Contact us at: sooddram@gmail.com

 

மொரிஷியஸ்  தீவின் அழிந்து போன உயிர்கள்

மனிதனின் வேட்டைப் பசிக்கு பலியான டோடோ பறவையினம்

டோடோ வின் மறைவு, இத்தீவின் உயிரின ங்கள் மனிதரால் எவ்வாறு சீரழிக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. இத்தீவில் இருந்த கருங்காலி மரக்காடுகள் கப்பல் கட்டுவத ற்காக அழிக்கப்பட்டன. மனிதர் கொண்டு வந்த நாய்களும் பூனைகளும் பல உயிர்களைக் தீர்த்துக் கட்டின. பறக்கும் திறன் அற்ற ஒரு கிளி இனமும் மறைந்து போனது’ கருநீல சமுத்திரத்தின் மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த எங்கள் விமானம். இடது புறம் செங்குத்தாகச் சரிந்து திரும்பி நீலப்பச்சை கடலோரத்தைக் கடந்த சில நொடிகளில் மொரிஷியஸ் தீவிலுள்ள போர்ட்லூயி நகரில் தரையிறங்கியது. வெளியில் இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அப்பால் தொடுவானம் வரை கரும்புத் தோட்டங்கள் தெரிந்தன. விமானம் நிலைக்கு வந்த பின்னர் இறங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு முதலில் நினைவு வந்தது டோடோ பறவைதான்.

இந்து மகா சமுத்திரத்தில் ஒரு புள்ளி போல வரை படத்தில் காணப்படும் மொரிஷியஸ் தீவு, கி.பி. 1598 வரை மனிதர்களற்ற ஒரு ஏதேன் தோட்டம் போலிருந்தது. மடகாஸ்கரிலிருந்து 800 கி. மீ. தொலைவிலுள்ள இத்தீவு பல்லுயிரிய செழுமை பெற்றிருந்து. தீவு போன்ற ஒரு வாழிடம். பல்லூழி காலமாக ஏகாந்தமாய் இருப்பதால் தனிப்பட்ட தன்மையுடைய உயிரினங்கள் பரிணாம தகவமைப்பில் அங்கு உருவாகின்றன.

அதிலும், பரந்த நிலப் பரப்பொன்றிலிருந் தது. தொலைவிலிருக்கும் தீவுகளில் இவ்விளைவு அழுத்தமாக இருக்கும். இத்தகைய தீவு உயிரினங்களின் தனி தன்மையை துல்லியமாக வெளிப்படுத் துவது புள்ளினம்தான்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் வேறெங்கும் இல்லாத, நார்கொண்டம் இருவாசி மற்றும் மணலில் முட்டையிட்டு அதை மண்ணால் மூடி அடைகாக்கும் மெகபோட் போன்ற புள்ளினங்கள் உண்டு.

பசிபிக் சமுத்திரத்தின் நடுவே உள்ள கலப்பகாஸ் என்ற தீவிலிருக்கும் சிட்டுக் குருவி போன்ற பறவைகளை அவதானித போதுதான் சார்ஸ் டார்வினுக்கு, பரிணாமம் எனும் கருதுகோள் மனதில் உதித்தது. ஒரு கிறிஸ்தவப் பாதிரியாக பணிபுரிய திட்டமிட்டிருந்த அவரது மத நம்பிக்கைக்கு முரண்பாடாக இக்கோட்பாடு இருந்ததால், குற்றவுணர் வால் அலைக்கழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் தனது கண்டுபிடிப்பை கமுக்கமாகவே வைத்திருந்து 1859 இல்தான் The Origin of Species என்ற நூலின் மூலம் வெளியிட்டார் டார்வின்.

சரி. மொரிஷியஸ¤க்கு வருவோம். இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் எரிமலை ஒன்று வெடித்ததால் உருவான இத்தீவின் சுற்றளவே 117 கி. மீ. தான். இங்குள்ள Black River Peak என்ற மலைமுகட்டிலிருந்து பார்த்தால் முழுத் தீவையும் காண முடியு. அடர்ந்த மழைக் காடுகள் கடலோரம் வரை கவிந்திருந்த இத்தீவில் உயிரினங்கள் மிகுந்திருந்தன. இங்கு மட்டுமே காணக்கூடிய வேறெங்கும் இல்லாத முன்னூறுக்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் ஒன்பது வகைப் பறவைகள் இங்கு செழித்திருந்தன. அவைகளில் ஒன்றுதான், வான்கோழி அளவுள்ள டோடோ.

புறா இனத்தைச் சேர்ந்த இதனால் பறக்க முடியாது. பெங்குயின் மற்றும் தீக்கோழி மாதிரி. இரைகொல்லிகள் ஏதும் இல்லாத அந்தத் தீவில் இவை ஆயிரக் கணக்கில் திரிந்துகொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளைக் காரர்கள் மற்றும் கிழக்கு நாடுகளுக்கு பயணித்த டச்சுக்காரர்களும். பின் போர்த்துக்கீசியர்களும், இத்தீவில் தங்கி வேண்டிய மட்டும் டோடோக்களை பிடித்து கப்பலுக்கு எடுத்துச் சென்றார்கள் உணவிற்காக. அருகே சென்றால் ஓடாமல் நின்ற டோடோவை பிடிப்பதும், கொல்வதும் எளிதாக இருந்தது. மனிதன் இத்தீவில் இறங்கி எண்பத்தைந்து ஆண்டுகளில் டோடோ முற்றிலுமாக அற்றுப்போனது.

