Contact us at: sooddram@gmail.com

 

யார் துரோகிகள்?

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உரிமையைக் கேட்டனர். இதே காலங்களில் தமிழர் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்பதங்களே ‘துரோகிகள்’ ‘புல்லுருவிகள்’ ‘களைகள்’ என்பனவாகும். தமிழனின் தனிச்சிறப்பே மற்றவனின் உயர்வில் பொறாமைப் படுவதும், தனது பதவிக்காக மற்றவர்களை காட்டிக்கொடுக்கும் தன்மையும், தருணம் பார்த்து காலை வாரிவிடும் குணமும் ஆகும். இவற்றின் வெளிப்பாடே மற்றவர்களைத் துரோகி என ஒரு வசனத்தில் இழிவு படுத்துவதுமாகும்.

அரசியல் தலைவர்களான ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் நாம் எமக்கு எதிரானவர்களை அரசியல் துரோகிகள் என்றும், புல்லுருவிகள் என்றும் கூறி தமிழ் மக்களிடையே துரோகிகள் கலாசாரத்தை வளர்த்து விட்டோம். பின்னர் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த வேளையில், தமிழ் ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் உருவானது. ஈழம் என்ற கொள்கையுடன் உருவாக்கப்பட்ட அனைத்து இயக்கங்களையும் தம்மிடையே சண்டை செய்து துரோகிகள் சுடப்பட்டனர் என்று பொது மேடைகளில் கூறுமளவிற்கு எமது கலாசாரம் வளர்ந்தது.

1986ஆம் ஆண்டு யாழ்.கல்வியங்காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட பின்னர் பொது மேடைகளில் துரோகிகள் அழிக்கப்பட்டனர் எனக் கூறினர். இதில், தமிழீழக் கொள்கைக்காக போராடச் சென்ற இளைஞர்கள் துரோகிகளா…? ஆயுதப் போராட்டத்தின் உச்சத்தில் அதனை வளர்த்த தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டனர். பின்னர் போராட்டம் சற்று திரிபடைந்து, போராட்டக் குழுக்களிடம் நியாயமான கேள்வி கேட்டவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். பின்னர் விடுதலை இயக்கங்களுக்கு நிதி உதவி செய்ய மறுத்தவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டு சுடப்பட்ட சம்பவங்களும் பல உண்டு. மேலும், போராட்டக் குழுக்கள் பற்றி விமர்சனங்கள் எழுதியவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1989ஆம் ஆண்டு யாழ்.மருத்துவ பீடத்தில் உடற்கூற்றியல் விரிவுரையாளரான ரஜனி திரணகம விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் மருத்துவ பீடத்திலிருந்து களையைப் பிடுங்கி விட்டோம் எனக் கூறிய வேளை, படித்த புத்திஜீவிகள் வாய் திறவாதிருந்தனர். இதில் வாய் திறவாதிருந்த யாழ்.புத்திஜீவிகள் துரோகிகளா? அல்லது, யாழ்.மருத்துவ பீட வளர்ச்சிக்காக மருத்துவ பீடத்தில் தன்னை இணைத்துகொண்ட விரிவுரையாளர் துரோகியா? அல்லது சுட்டவர்கள் துரோகியா?

ஆயுதக் கலாசார காலத்தில் இலங்கை இராணுவத்துடன் கதைத்தவர்கள், இராணுவத்துடன் தொடர்பு வத்திருந்தவர்கள் அனைவரும் துரோகிகளாக பார்க்கப்பட்டு, மின் கம்பங்களில் கட்டி மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் தாண்டிக்குளம் பகுதியினூடாக புலிகளின் பகுதிக்கு செல்பவர்கள் பல்வேறு விசாரணைகளுக்கு புலிகளால் உட்படுத்தப்பட்டனர். இக்காலப் பகுதியில் இராணுவப் பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு பொருட்களையே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். அரச உத்தியோகத்திலிருப்பவர்கள் இராணுவத்துடன் கதைத்து மேலதிகமான சில பொருட்களை கொண்டு செல்வர். மேலதிகமான பொருட்களைக் கண்ட புலிகள் அரச உத்தியோகத்தர்களை துரோகிகள் பட்டியலில் போட்டு, கேள்வி மேல் கேள்வியைத் தொடுத்து அவர்களை போராட்டத்திலிருந்து விலகி இருக்க வைத்தனர்.

பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து முஸ்லிம் போராளிகள் துரோகிகளாகப் பார்க்கப்பட்டு இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் பிரிந்த வேளை, அவர் துரோகியாக பார்க்கப்பட்டார். பின்னர் கருணா அணியிலிருந்து கேணல் ரமேஸ், கேணல் பிரபா, கரிகாலன் ஆகியோர் வன்னி சென்ற வேளை, இவர்கள் கருணா அணியினரால் துரோகிகளாக பார்க்கப்பட்டனர்.
பின்னர், இறுதிச் சமர் காலங்களில் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் துரோகிகளாக பார்க்கப்பட்டனர். தப்பியோட முயன்ற பொதுமக்கள் பலர் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் சிறைகளில் போடப்பட்டனர். இதில் ஒரு மருத்துவரும் அடங்குவார். மேலும் இறுதிக்காலங்களில் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் துரோகிகளாக்கப்பட்டு சுடப்பட்டனர்.

புலிகளுக்கு பிள்ளைகளை கொடுக்க மறுத்த குடும்பங்கள் துரோகிகள் கூட்டமென்று விமர்சிக்கப்பட்டன. பின்னர் பிள்ளைகளை பலாத்காரமாக பெற்றோர் முன்னிலையில் இழுத்துச் சென்ற போது அதனைத் தடுக்க முற்பட்ட பெற்றோரை துரோகத்தனம் செய்ய வேண்டாம் என்று கூறினர். இதன் பின்னர், கிட்டத்தட்ட 11ஆயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், அவர்களின் சிலரால் புலிகளுக்கு உணவு வழங்கியவர்கள், உறைவிடம் வழங்கியவர்கள், பல்வேறு விதங்களில் உதவி செய்தவர்கள் என்று பல தமிழ் மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
இப்போது யார் துரோகிகள்..?

நாம் துரோகிகள் என்ற பதத்தை எங்கு, எதற்கு பாவிக்கின்றோம் எனத் தெரியாமல் பாவிக்கத் தொடங்கியுள்ளோம். தமிழன் தலை நிமிர வேண்டும் என்றால், ‘துரோகி’ ‘எதிரி’ என்ற பதங்களை அகராதியிலிருந்து அகற்ற வேண்டும். இன்று நாம் துரோகிகள் என்ற சொல்லின் மூலம் எத்தனையோ தமிழ் இளைஞர்களை, புத்திஜீவிகளை, அத்துடன் ஓர் உழைக்கும் வர்க்கத்தினையே இழந்துள்ளோம். இதற்கு யார் காரணம் என கூடியிருந்து கதைத்தால் இறுதியில் எமக்கு கிடைப்பது, இனவாதம், பிரதேசவாதம், தலைமை மோகம் அத்துடன் சாதிபேதம். மீண்டும் இவற்றை வளர்த்தால் எமக்கு கிடைப்பது யுத்தமும் அழிவும் தான்.

தமிழா உனக்கு புத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் உழைப்பைக் கொடுக்கும் உனக்கு உரிமையை எவ்வாறு பெறுவதென்று ஒன்றுபட்டு யோசி! ஓவ்வொரு இனத்திலும் காட்டிக் கொடுக்கும் துரோகத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தமிழினத்தில் இது சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. எனெனில், எமது சமுதாய கட்டமைப்பில் நாம் கூட்டுக் குடும்பம் என்ற அடிப்படையில் வளர்ந்தவர்கள். இதனால். சுயநலத் தன்மை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது. சுயநலத்தின் வெளிப்பாடே போட்டி மனப்பான்மையும், தனிமனிதப் படுகொலைகளும் ஆகும். இறுதிக் காலங்களில் தமிழ் மக்களுக்கு எத்தனையோ சிரமங்கள், துன்பங்கள் ஏற்பட்டன. இவை அனைத்தும் ஏதோ ஓர் விடுதலை நோக்கத்தில் நடந்தவை. யார் துரோகிகள், யார் எதிரிகள் என்று பார்க்கும் காலம் அல்ல இது. நடந்தவைகள் எமக்கு கசப்பாக இருக்கும்.

(மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் எழுதிய ‘ஈழத்தின் வலி’ புத்தகத்தில் வெளியான கட்டுரை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com