Contact us at: sooddram@gmail.com

 

ISIS, தீவிரவாதம், பின்னணிகள்...

நண்பர் ஷர்மிலா செய்யித் அவர்களின் ஒரு முக்கிய பதிவு, அதற்கு நான் இட்ட பின்னூட்டம், அவரது மறுமொழி ஆகியன, நண்பர்களின் பார்வைக்கு:
Sharmila Seyyid :சிரியாவில் நடைபெற்றதொரு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ISIS போராளி/ தீவிரவாதியொருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாகக் கடந்த வாரம் வெளியான செய்தி தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தபடியேயுள்ளன.
இஸ்லாத்தின் கோட்பாடுகள், வாழ்வு நெறிகள் கொங்கிறீட் தரையில் வீசியெறிப்பட்ட தேங்காயின் துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன. அவரவர் கையில் கிடைத்த துண்டுகளைப் பொறுக்கிப் பசியாறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சொல்ல ஆயிரம் உண்டு. ஆனாலும் மௌனமும், அவதானிப்பும் இன்னமும் நிறையக் கற்கச் செய்கிறது.
இஸ்லாமிய இயக்கக் கொடிகளைத் தூக்கியசைக்கையில் ஒவ்வொரு கருத்தியல் ரயில்களும் ஊளையிட்டுப் புறப்படுகிறபோது சூழலின் உண்மைத்தன்மைகளை முற்றிலும் மழுங்கடிக்கும் பேரிரைச்சலையும் சூழல் மாசையுமே உண்டு பண்ணுகிறது.
இஸ்லாத்திற்கென்று புதிய கோட்பாடுகளோ, இயக்கங்களோ அவசியமேயில்லை என்பதே எனது சிற்றறிவின் தீர்வு. நாம் தேடவேண்டியது புதிய ஒன்றையுமல்ல. நாம் தேடவேண்டியது எமது "தாய்" மார்க்கத்தை. இயக்கங்களும் கருத்தியல் பிரிவினைகளும் இல்லாது செய்துவிட்ட "ஒரிஜினல்" இஸ்லாத்தை அடைய வேண்டியதே எமது கடமை. எமது எதிர்கால சந்ததிகளுக்கு அன்பு, நேசம், உறவு, இனநல்லுறவு, சமூக வாழ்வு, சகிப்பு, விட்டுக்கொடுப்பு, சமாதானம் என்ற அனைத்தையும் போதித்த ஒரிஜினல் இஸ்லாத்தை கையளிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
ISIS போன்ற சர்வதேச இயக்கங்களில் இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் / இயக்கங்களின் பங்கு உண்டா இல்லையா என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள விரும்பவில்லை இப்போதைக்கு. கண்டி குருந்துகொல்லையைச் சேர்ந்த 37 வயதுடைய முஹம்மத் முஹ்சீன் முஹம்மத் நிலாம் என்ற நபர் ISIS இல் இருந்தாரா, இது உண்மையா பொய்யா, இன்னும் எத்தனை உறுப்பினர்கள் இருக்கமுடியும், இதற்கு ஊக்கியாகச் செயற்படுகிற துணை இயக்கம் எது / எவை என்கிற எந்தவொரு ஆய்வு முடிவுகளையும் ஆராய்ந்து சிந்திக்கும் பொறுமையோடு இங்கு யாருமில்லை. ஆக, நாம் இன்னும் காத்திருக்கலாம், கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே தீரணும்.... எல்லார் முகமூடிகளும் கிழிந்து தொங்கத்தான் போகிறது. இரைச்சலுடன் புறப்பட்ட / புறப்படுகிற இயக்க ரயில்களில் ஏறிச்சென்று தொலைந்துபோகாதவர்கள் நிம்மதியாய் இருங்கள். அல்குர்ஆனும் சுன்னாவும் போதும் சேரவேண்டிய பயணத்திற்கு....!
என் பின்னூட்டம்:
"""""""""""""""""""""""""
Marx Anthonisamy :ஒரு பொதுவான பார்வையில் உங்கள் பதிவின் பின்னுள்ள நல்லெண்ணத்தை நான் உணர்கிறேன். ஆனால் இந்நிலையிலிருந்து மீள்வது என்பதற்கான வழிமுறைதான் தெரியவில்லை. ஒரிஜினல் இஸ்லாத்திற்குத் திரும்பவேண்டும் என்கிறீர்கள். எது ஒரிஜினல் இஸ்லாம் என்பதுதான் பிரச்சினையே. எதிர் எதிராய் நிற்கும் எல்லோரும் திருக்குர் ஆனிலிருந்துதான் மேற்கோள் காட்டுகின்றனர்.
