Contact us at: sooddram@gmail.com

 

செய்தியும் சிந்தனையும் (8)

(அபிமன்யு) 

செய்தி

பத்மநாபா ஈபிஆர்எலஎவ் ஏற்பாட்டில் 21.06.2014 அன்று லண்டனில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்ப்பட்டது. இந் நிகழ்வின் ஒரு அம்சமாக 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், தமிழ்க் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கெடுத்துக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

சிந்தனை

தமிழ்பேசும் மக்கள் தன்மானத்துடனும், சுதந்திரத்துடனும் ஒரு சமத்துவமான இனமாக இலங்கையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு மரணத்தைத் தழுவியவர்கள், எந்த நோக்கத்திற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்தார்களோ அந்த நோக்கங்கள் எதுவுமே எய்தப்படாமல் மக்கள் மோசமான நிலைமைகளிலேயே வாழ்கிறார்கள். தமிழ்மக்களின் சுதந்திரமும் சமத்துவமும் அதற்கான அரசியல் தீர்வும் இன்னும் எட்டாத, தூரத்தூர விலகும், கனியாக இருந்து கொண்டிருக்கும் நிலைமையே இன்றைய துர்பாக்கிய யாதார்த்த நிலைமையாகும்.

இந்த நிலைமையில், தியாகிகள் தினம் போன்ற இப் புனித நினைவாஞ்சலி நிகழ்வுகளில், தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தும் அதிர்ஷடவசமாக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அவர்களின் இலட்சியங்களும், நோக்கங்களும் ஓரளவிற்காவது நிறைவேற, அரசியல் தீர்வு சம்பந்தமான நகர்வுகள் குறிப்பாக என்னவாக?, எத்தகையாக இருக்கலாம்?, இருக்க முடியும்?, எப்படி நகர்த்தலாம்? என்பது பற்றிச் சிந்திப்பதும், அவற்றினைச் செயற்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும். வெறும் பொழுதுபோக்காக அல்லாமலும், வெறும் வீம்புப் பேச்சுகளாக அமையாமலும், அவை சம்பந்தமாக அர்த்தபுஷ்டியானதும், நேர்மையானதுமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், தம் வெற்றுப் பேச்சுகளை விடுத்து, தேர்தல்களில் எப்படியாவது வெற்றிபெறுவது, பதவிசுகங்களை  அனுபவிப்பது என்ற நோக்கங்களுக்கு அப்பால், அவற்றிற்கான காத்திரமானதும், தீர்மானகரமானதுமான செயல்வடிவங்களை விரைவில் முன்னெடுக்க அவர்களுக்கு  வேண்டிய உந்துதல்களையும் அழுத்தங்களையும் கொடுப்பதும் எமது தவிர்க்கமுடியாத தார்மீகக் கடமையாகும்.

பற்பல தீர்வுகள் பற்பலரால் அநேகமாக பொத்தாம்பொதுவாகப் பேசப்படுகின்றன. ஆனால், நாம் விரும்புகிறோமே இல்லையோ, எங்களின் தனிப்பட்ட எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் உவப்பாகவும்,  திருப்தியாகவும், இருக்கிறதோ இல்லையோ, இன்றைய உள், வெளி யதார்த்தங்களை நாம் சிறிது அறிவுபூர்வமாகச் சீர்தூக்கிச் சிந்தித்துப் பார்ப்போமானால், ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் ஒரு தீர்வு வரமுடியும். அந்த நிலைப்பாட்டையே எங்கள் உதவிக்கு வாருங்கள் என்று நாம் கோரும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, உட்பட்ட அனைத்து நாடுகளும், அன்றும் சரி இன்றும் சரி, தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன.

அரசியல் தீர்வுஸ்ரீலங்கா அரசியல்யாப்பு ஊடாகத்தான் ஏற்படுத்த முடியும்.

