Contact us at: sooddram@gmail.com

 

ஒரு பதிலுரைக் கட்டுரை........!

இணக்க அரசியல் மூலம் ஈபிடிபி சாதித்தவை என்ன?

(சூரியன்)

எதிர்ப்பு அரசியல் செய்து TNA இதுவரை சாதித்தது என்னவென்று கேட்டால் சிலர் கேட்கிறார்கள் EPDP இணக்க அரசியல் செய்து இதுவரை சாதித்தது என்னவென்று. EPDP யின் இணக்க அரசியல் மூலம் ஆயிரம்ஆயிரம் இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் சின்னாபின்னப்பட்ட பிரதேசங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள். இந்தமண்ணில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறுவது தடுக்கப்பட்டது. அவர்களிற்கு கிடைத்த இரண்டு அல்லது மூன்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு கூடுமானதை செய்தார்கள். அரசியற் தீர்வுக்காய் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் கொடுக்கும் நிலையில் இவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஒரு கட்சிக்கு வாக்களித்துவிட்டு மற்றைய கட்சியிடம் என்ன செய்தீர்கள் எனக் கேட்பது முறையல்ல.

மாறாக போலி வாக்குறுதிகளை மக்களிற்கு வழங்கி அவர்களின் வாக்குகள் மூலம் அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு TNA யினர் மக்களிற்கு ஆற்றிய சேவைகள் என்ன? இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டனவா? காணாமற் போனோர் கண்டு பிடிக்கப்படார்களா? சிறையில் வாடும் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்களா? சுயாட்சி, தன்னாட்சி தனியரசு என்பவற்றில் ஏதாவது பெற்றுக் கொடுத்தார்களா? இவை அனைத்தும் பெற்றுக் கொடுப்போம் என தேர்தலிற்கு முன்னர் கூறுவதும் பின்னர் முரண்பாடான விடயங்களைப் பெரிதுபடுத்தி பாராளுமன்றத்தில் விவாதிப்பதும், பின்னர் அவை ஊடகங்களில் அவர் கர்சித்தார், இவர் சீறினார் மற்றவர் முழங்கினார், இன்னொருவர் சாட்டை என தலைப்பு செய்திகளாவதுடன் இவர்களின் பாராளுமன்றப் பணி பெருமைபெறும்.

மீண்டும் தேர்தல்வரும். வியாபாரயுத்திகள் மாறுவது போல் மீண்டும் புதியகோசங்களுடன், தோற்றங்களுடன், விளம்பரங்களுடன் வருவார்கள். இவை அனைத்தும் வாக்கு அறுவடைக்கான வித்தைகள். மக்களை ஏமாற்றும் செயல்முறைகள். உதாரணத்திற்கு கடந்த மாகாணசபைத் தேர்தலில் பல கல்விமான்கள், உயரதிகாரிகள், விடுதலைப்புலிகள் குடும்பம் என ஓர் கலவை தேர்தலில் நின்றது. இது மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்தது. தேர்தலின் பின் இக்கலவையால் எவ்வாறு மக்களிற்கு சிறப்பான சேவையை ஆற்ற முடியும் என்பதுபற்றி சிந்திக்கவில்லை. அதனால்தான் ஒரே அணியினுள் முரண்பாடான அறிக்கைகளும் இழுபறிகளும். பின்னர் தமது தவறை, இயலாமையை மறைக்க அரசியல் அதிகாரம் போதாது எனும்சாட்டு. அதிகாரம் போதாது எனத் தெரிந்தும் எவ்வாறு அதிக வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

மக்களின் அவலத்தை தீர்ப்பதற்கு மாறாக தமது விளம்பரங்களை தொடர சிறிய விடயங்களைப் பெரிதுபடுத்தி ஊடக விளம்பரங்கள். இன்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடைந்துள்ளது. இதற்கான பிரதானகாரணம் மக்களின் வெளியேற்றம் ஆகும். இன்நிலையில் எஞ்சி உள்ள மக்களையாவது இங்கு வாழவைப்பதற்கான வழிமுறைகள்பற்றி கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து நாட்டில் நல்ல விடயங்கள் பல நடைபெறுகையில் அவற்றை வேண்டுமென்று மறைத்து குறைபாடுகளை மட்டும் உருப்பெருக்கி மக்களை பயம் கொள்ள செய்கிறது TNA.

