Contact us at: sooddram@gmail.com

 

சிறுபான்மையினர் விடயத்தில் மஹிந்த மாறிவிட்டாரா?

இது தேர்தல் காலமாக இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் எதற்காக போட்டியிடுகின்றன என்பதை அக் கட்சிகளும் கூட்டணிகளும் இன்னமும் நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. அதனைக் கூற அவற்றுக்கு சந்தர்ப்பம் வரவும் இல்லை. ஏனெனில் அவை வேறு விடயங்களை முக்கியமாக கருதிச் செயற்படுகின்றன. இப்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் வருகையே அரசியல் களத்தில் பிரதான தலையங்கமாக பேசப்பட்டு வருகிறது. மஹிந்தவுக்கு போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பம் வழங்கியமை சரியா? மஹிந்தவை பிரதமராக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? ஜனாதிபதியால் அதனைத் தடுக்க முடியுமா? இதுபோன்ற பிரச்சினைகளே இப்போது ஆராயப்பட்டு வருகின்றன.

ஒரு வகையில் அதிலும் நியாயம் இருக்கிறது என்றும் வாதிடலாம். ஏனெனில், மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதாக இருந்தால் அது நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். தற்போது நாட்டில் நிலவும் அமைதி பறந்துவிடக் கூடும். மீண்டும் ஒருவித பதற்ற நிலைமை அவருக்கு எதிரானவர்கள் மத்தியிலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் உருவாகக் கூடும்.

மஹிந்தவுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவியில் அமர்த்தியவர்களாலும் பல ஊடகங்களினாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதில் அவருக்கு ஆதரவளித்தவர்களை அவர் காட்டிக் கொடுத்ததாகவும்; குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஆனால், அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்த ஜனாதிபதி, கடந்த வாரம் வாயைத் திறந்தார். தமது எதிர்ப்பை புறக்கணித்தே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பு வழங்கியது என்றும் மஹிந்த தொடர்பிலான தமது அபிப்பிராயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ஜனாதிபதித் தேர்தலில் போலவே இம்முறையும் மஹிந்த தோல்வியடைவார் என்றும் ஐ.ம.சு.கூ வெற்றி பெற்றாலும் தாம் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் சோர்வடைந்து இருந்து, பின்னர் அவருக்கு வேட்பு மனு வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் மேற்படி உரையினால் அதிர்ந்து போனார்கள். மீண்டும் அவர்களது முகங்களில் ஒருவித விரக்தியைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதியின் உரைக்கு தாம் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறும் ஐ.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் கூட்டத்தின் போது பதிலளிப்பதாக ஊடகங்களிடம் மஹிந்த கூறியிருந்தார். ஆனால், அன்று அநுராதபுர கூட்டத்தின் போது மஹிந்த எதுவும் புதிதாக கூறவில்லை. அவரது பழைய பல்லவியையே கேட்கக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த தம்மைப் பார்த்து திருடன் என்று ஆட்சியாளர்கள் கூறுவதாக அவர் அங்கு கூறியிருந்தார்.

தம்மை பிரதமராக்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறியதையிட்டு அவர் எதனையும் கூறவில்லை. முன்னாள் பிரதம் நீதியரசர் சரத் என். சிலவாவே அக் கூட்டத்தின் போது அதற்கு பதிலளித்து இருந்தார். அரசியலமைப்பின் படி பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி அல்ல என சில்வா கூறினார்.

இது மக்களை குழப்பும் தர்க்கமேயல்லாமல் வேறொன்றும் இல்ல. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என ஜனாதிபதியினால் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜனாதிபதிதான் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர். பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என ஜனாதிபதியினால் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறும் போது தவறான முடிவாக இருந்தாலும் ஜனாதியின் கருத்தே இங்கு சட்டமாகிறது என்பது தெளிவாகிறது.

அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஜனாhதிபதி நியமித்தார். சில்வாவின் வாதத்தை நிராகரிக்க அந்த முன்னுதாரணமே போதுமானதாகும்.

