Contact us at: sooddram@gmail.com

 

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் தொடர்..7

புலிகள் பிரேமதாச பேச்சுவார்த்தையை தோழர் நாபா இதயசுத்தியுடன் வரவேற்று அறிக்கைவிட்டார். முன்பு அவர்கள் இடைக்கால நிர்வாக சபையை ஏற்றிருந்தால் நாம் இந்த சபைக்கு வந்திருக்க தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டார். ஆனால் புலிகளின் குறி மாகாண அரசை முடக்குவது. அதனால் அவர்களின் பக்கபலத்துடன் பன்சலைக்கு புத்தரை வழிபட சென்ற பிரேமதாசா அமைதிப்படையை வெளியேறச்சொல்லி அறிவிப்பு செய்தார். அதை துரிதப்படுத்த புலிகளுக்கு பெரும்தொகை ஆயுதங்களும் கொடுத்தார்.

அமைதிப்படையை கட்டம் கட்டமாகத்தான் மீளப்பெற முடியும் என்ற, இந்திய பிரதமர் ராஜீவுடன் முறுகல் நிலையை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் அன்னை இந்திரா திடீர் மறைவால் ஏற்பட்ட கொள்கை மாற்றம் போல போபோஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் ராஜீவ் காந்தி பதவி விலக, பிரதமரான வி பி சிங் அமைதிப்படை துரித விலகலுக்கு சம்மத்தித்தார்.  அவரை அந்த முடிவை எடுக்க தூண்டியவர் அப்போது புலிகளை ஆதரித்த வி பி சிங் அரசின் பங்காளியான கலைஞர் கருணாநிதி .

மாகாண அரசை முடக்கும் பிரேமதாசா புலி கூட்டின் திட்டத்தால் வரக்கூடிய அபாயத்தை ஊகித்த நாபா முதல்வருடன் நடத்திய கலந்துரையாடலின்படி கருணாநிதியை சந்தித்து விளக்கமளிக்க முடிவு செய்யப்பட்டது. மாகாண போக்குவரத்து அமைச்சர் அபு யூசுப் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் அமரர் கந்தசாமி,  திருமதி ஞானசக்தி சிறிதரன் உடன் சென்னை சென்றபோது எம்மை சந்திப்பதை கருணாநிதி தவிர்க்க விரும்பினார். நாபாவும் முதல்வரும் அவர் சந்திக்க மறுத்தால் பத்திரிக்கை மாநாடு நடத்தி எமது முடிவை தெரிவித்துவிட்டு வாருங்கள் என்று அறிவித்தனர்.

செய்தி கருணாநிதி காதுக்குபோனதும் அவரது செயலாளர் குகன் தொலைபேசியில் சாந்தனை(லண்டன் தம்பா) தொடர்புகொண்டு கலைஞரை சந்திக்க வருபடி அறிவித்தார். தமிழ்நாடு அரச செயலகத்தில் நடந்த அந்த சந்திப்பு சுமுகமாக இருக்கவில்லை.

கலைஞரிடம் எமது கோரிக்கை மனுவை கையளித்தபோது அதை வாங்கிய அவர் அதை பிரித்து கூட பார்க்கவில்லை. எடுத்த எடுப்பில் புலிகளின்  பேச்சாளர் போல் பேசத்தொடங்கினார். கலைஞர் வயதொத்த அமரர் கந்தசாமி எமது மக்களை நீங்கள் தான் காப்பற்ற வேண்டும் என கெஞ்சினார்.

முரசொலி மாறன் உங்கள் முதல்வரை மாகாண சபையை கலைக்க சொல்லுங்கள் என கட்டளையிடும் தொனியில் கூற எனக்கும் அவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது.

கலைஞர் குறுக்கிட அவரிடம் மாகாணசபையை கலைத்தால் ஏற்படக்கூடிய விழைவை தவிர்க்க முதல்வர் உட்பட ஈ பி ஆர் எல் எப் உறுப்பினர்கள் பதவி விலகி தமது 38 (தனிப் பெருபான்மை) ஆசனங்களையும் புலிகளுக்கு கொடுக்கும் நாபா, முதல்வர் முடிவு தான் நாம் கையளித்த கோரிக்கையில் உள்ளது என்றுகூற,

மீண்டும் முரசொலிமாறன் புலிகள் பின்கதவால் பதவிக்கு வரமாட்டார்கள் மாகாண சபையை கலையுங்கள் என்று கடும் தொனியில் கூறி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டார். அன்று பின்கதவால் செல்லமறுத்த புலிகளின் தளபதி கருணா  அதே பின் கதவால் (தேசியப்பட்டியல்) தான் பாராளுமன்றம் சென்றார்.

