Contact us at: sooddram@gmail.com

 

ஆப்கானின் சண்டையோடு சமாதானம் பேசும் அரசியல்

சண்டை பிடித்துக் கொண்டே சமா தானம் பேசும் கலை எல்லோருக் கும் வராது. கொலம்பியாவின் பார்க் கிளர்ச்சியாளர்கள், பிலிப்பைன்ஸின் மோரோ கிளர்ச்சியாளர்கள் அரசுடன் ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டு மறுபக்கத் தில் சண்டையும் நடத்துவதில் கைதேர்ந்த வல்லவர்கள். இந்த வல்லவர்களையே விழுங்கிச் சாப்பிடும் அளவுக்கு தலிபான்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கான் தலைநகர் காபுலில் தலிபான்கள் இரு தற்கொலை தாக் குதல்களை நடத்தி ஒருவரை கொன்று நான்கு பேருக்கு காயம் ஏற்படுத்தினார்கள்.

தலிபான்கள் தாக்குதல் நடத்துவது என்பது இப்போது இரவு, பகல் வருவதுபோல் அன் றாட வேலையாகிப் போன நிலையில் இதுவெல்ல பெரிய செய்தியா என்று கேட் பீர்கள். இந்த தற்கொலை தாக்குதல் நடந்த அதே தினத்தில் ஆப்கான் அரசுடன் நேருக்கு நேர் முகத்தை பார்த்து அமைதி பேச்சுவார்த் தையும் நடத்தியது தான் இங்கே முக்கிய மான செய்தி. அதிலும் பேச்சுவார்த்தை நடத்தியதை உலகுக்கே அம்பலப்படுத்தியது அதனைவிடவும் முக்கியமான செய்தி. இதற்கு முன்னரும் தலிபான்கள் ஏதோ பேசிப்பார்ப்போம் என்ற தோரணையில் அரச தரப்புடன் அமைதி பேச்சுவார்த்தைகள் ஈடு பட்டபோதும், பரம இரகசியமாகத் தான் பேச்சுவார்த்தைகள் இருந்தன. அதே போன்று யாருக்கும் பிரயோஜனம் இல்லாமலேயே அந்த பேச்சுவார்த்தைகள் முடிந்தன.

ஆனால் இந்த முறை பேச்சுவார்த்தை அப் படி கேலிக்கூத்தாக தெரியவில்லை. இரு தரப்பும் கொஞ்சம் தீவிரமாகவே பேசி யிருக்கிறார்கள் போல் தெரிகிறது. அடிப்படை யில் தலிபான் ஆப்கான் அரசையே ஏற் பதில்லை. கேட்டால் அது வெறுமனே அமெரிக்காவின் தலையாட்டு பொம்மை என்று குற்றம் சாட்டுகின்றனர். பொம்மை யுடன் ஏன் பேசவேண்டும், பேசுவதென் றால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு போகிறேன் என்பதுதான் நேற்று வரை தலிபான் வாதம்.

இந்த வாதம் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத்தான் அரச தரப்புடன் தலிபான் கள் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்திக்கி றார்கள். பேச்சுவார்த்தை இடம்பெற்ற இடமும் முக்கியமானது. ஆப்கானின் அயல் நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லா மாபாத் புறநகர் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ஆற அமர பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கிறது. எத்தனை நாள் பேசினார்கள், எதனை பேசினார்கள் என்று விலாவாரியாக எதுவும் சொல்லப்படாத போதும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெரிய முன்னேற்றம் என்னவென்றால் மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று இரு தரப்பும் இணங்கியுள்ளன. இதன்படி வரும் ஓகஸ்ட் 15,16ஆம் திகதிகளில் கட்டார் தலைநகர் டோஹாவில் மீண்டும் கூடி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்போடு கட்டாரில் தலிபான்களுடன் சமாதானம் நடத்த பெரும் பிரயத்தனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே எந்த சத்தமும் போடாமல் புஸ்வாணமானது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கட்டாரில் தலிபான்கள் அலுவலகம் ஒன்றை திறந்தார் கள். அந்த அலுவலகத்தில் தலிபான்கள் தனது உத்தியோகபூர்வ கொடியை ஏற்ற அதனை அப்போதிருந்த ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் எதிர்க்க பேச்சுவார்த்தை எல்லாம் அத்தோடு முடிந்தது. அதுமட்டு மல்ல கட்டார் பேச்சுவார்த்தை பாகிஸ்தா னுக்கு அவ்வளவாக பிடித்திருக்கவில்லை.

என்றாலும் 13 ஆண்டுகள் நீடிக்கும் ஆப்கானின் அர்த்தமற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர டுபாய், சீனா, நோர்வே என்று பேச்சுவார்த்தை பல இடங்களில் நடந்ததாக செய்திகள் வெளியானபோதும் தலிபான்கள் அதனை சுத்தப்பொய் என்று சொல்லி நிராகரித்து விட்டனர்.

ஆனால் இந்த முறை ஆப்கானில் யுத்தம் என்றாலும், சாமாதானம் என்றாலும் முதல் ஆளாக பங்களிப்புச் செய்யும் பாகிஸ்தானில் இடம்பெற்றிருப்பது முக்கியமானதாகும். அதேபோன்று அமெரிக்கா, சீனா, ஐ.நா எல்லாம் இந்த பேச்சுவார்த்தையை மேற்பார்வை செய்திருக்கின்றன.