அவ்வாறு ரணிலை நியமிப்பதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அப்போது சில்வா அது பிழையெனக் கூறவில்லை. பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி அல்ல என்றோ அல்லது பெரும்பான்மை பலம் இல்லாத கட்சியொன்றின் தலைவரை பிரதமராக நியமிக்க முடியாது என்றோ அவர் கூறவில்லை. மாறாக அவர் அப்போது மைத்திரிபாலவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

சரத் என். சில்வா, சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்துகொள்வதில் வல்லவர். அதேவேளை தமது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் பிரசித்தி வாய்ந்தவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்களில் அவரும் ஒருவர். 2005ஆம் ஆண்டு ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கின் போது தாம் மஹிந்தவை காப்பாற்றியதனாலேயே மஹிந்த - நாட்டுக்கு இந்தத் தீங்கை விளைவிக்க முடிந்தது என்றும் அந்தத் தீர்ப்பை வழங்கியமைக்கு நாட்டு மக்களிடம் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அப்போது சில்வா கூறினார்.

ஒரு நீதிபதி தம்முன் இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்க வேண்டும். அது அவரது தனிப்பட்ட விருப்ப வெறுப்புக்கு எதிராக இருந்தாலும் ஒரு நேர்மையான நீதிபதிக்கு வேறு வழியில்லை. அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தம் முன் இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையிலன்றி தமது விருப்பத்துக்கு தீர்ப்பு வழங்கினால் மட்டுமே அவர் அதைப் பற்றி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறாயின் சில்வா என்ன செய்திருக்கிறார்?

மஹிந்தவை சிறையிலடைத்து, அவரை ஜனாதிபதியாவதை தடுத்து, நாட்டுக்கு ஏற்பட்ட அநீதியைத் தடுக்க முடியவில்லை என்பதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட சில்வா- இப்போது அதே மஹிந்தவை ஆட்சிபீடமேற்ற முயற்சிக்கிறார்.

சட்டமா அதிபராகவிருந்த சில்வாவை சந்திரிகாவே பிரதம நீதியரசராக நியமித்தார். ஆனால், சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் அவருக்கும் சந்திரிகாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருந்தது. அது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தை ஒரு வருடத்தால் குறைத்துவிட்டது.

சந்திரிகா, 1999ஆம் ஆண்டு இரண்டாது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் 2000ஆம் ஆண்டே இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பிக்கப்படவிருந்தது. அதன் படி 2006ஆம் ஆண்டே அவரது இரண்டாவது பதவிக் காலம் முடிவடையவிருந்தது.

அப்போது மஹிந்தவின் ஆதரவாளர்களாகவிருந்த ஜாதிக ஹெல உறுமய இந்த விடயத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. அப்போது சில்வாவும் மஹிந்தவை ஆதரிக்கும் நிலையிலேயே இருந்தார். எனவே, 1999ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்திரிகா, அதேயாண்டு சத்தியப்ப பிரமாணம் செய்தார் என்ற அடிப்படையில் அவரது பதவிக் காலம் 2005ஆம் ஆண்டு முடிவடைவதாக தீர்ப்பு வழங்கினார். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே ஜனாதிபதியாவதற்கு மஹிந்தவுக்கு சரத் என் சில்வா சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மஹிந்தவையும் எதிர்த்து மஹிந்தவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அது முடியுமா என்று உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்க, அவரால் முடியாது என்றும் கடந்த வருடம் சில்வா வாதாடினார். இப்போது பிரதமரை ஜனாதிபதி நியமிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என தாம் நினைக்கும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அவர் அவ்வாறு பிரதமர் ஒருவரை நியமித்ததன் பின்னர் அந்தப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு அவர் நீக்கப்படலாம். அப்போது ஜனாதிபதியின் கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டு விடுகிறது. எனவே, உண்மையிலேயே பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கௌரவத்துக்கு நல்லது.

இந்தியாவில் ஜனாதிபதியின் இந்த அதிகாரம் பரீட்சிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் செயற்பட முடியும். அங்கு தேர்தலின் பின்னரோ அல்லது பிரதமர் ஒருவர் பதவியில் இருந்து விலகியதன் பின்னரோ புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அந்த பிரதமர் விடயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நடைபெறும். அதில் வெற்றிபெற்றால் மட்டுமே பிரதமர் தமது பணிகளை தொடரலாம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூ வெற்றி பெற்றால் மஹிந்தவை பிரதமராக நியமிக்காமல் இருக்க ஜனாதிபதிக்கு முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய விடயமே. ஏனெனில் மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பை வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி செய்வதறியாத நிலைக்குத் தள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்குதல் ஏற்பட்டதென்றால் ஐ.ம.சு.கூ வெற்றிபெற்றால் மஹிந்தவுக்கு ஆதரவான நெருக்குதல் அதுபோல் பல மடங்காக அதிகரிக்கும். அதனை புறக்கணித்து ஜனாதிபதி, மற்றொருவரை பிரதமராக நியமித்தால் ஐ.ம.சு.கூ அந்தப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க முடியும்.

