Contact us at: sooddram@gmail.com

 

வாழத் துடிக்கும் ஒரு தொழில்

(இ.முத்துக்குமார்)

(இந்தக்கட்டுரையில் உள்ள விடயங்கள் பல எமது கிழக்கு மாகாண மக்களுக்கும் பொருந்தும் அங்கு வீட்டிற்கு வீடு திண்ணைக்கு திண்ணை நெசவுத் தொழில் செழித்த காலம் ஒன்று இருந்தது. இன்று போர் சூழல் உள்ளிட்ட பல காரணிகளால் இவ் குடிசைக் கைத்தொழில் பெரிதும் மருகி வருகின்றது. அளவு ரீதியில் தமிழ் நாடு அளவு நெசவுத் தொழில் குடிசைக் கைத்தொழிலாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிட்டாலும் சாராம்சத்தில் தமிழ் நாட்டு தொழிலாளர்களுக்கு இருக்கும் அதே மாதிரியான பிரச்சனைகள் எம்மக்களுக்கும் இருக்கவே செய்கின்றன. தீர்வுகளும் சாராம்சத்தில் ஒத்தவையாக இருக்கின்றன. அம்மா கட்டிய லங்கா பச்சை சீலை இன்னும் கண்ணுக்குள் இருக்கின்றது. குளிர் காலத்தில் போத்து படுக்கவும் சுகமாகத்தான் இருந்தது.சாகரன்)

வாழத் துடிக்கும் ஒரு தொழிலின் எதிர் காலம் அரசின் தெளிவற்ற அணுகுமுறை யால் கேள்விக்குறியாக மாறியுள்ளது. காஞ்சிப் பட்டு சேலை முதல் நாகர்கோவில் வடசேரி யின் புகழ்பெற்ற வேட்டி வரை, பெட்ஷீட், திரைச்சீலை, லுங்கி, செல்லூர் டவல் என துணியின் புகழ்பெற்ற அத்தனை தளங்களை யும் தன்னகத்தே கொண்ட தமிழகம் அதை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே தற் போது கைத்தறி துணி தொழிலில் ஏற் பட்டுள்ள சவால் 4.13 லட்சம் தறிகளும் 6 இலட்சம் நெசவாளர்களும் இந்த பிரிவில் இருப்பதாக அரசு புள்ளி விபரம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கை உண்மையில் இதை விட 50 சதவீதம் கூடுதலாகவே இருக்கும். தற்போது கைத்தறியில் ஈடுபட்டுள்ள பெரும் பகுதியினர் பெண்களும், 40 வயதுக்கு மேற் பட்ட ஆண்களுமாவர். தலைமுறை தலை முறையாக உருவாகி வந்த நெசவாளர்கள் கடந்த இருபதாண்டுகளாக எந்த பகுதியிலும் புதிய தலைமுறை இந்த தொழிலில் ஈடுபட வில்லை. தற்போது ஈடுபட்டுள்ள பிரிவினரே கடைசி தலைமுறையாக இருக்கிறது.

கைத்தறி துணிகளை விற்பனை செய்யவும் நெசவாளர்களை பாதுகாக்கவும் பல திட்டங்களை கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் ஊழலுக்கு இடமின்றி உருவாக்கி செயல்படுத்தினார்கள். மில் துணிகள் மீது சிறப்பு வரி விதித்து, அந்த நிதி மூலம் கைத்தறி துணிகளுக்கு விலை தள்ளுபடி மானியம் கொண்டு வந்தது; கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியது; நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் கொண்டு வந்தது; கைத்தறி துணிகளை குடிசைத் தொழிலாக அங்கீகரித்து, இன்றுவரையிலும் எந்த கைத்தறி துணியின் மீதும் அரசு வரிவிதிப்பு இல்லாமல் பாதுகாத்தது. இதுபோன்ற பல திட்டங்கள் 1952க்குப் பிறகு உருவாக்கப்பட்டது. கைத்தறி துறை என்று ஒன்று அரசின் ஒரு அங்கமாக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

இத்தகைய நல்ல அம்சங்கள் உருவாக அரசு, அரசியல் தலைவர்கள், தொழில் நலனில் அக்கறை கொண்ட சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சி என இவர்களுக்கு இடையே ஒரு புரிதல் இருந்தது. மேற்கண்ட வெற்றிகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன. ஆனால் இன்று இத்தகைய சூழல் நிலவுகிறதா என்றால் அது வெற்றிடமாகவே உள்ளது.

