Contact us at: sooddram@gmail.com

 

உணவு நஞ்சாவதன் அடிப்படை!
(ம.செந்தமிழன்)

உணவு ஏன் நஞ்சானது எனக் கேட்டால் பல வகையான விளக்கங்கள் தர முடியும். எல்லா விளக்கங்களுக்கும் அடிப்படையான ஒன்றைப் பற்றி உங்களிடம் உரையாட விரும்புகிறேன். ’உணவு தயாரிக்கப்படுவதல்ல, படைக்கப்படுவது’ என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால் உங்களுக்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை. ஆனால், சமூகத்தின் கணிசமான தொகையினர் ‘படைப்பை’க் காட்டிலும் ‘தயாரிப்பில்’ நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
கதை எழுதுவதைம் கவிதை எழுதுவதைம் ‘படைப்புகள்’ எனக் கூறுவது இச் சமூகம். இதற்கு உணவும் உயிரின வாழ்க்கையும் ‘படைப்புகள்’ அல்ல.

உணவு என்பது பசிக்கான இடுபொருள் அல்ல. நவீன சமூகம் உணவை ஓர் இடுபொருளாக (input) மட்டுமே கருதிக் கொண்டுள்ளது. பசியை அடக்கவும் , சத்துகளைக் கூட்டவும் வயிற்றுக்குள் திணிக்க வேண்டிய இடுபொருட்களாக உணவு வகைகளை அணுகுவதானால்தான் இப்போதைய சீரழிந்த சந்தை உருவாகியுள்ளது.
உணவுகள் அனைத்தும் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட அற்புதப் படைப்புகள். மனிதர்களால் உணவைக் கையாள முடியும், கட்டுப்படுத்த முடியாது.
தொல்காப்பியம் ‘தெய்வம் உணாவே’ எனப் பதிவு செய்துள்ளது. தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவை வைத்த மரபு நம்முடையது. இப்போதைய உணவுகள் ’சந்தை’ எனும் பேராசைக் கனவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகியவற்றின் விளைவாக, உணவுச் சந்தை பெரும் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. உயிர்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப உணவு படைக்கப்படுவதுதான் இயற்கை மரபு. கானகத்தில் வாழும் தாவர உண்ணிகளின் எண்ணிக்கைக்கேற்ப தாவரங்கள் வளர்கின்றன. இறைச்சி உண்ணிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப மான், முயல் போன்ற இரை விலங்குகளின் எண்ணிக்கை இருக்கிறது. ஏதேனும் ஒரு சூழலில் உயிரினங்களின் எண்ணிக்கையில் மாற்றம் தேவையெனில் இயற்கைச் சீற்றங்களின் வழியாக எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.
செயற்கையாக உற்பத்தியை அதிகரிக்கச் செய்த நவீன உணவுப் புரட்சிகள், உணவைப் படைப்பின் பிடியிலிருந்து விலக்கி, தொழிற்கூடங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிட்டன. இப்போது எல்லாமே மிகையாக உற்பத்தி செய்யப்படுகிறது.
குறிப்பாக, நெல் போன்ற தானியங்கள் அபரிமிதமாக விளைகின்றன. தேவையைக் காட்டிலும் மிக அதிகமான தொகையில் விளைச்சல் பெருகியுள்ளது.
இந்த மிகை விளைச்சலால் உணவின் தரம் உயரவில்லை. மாறாக, உணவு நஞ்சாகிவிட்டது. அதிக உற்பத்தியால் விலை வீழவில்லை. மாறாக, உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரே வகை அரிசியின் விலையைக் கடந்த ஐந்தே ஆண்டுகளில் கணக்கிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் ‘நெல் உற்பத்தியில் சாதனை அளவு’ எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தேவையைக் காட்டிலும் அதிக அளவுக்கு அரிசி உற்பத்தி செய்யப்படுவதாகவும் பெருமைமிகு அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. ’உபரியாக இருக்கும் பொருளின் விலை வீழ்ச்சி அல்லவா அடைய வேண்டும், இங்கே, உயர்ந்துகொண்டே உள்ளதே என்ன மர்மம்’ எனக் கேட்டுப் பாருங்கள்.
எல்லா உணவுப் பொருட்களும் மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு வணிகக் கிட்டங்கிகளில் பதுக்கி வைக்கப்படுகின்றன. உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு உணவு இல்லாமல் போனாலும், பதுக்கல் கூடங்களில் உணவுக் குவியலுக்கு ஒருபோதும் பஞ்சம் வருவதில்லை.