பிரேமதாசா புலி கருணாதி மும்முனை தாக்குதலுக்கு முகம் கொடுக்கவே கட்சியின் உயர்மட்ட குழு முடிவின் படி 19 அம்ச கோரிக்கையை வைத்து மாகாண சபையில் முதல்வர் பிரேரணை நிறைவேற்றினார். பிரேமதாச அதை திரிவுபடுத்தி முதல்வர் ஈழப்பிரகடனம் செய்துவிட்டார் என அறிவித்தார். அவரின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பத்திரிகைகளும் அவ்வாறே தலைப்பட்டு செய்தி வெளியிட்டன. எந்த பத்திரிகையும் அதன் உள்ளடக்கத்தை பிரேமதாசாவின் கட்டளைக்கு அமைய பிரசுரிக்கவில்லை.

அந்த பிரேரணையில் ஒருவருடத்துள் நிறைவேற்றபட வேண்டிய 19 கோரிக்கைகளும் தவறும் பட்சத்தில் 1வருட  கால அவகாச முடிவின் பின்னர் மாகாணசபை சட்டவாக்க சபையாக மாற்றமடையும் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

முடிந்தவரை அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகள் உட்பட தென்னிலங்கை அரசியல் கட்சிகள் முற்போக்கு சக்திகள் அனைவருக்கும் பிரேரணை பிரதிகள் கையளிக்கப்பட்டன. அமைதிப்படை வெளியேற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்த பெரும்பான்மையோர் எமது கோரிக்கையின் நியாயத்தன்மையை கண்டுகொள்ள விரும்பவில்லை.

அமைதிப்படை அம்பாறை, மட்டக்களப்பில் இருந்து வெளியேற புலிகள் பிரேமதாசா கொடுத்த ஆயுதங்களை கொண்டு மாகாண பொலிசாரை, சபை உறுப்பினர்களை, ஆதரவாளர்களை தாக்கதொடங்க, அவர்கள் திருமலைக்கு இடம்பெயர்ந்தனர்.

யாழில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வெளியேறவேண்டிய சூழ்நிலை. வன்னி கொலைக்களமாக மாறியது. தப்பி பிழைத்தவர்கள் திருமலையில் தஞ்சமடைந்தனர். அரச படைகள் பிரேமதாசாவின் கட்டளைப்படி புலிகளுக்கு அரணாக நின்றதால் மாகாண அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

திருமலையில் இருந்து இறுதி இந்திய அமைதிப்படை அணிகள் வெளியேறு முன் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் 3 கப்பல்களை அனுப்பி திருமலையில் புலிகளுக்கு இரையாகக் கூடியவர்களை காப்பற்றும் கடைசி நடவடிக்கையை செய்தது. குடும்பம் குடும்பமாக நூற்றுக் கணக்கானவரை ஏற்றி சென்ற கப்பல்களை சென்னை துறைமுகத்துக்குள் அனுமதியாது விசாகப்பட்டினம் திசை திருப்பினார் கருணாநிதி.

6 கோடி தமிழரின் தானைத்தலைவன் என மார்தட்டும் கருணாநிதி.  அபயம் கேட்டு வந்த தமிழரை அடுத்த மாநிலத்துக்கு கடத்திவிட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கொழும்பு நிருபர் ரீட்ட செபஸ்டியனிடம் ஆதங்கப்பட, அதை அவர் அப்படியே தலைப்பிட்டு எழுதினார்.

அதனால் பின்பு  நாபாவின் படுகொலை மரண நிகழ்விற்கு சென்ற போது கருணாநிதியின் பொலிஸ் கெடுபிடிக்கு தப்ப, திருவனந்தபுரம் ஊடாக என்னை பாதுகாப்பாக அனுப்பிவைத்தார் தமிழ்நாடு றோ அதிகாரி.

பின் கருணாநிதி பதவி பறிபோகும் வரை தமிழ்நாடு பக்கமே பயணிக்கவில்லை. தான் பறித்த குழியில் தானே விழுவது போல புலிகளை பயன்படுத்திய கருணாநிதி அதன் விளைவால் தன் முதல்வர் பதவியை இழந்தார்.

எம் மக்களுக்கு விடிவை தரக்கூடிய எல்லாம் முயற்சிகளும் எதிரியுடன் கைகோர்த்த எம்மவராலேயே முடிவிற்கு வந்தது. இனி செய்வதற்கு இப்போதைக்கு ஒன்றுமில்லை, உயிரை தக்கவைத்தால் மீண்டும் முயற்சிக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வெளியேறி செல் அல்லது செத்து மடி எனும் சூழ்நிலையில் தான் அன்று நாபா, முதல்வர் உட்பட அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினர். வீம்புக்கு சாவதால் யாருக்கு பலன் என்பதை இன்று நந்திக்கடல் முடிவு நிரூபித்து நிற்கிறது.

(முற்றும்)

(ராம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com