தமிழக நெசவாளியின் ஒருமாத குடும்ப வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவா கவே உள்ளது. தறியுடன் கூடிய சொந்த வீடு என்பது பெரும்பாலோருக்கு இல்லை. வாடகை வீடு என்றால் நெசவாளர்களுக்கு வீடு கிடை யாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு வருடத்தில் 9 மாதம் கூட தொடர்ச்சியாக வேலை நிச்சயமற்றதாக உள்ளது. 15 நாள் வேலை நிறுத்தம் செய்து போராடினால் கூட அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 மட்டுமே கூலி உயர்வு கிடைக்கிறது.

கைத்தறி துணிகளுக்கு நல்ல சந்தையும் ஏற்றுமதியில் உலக நாடுகளில் தனித்த வரவேற்பும் உள்ளது. இத்தொழிலின் சாதகமான நம்பிக்கையை ஏற்படுத்தும் அம்சமாகும். பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்த இத்தொழிலில், போனவர்கள் போனது போக மீதமுள்ள 6 லட்சம் பேரையும் ஒரு மிகப் பெரிய தொழிலையும் பாதுகாப்பது அரசின் முன்னுரிமை பணிகளில் ஒன்றாக எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று.

ஹூண்டாய், நோக்கியா போன்ற சில ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் பல வகையில் அரசு சலுகைகளை வழங்குகிறது. ஆனால் 6 லட் சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கைத்தறிக்கு பெரிய முதலீடு எதுவும் வழங்கவில்லை. மின்சார பற்றாக்குறை உள்ள நமது மாநிலத்தில் மின் பயன்பாடே இல்லாமல் நடைபெறும் ஒரு மிகப்பெரிய தொழில் இது மட்டுமே இருக்க முடியும். 6 லட்சம் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதில் அரசு தோல்வி அடைந்தால் பெரும் கொந்தளிப்பும் சமூக அமைதி யின்மையே உருவாகிடும் இதுதான் பல நேரங்களில் பட்டினிச்சாவு, கஞ்சித் தொட்டி திறப்பு என்கிற பல வெளிப்பாடுகளை அவ்வப்போது காண்கிறோம். இது மேலும் பெரிதாக வெடிக்காமல் இருக்க அரசு விழித் துக்கொள்வது நல்லது.

தற்போது மத்திய-மாநில அரசுகள் பல திட்டங்களை வேக வேகமாக அறிவிப்பதும் அதற்காக பலநூறு கோடி ரூபாய் ஒதுக்குவதும் அதில் ஏதோ சாதித்ததாக சாதனைப் பட்டியல் வெளியிடுவதும் தற்போது வெளிவரும் செய்திகளாக உள்ளது. உண்மையில் நமது ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் புதிய திட்டங்களை தவிர, இவர்களுக்கு வேறுவழி தெரிவதாக தெரியவில்லை. இத்திட்டங்கள் மூலம் கைத்தறி தொழில் சிறப்பாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி நமது ஆட்சியாளர்களை திருப்தி அடையச் செய்கிறார்கள் 2009ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளித்துறை ஒதுக்கிய நிதியில் ரூ.2546 கோடி பெரும் வசதி படைத்த 12514 பேருக்கு மானிய பாக்கி கள் என்ற பெயரில் உடனடியாக வழங்கப்பட்டது.

பெரும்பகுதி நிதி ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், கண்காட்சிகள் நடத்துவதற்கும் செலவிடப்படுகிறது. இவற்றில் எதுவும் நெசவுத் தொழிலுக்கோ, நெசவாளிக்கோ நேரிடைப்பயன்களுக்கு உதவிடவில்லை.

காஞ்சிப் பட்டு தொழிலை பாதுகாக்க கொண்டு வந்த கைத்தறி பட்டு ஜவுளி பூங்கா அரசியல் விருப்பு வெறுப்பு மற்றும் காஞ்சியின் ஸ்தல தொழில் நிலைமையையும் கணக்கிலெடுக்காமல் உருவாக்கியுள்ள செயல்திட் டம். இதன் காரணமாக இத்திட்டம் செயலுக்கு வருமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதில் தொழில் சார்ந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை அறிந்து, திட்டங்களை உள்ளூர் யதார்த்த நிலைமைக்கு மாற்றியமைத்தால் பத்தாயிரம் பேருக்கு வேலை தரும் பட்டுப் பூங்கா பளபளக்கும். இல்லையென்றால் ஏற்கெனவே உறங்கிக்கொண்டிருக்கும் பூங்காக்களின் பட்டியலில் இவையும் இணைந்திடும் வாய்ப்புகளே அதிகம்.