இவையெல்லாவற்றையும் பார்த்தால் ஆப்கானில் அமைதி ஏற்படுவது குறித்து கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க முடியும் என்பது போல் தெரிந்தாலும் பூகோள அரசியலை பார்க்கும்போது இந்த அமைதி முயற்சியும் கூட ஒரு அரசியல் போல்தான் தெரிகிறது.

இதன் பின்னணியில் இருக்கும் பாகிஸ் தானின் அரசியல் நோக்கங்களும் குறிப்பிடத் தக்கவை. அடிப்படையில் பாகிஸ்தானின் உள்நாட்டு, வெளிநாட்டு, அரசியல், கலாசாரம் என்று எல்லா கொள்கைகளும் தனது கிழக் கில் இருக்கும் அயல் நாடும் பரம எதிரியுமான இந்தியாவை வைத்துத்தான் தீர்மானிக்கப் பட்டு வருகிறது.

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று ஐ.நாவின் அங்கத்துவத்தை பெற முயற்சித்தபோது அதற்கு எதிராக ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் வாக்களித்த நாள் தொடக்கம் அந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் தண்ணீருக்குள் நெருப்பு கொண்டுபோகும் வே¨யை ஆரம்பித்து. இதற்கு ஏதுவாக பாகிஸ்தானின் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் சக்தியாக இராணுவம் இருந்தது பிரச்சினையை இன்னும் குழப் பியது. தலிபான்களை தாழாட்டி, பாலூட்டி வளர்த்த வேலையை எல்லாம் பாகிஸ்தான் இராணுவம் தான் பார்த்தான குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.

எனவே ஆப்கானிஸ்தான் மீது புதிதாக பாசம் வந்து சொந்த நாட்டுக்கு அழைத்து அமைதி முயற்சியில் ஈடுபடுவதாக பாகிஸ்தானை கருதினால் அது பெரிய தப்புக்கணக்காகி விடும். இந்த அமைதி முயற்சியில் பாகிஸ் தானுக்கான அரசியல் ஒன்று பின்னணியில் இருக்கும்.

ஆப்கானிஸ்தான் அரசியலும் சாதாரணமான தல்ல. அங்கு நிலவும் அரசியல் குழப்பத்தின் உச்சமாக நாட்டில் இரு தலைவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி பஷ்தூன் இன செல்வாக்கு கொண்டவர். அடுத்த தலைவர் தேசியவாதி.

இதிலே ஜனாதிபதி அஷ்ரப் கானி பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்களிப்புச் செய்வதை எதிர்பார்க்கும் போது

அடுத்த தரப்பு சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. தலிபான்களுக்கு அடைக்கலம். உதவி எல்லாம் வழங்கும் பாகிஸ்தான் தரப்பு எனும்போது அவர்களைப் போய் எப்படி நம்புவது என்பதுதான் அடுத்த தரப்பின் நியாயமான வாதம்.

பலவீனமான அரசு, போதாக் குறைக்கு உருப்படியாக சண்டைபோடத் தெரியாத இராணுவம் இதையெல்லாம் வைத்துக் கொண்டு தலிபான்களின் மூச்சுமுட்டு கோரிக்கைகளை தாண்டி எப்படி அமைதி முயற்சியில் வெற்றிபெறப் போகிறோர் என்ற கவலை வேறு ஆப்கான் அரசிடம் ஏகமாக இருக்கிறது.

மறுபக்கத்தில் தலிபான்களுக்கும் பிரச்சினை இல்லாமல் இல்லை. இத்தனை காலமும் ஆப்கானில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த தலிபான்களுக்கே தலையிடி கொடுக்கும் ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டது. வேறு யாரு, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுதான். அண்மைக் காலத்தில் சாக்குப் போக்குச் சொல்லி ஆயுதமேந்திய ஆப்கான் மகா ஜனங்களிடம் ஐ.எஸ்ஸின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது ஆப்கான் அரசை விடவும் தலிபான்களுக்குத்தான் அதிகம் பாதிப்பை செலுத்தும். எனவே ஆப்கானில் தனது இருப்பை உறுதி செய்வதற்கு அரச தரப்புடன் சமரசமாகப் போக தலிபான்கள் இறங்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவர்கள் எல்லோரையும் விட தலிபான்களை அமைதி மேசைக்கு கொண்டு வருவதில் கள்ளங்கபடம் இல்லாமல் முயற்சிக்கும் நாடாக அமெரிக்காவை செல்லலாம். தலிபான்களுடன் ஒரு தசாப்தமாக சண்டை போட்டுப் பார்த்தார்கள். அது முடியாத காரியம் என்று உண்மையில் தெரிந்துகொண்டு பேச்சுவார்த்தையாவது நடத்திப் பார்ப்போம் என்று அமெரிக்கா நினைக்கிறதோ என்னமோ?

ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனாவும் நேரடி பங்களிப்பு செய்திருப்பது ஒருபக்கம் அமெரிக்காவையும் மற்றொரு பக்கம் இந்தியாவை இந்த அரசியல் விளையாட்டில் பங்காளிகளாக சேர்த்துக் கொண்டிருப்பது வேறு கதை.

இப்போதைக்கு ஆப்கான் அமைதி முயற்சி என்பது தனிப்பட்ட சுயநலங்களுக்கு அப்பால் கொஞ்சம் பொதுநலமும் கலந்த ஒரு பம்மாத்து விளையாட்டுப் போல்தான் தெரிகிறது.

பிர்தௌஸ் ...-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com