அப்படி ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அரசியல் தீர்வு என்றால்–அது எந்த மாதிரியான அரசியல் கட்டமைப்பு என்றாலும்–ஸ்ரீலங்கா அரசியல்யாப்பு முறைமை ஊடாகத்தான் ஏற்படுத்த முடியும்.

அப்படி இனி ஒன்று ஏற்படுத்துவதானால், அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வேண்டும். அதாவது, எந்த ஒரு அரசியல் தீர்வும்,  பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்டு சிங்கள மக்களின், மற்றும் முஸ்லிம்,  மலையகத் தமிழ் மக்களின் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் அமோக ஆதரவு பெறப்பட்டால்தான் அத் தீர்வு அரசியல்யாப்பில் இடம் பெற்று நடைமுறைத்தப்பட  முடியும்.

ஆனால், இதற்கான சாத்தியக்கூறுகள்–அதுவும் சகல இனங்களுக்கிடையேயும் பரஸ்பர நம்பிக்கையும், நல்லுணர்வும் இல்லாத இன்றைய நிலைமையில்– ஒரு நிரந்தர அரசியல் தீர்வை உள்ளடக்கிய அரசியல் யாப்பு மாற்றம் இப்பொழுது சாத்தியமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

உள்நாட்டு, உலக விவகாரங்களையும் போக்குகளையும் புறக்கணித்து, ஆயுதப் போராட்டம் மூலந்தான் அரசியல் தீர்வைப் பெறமுடியும் என்றும் அந்த அரசியல் தீர்வானது தனித் தமிழீழந்தான் என்று எண்ணுவோரையும், அதற்கான முயற்சிகளில்தான் தாங்கள் சகலவிதமாகவும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்போரையும், புலிகளின் பாதைகளையே முன்னெடுக்க வேண்டும் என்று எதுவித சுயவிசாரணைகளை மேற்கொள்ளாமலும், சரித்திரம் தரும்  படிப்பினைகளை கவனத்தில் கொள்ளாமலும் கற்பனை உலகில் வாழ்பவர்களை, பேசுபவர்களை விட்டுவிடுவோம். இவ்வளவும் போதாதென்று மேலும் தமிழர்களை அழிவுகளுக்கும், அனர்த்தங்களுக்கும் இட்டுச் சென்றே தீருவோம் என்ற அறியாமையினாலோ அல்லது அதி உயர்ந்த அறிவினாலோ கங்கணம் கட்டிக் கொண்டு பேசுபவர்களை, செயற்படுபவர்களை விட்டுவிடுவோம். அவர்கள்தான் சரியானவர்கள் என்று மக்கள் எண்ணுவார்கள் என்றால், ஏற்றுக்  கொள்வார்கள் என்றால், அது அவர்களின் அழியாத் தலைவிதி எனப் பச்சதாபப்படுவதைத் தவிர வேறு வழி அறியோம்.

13வது திருத்தம்

13வது திருத்தம் ஒன்றுதான், இதுவரை–இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னரான 66 ஆண்டுகால அரசியல் வரலாற்றில்– தமிழர்களின் அரசியல் அபிலாஷைக்கான ஸ்ரீலங்கா அரசியல் யாப்பில் இடம்பெற்ற  ஒரேயொரு அரசியல் தீர்வாகும்.

எனவேதான், 13வது திருத்தத்தை மையமாக வைத்தே, அதன் பங்கினை வைத்தே, இதிலிருந்து, இங்கிருந்து, எங்கு?, எப்படிப் போகலாம்?, என்பது ஓர் இன்றியமையாத தேர்வாக இருக்கும் இன்றைய நிலைமையில், இதுவே இத்தகைய தியாகிகள் தினம் நிகழ்வுகளின்போது நேர்மையான கருத்துப் பரிமாற்றத்திற்கான கருத்தரங்கத் தொனிப்பொருளாக இருந்தமை பொருத்தமானதே.

