Contact us at: sooddram@gmail.com

 

’ஊர்’ நூலிலிருந்து சில பத்திகள்

(ம.செந்தமிழன்)

மனித சாதனைகளைப் பெரிதாகப் பீற்றுவதும் படைப்பின் அற்புதங்களை ‘இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை’ எனத் தூற்றுவதும் இப்போதைய வழக்கங்கள். பரிணாமக் கொள்கை எனும் பேரில் நவீன மனிதர்கள் இந்தச் செயலை மிகத் தெளிவாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆமைகள் எப்படித் தோன்றின? நிலம் எவ்வாறு வளம் கூட்டுகிறது? மனிதர்கள் எப்படி வளர்ச்சியடைந்தனர்? என்றெல்லாம் கேட்டால், பரிணாமக் கொள்கை அழகான விடை ஒன்றை முன்வைக்கிறது. ‘இயற்கையின் விருப்பத் தேர்வுதான்’ (Natural selection) எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறது அது. இந்த விளக்கத்தைக் கேட்கும் போதெல்லாம் நான் ஓர் எதிர்க் கேள்வியைக் கேட்பதுண்டு. ‘இயற்கையின் விருப்பத் தேர்வு என்கிறீர்களே, இயற்கைக்கு விரும்பத் தெரியுமா என்ன? அப்படி அது விரும்பினால் அதுதான் எல்லா உயிரினங்களையும் தேர்ந்தெடுக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்பதே அக்கேள்வி.

இலைகள் பச்சையாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது, இயற்கையின் விருப்பம் என்றால் அந்த இயற்கைக்கு வல்லமையும் முடிவெடுக்கும் அதிகாரமும் உள்ளது என்றுதானே பொருள். மனிதர்களால் தங்கள் மயிரின் நிறத்தைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இயற்கையோ எல்லா உயிரினங்களின் தோற்றத்தையும் இயக்கத்தையும் முடிவெடுக்கிறது. இவர்களது பரிணாமக் கொள்கை புறத் தோற்றத்தைக் கண்டு அதற்கு விளக்கம் கொடுக்கிறது. அதற்குப் பின்னால் இருக்கும் படைப்பின் மறைபொருளை நிராகரிக்கிறது.
 

நவீன பரிணாமக் கொள்கை ஒரு சேதியை மறைமுகமாக அறிவித்துவிட்டது.’நம்மைக் கேட்பதற்குக் கடவுள் இல்லை; ஆகவே நாம் எந்தப் பாவமும் செய்யலாம்’.
நாத்திகம் ஆத்திகம் என்பவை வெறும் பெயர்கள். இவற்றுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களின் மனம்தான் உண்மையைப் பொதித்து வைத்துள்ள ஆலயம். ஒரு நாத்திகரால் இயற்கையின் அங்கங்கள் மீது உண்மையான அன்பு செலுத்த முடிந்தால், அவர் இறையை உணர்ந்தவர்தான். பேராற்றல் மனிதர்களின் சடங்குகளைப் பார்ப்பதில்லை, மனங்களைப் பார்க்கிறது.

இருபது ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் கடவுளின் காட்சியை எளிதாக்கும் கோயில்கள் பாவச் சின்னங்களாக மாற்றப்பட்டவைதான். நிச்சயமாக நம் கடவுள் அங்கே இல்லை.
கடவுளின் அன்பைப் புரிந்துகொள்ளாமல் பிறப்பின் அடிப்படையிலும் அதிகாரத்தின் அளவுகோலைக் கொண்டும் வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைத்துள்ள எல்லா மனிதர்களும் நாத்திகர்களே. தங்களது இந்தப் பாவச் செயலை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் காட்டும் எல்லா நூல்களும் பாவச் சின்னங்களே. கடவுள் இருக்கிறார் நம்மைத் தண்டிப்பார் எனும் அச்சம் இவர்களுக்கு இல்லை. ஏன் இல்லை என்றால், இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லை.