டோடோவின் மறைவு, இத்தீவின் உயிரினங்கள் மனிதரால் எவ்வாறு சீரழிக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றது. அத்தீவிலிருந்த கருங்காலி மரக்காடுகள் கப்பல் கட்டுவதற்காக அழிக்கப்பட்டன. மனிதரால் அங்கு கொண்டுவந்து விடப்பட்ட நாய்களும் பூனைகளும் பல உயிரினங்களை தீர்த்துக் கட்டின. டோடோ போலவே பறக்கும் திறன் இல்லாத ஒரு கிளியும் அழிந்துபட்டது.

பின்னர் வந்த பிரஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் எஞ்சிய காடுகளையும் திருத்தி, கரும்பு பயிரிட்டார்கள். இந்தக் கரம்புத் தோட்டத்தில் உழைக்க தமிழ்நாட்டிலிருந்து ஏழை விவசாயிகள் கப்பல் கப்பலாக கூலிகளாகக் கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய வழித்தோன்றல்கள் சிலரை (கென் காத்தான் மற்றும் மைக்கேல் கருப்பன் போன்ற) இங்கு நான் சந்தித்தேன். மேலும் சில பறவைகளும் இத்தீவிலிருந்து அற்றுப் போயின. டச்சு புறாவை சுட்டே தீர்த்தனர். கடைசிப்புறா 1826 ஒரு வேட்டைக்காரர் துப்பாக்கிக்குப் பலியானது. இன்று எஞ்சியுள்ளது அருங்காட்சியத்திலுள்ள ஒரு பதப்படுத்திய டச்சுப் புறா மட்டமே.

அதே போல இன்று உலகிலேயே இரண்டு பதப்படுத்தப்பட்ட டோடோ பறவைகள்தான் உண்டு. ஒன்று மொரிஷியஸ்ஸின் தலைநகரிலுள்ள அருங்காட்சியகத்தில். இரண்டாவது நியூயோர்க் இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியத்திலுள்ளது.

இரண்டுமே முன்னர் நான் குறிப்பிட்ட இரண்டு எலும்புக்கூகளை வைத்து உருவாக்கியது. எல்லா எலும்புகளும் கிடைத்திருந்தாலும், டோடோ பறவையின் நிறம் என்ன, இறகுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய குறிப்பேதுமில்லாமல் அருங்காட்சியகத்தினர் திண்டாடிக் கொண்டிருந்போது சற்றும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து செய்தி ஒன்று வந்தது, லெனின்கிராடிலிருந்து, அங்குள்ள உலகப்புகழ்பெற்ற ஹெர்மிடாஷ் எனும் அருங்காட்சியத்திலுள்ள மொகலாய சிற்றோவியம் ஒன்றில் டோடோ பறவை தீட்டப்பட்டுள்ளது. இது சாம்பல் நிறப் பறவை என்பது தெரிய வந்தது.

இந்திய சிற்றோவியம் ஒன்றில் இப்பறவை இடம்பெற்றது எப்படி? மொகலாய மன்னர் ஒருவருக்கு பிரஞ்சு அதிகாரி அல்லது வணிகர் ஒருவரால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு டோடோ பறவை மொகலாய சக்ரவர்த்தியின் பூங்காவில் விடப்பட்டிருந்தது. அதை ஒரு ஓவியர் வரைய, அவ்வோவியம் ரஷ்யா போய்ச் சேர்ந்துவிட்டது. இந்த ஓவியத்தின் அடிப்படையில்தான் இரண்டு டோடோ பறவைகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டன.

1970 களின் தொடக்கத்தில் உலகெங்கும் காட்டுயிர் பற்ற உண்டான ஒரு விழிப்புணர்வின் ஒரு பரிமாணமாக பறவையியலாளர்களின் கவனம் மொரிஷியஸ் மேல் திரும்பியது. மொரிஷியஸ் வல்லூறு (Mauritius Kestrel) எனும் இரைகொல்லி பறவையொன்றும் அழிநிலையிலிருக்கிறது என்ற செய்தி பறவையியலாளர்களை உலுக்கியது. அப்போது ஏழே வல்லூறுகள் எஞ்சியிருந்தன.

