Contact us at: sooddram@gmail.com

 

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..3

(ராம்)

தேர்தல் நடந்த தினம் சுவாரசியமானது. நவம்பர் 19 . அது அன்னை இந்திரா காந்தியின் பிறந்த தினம் மட்டுமல்ல தோழர் நாபாவின் பிறந்த தினமும் ஆகும். அந்த தின தெரிவின் பின்புலத்தில் வரதன் செயல்பட்டது பலருக்கு தெரியாது.  கட்சி முகம்கொடுத்த முதல் கேள்வி மாகாண சபையை எங்கு அமைப்பது என்பதே. நாபாவின் பதில் திருமலை. ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன வரதனிடம் திருமலை தவிர வேறுங்கும் அமைத்தால் தமிழ் ஆளுனரை தருவேன் என பேரம் பேசினார். வரதன் பேரத்துக்கே இடமில்லை என உறுதியுடன் கூறிவிட்டார். இளைப்பாறிய ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் நளின் செனிவரட்ன ஆளுநராக திருமலை வந்தார்.

1988 டிசம்பர் 5 ம் திகதி திருமலை நகரமண்டபத்தில் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை கூடியது. முதல் 3 மாதங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சபைக்கு வரவில்லை. தாம் மாணசபை நடவடிக்கையை அவதானித்து திருப்பதி ஏற்பட்டால் வருவதாக அறிக்கைவிட்டனர். அதனால் பேரவை தலைவர் மற்றும் பிரதி தலைவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
யுஎன்பி யில் அம்பாறையில் வென்ற சிங்களவர் பாராளுமன்றம் சென்றதால் மசூர் மௌலானா சபைக்கு வந்தார். தனது ஆரம்ப அரசியலை தந்தை செல்வாவுடன் ஆரம்பித்து தமிழரசு கட்சி சார்பாக செனட்டராக இருந்தவர் மாகாண சபைக்கு யுஎன்பி உறுப்பினராக வந்தார்.

நாபாவின் ஆலோசனைப்படி மந்திரிசபை அமைந்தது. வரதன் முதலமைச்சர், கிழக்கின் பிரதிநிதியாக கிருபா நிதியமைச்சர், ஈஎன்டிஎல்எப் கணேசமூர்த்தி புனர்வாழ்வு அமைச்சர், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக அபு யூசுப் போக்குவரத்து அமைச்சர் வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் பிரதி நிதியாக முதலில் தயான் ஜயதிலகவும் பின் அவர் பதவி விலகியதால் ஜோ செனிவரத்தின இளைஞர் விவகார அமைச்சராகவும் மூவின பிரதிநிதிகளையும் கொண்ட அமைச்சரவை அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்த நேரத்தில் சந்திரகாசன், லக்சுமி நாகநாதன் போன்றோருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் நீர்பாசன திணைக்கள உயரதிகாரி கலாநிதி விக்னேஸ்வரன், வரதனுடன் தொடர்புகொண்டு தன்பங்களிப்பை தரும் விருப்பத்தை தெரிவித்தார். நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்ட முதல்தர நிர்வாகசேவை அதிகாரிகளை மாகாண சபையில் பங்கெடுக்க தூண்டியவர் அவரே.

அன்று புலிகளின் துப்பாக்கிகள் அவர்களை குறிவைத்த போதும் தமிழர்களுக்கு அதுவரை கிடைத்ததில் அதிகாரம் கூடியதாக அமைந்த அந்த சபையை முழுமைப்படுத்த அவர்கள் பட்ட சிரமம் முகம்கொடுத்த அபாயம் பலர் அறியாதது. தம் குடும்பங்களை பிரிந்து அறைகளில் தங்கி கடமையே கண்ணாக செயல்பட்ட அவர்களின் சேவையை நீடிக்க புலிகளும் பிரேமதாசவும் அவரின் பின்புலத்தில் இயங்கியவர்களும் அனுமதித்திருந்தால் அது முழுமை பெற்றிருக்கும். முள்ளிவாய்க்கால் வரை மக்கள் போயிருக்கவேண்டிய நிலையும் நிச்சயம் வந்திராது.

எந்த ஒரு தலையீடும் இன்றி செயல்பட்ட செயலாளர்கள் தம் பட்டறியை கொண்டு மாகாண நிரலில் இருந்ததை முழுமையாக செயல்படுத்த தொடங்கினார்கள். இரண்டு மாகாணங்களிலும் இருந்த அனைத்து பாடசாலைகள், வைத்திய சாலைகள், விவசாய காணி விடயங்கள் உட்பட மாகாண நிரலுக்குட்பட்ட அனைத்து விடயங்களும் மாகாண அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன.

வடக்கு கிழக்கு மாகாண டி ஐ ஜி யாக ஆனந்தராஜா முதல்வரின் கீழ் கடமைகளை பொறுப்பேற்றார். புதிதாக பொலிஸ் சேவையில் தமிழ்பேசும் இளையோர் இணைந்தனர். அவர்களுக்கான பயிற்சிகளை சிறீலங்கா அரசின் வேண்டுகோளின் படி இந்தியா ஏற்பாடு செய்தது. அதற்கான ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சு வழங்கியது.