இவர்கள் கடவுளின் சிலைக்கு அருகே நிற்கிறார்கள், கடவுளின் மனதிலிருந்து தொலைவில் இருக்கிறார்கள். பல மனிதர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதே, கடவுளைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான். ’செருப்பின் பயன்பாடு ஆலயத்தின் வாசல்வரைக்கும், கடவுளின் பயன்பாடு காரியம் முடியும் வரைக்கும்’ என்பதே இவர்கள் ஓதும் உண்மையான மந்திரம். இன்றைய சமூகத்தின் எல்லாத் தீவினைகளுக்கும் பொறுப்பான மனிதர்களில் பெரும்பாலானோர் ஆத்திகர்கள்தான்.
மனிதர்கள் அணுஉலையையும் ஆயுதத் தொழிற்சாலைகளையும் அவரவர் கடவுள்களை வணங்கிவிட்டுத்தான் அமைக்கிறார்கள். சாராயக் கடைகளின் கருவூலத்திலும் கடவுள் படங்கள் தொங்கிக் கொண்டுதான் உள்ளன. ’பணம் வாங்கியவர் தற்கொலை செய்தாலும் மோசமில்லை, அவரை இழிவு செய்து பிடுங்க வேண்டும் எனச் செயலாற்றும்’ வட்டிக்காரர்களும் பக்திமான்கள்தான்.

மருத்துவக் கல்விக்காக கையூட்டுக் கொடுத்து, அத்தொகையை மீட்டெடுக்க ஊழல் புரிந்துகொண்டிருக்கும் மருத்துவர்கள் பலரும் கடவுளைத் தங்கள் அலமாரிகளில் பதுக்கி வைப்பவர்கள்தான். கொலையும் கொள்ளையும் இணைந்து நிகழ்த்தப்படும் இடங்களாக உள்ள பல மருத்துவமனைகளின் பெயர்களிலேயே கடவுள் பயன்படுத்தப்படுகிறார்.
’கடவுள் என்றால் திடீரென வருகை தந்து அநீதிகளை அழிக்க வேண்டும்’ என இவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் உருவாக்கி வைத்துள்ள போலித்தனமான நாயகர்களைப் போலவே கடவுளையும் கற்பனை செய்துகொண்டிருக்கின்றனர் நவீன மனிதர்கள். ஒருவேளை கடவுள் வருகை தந்தாலும் இவ்வாறான கற்பனைகளை உருவாக்கி வைத்துள்ளவர்களைத்தான் முதலில் அழிக்க வேண்டும். ஏனெனில் இவர்கள்தான் இறையாற்றலை மனிதர்களின் மனதிலிருந்து அந்நியப்படுத்தும் பாவச் செயலை மேற்கொண்டவர்கள்.

”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ
மாத்திரைப்போ தும்முள்ளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனவிலும் அஃதில்லையே
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே
- என்றார் சிவவாக்கியச் சித்தர்.

இறைவன் நம் அகத்தில் உறைகிறார் எனும் உண்மையை உணராமல், புறத்தே தேடிக் கொண்டுள்ள சமூகம் தனது பாவங்களை எல்லாம் நேர்த்திக் கடன்களால் சரிகட்ட முற்படுகிறது. ஆலயங்களில் கொட்டப்படும் பண மூட்டைகளும் நகைகளும் மனிதர்கள் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்காக கடவுளுக்கு வழங்கப்படும் கையூட்டு. அதனால்தான் கூறினேன், மனிதர்கள் கடவுளைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.
நவீன மனிதர்கள் எல்லாவற்றையும் ’பயன்படுத்திக்’ கொள்பவர்கள்.

மரங்கள் இருப்பது எதற்காக எனக் கேட்டால், ‘நமக்கு ஆக்சிஜன் அளிப்பதற்காக’ என்பார்கள். ’மரங்களும் இப்புவியில் வாழும் உயிர்கள்தானே, அவற்றின் இருத்தலை ஏன் கேள்வி கேட்க வேண்டும். என்ற சிந்தனை உள்ளவர்கள் இங்கே குறைவு. 'மனிதர்கள் ஏன் இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியைப் பிற உயிர்கள் கேட்டால் அதற்கான் விடை மிக மோசமானதாக அல்லவா இருக்கும்.  நிலத்தில் வாழும் புழுக்கள் இவ்வாறு விடை தரலாம், ‘அவர்கள் இறந்த பின்னர் அழுகும் உறுப்புகளை நாங்கள் உண்டு வாழ்கிறோம்.ஆகவே, மனிதர்கள் வாழ்வது எங்களுக்கான உணவாக மாறுவதற்காகத்தான்’

எதற்கெடுத்தாலும் பயன்பாட்டுக் காரணங்களைக் கேட்பதுதான் இம்மக்களின் வழக்கம். கடவுளையும் இவ்வாறுதான் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுளைத் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, பாவங்களுக்குக் கையூட்டு தந்து, ஆபத்துக் காலத்தில் அறைகூவி அழைத்து ஏவல் பணிகளைச் செய்யச் சொல்வதுதான் நவீன மனிதர்களின் இறைக் கொள்கை.

செம்மை வெளியீட்டகம் நூல்கள் பெற:
திரு.விஜயன் கதிர்வேல்
7358887896

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com