தென்மாவட்டங்களின் தொழிலை பாதுகாக்க, விருதுநகரை மையமாகக் கொண்டு ரூ.70 கோடியில் உருவாக்கப்படும் மெகா க்ளஸ்டர் உள்பட இதுபோன்ற க்ளஸ்டர்கள் (கைத்தறி குழுமம்) தமிழகம் உட்பட அனைத்து இடங்களிலும் அவை விளம்பரத்திட்டமாக உள்ளதே தவிர, தொழில் வளர்ச்சியை மேம் படுத்தியதாக எந்த ஆய்வுகளும் இது வரையில் உறுதி செய்யப்படவில்லை.

திட்டங்களின் நிதி மட்டுமே செலவா கிறது. திட்டப் பயன்களோ பூஜ்ஜியமாக உள்ளது. இவற்றில் ஓரளவு பயனுள்ள நெசவாளர் சமூகநலத் திட்டமானபூங்கர் பீமா யோஜனாஎன்கிற காப்பீடு திட்டம் கூட 6 இலட்சம் பேரில் 80 ஆயிரம் நெசவாளர்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர் அனைவரையும் இத்திட்டத்தில் சேர்க்க எந்த நிர்வாக ஏற்பாடும் இல்லை. ஓய்வூதியம் பெற தகுதியடைந்த 60 வயது கடந்த 2 லட்சம் நெசவாளர்களில் பயன்பெறுவோர் எண்ணிக்கை 15872 பேர் மட்டுமே என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. அவர்கள் பெறும் ஓய்வூதியம் சொற்பத் தொகை ரூ.400 என்பதும், இது கூட கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு மட்டுமே என்பதும் வேதனைக்குரிய செய்தியாகும்.

தமிழக அரசு, கைத்தறிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வரை செலவு செய்கிறது. இதன் மூலம் நெசவாளர்களை பாதுகாப்பதாக சொல்கிறது.

அரசு ஒதுக்கும் நிதியில் துணிவிலை தள்ளுபடி மானியத்திற்கு 118 கோடியும், இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.256 கோடியும் செலவு செய்யப்படுகிறது. துணி விலை தள்ளுபடி மானியத்திற்கான பணம் பெரும்பகுதி கூட்டுறவு அமைப்புகளில் துணி உற்பத்தி இல்லாமலே துணி உற்பத்தி ஆனதாக, விற்பனை ஆனதாக கணக்குகள் உருவாக்கி, மானிய பணம் சூறையாடப்படுகிறது. இதற்காகவே இத்திட்டம் கவனமாக அமல்படுத்தப்படுகிறது.

கைத்தறி துறையில் ஒதுக்கீடு செய்துள்ள பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் ஊழல் புரிய எளிமையான வழிமுறைகளோடு பல பெயர்களில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அமைதியாக அரசின் பணம் குறுக்கு வழியில் மாயமாகிக்கொண்டிருக்கிறது. மெகா திட்டங்களுக்குள் நடப்பது மெகா ஊழல்களே தவிர, தொழில் வளர்ச்சிக்கான மெகா மாற்றங்கள் அல்ல.

கைத்தறி துணிகளுக்கு தற்போது உள்ள நல்ல மதிப்பிலான சந்தையை விரிவுபடுத்தவும் கைத்தறி துணி பயன்பாடு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தவும் பிரபலமான நட்சத்திரங்கள்-விளையாட்டு மற்றும் பல்துறை சாதனையாளர்கள் மூலம் கேரளாவில் தற்போது அமலில் உள்ளது போன்ற கைத்தறி தூதுவர் என்ற விளம்பரயுக்திகளை மேற்கொள்ளலாம்.

கைத்தறி தொழில் மேம்பாடு-பாதுகாப்பு-வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வழி நடத்தவும் அரசுக்கு உதவிடவும் கைத்தறி தொழில் குறித்த சிந்தனையாளர்கள், தொழில் ஞானம் கொண்ட அரசு அதிகாரிகள், நெசவாளர் பிரதிநிதிகள், தொழில் முதலீட்டாளர் கள் அடங்கிய ஒரு தரப்பு அரசியல் சார்பாக அல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்குவது இதுபோன்று இன்னும் பல பன்முகத்தன்மைகளில் செயல் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் நமது புகழ்மிக்க கைத்தறி தொழிலையும் உற்பத்திக்கான மனிதவளத்தையும் பாதுகாக்க முடியும்.

(கட்டுரையாளர், தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com