பதுக்கலுக்கான நவீன அறிவியல் செயல்முறைகளில் ஒன்று, நஞ்சு மாத்திரைகளை உணவு மூட்டைகளில் கலப்பது. மாதக் கணக்கில் பதுக்கி வைக்கப்படும் உணவுப் பொருட்களின் மீது புழுக்களும் பூச்சிகளும் உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, மிகக் கொடிய நஞ்சுகள் உணவு மூட்டைகளில் கலக்கப்படுகின்றன.
மஞ்சள் என்றாலே மருத்துவ குணம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மஞ்சள் கிடங்குகளுக்குள் விவரம் அறியாதவர்கள் நுழைந்துவிட்டால் மரணம் நேரிடுமளவுக்கு அபாயம் உருவாகியுள்ளது. மஞ்சள் மீது பூச்சிகள் உருவாகாமல் இருப்பதற்காக நச்சு மருந்துகளைத் தெளித்து, கிடங்கின் கதவுகள் இறுக்க மூடப்படுகின்றன.
மிகவும் நல்லவை என நீங்கள் நினைத்துக் கொண்டுள்ள வரகு, கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சீர் தானியங்களுக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. இந்தத் தானியங்கள் எல்லாம் இயற்கையான முறையில் விளைந்தபோது, உற்பத்தியின் அளவு சீராக இருந்தது. இப்போது இவற்றிலும் வீரிய விதைகள் உருவாக்கப்பட்டுவிட்டன, இவற்றின் விவசாயத்திலும் இரசாயனங்களும் நஞ்சுகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்த தானியங்களின் இயல்பை மீறிய அபரிமிதமான விளைச்சல் உருவாகிக் கொண்டுள்ளது.
சீர்தானியப் பதுக்கல் வணிகர்களும் வெற்றிகரமாக உருவாகிவிட்டார்கள். மாதக் கணக்கில் சீர் தானியங்கள் பதுக்கி வைக்கப்படுகின்றன. இப் பதுக்கலின்போது தானியங்களின் மீது பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக நஞ்சு வளையம் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
விவசாயத்தின்போது நஞ்சு தெளிப்பதை மட்டுமே இதுவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். விளைச்சலுக்குப் பின், உங்கள் வயிற்றுக்குள் செல்லும்வரைக்கும் உணவின் மீது செலுத்தப்படும் நஞ்சுகளின் எண்ணிக்கையைச் சொல்லி மாளாது.
மிளகாய்த் தூள், மல்லித் தூள், புளி, கடுகு, சீரகம், மிளகு எனச் சகலமும் இவ்வாறான பதுக்கலுக்கு ஆட்பட்டு, நஞ்சாக்கம் செய்யப்பட்டுத்தான் உங்களை வந்தடைகின்றன. இப்பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தைப் பற்றி ஓராயிரம் பக்கங்கள் எழுதலாம்.
உங்களில் பலர் ’இயற்கை வேளாண்மை நல்லது’ என்கிறீர்கள்.
இயற்கை வேளாண்மை என்பது, இயற்கையின் படைப்பை நம்புவதுதான். மிகையாக உற்பத்தி செய்யப்படும் உணவை அழிக்க பூச்சிகளும் புழுக்களும் படைக்கப்படுகின்றன. அந்த உயிரினங்களை மனித அறிவைக் கொண்டு அழிக்க முற்படும்போது, உணவு நஞ்சாகி மனிதர்கள் அழிகின்றனர்.
ஆக, உணவின் படைப்பில் தலையிட்டால் அழிவு நிச்சயமானது. ஒன்று மிகையான உணவு அழிய வேண்டும் அல்லது அதை உட்கொள்ளும் மனிதர்கள் அழிய வேண்டும். இது படைப்பின் விதி.
நண்பர்களே, மனித அறிவின் பொறுப்பில் உணவை ஒப்படைத்துக் கொண்டே இருந்தால், இவ்வாறான அழிவுகளை நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும். நீங்கள் தயாரிப்புகளை நம்புவதாக இருந்தால், இப்போதைய சந்தையில் போராடிக் கொண்டிருங்கள்.
படைப்பை நம்புவதாக இருந்தால், இயற்கையான விளைபொருட்களை நாடுங்கள். கால்காணி நிலத்தையாவது சொந்தமாக்கி உங்கள் குடும்பத்திற்கு மட்டுமான உணவை வேளாண்மை செய்யத் துவங்குங்கள்.
நாம், தொடர்ந்து கூக்குரல் எழுப்பிக் கொண்டே இருக்க முடியாது. உணவைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமாக, நம்மால் மனித அறிவை நம்பவே முடியாது.