அப்போது நடந்த ஒரு சுவாரசியமான விவாதம் பற்றி பதிய வேண்டும். முதல்வரின் கீழ் பொலிஸ் அதிகாரம் இருந்ததால் புதிதாக பயிற்சிபெற்று வருபவர்களுக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு ஆயுதங்கள் தொடர்பாக பேசுவதற்கு முதல்வருடன் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றிருந்தேன். பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல எடுத்த எடுப்பில் ரிவோல்வர் மற்றும் எஸ் எம் ஜி தான் தரமுடியும் என்றார்.

முதல்வர் ஏ கே 47 வைத்திருக்கும் புலிகளிடம் எங்கள் பொலிசாரை பலிகொடுக்க போகிறீர்களா எனக்கேட்க அவரும் விடாமல் ஏ கே 47 தந்தால் உங்கள் பொலிஸ் எங்கள் ராணுவத்தை தாக்காத என கேட்டார். முதல்வர் அவரிடம் அவ்வாறான சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தினால் நாம் அதைத்தானே செய்ய முடியும் என்றார். இறுதியில் பிஸ்டல், ஜி 3 ஆயுதங்கள் தரப்பட்டது.

பொதுப்பட்டியலில் இருந்த விடயங்கள் தான் சிதம்பர சக்கரம் போல சற்று குழப்பமாக இருந்தது. ஜே ஆர் வகுத்த சூத்திரம் அது. மத்திய அரசுக்கா ? மாகாண அரசுக்கா ? என தெளிவற்ற பட்டியல். இந்த இடத்தில் புலிகள் விட்ட தவறை குறிப்பிட வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்பதாக சுதுமலையில் கூறிய பிரபாகரன் பின் 5 அம்சகோரிக்கை வைத்து திலீபன் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்தபின் கிடைத்த இடைக்கால நிர்வாக சபை தலைவர் பதவியில் இழுபறிப்பட்டு, பொதுமன்னிப்பு காலத்தில் கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட பலரை சயனைட் கடிக்கவைத்து பலிகொடுத்து, வலிந்து சண்டையை தொடங்கினார்
ஆரம்பத்தில் புலிகள் எல்லை கிராம அப்பாவி சிங்களவரை கொன்றொழிக்க, அப்போது மூண்ட அமைதிப்படை புலி மோதலை தனக்கு சாதகமாக்கிய ஜேஆர் 13 வது திருத்த சட்டத்தை தமிழர் தரப்பின் ஆலோசனை எதுவும் பெறப்படாமல் அவசர அவசரமாக நிறைவேற்றி அதில் வகுத்த சூத்திரம் தான் பொதுப்பட்டியல் எனும் மத்திய அரசுக்கா ? மாகாண அரசுக்கா ? என தெளிவற்ற பட்டியல்.

திருமலை நகரசபை கட்டிடத்திலேயே பேரவை அமர்வுகளும் செயலகமும் செயல்பட்டது. மாதாந்த கூட்டங்களிற்கு வரும் உறுப்பினர்கள் பட்ட அவஸ்த்தைகள் கொஞ்சமல்ல. இன்றுபோல் காப்பற் வீதிகளில் சொகுசு வாகனங்களில் பயணிக்க முடியாத காலம். புலிகளின் கண்ணிவெடி அல்லது சினைப்பர், ஆர் பி ஜி ஆளுமை செலுத்திய காலம்.
அதனால் வடக்கு கிழக்கின் திருமலை தவிர்ந்த 7 மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்திய ஹெலிகளில் தான் அமர்வுகளுக்கு வருவார்கள், திரும்பி செல்வார்கள். சில சமங்களில் இந்திய அமதிப்படைக்கான உணவு விநியோக ஹெலிகளில் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுடன் இந்தியாவில் இருந்து உணவுக்காக கொண்டு வரும் செம்மறியாடுகளும் பயணித்து இடையில் உள்ள முகாம்களுக்கு விநியோகிக்க பட்டபின் ஆட்டுப்புளுக்ககை, மூத்திர நாத்தத்துடன் அவர்கள் திருமலை வந்தடைவர்.

 பேரவை கூடும் தினத்தன்று பேரவை செயலாளர் வானத்தை பார்த்தபடி பரபரப்பாக இருப்பார். ஹெலி திருமலை மெக்கெய்சர் மைதானத்தில் இறங்கி உறுப்பினர்கள் தலைகள் தெரியும் வரை அவர் நிலை அதுதான். குறிபிட்ட அளவு (Quorum) உறுப்பினர்கள் இல்லை என்றால் சபையை நடத்த முடியாது என்பதே அதற்க்கான காரணம்.

இவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் குறிப்பிட்டு காலத்துள் உறுப்பினர்கள் தங்குமிடத்தை சிறப்பாக அமைத்திருந்ததை பார்வையிட்ட அன்றைய பாராளுமன்ற சபாநாயகர் எம் எச் முகமட் செயளாளரை பாராட்டினார். குறைந்த வளங்களுடன் சிறந்த சேவையை செய்த நிர்வாக சேவை முதல்தர செயலார்களை கொண்டிருந்த சபைக்கு முட்டுக்கட்டை போட்டவரின் வருகையும் அதே காலத்தில் நிகழ்ந்தது.

(தொடரும் ........)

(ராம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com