Contact us at: sooddram@gmail.com

 

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..2

(ராம்)

எம் மக்களின் நியாயமான கோரிக்கைகள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்க்கான முன்னெடுப்புகள் மேற்கொண்ட இரு பெரும் தலைவர்களை இழந்த கோபம் விஜய் மரண அஞ்சலி கூட்டத்தில் பேசிய வரதனின் பேச்சில் சுதந்திர சதுக்கத்தை அதிரவைத்தது.
சோகத்தை விடுத்து அநீதிக்கு எதிராக அனைவரையும் அணிதிரள அவர் விடுத்த அழைப்பின் நேரடி ஒளிபரப்பு அனைவர் வீடுகளுக்கும் ரூபவாகினி தொலைகாட்சி மூலம் சென்றடைந்தது. இந்த இடத்தில் நாபாவின் தீர்க்கதரிசனம் தான் என் நினைவில். திறமைகளை அடையாளம் கண்ட நாபாவை வீழ்த்தி விட்டு புலிகள் தாமும் மாண்டு மடிந்து விட்டார்கள்.

நாபாவின் அடுத்த நடவடிக்கை வடக்கு கிழக்கில் அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. அதற்கு அவரின் தெரிவுகள் அம்பாறையில் ரட்ணம், மட்டக்களப்பில் கிருபா, திருமலையில் ஜோர்ஜ், வவுனியாவில் வெற்றி, மன்னார் முல்லைத்தீவில் ரொபின், ஏ ஜி ஏ, யாழில் முகுந்தன். தம் உயிரை புலிகளின் துப்பாக்கிகளுக்கு பணயம் வைத்தே இவர்கள் அங்கு செயல்பட்டனர்.

இவர்களின் இணைப்பாளராக வரதன் செயல்பட்டார் . அப்போது மிகுந்த நிதி நெருக்கடி. நிதி பிரச்சனையை தீர்க்க வரதன் செய்த ஏற்பாடுதான் புதிய கண்ணோட்ட பத்திரிகை வெளியீடு. மக்களுக்கு உண்மை நிலைமையை கூறுவதன் மூலம் விழிப்புணர்வும் அதனால் கிடைக்கும் அவர்களின் பங்களிப்பு மூலம் போராளிகள் உணவு தேவைக்கும் வழிசமைத்தார்.
வரதன் எழுத களுபோவில உபாலி குரேயின் பதிப்பகத்தில் சிங்கள பெண் தோழர் கம்பியூட்டரில் பதிவு செய்துதர அமீன் (சிவகுமார்) அதை பத்திரிகைக்கு வடிவமைக்க பொலரஸ்கமுவ அச்சகத்தில் ராஜா, ரி என் பெரேரா (இவர்கள் பின் நாளில் ஜே வி பி யால் கொல்லப்பட்டனர்) அச்சிட அதை ஆரம்பத்தில் கிழக்கிற்கு கொண்டு செல்ல ஆதம்பாவா உதவி செய்ததால் (பின்னாளில் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர் ) புதிய கண்ணோட்டம் பலர் கண்களை திறந்தது.

பல அரசியல் பிரமுகர்களை சந்தித்த வரதன் இந்திய தூதுவருடன் ஏற்படுத்திய தொடர்புதான் மிக முக்கியமானது. வரதனை திம்பு பேச்சுவர்த்தையில் கலந்து கொண்டவர் என்பதை அறிந்திருந்த தூதுவர் ஜே என் டிக்சிட் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்துள் வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படவேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்தினார்.

அப்போது வரதன் தனது அரசியல் ஆசானான அமிர்தலிங்கத்தை மற்ற இயக்க தலைவர்களுடன் ஹோட்டல் தப்ரபேனில் சந்தித்து அவர்களை தேர்தலில் போட்டியிடுமாறும் தாம் பின் புலத்தில் முழு ஆதரவும் தருவதாகவும் கூற அவரும் சம்மதித்தார். ஆனால் அடுத்த சந்திப்பில் கட்சி முடிவுப்படி தாம் போட்டியிட விரும்பவில்லை என கூறிவிட்டார்.
மன உளைச்சலுடன் திரும்பிய வரதன் அன்று மதிய உணவுக்கு பின் மேல் மாடியில் நிலத்தில் படுத்திருந்து முகட்டை பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தவர் திடீரென என்னிடம் ராம் நாங்கள் தேர்தல் கேட்போம் என்றவர் நாபாவின் அபிப்பிராயம் அறிய என்னை சென்னைக்கு அனுப்பினார்.