முன்னாள் டெலோ ஆயுததாரியும் இன்னாள் வடமாகணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் அவர்கள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான வடமாகணஅரச boad of directors நியமனத்தை ஆட்சேபித்து வடமாகாணசபையை கண்டித்திருக்கிறார். அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்கள் நியமனங்களில் அந்த சங்க உறுப்பினர்களின் உரிமைகளை மதிக்காது அவர்களின் மரபை வடமாகாண அரசு மீறியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். இதற்காக அவர் மாகண அரசை எதிர்த்து சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் என அறியப்படுகிறது. 30 வருடங்கள் சங்கத்துடன் எதுவித தொடர்பும் அல்லாத வெளி நாட்டில் வசித்துவந்த "இலங்கை குடியுரிமை மட்டுமே" உடைய ஒருவர் இச்சங்கத்தின் இயக்குனராக இருக்கிற பட்சத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கு இவரால் எதுவும் செய்ய முடியாது என தான் உறுதியாக நம்புவதாகவும் இது தனது அசைக்க முடியாத நம்பிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.!! மேலும் இது பற்றி வடமாகாணசபை உறுப்பினர் சிலரிடம் கேட்டதற்கு இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக தான் கொள்ள வேண்டுமே தவிர மாகாண அரசின் உத்தரவை விமர்சித்து அந்த அரசில் இருந்து கொண்டு பொறுப்பற்ற தனமாக அறிக்கை விடுவது ஏற்க முடியாதது என தெரிவித்தனர் மேலும் அரச உத்தரவை விமர்சித்து அறிக்கை விடுபவர்கள் அரசின் இறையாண்மை குந்தக சட்டத்தின் படி பதவி பறிபோக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆயுதாரி அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா நெடுந்தீவு பலனோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு பெருந்தொகையான பணத்தை முன்னைய ஆட்சிக்காலத்தில் வழங்கியிருந்தும் சுமார் 30 லட்சரூபா நட்டத்தில் சங்கம் இன்றும் இருக்கிறது. இந்த நட்டத்திற்கான காரணம் ஊழலும் நிர்வாக திறமை இல்லாமையுமே காரணம். இதை கருத்திற்கொண்டே வடமாகாணசபை இந்த இயக்குனர் நியமனங்களை செய்துள்ளது என அறிய முடிகிறது. மேலும் முன்னாள் ஆயுதாரி இன்னாள் வடமாகணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்கள் கூறியது போல் வெளினாட்டில் வசித்த இலங்கை நெடுந்தீவு குடிமகன் அந்த சங்கத்திற்கு தலைவராக வரும் வேளை அவரால் சரியாக இயங்க முடியாது என்பது மிகவும் நகைத்தற்குரியது. இலங்கையை சேர்ந்த தகுதியுள்ள எவரும் அதன் தலைவராக சங்கத்தை வழி நடத்த முடியும் என்பதே எனது கருத்து. வெளி நாட்டில் அல்லது வெளியிடங்களில் வசிக்கும் மக்களின் நாட்டின் மீதான அல்லது பூர்வீக முதுச உரிமை பற்றி அல்லது அவர்களின் தரம் தார்ப்பரியம் பற்றி மண்ணின் மீதான அவர்களுக்கு இருக்கும் அக்கறை பற்றி விமர்சிக்க இவர்களுக்கு இம்மியளவு கூட உரிமை இல்லை. முதலில் தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் இது பற்றிய ஒரு பிரேரணையை முன்வைத்து கூட்டமைப்புக்கு தெரிவித்து அதன் பிறகு இதுபற்றி "லட்சக்கணக்கான ரூபா கொள்ளையர்களை மதிக்காது" அரசு இந்த நியமனங்களை செய்து செயற்பட்டிருக்கிறது என அரசுக்கும் கூட்டுறவுத்துறைக்கும் தெரிவிக்கமுடியாத அரசியல் கத்துக்குட்டித்தனம் இது. முன்னாள் ஆயுததாரிகளுக்கு அரசு புனர்வாழ்வளிக்கவேண்டும். ஜனனாயகத்தில் நம்பிக்கையற்று ஆயுதம் தாங்கியவர்களை அரசு கவனத்துடன் அணுக வேண்டும். அவர்கள் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள முடியாத இடைக்கால தடைச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும். மக்களை இந்த முறையாகில் அவர்களை அவர்களே ஆள விடுங்கள் கோதாரிபடுவார்களே..!!
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com