Contact us at: sooddram@gmail.com

 

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் தொடர்..5

(எனது தொடர் பகுதி 4ல் தாங்கள் போட்ட தோற்றம் போன்றதே, 1978ல் நான் சந்தித்த நாபா. சிறு மாற்றம் செய்தால் உண்மை சொரூபம் வெளிப்படும். தாடி மீசை அற்ற நீல டெனிம் ஜாக்கற், டெனிம் கால்சட்டை போட்ட மெலிந்த தோற்றமுடைய நாபா வெளிப்படுவார். அந்த தோற்றத்தில் முதலில் நான் கண்ட நாபாவை பின் நாளில் கட்டுமஸ்த்தனான உடலுடன் பார்த்த வேளை அவரிடம், நான் எவ்வளவு உண்டாலும் என் உடல் கட்டுமஸ்த்தாக இல்லை என குறைப்பட, அவர் தான் கூறும் உணவு பழக்கத்தை, உடல் பயிற்சியை தொடர்ந்து செய்வேன் என சத்தியம் செய்தால் சொல்லித் தருவேன் என தனது கரத்தை, சிறுபிள்ளைகள் நீட்டுவது போல நீட்ட நானும் அளிச்சாட்டிய ( பொய் ) சத்தியம் செய்து அவரை ஏமாற்றிய பலனை, பின்னாளில் கண்டதையும் உண்டு, உடல் பயிற்சி இன்றி கொளுப்பை சேரவிட்டு இதய இரத்தோட்ட அடைப்புக்காய், அறுவை சிகிச்சை செய்த போது உணர்ந்தேன். அதிக கொழுப்பற்ற அளவான உணவு, அதற்கு தேவையான உடல் பயிற்சி, அது தான் நாபாவின் அறிவுரை. நல்லார் சொல்புத்தி கேளான் தன் உடல் நிலை கெட்ட பின்பு தான் அதுபற்றி உணர்வான் என்பது என் அனுபவம்.
- ராம் -
ஆசிரியர் அவர்கட்கு ! தயவான வேண்டுகோள்
சிரமம் இல்லை என்றால் இதனை 5வது பதிவின் முதல் பந்தியாக பதிவிட முடியுமா ?
நன்றி
)

முதல்வர் முடிந்தவரை ஜனாதிபதியுடனும் மத்தியுடனும் இணக்கப்போக்கையே கடைப்பிடித்தார். அதன் முன்னோடி நிகழ்ச்சியாக 1989 சுதந்திர தினத்தில் திருமலையில் தேசியக்கொடியை முதல்வர் ஏற்றிய சம்பவம் நடந்தேறியது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் முழுமையான அதிகாரபகிர்வுடனான இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை நிலைக்க செய்ய இயன்றவரை மத்தியுடன் முதல்வர் இணங்கியே செயல்ப்பட்டார்.    

ஆனால் மாகாணசபை கடித தலைப்பில் வடக்கு கிழக்கு மாகாண அரசு (North-East Provincial Government) என போடப்படும் விடயம் பாராளுமன்றத்தில் பூதாகாரமாக வெடித்தது. எப்படி மாகாண அரசு என போடலாம் என இனவாத உறுப்பினர்கள் வாதிட்டனர்.

அப்போது அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் அரசு என்பது அசிங்கமான    வார்த்தை அல்ல ( Government is not a Dirty Word ) லோக்கல் கவர்மெண்ட் (Local Government) என உள்ளூர் ஆட்சி சபையை கூற முடியுமானால் மாகாண சபையை ஏன் புறவின்சியல் கவர்மெண்ட் (Provincial Government) என குறிப்பிட கூடாது என வாதிட்டார். வடக்கு  கிழக்கு மாகாண சபையை முடக்கும் இனவாதிகளின் செயல் அதிலிருந்து ஆரம்பமானது.

மாகாண நிரலில் இருந்த விடயங்களை தமது அமைச்சுகளின் கீழ் செயலாளர்கள் கொண்டு வந்ததும் மத்திய அரசின் அதிகாரிகள் அதுவரை தம்மிடம் இருந்தவை பறிபோனதால் பதறியடித்து தமது அமைச்சர்கள் மூலம்  பிரேமதாசாவின் பின்னால் அணிதிரண்டனர்.

அவர்களின் சதிவலைக்கு ஜேஆர் போட்ட சூத்திரம் பயன்பட்டது.  எம்மிடம் பொதுப்பட்டியல் பிரச்னையை தீர்ப்பதாக கூறி தேர்தலின் போது ஆதரவு கேட்ட பிரேமதாசா அதனையே வடக்கு கிழக்கு மாகாண அரசு என்ற யானையை அடக்கும் அங்குசமாக (ஆயுதமாக) பயன்படுத்தினார். 

13வது திருத்தத்தில் மாகாண நிரல் மத்திய நிரல் என வரையறுக்கப்பட்டிருந்த பட்டியலுடன் பொதுநிரல் என்ற பட்டியலில் உள்ள விடயங்களை தமக்கு ஏற்ற விதத்தில் மத்திய அரசுக்கானதாக வியாக்கியானம் செய்தனர். மேலும் மாகாணா நிரலிலும் தேசிய பாடசாலை, பிரதேச செயலாளர் என மூக்கை நுழைத்தனர். முரண்பாடுகளை தீர்க்க திருமலைக்கும் கொழும்புக்கும் இடையில் பயணப்படுவதே முதல்வரின் வேலையாயிற்று.

இங்கு வேடிக்கை என்னவென்றால் ஏனைய மாகாண சபைகளுக்கும் அவை யுஎன்பி கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த போதும் அவற்றிக்கும் பொதுப்பட்டியல் பகிரப்படாமல் அங்கும் மாகாண நிரலில் மூக்கை நுழைக்கும் செயல்கள் நடந்தன.

அப்போது வடமத்திய மாகாண முதல்வர், வடக்கு – கிழக்கு முதல்வர் எங்களுக்காகவும் வாதாடுகிறார் என பத்திரிகையில்  அறிக்கை விட்டார். பிரேமதாசா முழுமையாக மாகாண சபை முறைமையை எதிர்த்ததே அதற்கான காரணம்.

(தொடரும்.......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com