நாபாவின் நோபுரப்ளம் என்ற பதிலுடன் வந்த என்னிடம் அரசியல் கட்சி பதிவு செய்யும் கால எல்லை நாளையுடன் முடிவதாக டிக்சிட் கூறியதை சொன்னார். இருவரும் அவசரமாக ஹெக்டர் அபேவர்த்தன வீட்டுக்கு சென்றோம். காலை உணவு உண்ண தயாரான அவர் எங்கள் அவசரத்தை பார்த்து எழுந்துவந்து தனது காரியாலய அறையில் தன் கையாலேயே தேர்தல் ஆணையாளருக்கு எமது கட்சி பதிவு விண்ணப்ப கடிதத்தை தட்டச்சு செய்தது தந்தார்.
இருவரும் தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வாவை சந்திக்க சென்றபோது ஆயுத குழுவினர் எனும் தோரணையில் எம்மை அவர் அலட்சியமாக பார்த்தார். வரதனை அறிமுகம் செய்தபோது அவர் ஒரு பட்டதாரி, முன்பு யாழ் பல்கலைகழக உதவி விரிவுரையாளர் என நான் கூற அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

சிறிது நேர உரையாடலின் பின் எமது கடிதத்தை வாங்கியவர் தனது உதவியாளர் மூலம் விண்ணப்ப படிவங்களை தருவித்து கட்சி பதிவிற்கு வேண்டிய ஆவண விபரம் தந்து எம்மை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பினார். வரதன் ஈ பி ஆர் எல் எப் தற்காலிக செயலாளர் நாயகமாக செயல்படும் நாபாவின் அனுமதி கடிதத்துடன் சகல ஆவணங்களும் பாரப்படுத்தப்பட்டு கட்சியின் சின்னாமாக வரதன் பூ சின்னத்தை தெரிவு செய்ய அதன் பின் கட்சி பதிவு ஏற்கப்பட்டதற்கான அறிவிப்பு வந்தது.

ஈழ விடுதலை போராட்டத்தில் முதன் முதலாக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட இயக்கம் ஈ பி ஆர் எல் எப் ஆகும். அதன் முன் முயற்சி வரதனைத்தான் சேரும். இங்கும் பொருத்தமானவரை தெரிவு செய்யும் நாபாவின் ஆளுமை வென்றது.  தேர்தல் அறிவிக்கப்பட புலிகளுக்கு பயந்து எந்த பொதுமகனும் போட்டியிட முன்வரவில்லை. ஆனால் புலிகளின் சதிவலைக்கு பின்புலமாக செயல்பட்டு தேர்தலை குழப்ப வடக்கில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனால் வடக்கில் மட்டும் போட்டியின்றி தெரிவாகும் சூழல் உருவாக்கப்பட்டது.

போட்டியிட ஈபி, டெலோ, ஈ என் டி எல் எப் சம்மதித்த போதும் கடைசியில் டெலோ ஒதுங்கிகொண்டது. யாழ், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு உறுப்பினர்களாக ஈ பி ஆர் எல் எப் மற்றும் ஈ என் டி எல் எப் போராளிகளே போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கில் நிலைமை வேறு விதமாக இருந்தது. திருமலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஜவாட் மரிக்கார் தெரிவித்த ஆட்சேபனையால் யு என் பி விண்ணப்பம் நிராகரிக்கப்பட முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து ஈபி யுடன் பூ சின்னத்தில் ஈஎன்டி யும் போட்டியிட்டன. மட்டக்களப்பு, அம்பாறையில் எம்மை எதிர்த்து முஸ்லிம் காங்கிரசும், யுஎன்பி யும் போட்டியிட்டன. கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ம், யுஎன்பி 1 ம் பெற மிகுதி பூ சின்னத்தில் போட்டியிட்ட எமது கூட்டின் வசமானது.

(தொடரும் ........)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com