ஐ.ம.சு.கூ.வின் கீழ் மைத்திரிபாலவின் ஆதரவாளர்களும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதியின் கடந்த வார உரையை அடுத்து அதைப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடவிருந்த போது, நீதிமன்ற இடைக்காலத் தடை மூலமாக அதனைத் தடுத்த கொட்டிகாவத்தை-முல்லேரியாவ பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன சோலங்கஆரச்சி, அதற்கு உதாரணமாகும். மஹிந்தவின் அநுராதபுரக் கூட்டத்துக்கு ஐ.ம.சு.கூவின் கீழ் அம்மாவட்டத்தில் போட்டியிடும் துமிந்த திஸாநாயக்க வரவில்லை. அவரும் மைத்திரி ஆதரவாளராவார்.

தேர்தலில் ஐ.ம.சு.கூ பெரும்பான்மை பலத்தைப் பெற்றாலும் அதிலுள்ள மைத்திரி அதரவாளர்களின் எண்ணிக்கையும் ஐ.தே.க.வின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையும் மஹிந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் மஹிந்தவை புறக்கணிக்க ஜனாதிபதியால் முடியும்.

ஐ.ம.சு.கூ பெரும்பான்மை ஆசனங்களை வென்றால் மட்டுமே இந்தக் கேள்விகள் எழும். ஆனால், அவ்வாறு ஐ.ம.சு.கூவின் மஹிந்தவின் குழு பெரும்பான்மை பலத்தைப் பெறுமா? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த சுமார் 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சுமார் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். சில அரசியல்வாதிகள் மாறினாலும் அந்த வாக்காளர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதாக இன்னமும் தெரியவில்லை.

ஆனால், இது பொதுத் தேர்தல் என்பதால் சில பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரபல்யம் காரணமாக வாக்காளர்கள் சிலர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக இந்த விடயம் மஹிந்தவுக்கு ஓரளவு சிறுபான்மை வாக்குகளை பெற்றுக் கொடுக்கவும் கூடும்.

உதாரணதாக மலையகத்திலும் ஹிஸ்புல்லாஹ்வின் காரணமாக காத்தான்குடியிலும் அதாவுல்லாவின் தொகுதியான அக்கரைப்பற்றிலும் ஐ.ம.சு.கூ., ஜனாதிபதித் தேர்தலில் பெறாத சில வாக்குகளை பெறும். தனிப்பட்ட வேட்பாளர்களின் ஈர்ப்பின் காரணமாக சில மாவட்டங்களில்; ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வினால் பெறாத வாக்குகளை பெறக்கூடும்.

அதேவேளை, வேட்பாளர் தெரிவின் போது ஐ.ம.சு.கூ சிறுபான்மையினரை புறக்கணித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஏனைய பிரதான கட்சிகள் குருநாகல் மாவட்டத்தில் சிறுபான்மை வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியிருக்கின்ற போதிலும், ஐ.ம.சு.கூ பட்டியலில் எவரும் இல்லை. முழு முஸ்லிம் சமூகமுமே மஹிந்தவை எதிர்க்கும் போது அவரை ஆதரித்த அப்துல் சத்தாரின் மாவட்டமும் குருநாகல் மாவட்டமே என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

மேலும், சில மாவட்டங்களிலும் ஏனைய பிரதான கட்சிகள் சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் போது ஐ.ம.சு.கூ அவ்வாறு செய்யவில்லை. புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியையே மஹிந்த தமது துருப்புச் சீட்டாக பாவிக்கப் போகிறார். ஆனால், அந்தப் போரின் போது உளவுத்துறையில் அரச படைகளுக்கு பேருதவியாகவிருந்த கருணா எனப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஐ.ம.சு.கூ.வினால் புற்கணிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் விடயத்தில் தாம் சில பிழைகளை விட்டதாகவும் தாம் அதனை திருத்திக் கொள்வதாகவும் மஹிந்த அண்மையில் கூறியிருந்தார். ஆனால், இம்முறை ஐ.ம.சு.கூ வேட்பாளர் பட்டியல்களைப் பார்க்கும் போது எவ்வகையிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் தமக்கு கிடைக்காததால் அந்த வாக்குகளை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற எண்ணத்தில் அந்தப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது!
(எம்.எஸ்எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com