Contact us at: sooddram@gmail.com

 

உல்லாச புரியாக மாறிவரும் கிழக்கின் பாசிக்குடா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உல்லாச பயணிகளுக்கான ஹோட்டல்களுக்கு தேவையான ஹோட்டல் உத்தியோகஸ்தர்களை பயிற்றுவிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹோட்டல் பணியாளர் பயிற்சி பாடசாலையொன்று அமைக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு பாடும் மீன் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலையில் தற்பொழுது ஹோட்டல் ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கான பயிற்சிப் பாடசாலையொன்று செயற்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தினால் அமைக்கப்பட்ட மேற்படி பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பயிலுனர்கள் தற்பொழுது பிரபல ஹோட்டல்களில் கடமை புரிகின்றனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு மட்டக்களப்பிலும் ஹோட்டல் பயிற்சி பாடசாலை ஆரம்பிக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் பல வழிகளிலும் செயற்பட்டு வருகிறது. பாசிக்குடாவில் இரண்டு உல்லாசப் பயண ஹோட்டல்கள் உள்ள மேலும் 14 ஹோட்டல்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி ஹோட்டல்களுக்குத் தேவையான ஊழியர்களை வழங்குவதற்கென மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹோட்டல் ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கான பயிற்சி நிலையமொன்று விரைவில் அமைக்கப்படும்.

பாசிக்குடா பகுதியில் அமைக்கப்படும் உல்லாச ஹோட்டல்களில் உள்ளூர் வாசிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க சம்பந்தப்பட்ட ஹோட்டல் கம்பனிகளின் நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. சம்பந்தப்பட்ட கம்பனிகளின் முடிவை நாமும் பெரிதும் பாராட்டுகிறோம் என்றும் கூறினார் முன்னாள் முதலமைச்சர்.

பாசிக்குடா பகுதிகளுக்கு வெளிநாட்டு உல்லாச பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாச பயணிகளும் பெருந்தொகையினர் வருகின்றனர். உல்லாச பயணிகளுக்கு ஒரு முக்கிய இடமாக விளங்க தொடங்கியுள்ளது. பாடசாலை மாணவ மாணவிகளும் கல்வி சுற்றுலா இப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பாசிக்குடா அமித்யஸ்ட் செஸ்ஹோட் ஹோட்டல் முகாமையாளர் சஞ்சீவ ஜெயமன் கூறுகையில் இந்த ஹோட்டல் இவ்வருடம் மார்ச் மாதம் 18ஆம் திகதி முதல் செயற்பட தொடங்கியுள்ளது. இப்பொழுது 40 அறைகள் உள்ளன. இன்னும் 60 அறைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சேர்த்துக் கொள்ளப்படும்.

650 மில்லியன் ரூபா செலவில் 5 தனியார் கம்பனிகள் இணைந்து இந்த ஹோட்டலை கட்டியுள்ளன. இந்த ஹோட்டலில் தற்பொழுது 67 ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்களில் 40 வீதமானவர்கள் உள்ளூர் வாசிகள், அயல் கிராமங்களை சேர்ந்தவர்கள்.

வெளிநாட்டவர்கள் டொல்பின் சுறா மீன்களை பார்வையிடுவதற்கும் இங்கு வருகின்றனர். உல்லாச பயணிகளுக்கான சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்துள்ளது. எமது ஹோட்டலை பொறுத்த வரையில் எந்நேரமும் 60 வீதத்திற்கு மேற்பட்ட ஹோட்டல் அறைகளில் பயணிகள் தங்கி இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஊடகவியலாளர் குழு பாசிக்குடா பகுதிக்கு சென்ற பொழுது அப்பகுதிக்கு பெரும் தொகையானோர் வந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. இது போன்ற கூட்டம் தினமும் அப்பகுதிக்கு வருவதாக அப்பகுதியில் கடலை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் வர்த்தகர் தெரிவித்தார்.

பாசிக்குடா பகுதி ஓர்குட்டி கோல்பேஸ்போல் காட்சியளித்தது. நடமாடும் ஐஸ்கிaம் வாகனங்கள் மும்முர வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

கடலில் குளிப்போருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென பொலிஸாரின் படகுகள் பாதுகாப்பு பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை விட தனியார் படகுகள் பலவுள்ளன. சுமார் 20 நிமிட படகு பயணத்துக்கு ஒருவரிடமிருந்து 100 ரூபா அறவிடப்படுகிறது.

கடலில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் அதாவது ஆழம் நிறைந்த பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென பொலிஸார் விசில் மூலம் சமிக்ஞை வழங்குகின்றனர்.

எவரும் ஆழமான கடல் பகுதிக்கு சென்று தத்தளித்தால் அவர்களை மீட்டு வருவதற்கு கரையில் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர்.

பெருந்தொகையான சிறுவர்கள் கடலை கண்ட ஆர்வம், மகிழ்ச்சியில் சிறுவர்கள் தாம் அணிந்து வந்த உடை பாத அணிகளை கழற்றாமல் கூட கடலில் பாய்கின்றனர். சிறுவர்களின் ஆர்வத்தை கரையில் இருந்துகொண்டு பெற்றோர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கின்றனர். புகைப்படமும் எடுக்கின்றனர்.

பாசிக்குடா பகுதிக்கு செல்லும் வெளி இடத்தவர்கள் அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் காத்தான்குடி கைத்தறி சாரங்கள் உட்பட கைத்தறி புடவைகளை கொள்வனவு செய்கின்றனர். இது கைத்தறி புடவை நெசவாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமைகிறது.

உல்லாச பயணிகளும் காத்தான்குடி கைத்தறி புடவைகளை அணிந்திருப்பதை கவனிக்க கூடியதாக இருந்தது. கிழக்கில் நிலவிய சூழ்நிலை காரணமாக அப்பகுதிக்கு செல்ல முடியாதிருந்த வெளிமாவட்டத்தவர்கள் பணத்தை செலவளித்து அப்பகுதிகளை பார்வையிடச் செல்கின்றனர். இது கிழக்கு தெற்கு மக்களை ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ள அரிய சந்தர்ப்பமாக அமைகிறது.

கிழக்கு மக்களும் தென் பகுதி மக்களும் அப்பகுதிகளுக்கு செல்ல பெரிதும் விரும்புகின்றனர். தென் பகுதி மக்கள் கிழக்கிற்கு செல்வதால் கிழக்கு மக்கள் சிங்கள மொழியில் பேசவும் பழகியுள்ளனர். தென் பகுதியில் இருந்து வரும் மக்களுடன் சிங்கள மொழியில் பேசுகின்றனர். இதனால் இது ஒரு உல்லாச பயணம் மட்டுமல்ல ஓர் உறவு பாலமாகவும் அமைந்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com