1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தந்தத்தைத் தொடர்ந்து, இனப்பிரச்னைக்கான தீர்வாக 13வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டதுதானெனினும், அதன் பலனாக இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதுதானெனினும், வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்காகப் பிரத்தியேகமாகத் தாரை வார்க்கப்பட்ட அரசியல் அதிகாரப் பகிர்வு அல்லது அரசியல் அதிகாரப் பரவலாக்கம் அல்ல அது. முழு இலங்கைக்குமான மாகாணசபை அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசியல் அதிகாரப் பகிர்வு/பரவலாக்கம் அது. பெரும்பான்மைச் சிங்கள மக்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மைச்  சிங்களப்பகுதிகளிலும் ஏற்கனவே, ஏறத்தாழ கடந்த 25 ஆண்டுகளாக, நடைமுறையில் இருக்கும் அரசியல் கட்டமைப்பாகும்.

13வது திருத்தத்தின் ஊற்றுவாயிலான இந்திய-.ஸ்ரீலங்கா ஒப்பந்தமானது ராஜீவ் காந்தி, ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆகிய இரு தனி நபர்களால் கையெழுத்திடப்பட்ட   ஒப்பந்தம் அல்ல.– இந்தியா, ஸ்ரீலங்கா என்ற இரு நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அதுவாகும்.

நாங்கள் உதவி கோரும், முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலிருந்த, இப்பொழுது நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் மோடி தலைமையிலான இந்தியாவும் சரி, தொடர்ச்சியாகச் சொல்லி வருவது 13வது திருத்தம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதே.

ஜெனிவாவில், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட ஜரோப்பிய யூனியன், மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஆதரவுடன், இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட ஜ.நா. சபை தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதும்  13வது திருத்தத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே.

இது சம்பந்தமாக இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்காவிற்குக் கொடுத்த அழுத்தமே,  25 ஆண்டுகளுக்குப் பின்னர், சென்ற ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தல்.

25 ஆண்டுகளுக்கு முன்னர், புலிகளின் படுகொலைகளாலும், அவர்களது அன்றைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவினுடனான கூட்டாலும், தமிழீழக் கனவுப் பிரசாசாரங்களாலும், தமிழ்ப் பிரதேசங்களில் மாகாண அரசாங்க முறைமை நடைமுறைப்படுத்த முடியா;. அந்த நிலைமை இப்பொழுது இல்லை.

13வது திருத்தத்தை ஆழமாகப் படித்து அதன் குறை நிறைகளை ஆராய்ந்த பின்னர்தான் பேசுகிறார்களோ தெரியாது, 13வது திருத்தில் தமிழர்களுக்கு ஒன்றுமே இல்லை என்பது தமிழர் தரப்பின் ஒரு சாராரின் வாதம்.

அது ஒரு முழுமையான தீர்வில்லை, அதில் நிறையக் குறைபாடுகள் உண்டு என்பது தமிழர் தரப்பின் இன்னொரு சாராரின் வாதம்.

13வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் நாட்டின் பிளவிற்கே வழி வகுக்க வகை செய்ததாகும், எனவே அதனை நடைமுறைப்படுத்தாது முற்றாக அரசியல் யாப்பிலிருந்து நீக்கி விடவேண்டும் என்பது சிங்களவர்கள் தரப்பின் ஒரு சாராரின் வாதம்.

இப்படியெல்லாம் ஒன்றுக்கொன்று நேர்எதிரான நிலைப்பாடுகள் தத்தமக்குத் தகுந்த தன்மைக்கேற்ப, தத்தமது குறுகிய அரசியல் நிரல்களுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப எழுந்தமானமாக எடுக்கப்படுகின்றன.

13வது திருத்தத்தின் அமுலாக்கம் நாட்டின் பிளவிற்கே வழிவகுக்கும்  என்ற வாதம் முன்வைக்கப்படுவதால், அதில் ஏதோ தமிழர்களுக்கு நன்மைகள் பயக்கும் விடயங்கள் இருக்கின்றன என்பது தெரிகிறது.

