Contact us at: sooddram@gmail.com

 

தேசியப் பிரச்சினைக்கான தீர்வும் பரிமாணங்களும்

நவீன காலத்தில் இலங்கையின் தேசியப்பிரச்சினையில் தெளிவான இரு பரிமாணங்கள் காணப்படு வதை உணர முடிகிறது. முதலாளித்துவத்தின் கீழ் பல்வேறு இனப்பிரிவுகள் - தேசிய அக்கறைக்குள் தூண்டப்பட்டமை மற்றும் பிரிட்டிஷாரின் கீழ் குடியேற்றவாதம் ஆரம்பித்த காலம் ஆகியவற்றை கூற முடியும். முதல் பரிமாணமானது குடியேற்றவாதத்திலிருந்து / சுதந்திரம் அடையாளப்படுத்தியது. அல்லது இன்னும் இதுவரையில் அடையாளப்படுத்துகிறது. 1948 சுதந்திரத்துக்குப்பிறகு குடியேற்ற வாதத்திலிருந்து சுதந்திரம் / அல்லது தற் போது காண்பது போன்ற ஏகாதிபத்தியவாதம் அல்லது வெளிவாரித்தலையீடு களாகும். அடிப்படையில் மேற்குலகில் இருந்து எழுகின்ற தலையீட்டைக் குறிப்பிடலாம். இதனையே தேசியப்பிரச்சினையின் வெளியாக பரிமாணம் என கருத்தேற்றம் செய்யப்படுகிறது.

சுதந்திரம் இறைமை, ஆள்புல ஒரு மைப்பாடு போன்றன தேசியப்பிரச்சினை யின் பரிமாணம் தொடர்பிலான பிரதான கோரிக்கைகளாகவும் சுலோகங்களாகவும் இருந்துள்ளன. அதுவும் நாட்டின் ஒட்டு மொத்த சுயநிர்ணய உரிமையை தூண்டலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகவுள்ளது. இதில் இந்தியாவும் ஒரு சவாலாக அல்லது ஒரு அச்சுறுத்தும் அதிகாரமாக தேசியப் பிரச்சினைக்குள் பிரவேசித்துள்ளது.

இனப்பிரச்சினை

தேசியப்பிரச்சினையின் இரண்டாவது பரிமாணம் கடந்த மூன்று தசாப்த காலமாக அல்லது அதற்கு முன்பிருந்து நாட்டில் வருத்திக் கொண்டிருக்கின்ற பிரச்சினையாக அமைந்துள்ளது. இதனை அமைதியான முறையில் தீர்த்துவைக்கத் தவறியமையே யுத்தம் சாவு நாசம் ஆகியவற்றுக்கு காரணமாக மாறியுள்ளது. இங்கு தேசியப்பிரச்சினையின் இரண்டாவது பரிமாணம் தமிழ்தேசியப்பிரச்சினை அல்லது குறிப்பாக தமிழ் முஸ்லிம்களை உள்ளடக்கிய சிறுபான்மை மக்களின் தேசியப்பிரச்சினை எனப்பொருள் படுகிறது இதுவேதேசியப்பிரச்சினையின் உள்ளக பரிமாணமாகும்.

தீர்க்கமான தவறுகள்

இனரீதியான தேசங்கள் அல்லது சமூகத்தின் தேசிய குழுவினர் என்றவகையில் பல துறைகளிலும் தேசிய சமத்துவத்துக் காக உரிமையோடு சம்பந்தப்பட்டவர்கள் பிரயாசைப்படுகின்றனர். அது மறுக்கப்படு கின்ற ஒரு தருணத்திலேயே, தன்னாட்சி, சமஷ்டி (உள்ளக சுய நிர்ணயம்) பிரிவினை (வெளிவாரி சுயாட்சி) போன்றவற்றுக்கு இட்டுச் செல்லப்படுகின்றன - இட்டுச் செல்லப்படுகின்றனர். சுய நிர்ணயம் என் பது பல்வேறு வடிவங்களில் அவர்களது பிரதான கோஷமாகவும், கோரிக்கையாகவும் இருந்துள்ளது.

இப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கு தலைமை கள் தீர்வுகாணத் தவறியமை அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தீர்க்கமான தவறாகும். பரஷ்பர நம்பிக்கையீனம், விட்டுக்கொடுக்காத்தன்மை, புரிந்துணர்வற்ற தன்மை, அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு போன்றவற்றை தீர்க்கமான தவறுக்கு காரணங்களாக முன்வைக்கலாம்.

சமூகங்களுக்கிடையிலான தேசியப் பிரச்சினை தொடர்பான பரிமாணங்களின் வேறுபாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு சந்தேகங்கள் களைந்தெறியப்பட வேண் டும். பரஸ்பர உறவுமுறை வளர்த்தெடுக் கப்படவேண்டும். இரு சமூகங்களுக்கும் இடையிலான இனரீதியான சமநிலை ஆக்க பூர்வமான நிலைக்கு கொண்டு வரப்படுதல் - நாட்டின் தற்போதைய நல்லிணக்கம் மற்றும் ஏனைய விவகாரங் கள் தொடர்பான முட்டுக்கட்டைகளுக்கான தீர்வாக அமையலாம்.

