Contact us at: sooddram@gmail.com

 

பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் கி பி ! கிழக்கில் ரட்ணம் !

வருடங்களுக்கு மேல் தொடர்பில் இல்லாத 30 வருடங்களுக்கு முன் அறிமுகமான இரு தோழர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேளையில் அவர்களுடனான என் பழைய நினைவுகளை பதிவிடுகிறேன். இருவருமே 1988 ல் உருவான வடக்கு – கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள். நாபாவை நேசித்தவர்கள். இன்று இருவேறு கட்சிகளில் வேறு வேறு மாவட்டங்களில் போட்டியிட்டாலும் மக்களை நேசிப்பதில் அவர்களின் நலன்களுக்காக உழைப்பதில் ஆளுக்காள் சளைத்தவர்கள் அல்ல.

கொழும்பில் தொழில் நிமித்தம் வசித்த நான் ஒரு தடவை யாழ் சென்றபோது குண்சியுடன் சிறுப்பிட்டி என்ற கிராமம் சென்றபோது தடிக்கு துணிபோட்ட அளவில் மெலிந்த ஒருவரை இவர்தான் கி பி எங்கட தோழர் என அறிமுகப்படுத்தியவர் பார்ப்பதற்கு மிகவும் பாமரத் தனமானவராக காணப்பட்டார். வெகுளித்தனமான நட்புடன் சிரித்தார் . இயக்கத்தின் கிராமிய வேலைத்திடங்களை ஒருங்கிணைப்பவர் என்பதை குண்சியுடன் அவர் நடத்திய கலந்துரையாடலில் இருந்து புரிந்து கொண்டேன். அதனால் கி பி என்றால் கிராமிய பொறுப்பாளர் என அர்த்தப்படுத்தி கொண்டேன்.

அவர் தான் தோழர்களால் கி பி என அழைக்கப்படும் பசுபதி சீவரத்தினம். மீண்டும் நாபா யாழ் வந்திருந்த போது கி பி யுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1986ல் புலிகள் தக்கியழித்த போது கொழும்பு தப்பி வந்த சிலரிடம் கி பி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. புலிகள் கொன்றொழித்த கபூர், ஈஸ்வரன் பட்டியலில் இவரையும் சேர்த்து மனம் வருந்தினேன்.

சமாதான ஒப்பந்ததின் பின் வரதன் கொழும்பில் இருந்து செயல்பட்டவேளை புலிகளிடம் இருந்து தப்பிப்பிழைத்த தோழர்கள் அவருடன் அரச இலிகிதர் சேவை கட்டிட மேல்மாடியில் வந்து தங்கினார்கள். அவ்வப்போது அங்கு செல்லும் நான் ஒருமுறை சென்றபோது அங்கு கி பி யை கண்டு திகைத்தேன்.

ஏற்கனவே அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்தவனின் மனநிலை அப்படித்தானே இருக்கும். என்னை கண்டதும் வெகுளியாய் சிரித்தார். நான் கேட்ட முதல் கேள்வி எப்படி தப்பினீர்கள் என்பதே. அவர் தன்னை கிராமத்து மக்கள் தான் பாதுகாத்ததாக நன்றியோடு நினைவு கூர்ந்தார். மக்களுக்காக உழைப்பவனை மக்கள் கைவிடுவதில்லை என்பதற்கு கி பி நல்ல உதாரணம்.

அவருடன் பேசும்போது அவருக்கு இருந்த செவிப்புலன் குறைபாடு தெரியவந்தது. தனது காது கேட்பதற்க்கு உதவும் கருவி பளுதடைத்து விட்டதாக சோகமாக சொன்னார். பம்பலப்பிடி ஈ பேட் எதிரிசின்கா கடைக்கு கூட்டி சென்று புதிய கருவி வந்கிகொடுத்தேன். காதில் மாட்டி நான் பேசுவது தெளிவாக கேட்பதாக கூறி சந்தோசமாக என் கரங்களை பற்றி நன்றி தோழர் என்றார். சில நாட்களில் யாழ் சென்றுவிட்டார்.

மாகாண சபை தேர்தலில் போட்டியிட தேர்தல் விண்ணப்ப பத்திரத்தில் கையொப்பமிட யாழ் மத்திய கல்லூரியில் நாம் கூடிய போது அவரால் அங்கு வரமுடியவில்லை. அதனால் கையொப்பமிட்ட அனைவரும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட அவர் உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. பின்பு நாபா அவரை எமக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர் ஆக்கினார்.