13வது திருத்தம் ஒரு முழுமையான அதிகராரப் பரவலாக்கத்தை/பகிர்வை கொண்டுள்ளதாகக் கொள்ளமுடியாது. அதன் சரத்துகளிலும், அவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதிலும் குழப்பங்களும் குறைபாடுகளும் உண்டு என்பது அன்றும், இன்றும் சொல்லப்பட்டு வருபவையே.

ஆனால், அந்தக் குழப்பங்களும், குறைபாடுகளும், குறிப்பாக என்ன? எவை? என்பவை அடையாளப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு உண்மையான வியாக்கியானங்கள் பெறப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதோடு, நிவாரணங்களும் காணப்பட வேண்டும்.

அரசியல் தீர்வுக்கான 13வது திருத்தத்திற்கு மாற்றாக இன்னுமொரு சிறந்த அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படும் சூழ்நிலை வரும்வரை, அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கும் அதனையே நடைமுறைப்படுத்துவது, குறைபாடுகளையும் குழப்பங்களையும் நிவர்த்தி செய்வது, அதனூடாக இன்னல்படும் ஏழைத் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் செப்பனிடுவது, இதர சமூகங்களிடையேயான நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது ஆகியவைதான் இன்றைய சரியான அணுகுமுறையும், காலத்தின் கட்டாயத் தேவையும் ஆகும்.  சாக்குப்போக்குகள் சொல்லி, அதனை முற்றாக ஒதுக்குவதோ, நடைமுறைப்படுத்தாது விடுவதோ, குளியல்தொட்டி தண்ணீர் அசுத்தமாக இருக்கிறது என்பதற்காக அதற்குள் இருக்கும் குழந்தையையும் தூக்கி எறியும் சுத்த  முட்டாள்தனத்திற்கு ஒப்பான நடவடிக்கையாகும்!.

மகிந்த ராஜபக்சாவும் அவரது அரசாங்கமும், 13வது திருத்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்த விடுகிறார்கள் இல்லை, விடப் போவதும் இல்லை என்ற ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

அப்படியானால், 13வது திருத்ததின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி வடமாகாணசபை அரசாங்கத்தை நடாத்துவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், மாகாணசபை அமைச்சர்கள், அதிகாரிகள், மகிந்த ராஜபக்சா அரசாங்கம் மாறும்வரை ஒன்றுமே செய்யாமல் மகிந்த ராஜபக்சாவையும், அரசையும் குறை கூறிக்கொண்டே, தம் பதவிகள் தரும் சம்பளத்தையும், சலுகைகளையும், அந்தஸ்துகளையும் அனுபவித்துக் கொண்டே, தங்கள் பதவிக் காலங்களைக் கழிக்கப் போகிறார்களா?.

அப்பதவிக் காலம் முடிந்தவுடன், எதிர்காலத்தில் வரும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும், கடந்த தேர்தல்களில் முன்வைத்த அதே கோஷங்களுடன் மறுபடியும் மறுபடியும் தேர்தல்களில் வெல்வதை ஊர்ஜிதப்படுத்துவதுதான் நோக்கம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதுதான் நியாயமா?.

பற்பல இன்னல்களின் மத்தியில் இடர்படும் தமிழ் மக்களின் விடிவிற்கு அவர்களது அரசியல், சமூக பங்களிப்பு இதுதானா?.

அடுத்த தேர்தல்களிலும் மகிந்த ராஜபக்சாவும், அவரது அரசாங்கமுமே மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் (இப்பொழுதுள்ள அரசியல்  சூழ்நிலையிலும் நகர்வுகளிலும் அதறகாக சாத்தியங்களே அதிகம்) பின் என்ன செய்யப் போகிறார்கள்?. மறுபடியும், மகிந்த ராஜபக்சாவும் அவரது அரசாங்கமும், 13வது திருத்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்த விடுகிறார்கள் இல்லை, விடப் போவதும் இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதே தமிழ்த் தலைவர்களின் இப்போதைய அரசியல் நடவடிக்கை என்றால் அப்பொழுதும் அதுவேதான் அவர்களது அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியும்! .

