ஓடினார் என்பது ஒரு விஞ்ஞான ஐதீகம். ஒரு உன்னத படைப்புக் கணத்தின் அடையாளமாக இந்தச் சொல் நிலைத்துவிட்டது.

ஒரு பொருள் பாயத்தில் அமிழ்த்தப்படும் பொழுது அந்தப் பொருளின் கன அளவுள்ள நீரை அது வெளியேற்று கிறதும், இதன் காரணமாக பொருட்களின் தோற்ற நிறையானது வெளியேற்றப்படும் நீரின் அதேயளவு நிறையால் குறைகிறது என்பது நாம் அறிந்ததே. கடலுக்குள் இறங்கும் பொழுது உடல் கனமற்றிருப்பதையுணர்வது இதனால்தான். மன்னரின் முடியிலுள்ள தங்கம் கலப்படமா, இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க வழிதேடிக் கொண்டிருந்தவர்.

ஒரு சீரான வடிவற்ற பொருளின் கன அளவைக் கணக்கிடுவது எப்படி என்பதைத் தெரிந்தால் பின்னர் சுலபமாக பொரு ளின் அடர்த்தியைக் (= நிறை/ கன அளவு) கணக் கிட்டுக் கொள்ளலாம் என்ற மட்டில் முன்னேறியிருந்தார். இதையறிந்தால் முடியின் அடர்த்தியை கணிக்க முடியும். தங்கத்தின் அட ர்த்தியை விடக் குறைவான தாயிருந்தால் வேறு உலோகங்கள் கலக்கப்பட் டிக்கின்றன என்றாகிறது. (சோதித்த முடி தங்கமா கலப்படமா? பொற் கொல்லர் கதியென்ன என்ற கேள்விகளுக்கு விடையை யாரும் எழுதி வைக்கவில்லை)

இம்மாதிரிக் கணங்கள், படைக்கும் வலக்கையின் உடுக்கையொலியைச் சுட்டுகின்றன.

ஒரே நிறமாகப் பூத்துக்கொண்டிருக்கும் மலர் வனத்தில் காரணம் கூற முடியாதபடி பிறழ்ந்து ஒரு செடி வேறு நிறம் வேறு அடுக்குகள் கொண்ட பூக்களை வெளியிடுகிறது. இதே போன்று அறிவியலில் சிந்தனைத் தடம் முற்றாக மாறும் தருணங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றைத் தருணங்கள் என ஒரு அடையாளமாகச் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை நீண்ட சிந்தனைச் சங்கிலியின் ஒரு வெற்றிகரமான பிரவசங்கள். ஆக கணத்திற்குப் பின்னால் பல லட்ச கணங்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

இந்தப் படைக்கும் வேளைகள் குளியலறையில் மட்டுமே நிகழ் வதில்லை. பகற்கனாவிலும் இத் தருணங்கள் வரலாம். கெக்கியூலின், பென்சீன் வளையம் பற்றி கேள் விப்பட்டிருப்பீர்கள். திறந்த சங்கிலி அமைப்பு வழியிலேயே சிக்கலான சேதன இரசாயன மூலகங்களுக்கு அமைப்பு முறையை நிறுவினார்கள். ஒரு காபன் மூலகம் சில ஐதரசன் அணுக்களுடன் தொடுக்கப்பட்டு நீண்டு செல்லும் அமைப்பு இம்முறையில் முயன்றும் பென்சீனுக்கு சரியான அமைப்பு ஏற்படாமல் முரண்டு பிடித்தது.

பென்சீன் மூலகத்தின் அமைப்பு பற்றி சிந்தித்து அலுத்திவிட்டு கண் அயர்ந்தார் கெக்கியூல். அவரின் கூற்று, ‘எனது மேசையடியில் எழுதிக் கொண் டிருந்தேன். வேலை ஓடவில்லை. எனது சிந்தனைகள் வெகு தொலைவில் இருந்தன. எனது கண்முன் அணுக்கள் சதிராடிக் கொண்டிருந்தன. அவை பாம்பு போல் நெளிந்து வளைந்து வரிசை வரிசையாக ஆடிக் கொண் டிருந்ததை எனது கண்கள் கண்டன.

அந்தோ! திடீரென ஒரு பாம்பு தனது வாலையே கெளவிக் கொண்டு என் கண் முன்னே சுழன்று சுழன்று கொண்டிருந்தது. என்னைப் பரிகாசம் செய்வது போல், இடி கேட்டு விழிப்பது போன்று திடுக்கிட்டேன். இந்தப் பகற்கனவால் அருட்டப்பட்டு, மூடிய தொடரில் (பாம்பு தன் வாலைக் கவ்வும்) பென்சீன் வளைய அமைப்பை அறிமுகப்படுத்தி னார்.

மரத்துக்கு கீழும் விஞ்ஞான அருட்டல்கள் நிகழ்கின்றன. நியூட்டனின் அப்பிள் கதை யாவருக்கும் தெரிந்ததே. ஐதீகமாகக் கூட இரு க்கலாம். இதுவே தென்னை மரத்தின் கீழே நடந்திருந்தால் கதை வேறு. பழம் விழுகை காலம் காலமாக நடந்து வரும் இயல்பான சாதாரண நிகழ்ச்சி. ஆனால் விலக்காக நியூட்டனுக்கு இது ஒரு அருட்டல்.