தத்துவம் தத்துவாசிரியர்கள்

தேசியப் பிரச்சினையின் உள்ளக அம்சங்கள்சில சந்தர்ப்பங்களில் உள்ளக ரீதியாகவும் வெளிவாரியாகவும், மிகைப்படுத்திக் கூறப்படுகின்ற நிலமைகளும் பிரச்சினைக ளின் தீர்வுக்கு தடங்கலாகி விடுகின்றன. மிருகங்களைப் போலன்றி மனிதர்கள்- தத்தமது மனக்கண் முன் தோன்றும் அச்சுறுத்தல்களையும் பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு திருத்தமுடியாத தன்மையை கற்பனை செய் யும் அற்ப செயல்பாடுகளைக் கொண்டு பணியாற்றும் பண்புடையவர்களாக உள்ளனர். இது தொடர்பில் இலங்கையர்கள் தூர நோக்கற்றவர்கள். அதேநேரம் தத்துவாசிரியர்கள் இயலுமானவரை உள்நுழைந்து கருத்துக்களால் மேலும் சிக்கலாக்குகின்றனர்.

வரலாறும் மிகைப்படுத்துகையும்

ஐம்பதுகளின் ஆரம்பத்தில்அமெரிக்க பிரசாரம் காரணமாக கம்யூனிஷ்டுகளின் அச்சுறுத்தல் இருந்ததாக கூறப்படுகிறது. 70களில் வியட்நாம் போரினால் ஆதிக்கத்துக்குள்ளான அமெரிக்க ஏகாதிபத்திய அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது ஒருகட்டத்தில் இலங்கையில் மகாவளித்திட்டம் ஒருசதி என்று பேசப்பட்டதாக அறியமுடிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து பேசப்பட்டக் காலத்தில் இந்திய விரிவாக்க வாதம் பற்றிய அச்சம் தலைதூக்கியது இததை ஜே.வி.பி தனது போராட்டத்துக்கான மனித வலுத்திட்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டது.

இவை யாவும் பொய்யல்ல எனினும் மிகைப்படுத்திக் கூறப்பட்டதனால் எழுந் தவை எனலாம். இலங்கை ஒரு குடி யேற்றபிரதேசமாக இருந்த சமயம் சுதந்திரம் அடிப்படைத்தேவை யாக இருந்தது அதனை அடைவதற்கான போராட்டமும் சட்டபூர்வமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகும் குடியேற்றவாத இழைகள் பிணைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவிழ்த்துவிடவேண்டிய முயற்சிகளும் அவசியமாகவே இருந்தன. ஆனால் கண்டிப்பான பதற்றமான சூழலின் கீழ் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நோக்குடன் வெளிவாரியான அச்சுறுத்தலை மிகைப்படுத்தி கூறிய தேசப்பற்றுக்குடையின் கீழ் செயற்படவேண்டியிருந்ததாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.

இராஜதந்திர விசயம்

உலகம் பெரிய அதிகார சக்திகளால் அல்லது ஏகாதிப்பத்திய வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பல சட்டபூர்வமான நிறுவனங்கள் ரீதியான மாற்றங்கள் ஐ.நா.சபையின் கீழ் காணப்படுகின்றன. அவை இலங்கை தனது சுதந்திரத்தையும் அவசியப்படும் இறைமையையும் குலையாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட தேவையுண்டு அது ஒரு தலைசிறந்த இராஜதந்திர விடயமாக இருத்தல் வேண்டும்.

யதார்த்தம்

பிரிவினைவாத அச்சுறுத்தலுடனும் அல்லது இன்றியோ இலங்கை அதன் சிறுபான்மை மக்களை ஓரளவுக்கு தீர்க்க மான முறையில் கவனித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 20ம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் பல பின்னல்கள் இருந்திருப்பினும் சந்தேகத்துக்கிடமின்றி பல்வேறு இன பிரிவினர்களுக்கிடையில் நாடு அமைதியாக கூட்டுவாழ்வில் இருந்துள்ளமை சிறந்த உதாரணமாகும். இல்லையேல் நாடு ஒரே நாடாக சுதந்திரமடைந்திருக்க முடியாது.

சமூக தேசியவாதம்

ஒரு பக்கம் சிங்கள அடிப்படைவாதம் மறுப்பக்கம் ஆரம்பத்திலிருந்தே தமிழ் தேசியவாதமும் அதன் இருப்பை காண்பித்துள்ளது. இது ஆச்சரியமின்றி பொருளாதார அபிவிருத்தி அடையாத நிலைகளையும் அபிவிருத்தி அடையாத சமூக கட்டமைப்புகளையும் தக்க வைத்துக்கொண்ட தருணம் சமூக தேசியவாதத்துக்கு பதிலாக இனரீதியாக தேசியவாதம் முன்னாதிக்கம் கண்டது.