மாகாண சபை உறுப்பினராக இருந்தாலும் அவர் தொழிற்சங்க வாதியாகவே செயல்பட்டார். பேரவை செயலகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்காக வேலையில் இருந்து இடை நிறுத்தப்படும் ஊழியர்களுக்கு சார்பாக என்னோடு வாதாடுவதே அவர் தொழிலாக இருந்தது.

அமைதிப்படை வெளியேற்றத்துடன் இந்தியா சென்றவரை ஒரு தடவை கும்பகோணத்தில் ஸ்டாலின் அண்ணா வீட்டில் வைத்து சந்தித்தேன். கரூரில் இருப்பதாக சொன்னார். அதன் பின் இன்றுவரை சந்திக்கவில்லை. பின் தேவா அவர் பனை அபிவிருத்தி சபை தலைவராக செயல்படுவதாக கூறினார். மிக அடிமட்டத்தில் இருந்து கட்சிக்காக பல கஸ்டங்களை அனுபவித்த அவர் அந்த நிலைக்கு வந்ததை அறிந்து சந்தோசப்பட்டேன்.

யாழ் பாடசாலை தண்ணீர் தொட்டியில் நஞ்சு கலந்த நீரை பருகி சிறுவர்கள் பாதிப்படைந்த விடயத்தில் அவரை சம்மந்தப்படுத்தி கிளப்பிவிட்ட புரளியை நான் நம்பவில்லை. அரசியலில் சூதுவாது தெரியாதவர் அவர். சென்ற தேர்தலில் கூட மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தவர். (சந்திரகுமார் 8105 சீவரத்தினம் (கி பி) 7068 விஜயகலா 7168 ) விருப்பு வாக்கில் தன்னை முன்னிலைப்படுத்தி செயல்பட்டிருந்தால் அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பார். நபாவின் பாசறையில் வளர்ந்தவர் என்பதால் அதை செய்யவில்லை.

மட்டக்களப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டபோது குமார், அருள் தோழர்களுடன் காரைதீவு சென்ற போது தான் முதல் முதல் ரட்ணம் அறிமுகமானார். தோழர்களை வழிநடத்தும் அவரது ஆளுமை சிறப்பானது. அவரின் நெடிதுயர்ந்த உடல் தோற்றமும் பழகும் தன்மையாலும் ஊரில் பலராலும் அறியப்பட்டவராக காணப்பட்டார்.

அவர் பேசும் மட்டக்களப்பு தமிழ் ஓமப்பா எனும் யாழ்பாண உச்சரிப்புக்கு இணையாக ஓ ண்டாப்பா என ஒலிக்கும். புலிகள் தாக்கியழித்தபின் மிஞ்சிய தோழர்களுடன் உகந்தை காட்டுக்குள் ஆயுதங்கள், தொடர்பாடல் சாதனங்களுடன் முகாமிட்டார். வடக்கு கிழக்கில் ஈபி யை முற்றாக அழித்துவிட்டதாக எண்ணிய புலிகளுக்கு வன்னி காட்டில் வெற்றியின் தலைமையிலும் உகந்தை காட்டில் ரட்ணம் தலைமையிலும் போராளிகள் இருப்பது அப்போது தெரியாது.

ரட்ணம் தனது முஸ்லிம் தொடர்பு மூலம் கொழும்பில் இருந்த எனக்கு செய்தி அனுப்பினார். அதை நான் நாபாவுக்கு தெரியப்படுத்த அவர் என்னை அவர்களை சென்று சந்தித்து நிலைமைகளை அறியத்தரச்சொன்னார். அதே வேளை ரட்ணம் சாம் தம்பிமுத்துவையும் தொடர்புகொள்ள அவர் பி பி சி செய்தியாளரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அவரை இரகசிய இடத்தில் சந்தித்த ரட்ணம் தன்னுடன் நூற்று கணக்கான தோழர்கள் தலைமையின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக பேட்டியளிக்க அது ஒலிபரப்பாகியது. அந்த செய்தி எமக்கு பின் ஆயுதங்கள் தரும் றோ வின் முடிவிற்கு துணையாகி உச்சிப்புளி ஊடக ராணி மடத்தில் வைத்து பெரும்தொகை நவீன ஆயுதங்கள் கிடைத்தன.