விஞ்ஞான வரலாற்றில் இப்படியான சிந்தனைத் தேக்கங்களும் பின் புதுத் தடத்தின் திசை மாற்றங்கள் ஏற்படுவன கச்சிதமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஜன்ஸ்ரீனின் தீர்வுகள் பெளதிகத்தைச் செப்பனிட்டதுடன், பின்னால் வந்த விஞ்ஞானிகள்ஏன் இவ்வளவு குழம்பினோம். இதை யோசிப்பது அவ்வளவு கடினமல்லவேஎன்பதாக உணர்ந்திருக்கிறார் கள். அதுவரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளி வானது. லிbvious என நம் பப்பட்ட சில பெளதீக பொது நம்பிக்கை களுக்கும் பொது அறிவு என்று நாம் கருத்தில் கொண்டவற்றிற்கும் அறைகூவல் ஏற்பட்டது.

இங்கு சொல்ல வருவது ஆர்கிமிடிசு, நியூட்டன், ஜன்ஸ்ரீன் ஆகியோரின் தீர்வுகள் ஆச்சர்யமான முறையில் மிக எளிமையா னவை நேர்த்தியானவை. ஆனால் மிகவும் அடிப் படையானவை.

கவிஞர்களுக்கும் பொறிதட்டும் நேரங்கள் உண்டா என்பதை அவர் களைத்தான் கேட்க வேண் டும். ஆனால் வால்மீகி ராமாயணம் பற்றி ஒரு ஐதீகம். வேடனின் அம்பால் வீழ்த்தப்பட்ட ஆண் கிரவுஞ் சப் பறவையின் சோடியின் சோக கீதத்தால் அருட்டப்பட்டு அதை அடிநாதமாகக் கொண்டு காவியத்தை புனைந்தாராம்.

வாழ்க்கையில் மற்றைய துறைகளில் இந்த சிந்தனைத் தடம் அடிப்படையாக மாறும் தருணங்கள் வரையறுக்கப்பட்ட முறையில் வெளிச்சமாவதில்லை.

எப்பொழுதுமே இந்த வலக்கை உடுக்கையொலி அதிர்ந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் இரைச்சலில் எங்களுக்கு கேட்பதில்லை என்பதாகவும் சிலர் கூறுகிறார்கள். அதை அப்படியே விடுகிறேன். ஆனால் இந்த படைப்பாற்றல் பற்றி பல வகையில் இப்போ முகாமை முறைகளில் பேசப்படுகிறது. இதை பக்கவாட்டு (பக்கவாதம் அல்ல) சிந்தன  என்ற ரீதியில் சொல்லிச் சொல்லியே கோடீஸ்வரரானவர் ரினீ. ஒரு சந்தர்ப்பத்தில் பூமி (ஒரு வகையில்) தட்டையானது என்றார் கலீலியோ.

இந்த மிலேனியத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு மைல் கல் கலீலி யோவின் பூமியையும் அண்டங்களைப் பற்றிய கோட்பாடுகள் பூமி தட்டை யானது அல்ல. அது உருண்டை என்பதை பல கணிப்புகளுடன் சரியா கவே அனுமானித்தார். பூமி உருண்டை வடிவானது என இப்போ நாங்கள் ஒத்துக்கொண்டாலும் பெரும்பாலும் அதை தட்டையாகவே இப்பொழுது கூட பாவனை செய்கிறோம்.  இந்தப் பாவனையில் நாளாந்த நன்மைகள் உண்டு. உதாரணமாக வீடு கட்ட திட்டம் போடவோ, வீதி அமைக்கவோ நில அளவை செய்யும் பொழுதோ இந்த அண்ணளவு பிரமாணம் கயிறடித்து சாலை அமைக்கிறோம். தவிரவும் நம்மில் எத்தனை பேர் பூமி உருண்டையானது என்னும் நினைப்பில் வாகனங்களை ஓட்டுகிறோம். ஆக உலகம் தட்டையானது என்று சொல்வது அவ்வளவு முட்டாள்தன மாகாது.

ஆனால் பூமி உருண்டையானது என்பதைச் சொன்ன கலீலியோ பட்டபாடு கொஞ்சமல்ல. கத்தோலிக்க திருச்சபை அக்காலத்தில் பூமி தட்டையானது என்பதை குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னால் இது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையானது தெரிந்ததே.

இந்த சித்தாந்த மாற்றங்கள் திருச் சபையின் ஆன்மீகச் செல்வாக்கை குறைக்க வில்லை என்பதைப் பார்க்கும் பொழுது, எதற்காக தேவையில்லாத விஷயங்களில் தலை நுழைத்தார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. அன்றைய சந்தர்ப்பத்தில் அப்படியொரு கெளரவ நிலைப்பாடு.

சில உண்மைகள் நாங்கள் உள் வாங்கிய பொது அறிவு சாதாரண புலன் வழி அனுமானங்களுடன் முரண்பட்டாலும் அதை எங்களுக்கு விடுக்கப் படும் அறைகூவலாக எடு த்துக் கொள்கிறோம். ஏற்றுக்கொள் வதால் எங்கள் பிடிவாதத்துக்குக் கொஞ்சம் அடியைத் தவிர வேறு இழப்புகள் எதுவும் நேர்வதாகத் தெரியவில்லை.

ஆனால் நாம் அவ ற்றை காலா காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. புத்திசாலித்தனம் என்பதே இவற்றை தருணத்தில் புரிந்து கொள்ளுதல் தானோ ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு அலவாங்கில் கட்டிய மாடு போல் அதற்குள் நின்று உழலுகிறோம். இன்றும் எங்களின் பல பிரச்சினைகள் இப்படியானவையே.

மேற்கூறிய உதாரணங்கள் மனித இயல்பு குறித்துப் பொதுமையான வையாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com