ஒருநாடு நீண்டகாலத்துக்கு இனரீதியாக தேசிய வாதத்ததை பார்த்திருப்பின் சம காலத்தில் பொருளாதார நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் கூட சமூக தேசியவாதம் வெளியாவது கடினமே. பலவந்தமாக சமூக தேசியவாதத்தையோ ஒருங்கிணைப்பையோ உருவாக்கும் முயற்சிகள் அபாயகரமான விடயங்களுடன் கூடிய ஆபத்தான தோல்வியை ஏற்படுத்தலாம். இத்தகைய முயற்சிகள் சிறுபான்மையினரின் சம்மதமின்றி முயற்சிக்கப்படுமானால் அது பலவந்தமாக ஒன்றிணைக்கும் முயற்சிக்கு இட்டுச்செல்லும். அப்பேர்ப்பட்ட ஒன்றுக்கு முயற்சிக்கப்படுவதையும், நடப்பதையுமே இன்று காணமுடிகின்றது.

விட்டுக்கொடுப்பும் சமநிலையும்

இலங்கைபோன்ற ஒரு நாட்டில் ஜனநாய கத்தையும் அபிவிருத்தியையும் நிச்சியப்படுத் திக்கொள்வதோடு தேசத்தைக்கட்டியெழுப்பு வதில் விட்டுக்கொடுப்புகள் அத்தியாவசி யமானவை. மதவெறி அல்லது தீவிரவாதம் பணியாற்றாது. அவசியமாக தேவைப்படுகின்ற விட்டுக்கொடுப்பானது. உள்வாரி அல்லது வெளிவாரிஎன்ற தேசியப்பிரச்சினை தொடர் பான இருபரிமாணங்களுக்கிடையில் உள்ளது. இந்த இரு பரிமாணங்களையும்மையத்தை நோக்கிச்செல்லல்மையத்தில் இருந்து விலகிசெல்லல் என்ற இரு எதிர் சக்திகள் ஆதிக்கம் புரிகின்றன. இந்தஎதிர் சக்திகள் தீவிர சிங்கள தேசியவாதத்துடனும் தீவிர தமிழ் தேசியவாதத்துடனும் இணைந்ததாகவே காணப்படுகின்றன. உறவுகளும் தொடர்புகளும் எதிரிமையாகவும் தலைகீழாகவும் தென்படுவதால் ஒருவிட்டுக்கொடுப்பு ஒரு சமநிலை தேவைப்படுகிறது.

வலியுறுத்தல்கள்

சிங்கள தேசியவாதம் அல் லது மையத்தைநோக்கி செல் லக்கூடிய சக்திகள் இலங்கை யில் தீர்மானிக்கும் காரணி களாக இருந்து உள்ளன. குறிப்பாக வன்முறைக்கொண்டு தமிழ் தேசியவாதத்தால் எண் பதுகளில் தடுக்கப்பட்ட முக்கிய சக்திகளாக சுதந்திரத் துக்குபிறகு பரிணமிக்கும் வரை முன்காணுவது போன்று இருந்துள்ளமையை அறியமுடி கின்றது.

குடியேற்றம் களைதல் தொடர்பில் சில தர்க்கசாத்திரம் இருந்த போதிலும் வெளிவாரி பரிமாணத்தின் வலியுறுத் தல்கள் உள்வாரி பரிமா ணத்தின் அல்லது சிறுபான் மையினர் பிரச்சினையின் சீர்கேட்டுக்கு ஒரு தீவிரமான நிலைப்பாட்டுக்கு எடுக்கப் பட்டன. சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழிக் கொள்கை மற்றும் 1972 அரசியல் அமைப்பு போன்றன பெரிய உதாரணங் களாக உள்ளன முற்றிலுமான இறைமை ஒற்றையாட்சி தத்துவம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியன பிரதான வலியுறுத்தல்களாக இருந்தன. அதேநேரம் சிறுபான்மை சமூகத்துக்கான தன்னாட்சி அதிகாரபகிர்வு அல்லது சமஷ்டி போன்ற வற்றுக்கான உடனடிநிராகரிப்பு பெரும் தாற்பரியமாக இருந் தது இதன் மூலம் வெளிப்ப டுத்தப்பட்டது. என்ன வெனில் குறித்த இரு பரிமாணங்ளுக் குடையிலான உள்ளார்ந்த தலைகீழான உறவுமுறையாகும் ஒன்று. வெளிப்படையாக வலியுறுத்தப்படுகையில், மற்றையது விரிவான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தியத் தலையீடு

இந்தியாவின் (வெளிவாரி) தலையீட்டுக்குப் பிறகே 13 ஆவது திருத்தம் ஊடாக 1987 இல் சஞ்சலமான விட்டுக் கொடுப்பு அரசியலமைப்புக் குள் நிர்மாணம் கண்டது. வெளிவாரித் தலையீட்டின் மூலமான அமைதி முயற்சிகள் கூட அதற்குப்பிறகும் நில மையை திருத்திக்கொள்ள முடியவில்லை.

அதேவேளை இன்னொரு விதத்தில் நோர்வே அனுசர ணையுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டின் ஆள் புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை பற்றிய தேசியப் பிரச்சினை தொடர்பான வெளியக பரிமாணத்தை பலவீனப்படுத்தியது.

(இஸ்மாயில் பி. மஆரிஃப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com