இப்படியே போனால் ஒன்றுமட்டும் நிச்சயம்:—தமிழர்களின் வாழ்வும் வளமும் மேலும் மேலும் குன்றிவிடும்.

தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பல எதிர்பார்ப்புகளுடன் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரனின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட வடமாகாண சபை அரசாங்கம் இது வரையில் கூறி வருவது–

வடமகாண சபையின் கவர்னராக இராணுவ அதிகாரியின் நியமனம் மாற்றப்பட வேண்டும். சரி!. இராணுவ அதிகாரியை மாற்றி விட்டு பதிலாக இன்னுமொரு தீவிர சிங்களப் பேரினவாதியை மகிந்த ராஜபக்சா நியமிக்க முடியும். அது பரவாயில்லையா? அப்படியானால் எல்லாம் சரியாகி விடுமா?

அடுத்தது, வடமாகாணத்திலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.

–அகற்றப்பட வேண்டுந்தான்;. சந்தேகமில்லை.

ஆனால், இப்பொழுதும் தனித் தமிழ்நாடுதான் தீர்வு என்றும், புலி ஆதரவுக் கோஷங்கள், புலிகளின் மீளாக்கத்திற்கான முனைப்புகள் என்றெல்லாம் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் ஆங்காங்கே நிலவுவதைச் சாக்காக வைத்து மகிந்த ராஜபக்சா இராணுவ முகாம்களை மூடவோ, குறைக்கவோ போவதில்லை. இந்தப் போக்கும் சாக்கும் அவருக்கு வேண்டியிருக்கிறது.

அத்துடன், அத்தனை இராணுவத்தையும் எங்கே கொண்டுபோய் வைப்பது?, எப்படி அவர்களை உபயோகப்படுத்துவது?, எப்படி இராணுவ அதிதாரிகளைத் திருப்தியோடு   வைத்திருப்பது?, இராணுவ ஆட்குறைப்பினால் அவர்கள் சிவில் சமூகத்தில்  கலக்கும்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு, தொடர்ந்தும் இராணுவ மனோபாவம், ஆகியவை போன்ற பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக இராணுவ முகாம்கள் எங்கும் வியாபித்திருக்கும் தற்போதைய நிலைமையை உடனடியாக அவர் மாற்றுவதற்கான சாத்தியம் இல்லை.

மற்றது, நிலவளம், பொலிஸ் அதிகாரம் மாகாண சபை அரசாங்கத்திற்குத் தரப்படவில்லை.

உண்மை!—இவைகள் தரப்பட வேண்டியவைதான். ஆனால், தரப்படாத அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு மட்டும் நாட்களை விரயப்படுத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவற்றைக் கோரிக்கொண்டே, ஆனால் அதற்காகத் தற்காலிகமாகவாவது அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டிராமல், ஏற்கனவே தரப்பட்ட பல அதிகாரங்களையும், சட்டங்களையும் பயன்படுத்தி வடமாகாண சபை அரசாங்கமும், அதன் அமைச்சர்களும் மக்கள்நலன் சார்ந்த பல திட்டங்களை ஏற்படுத்திச் செயற்படுத்த முடியாதா?

ஏற்கனவே இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, வடமாகாண அரசாங்கம் என்னென்ன திட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்?, என்னென்ன திட்டங்களைச் செயற்படுத்தி இருக்கிறார்கள்?, அரசாங்கத்திலிருந்தும் இதர வருவாய்களிலிருந்தும்  எவ்வளவு பணம் கிடைக்கப்பெற்றிருக்கிறது?, என்னென்ன திட்டங்களில் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது?, என்னென்ன திட்டங்களைச் செயற்படுத்த முடியாதிருக்கிறது?, அதற்கான காரணங்கள் என்ன? என்பவற்றை வடமாகாண அரசாங்கம் தெளிவாகப் பட்டியலிட்டுத் தெரிவிக்க வேண்டும். ஏன் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்ல?.