எங்களுக்கு ஒரு அனுபவம் உண்டு. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பகவத் கீதையை இங்கிருந்த அன்றைய தலைவர்கள் எதிரிகளைக் கொன்றொழிப்பதைக் கடமையாகச் சொன்ன நூல் என்பதாக விளக்கமளித்து உரைகள் எழுதினர். பல இளைஞர்கள் வெள்ளை அதிகாரிகளைக் கொன்றுவிட்டு கைகளில் கீதையுடன் தூக்கு மரம் ஏறினர். காந்தி களத்திற்கு வந்தபின் இந்நிலை மாறியது. இந்து மதத்தில் முழு நம்பிக்கை உடையவராகத் தன்னை முன்நிறுத்திக் கொண்ட அவரும் கீதைக்கு உரை எழுதினார். கீதை, போரை அல்ல அது சமாதானத்தை முன்வைக்கும் நூல் என அவர் வாசித்தார். நவீன காந்தியியல் அறிஞர் ஒருவ,ர் "வாசிப்புச் சுதந்திரத்தை இத்தனை உச்சபட்சமாகப் பயன்படுத்தியவர் காந்தியாகத்தான் இருக்க முடியும்" என எழுதுகிறார்.
1400 ஆண்டுகட்கு முன் அருளப்பட்ட இறைவாக்குகளையும், ஆக்கப்பட்ட சுன்னாக்களையும் இன்றைய காலத்திற்குத் தக விளக்கம் அளிக்கும் மார்க்க அறிஞர்கள் எல்லா நாடுகளிலும் உருவாக வேண்டும்.
2. இன்றைய இந்தக் கவலைக்குரிய நிலைக்கு இஸ்லாமியத் தரப்பு மட்டும் காரணமில்லை என்பதற்கும் நாம் கூடுதல் அழுத்தம் அளித்தாக வேண்டும். சோவியத்துக்குப் பிந்திய உலகில் உருவான 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்பதற்கு முஸ்லிம்கள் மட்டுமா காரணம்? அது கட்டமைக்கப்பட்ட ஒன்றல்லவா? அப்படி ஒன்று அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் தேவையாக இருந்ததை மறுக்க இயலுமா? இரண்டு ஈராக் போர்கள். போஸ்நியா இன அழிப்பு, சிரியா. லிபியா,.. இவை எல்லாம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்லவா? சோவியத்துக்குப் பிந்திய உலகில் நீதி கிடைக்காது என்கிற எண்ணம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உலக அளவில் உருவாக்கப்பட்டதல்லவா?
ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் என ஒன்றிருந்தால் அதை இல்லாததாக்கும் பொறுப்பை முஸ்லிம்கள் தலையில் மட்டும் சுமத்திவிட இயலாது.
3. முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தத் தீவிரவாதப் போக்கிற்கு முஸ்லிம் நாடுகளில் உள்ள ஜனநாயக மறுப்பு மற்றும் முஸ்லிம் என்கிற அடையாளத்திற்குள் ஒளிந்துள்ள இனக்குழுப் பகைகள் (எ.கா: போகோ ஹராம்) ஆகியனவும் காரணமாக உள்ளன. பணக்கார முஸ்லிம் நாடுகள் எண்ணை மூலம் கொழிக்கும் லாபத்தைக் குடிமக்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவர்களின் ஜனநாயக வேட்கையைத் தணிக்கின்றன. ஏழை நாடுகளில் அது இயல்வதில்லை. வெடித்துச் சிதறுகிறது.
ஷர்மிலாவின் மறுமொழி
"""""""""""""""""""""""""""""""""""
Sharmila Seyyid : உங்கள் வாதத்தோடு முற்றிலும் உடன்படுகின்றேன். இவை குறித்த தெளிவு உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவு இருக்கிறது. அமெரிக்கா, நேட்டோ போன்ற வல்லரசுகளுக்கு சர்வ உலகில் ஏகாதிபத்தியத்தை நிறுவ ஓர் எதிரி தேவை, அதேநேரம் அந்த எதிரி பலயீனமாயும் இருக்க வேண்டிய தேவை உண்டு.
இப்படி வல்லரசுகளால் இனங்காணப்பட்ட பலயீனமான எதிரிகள்தாம் உலக முஸ்லிம்கள். கோட்பாட்டு ரீதியாக அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட பிரிவினைத் தீயில் வல்லரசுகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது எம் முன்னோர் சொன்ன எளிய விதி. இங்கு ஊர் இரண்டாக அல்ல துண்டு துண்டாகச் சிதறிக் கிடக்கிறது. கூத்தாடியின் கொண்டாட்டத்தைச் சொல்லவும் வேண்டுமா?

(Marx Anthonisamy)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com