இந்த இனத்தைக் காப்பாற்ற திட்டமொன்று தீட்டப்பட்டு, கார்ள் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேய இளைஞர் மொரிஷியஸ்ஸில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரை தொலைபேசியில் நான் தொர்பு கொண்டேன். வரச்சொன்னார். எனது அலுவலக வேலைகளை முடிந்தபின் ஒரு சனிக்கிழமை காலை ஜோன்ஸ் தங்கியிருந்த Black River என்ற கிராமத்திற்கு சென்றேன். கலப்பகாஸ் தீவைப் பார்த்த பின் மொரிiயஸ்ஸிற்கு வந்த டார்வின் ஐந்து நாட்கள் இந்த Black forest எனப்படும் காட்டுப் பகுதியில்தான் தங்கி பறவைகளைப் அவதானித்தார். மொரிஷியஸ் வல்லூரின் முட்டைகளைத் தேடியெடுத்து, அவரது பட்சி சாலையிருக்கும் ஐரோப்பிய வல்லூறுகள் மூலம் அடைகாக்க வைத்து பின் காட்டில் விட்டு விடுவதுதான் ஜோன்ஸ்ஸின் திட்டம்.

அந்த கிராமத்து பொலிஸ் நிலையத்தில் எனக்காக காத்திருந்த ஜோன்ஸ், தனது பட்சி சாலைக்கு என்னை இட்டுச் சென்றார்.

அவரது ஜீப்பில் என்னை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள கிlaணீk ஜீorலீst காட்டுக்குள் கூட்டிச் சென்றார். இரு புறமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கின் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நதிக்கரையில் வண்டியை நித்தி சிறிது தூரம் நடந்தோம். தன் பொக்கெட்டிலிருந்து ஒரு செத்த சுண்டெலியை ஜோன்ஸ் எடுத்து அதை ஒரு சிறு பாறை மேல் வைத்த பின் நாங்களிருவரும், ஒரு பத்து மீட்டர் தூரத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டோம். ‘காமிராவை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார் ஜொன்ஸ். சிறிது நேரத்தில் வல்லூறு ஒன்று பறந்து வந்து, பாறையின் மேல் அமர்ந்து அந்த சுண்டேலியைக் கவ்வியது. உலகிலேயே அரிய ஒரு பறவையைப் பார்த்தது மட்டுமல்ல, மூன்று நல்ல படங்களை என்னால் அன்று எடுக்க முடிந்தது.

சிறிது நேரத்தில், மற்றுமொரு வல்லூறு பறந்து வந்து எங்களுக்கு வெகு அருகே இருந்த மரத்தின் தாழ்வான கிளை யொன்றில் அமர்ந்தது. நாங்களிருவரும் அருகிலிருப்பதைப் பற்றி அது பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித சஞ்சாரமற்ற நிலையில் உருவாகிய இத்தீவின் பறவைகள் மனிதர்களின் அருகாமையை கண்டு பயப்படுவதில்லை. அந்த பயமற்றத் தன்மை இன்னும் தொடர்கின்றது என்று ஜோன்ஸ் விளக்கினார். மனிதர்கள் அருகில் வந்தபோதும் டோடோ பறவை ஓடாமல் நின்றதால் அதை பிடிப்பது எளிதாக இருந்தது. இதிலிருந்து உருவானதுதான் Dumb as a dodo என்ற முதுமொழி.

காட்டிலிருந்து, கடற்கரையோரமாக அமைந்திருந்த தனது எளிய வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார் ஜொன்ஸ். வீட்டினுள் நுழையும்போது ‘உங்களை தியடோர் என்றழைக்கலாமா?’ என்று கேட்டார். ஏன் அப்படி கேட்டார் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன். அவர் வளர்க்கும் ஐந்து நாய்களில் ஒன்றிற்கு பாஸ்கர் என்று பெயரிட்டிருந்தார்.

அரிதாகி வரும் ஒரு உயிரினத்தை ஒரு காப்பிடத்தில் வைத்து இனப்பெருக்கம் செய்து பின் காட்டினுள் விட்டு அந்த இனத்தை காப்பாற்றும் முறை பற்றி விளக்கினார். Noah’s ark method என்று உயிரியலாளர்கள் குறிப்பிடும் இம்முறை மூலம் மொரிஷியஸ்ஸின் ஒரு புறா இனத்தை இவர் இனப்பெருக்கம் செய்திருக்கிறார். இளஞ்சிவப்பு புறா (Pink pigeon) நமது மாடப்புறாவை விட ஒரு சுற்றுப் பெரியது. அழிவின் விளிம்பிலிருந்த இந்தப் பறவை இன்று நூற்று ஐம்பதிற்கு மேலிருக்கின்றது.

நான் ஹோட்டலுக்குத் திரும்பும் போது நன்கு இருட்டிவிட்டிருந்தது. கரும்புக் காட்டினூடே கார் சென்று கொண்டிருந்தது. மேகமிலாத வானில் நட்சத்திரக் கூட்டம் மிளிர்ந்து கொண்டி ருந்தது. அந்த நாளின் நிகழ்வுகளின் உச்சகட்டம் எது என்று யோசிதுப் பார்த்தேன். மொரிஷியஸ் வல்லூறைப் பார்த்து படமெடுத்ததா அல்லது ஒரு பறவையினத்தை அற்றுப் போகாமல் காப்பாற்றப் போராட்டிக்கொண்டிருக்கும் இளைஞன் கார்ள் ஜோன்ஸ்ஸை சந்தித்ததா?

(சு. தியோடர் பாஸ்கரன்)
நன்றி : உயிர்மை

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com