13வது திருத்திற்கு எதிராக அரசாங்கம் செயல்படுகிறது என்றால், எந்தச் சரத்துகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விளக்கி அவற்றிற்கு சரியான வியாக்கியானங்கள் கோரி, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தும்படி நீதி மன்றங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்களா?. அப்படியானால், அவை எவை? என்பதை வடமாகாண அரசாங்கம் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நெருக்கமாக இருப்பவர்களிடமிருந்தும் தெளிவான பதில்கள் இல்லை. பல காரியங்கள் செய்யப்படுகின்றன; கருமங்கள் ஆற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லமுடியாதுஎன்ற சொதப்பல்கள்

வடமாகாணசபையின் முதன்மைச் செயலாளர், மகிந்த ராஜபக்சா அரசாங்கத்தினால் நியமிகப்பட்டவர். தனது கடமைகளைச் செய்ய முடியாது வடமாகாண அரசாங்கம் முட்டுக்கட்டை போடுகிறது என அவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். அதன் முடிவைப் பார்த்திருக்கிறோம் என்றும் ரிஎன்ஏயினர் தரப்பில் நீதிமன்றத்தை இதுவரை அணுகாததின் காரணமாகவும் கூறப்படுகிறதாம்.–. எங்களுக்கு நல்ல குழந்தை ஒன்று வேண்டும், ஆனால், யாரோ கர்ப்பமுற்றிருக்கிறார்கள், அந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவிருக்கிறோம் என்பதைப்போல்லலவா இருக்கிறது இது. அலுங்காமல் நலுங்காமல் அடைய விரும்பும் குழந்தைப் பேறு!..

வேறொரு பதில்:- நீதி மன்றம் அரசாங்கத்தின் சார்பாக இருக்கும்.

சரி, இருக்கலாம்.அதற்காக நீதிமன்றத்தைச் சட்டரீதியாக அணுகும் எமது அடிப்படை உரிமையையும் கைவிடுவதா?. சரியான வாதங்களை முன்வைக்கும் சட்டத்தரணிகள் எம்மத்தியில் இல்லையா?. சி.வி.விக்னேஸ்வரன், இரா சம்பநதன், சுமந்திரன் ஆகியோரே சட்டத்தரணிகள்தானே. சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசர். சுமந்திரன் இன்னும் அதிக ஊதியம் பெறும் சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் ஆஜராகிக் கொண்டிருக்கும் பிரமுகர்.

இதில் வேடிக்கை ஒரு சமீபத்திய செய்தி:—இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருகபலி யாகத்தை முழுமையாகத் தடைசெய்ய முடியாது என்று இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். மிருகபலி தொடர்பாக பிக்குமாரின் தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு ஒன்றை விசாரித்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் சிலாபத்தில் உள்ள முன்னீஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூசைக்கு அண்மையில் தடை விதித்திருந்தது. அந்தத் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கோரி பத்ரகாளி அம்மன் ஆலயத்தினரால் தாக்கல் செய்ப்பட்ட மனுவொன்றை விசாரித்தபோதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹம்!..மிருகபலி யாகத்திற்காக பத்ரகாளி அம்மன் ஆலயத்தினர் நீதிமன்றம் சென்று தீர்ப்புப் பெறுகிறார்கள்;. 13வது திருத்தம் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல மெத்தப் படித்த மேதைகள் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வக்கில்லை!!….

அட, 13 வது திருத்தந்தான் சரியில்லை, ஒன்றுக்கும் உதவாது என்றால், மாற்றாக என்ன தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்களின் பெரும்பானமைத் பிரதிநிதிகளாக தமிழ்க் கூட்டமைப்பினர் சமர்ப்பித்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், பொத்தாம் பொதுவாக, சுயநிர்ணய உரிமை, கௌரவமான வாழ்வு, எமது மக்கள் சமத்துவமாகவும், சமபிரஜைகளாகவும் வாழ்வதற்கு அதிகாரங்கள் கூடிய அளவில் பகிரந்தளிக்க வேண்டும். இந்தியாவும், சர்வதேச சமூகமும் எமது கோரிக்கையின் நியாயப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற வெற்று முழக்கம்!.-தமிழர்கள் தம் உரிமைகளைப் பெற இது போதுமா?