இது எமது மக்களை இன் நாட்டில் வாழ முடியாது எனும் முடிவிற்கு இட்டு செல்லும், அதனால் எஞ்சியுள்ள மக்களும் வெளியேறவே செய்வார்கள். இதன் விளைவுதான் யுத்தத்தின் பின்னரும் மக்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று அல்லல்படுவது. எனவே இன்று மக்களிற்குத் தேவையானது அவர்களை வாழ்வின்மீது நம்பிக்கை உள்ளவர்களாக்கி இம்மண்ணில் அவர்களை வாழவைக்கும் ஓர் தலைமையே. அதன் மூலம் எமது பிரதேசங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மக்கள் பலம்பெற வேண்டும். அதற்காக அரசுடனும் இணைந்தே செயற்பட வேண்டும். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். சரியான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் எமது குரல் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆரோக்கியமானதாக ஒலிக்கும்.

தவிர மாவீரர் இல்லங்களிற்கு மலர் தூவுவோம் என கூறுவதற்கும், புலிகள் மீண்டும் வருவார்கள் எனக் கூறுவதற்கும் மகிந்த ராஜபக்சவை தூக்கில் ஏற்றுவோம் எனக் கூறுவதற்கும் பிரகிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வோமாயின் எமது வாழ்வு இன்னும் அவலமானதகவே அமையும் என்பது உண்மையே.

இன்னுமோர் விடயம் குறிப்பிட்டேயாக வேண்டும். அரசியற் கட்சிகள் என்பன மக்களிற்கானதே. தவிர மக்கள் கட்சிகளிற்கானவர்கள் அல்ல. அவ்வாறே சின்னங்களும். இதை நடைமுறையில் செய்பவர்கள் ஈழமக்கள் ஜனநாகக் கட்சியினரே. அவர்கள் மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே தமது நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். இதில் கணிசமான வெற்றியும் கண்டிருக்கிறார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வெற்றிலையில் போட்டியிட்டார்கள். அவர்கள் வெற்றிலையில் போட்டியிடுவதுபற்றிய அதிருப்தி அக்கட்சியின் ஆதரவாளர்களிடையே காணப்பட்டது. அவர்களின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்கள் கிடைக்கும் என்று தெரிந்தும் அவர்கள் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிட்டார்கள். இது அவர்களின் மக்கள் நலன்சார்ந்த கொள்கையே.

வெற்றிலையில் பலகட்சிகள் போட்டியிட்டும் EPDP உறுப்பினர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள். அதிலும் அதன் செயலாளர் டக்ளஸ்தான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். அக்கட்சியின் வெற்றியானது வெறுமனே கோசங்களிற்கும், கட்சிப் பெயரிற்கும், சின்னத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் அல்ல. மாறாக அவர்களின் கொள்கைக்காக கிடைத்த வெற்றியே. இன் நிலையில் அவர்கள் ஓர் பலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளார்கள் என்பது உண்மை.

TNA ஐ பொறுத்தவரை நிலைப்பாடு மறுதலையானது. மக்களின் வாக்குகளிற்கே முதலிடம். தவிர அதன் தலைவராகினும் கட்சியோ சின்னமோ மாறுமாயின் அவர்களால் வெற்றிபெற முடியாது. அதன் உதாரணங்களாக பலர் உள்ளனர். அதனால்தான் TNA இனுள் இன்றுவரை ஒட்டியபடி பலர் உள்ளனர். இது ஆரோக்கியமான சமூகத்திற்கான அடையாளம் அல்ல. எனவே இத் தேர்தலில் மக்கள் நலன் சார்ந்து செயற்படுகின்ற EPDP கட்சியினரைப் பலப்படுத்த வேண்டியது மக்களின் இன்றைய அவசிய தேவை. இதை மக்கள் உணர்வு பூர்வமாக அன்றி அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.

(சூரியன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com