முஸ்லிம் தொடர்பின் மூலம் உகந்தை காட்டுக்கு சென்றபோது ஒருசில தோழர்களே முகாமிடிருந்தனர். நூற்று கணக்கானவரை அங்கு காணவில்லை. அந்த ஒரு சிலரில் ரட்ணத்தை காணவில்லை. எங்கே என கேட்டபோது ஒருவர் மேலே பார்த்து கூ கூ என ஒலி எழுப்ப மேலிருந்தும் கூ கூ ஒலி வந்தது. உயரமான மரத்தில் இருந்த பரணில் இருந்து மர விழுதுகளை பிடித்து இறங்கிவந்த ரட்ணம் காட்டு யானைகளுக்கு தப்ப மேலே தங்குவதாக கூறினார்.

உகந்தை கடற்கரையில் ஆயுத போட் வரக்கூடிய இடங்களை கூறினார். அதற்கு தேவை இல்லாமல் சமாதன ஒப்பந்தம் வந்துவிட்டது. இனி விட்டது சனி என்ற நம்பிக்கையில் தோழர்களுடன் வந்த வாகனத்தில் ஏறி கொக்கட்டிசோலை சென்றவரை புலிகள் பிடித்துவிட்டார்கள். நாபாவின் நடவடிக்கையால் விடுபட்ட ரட்ணம்

ஆரம்பித்த முதல் நடவடிக்கை தியாகிகள் நினைவு ஊர்வலங்கள். காரைதீவு முதல் திருக்கோவில் தம்பிலுவில் பொத்துவில் வரையான கிராமங்களில் இருந்த தோழர்கள் பொதுமக்களை அணிதிரட்டி அதுவரை கொல்லப்பட்ட சகல இயக்க போராளிகள் பொதுமக்களை நினைவு கூரும் பதாதை தாங்கிய தியாகிகள் ஞாபகார்த்த சமதான ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்.

அது புலிகளை சினம் கொள்ளவைத்தது. புலிகளின் அடுத்த தாக்குதலால் தான் ரட்ணம் தலைமையில் தோழர்கள் அமைதிப்படை முகாமில் தங்க வேண்டிவந்தது. மாகாணசபை உருவாக்கத்தில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. பின்பு அமைதிப்படை வெளியேற்றத்துடன் வெளியேறி இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் மல்கன்கிரியில் தங்கியிருந்த தோழர்கள் அருகில் இருந்த நீர்தேக்கத்தில் குளிக்க சென்றபோது அங்கு மேலாடை இன்றி குளித்து கொண்டிருந்த ஆதிவாசி பெண்களை பார்த்து சிரித்தால் கோபமுற்ற ஆதிவாசி ஆண்கள் அம்பு வில்லுகளுடன் தோழர்களை சுற்றி வளைத்துவிட்டனர்.

செய்தி அறிந்த ரட்ணம் விரைந்து சென்று தோழர்கள் சார்பாக ஆதிவாதிகளின் தலைவனிடம் மன்னிப்பு கேட்டதால் விஸம் தடவிய அம்புகளுக்கு வேலையில்லாமல் போனது. இல்லையென்றால் தியாகிகள் தினத்தை அங்கும் நினைவுகூர வேண்டிவந்திருக்கும்.

இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை , அது பிரிக்கப்பட்ட பின் 1வது கிழக்கு மாகாணசபை, அதன் பின் 2வது கிழக்கு மாகாண சபை மூன்றிக்கும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தோழர் ரட்ணம் என அழைக்கப்படும் இராசையா துரைரட்ணம் மட்டுமே.

கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ( கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கியது ) அதிகூடிய விருப்பு வாக்குகள் (29141) பெற்றதும் ரட்ணம் தான். எதிர்வரும் தேர்தலில் கி பி, ரட்ணம் இருவருமே தமக்குள் ஒவ்வாமை கொண்ட தலைவர்களின் கட்சிகளில் தான் போட்டியிடுகிறார்கள். ஆனால் அந்த இரு தலைவர்களும் ஒருகாலத்தில் நாபாவின் தலைமையில் இயங்கியவர்கள்.

இந்த தேர்தலில் வடக்கில் கி பி, கிழக்கில் ரட்ணம் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒலிக்கும் குரல்களாக அவர்கள் இருவரின் குரல்களும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால் அவர்கள் நாபாவின் பாசறையில் வளர்ந்த நாபாவை நேசித்த நாபாவால் நேசிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தோழர்களில் இருவர்.
(Ram)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com