இப்பொழுது, இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு நாட்டில் ஒரு காலத்தில் அநீதி ஏற்படலாம்;. ஆனால் எந்தவொரு நாட்டிலும் அநத அநீதி தொடர்கதையாக இருக்க முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் முனிபுங்குவ வார்த்தைகள்!.

இந்த வார்த்தைகளை முற்றிலும் நம்பித்தான சொல்கிறாரே தெரியவில்லை. ஆனால், இந்த வார்த்தைகளைச் சொல்பவர் சிலர் சிலரை எல்லாக்காலமும் ஏமாற்றலாம்;.ஆனால் எல்லாரையும் எல்லாக்காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் பொருத்தமற்றது என்பது அவரது நீண்ட கால அரசியல் அனுபவத்தில் அவருக்குத் நன்றாகத் தெரியும் போலிருக்கிறது!.

தமிழர்களைப் பெரும்பானமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அவர்கள் இலங்கை அரசியல் யாப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட 13வது திருத்ததை இப்போதைக்கு மையமாகக் கொண்டு தமிழர்களின் இன்னல்களையும், அவலங்களையும் தீர்க்க, வாழ்வாதாரங்களைச் செப்பனிட, நேர்மையானதும் தீரமானகரமானதுமான சகலவித அரசியல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டால், அது சிங்களப் பேரினவாதிகளுக்கே சாதகமாக  அமையும். மகிந்த ராஜபக்சாவின் ஆட்சி மாற்றத்தின் பின்னரோ, அல்லது மகிந்த ராஜபக்சா சீனாவிற்கும், மற்றும் அமெரிக்கா, மேற்கு நாடுகளின் நலன்களுக்குச் சாதகமற்ற நாடுகளுக்கும் வழங்கும் ஆதரவு நீர்த்துப்போகும் பட்சத்திலோ, இந்தியா மற்றும் இதர சர்வதேச சமூகங்கள், தமிழர் சம்பந்தமான அக்கறைகளைக் குறைக்கும்;. தமிழர்களின் இன்றைய இன்னல்கள் நீங்காததோடு மேன்மேலும் அதிகரிக்கும்; இலங்கையில் தமிழர்களின் அடையாளம் மேனமேலும் மங்கும். மிகவும் தூரதிரஷ்டவசமாக இதுதான் நடக்கப்போகிறது. எமது தலையில் நாமே மறுபடியம் மண்ணை அள்ளிக் கொட்டிய நிலைமைக்குத்தான் இட்டுச் செல்லப்போகிறது.

தமக்கு ஒரு விடிவைத் தருவார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரும், மகிந்த ராஜபக்சா ஒன்றையும் தராது (இதைச் சொல்வதற்காகவா தேர்தல்களில் எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளித்தோம்?) என்று மட்டும் சொல்லிக் கொண்டிராமல், ‘‘சர்வதேசம் நாம் விரும்பும் குழந்தையைப் பெற்றுத் தந்து விடும் என்ற வெற்றுக் கனவுகளில் மூழ்காமல், இனியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டிய அரசியல், சட்ட நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கக்  காத்திரமான, வலிமையான, உந்துதல்களையும் அழுத்தங்களையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழர்களும் அவர்களுக்கு ஆணித்தரமாகக் கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இலங்கைத் தமிழ்மக்களுக்கு, அதுவும் குறிப்பாக இலங்கையில் வாழும் ஏழைத் தமிழர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் வஞ்சம் புரிந்தவர்களாகி விடுவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com