Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் ?

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை சொல்வதற்கு முன்பாக சில கசப்பான உண்மைகளை சொல்லவிரும்புகிறேன். இதை எழுதுவதற்கு முன்பாக ஊரில் உள்ள பலதரப்பட்ட மட்டங்களில் உள்ளவர்களிடமும் புலம்பெயர் நண்பர்களுடனும் தொலைபேசி, ஈமெயில், பேஸ்புக் ,இஸ்கைபி என பலதரப்பட்ட தொடர்பாடல் சாதனங்களினூடு தொடர்புகொண்டு தகவல்களை பெற்று மக்களின் மனநிலையை ஆராய்ந்திருக்கிறேன்.
அதைவிட வாழ்வைத் தொலைத்து நிற்கும் ஒருசில முன்னாள் போராளிகளுடனும் பேசியிருக்கிறேன். விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் , எழுத்தாளர்கள்,ஆசிரியர்கள் கூலிவேலை செய்வோர் என பலதரப்பட்ட வருடனும் தொடர்புகொண்டிருக்கின்றேன்.

ஏதாவது ஒருதீர்மானத்தை எடுப்பதற்கு முன்பதாக ஆழமாக அலசி ஆராயவேண்டும் என்ற எனது வழமையான நடைமுறையின் அடிப்படையில் இந்த தகவல்களை பலரிடம் இருந்தும் பெற்றுள்ளேன்.
தேர்தல் சம்மந்தமாக, யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற எனது கருத்து என்ன என்பதை சொல்வதற்கு முன்பதாக பின்வரும் சில கசப்பான உண்மைகளை சொல்லலாம் என நினைகின்றேன்.
1) தமிழீழம் என்பது தமிழர்களை பொறுத்தவரை
காலாவதியாகிப்போன ஒரு கனவு.
2) சர்வதேசம் தமிழர்களுக்கான எந்த ஒரு தீர்வையும் பெற்று
தரப்போவதில்லை.
3) சமஸ்டி தீர்வு, வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய
உரிமை,ஒருநாடு இருதேசம் என்ற எந்த ஒரு தீர்வுக்கும்
எந்த ஒரு தென்னிலங்கை அரசாங்கமும், ஒருபோதும்
ஒத்துகொள்ள போவதில்லை. தமிழர்களை
பொறுத்தவரை அவர்கள் இவற்றை ஒருபோதும்
அடையப்போவதுமில்லை.
4) மாகாண சபைக்கு ஒருசில அதிகாரங்களை பெறுவதைவிட
தமிழர்கள் எதையும் சர்வதேசத்திடம் இருந்தும்
இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் பெறப்போவதில்லை.
5) போர்க்குற்ற விசாரணைகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எந்த
ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
6) சர்வதேசம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்போவதில்லை .
7) காணாமல்போனவர்கள் பிரச்சினைக்கு எந்த முடிவும்
கிடைக்கப்போவதில்லை.
மேலே சொன்னவை மிகவும் கசப்பானவைதான்.
தமிழ் தேசியத்தையும் ஆயுத போராட்டத்தையும் ஆதரித்த எமக்கு இந்த கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்வதென்பது முடியாததாகும்.
ஏதாவது அதிசயங்கள் நிகழ்ந்தாலே ஒழிய மேலே சொன்னவற்றில் எந்த மாற்றங்களும் நிகழாது என்ற நடைமுறை உண்மையை நாம் விரும்பினாலு ம் சரி விரும்பாவிட்டாலும் சரி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மேலே சொன்ன இந்த கசப்பான உண்மைகளை பெற்றுத்தருவோம் என எந்த கட்சி முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றதோ அது மக்களை ஏமாற்றுகின்றது என்றே அர்த்தம்.
மக்களின் உணர்வுகளைத்தூண்டி இன்பம் அனுபவிக்க நினைக்கும் எல்லா கட்சிகளும் வீதியோர விபச்சாரிகள் தான்.
பதவியைப்பெற்று சொத்துகளைப் பெருக்குவதே இந்த அரசியலுக்கு பின்னால் உள்ளது.
இதைத்தவிர எந்த மயிரையும் தமிழ் கட்சிகளால் புடுங்க முடியாது.
இவற்றையும் மீறி தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தருவோம் எனக்கூறி அப்பாவி மக்களின் உணர்வுகளைதூண்டி அரசியல் லாபம் தேட நினைப்பது போரினால் பாதிக்கப்பட்டு நூறாண்டுகளுக்கு எழவே முடியாத படிக்கு வீழ்ந்து கிடக்கும் சொந்தங்ககளை மீண்டும் மீண்டும் சின்னாபின்னமாக்கி சீரழிக்கும் முயற்சியாகும்.
பச்சைத் துரோகமாகும்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கையாலாகாத அரசியல் வரட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விபசார அரசியல்,
ஈபிடிபி யின் சவப்பெட்டி அரசியல்,
மாவீரர்களை கொச்சைப்படுத்தும் ஜனநாயக போராளிகளின் சந்தர்ப்ப அரசியல் ,
இவற்றுக்கு மத்தியில் சிக்கிசீரழிவதே தமிழர்களின் தலைவிதி.
இதை கடவுள் நினைத்தாலும் மாற்ற முடியாது.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்போராளிகளையும் , விதவைகளையும், சிறுமிகளையும் தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், விடுமுறையில் வரும் புலம்பெயர் தமிழர்களுக்கும் சப்பிளை செய்யும் ஏஜென்சியாக தொழில்படும் மிருகத்தனமான தமிழ்கட்சிக்கு வாக்களிப்பதா?
போர் முடிந்த பிற்பாடு ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்றி கடந்த ஆறாண்டு காலமாக தமிழர்களுக்கு எதையுமே பெற்றுதரமுடியாத கையாலாகாத தமிழ்கட்சிக்கு வாக்களிப்பதா?
கிடைக்க முடியாதவற்றை பெற்றுதருகிறோம் என கூறி தமிழர்களின் உணர்வுகளை தூண்டி எதிர்ப்பு அரசியல் எனும் அதள பாதாளத்துக்குள் தமிழர்களை தள்ள நினைக்கும் கீழ்த்தரமான தமிழ்கட்சிக்கு வாக்களிப்பதா?
முப்பதாண்டு காலமாக தமிழர்களை கொன்று குவித்த தேசியக்கட்சிகளுக்கு வாக்களிப்பதா?
யாருக்குதான் தமிழர்கள் வாக்களிப்பது?
உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது.
எல்லா கட்சிகளுமே மக்களை ஏமாற்றுகின்றன.
எல்லாருமே பக்கா திருடர்கள்.
அதற்காக நாம் வாக்களிக்காமல் இருக்க முடியுமா ?.
வரலாற்றில் வாக்களிக்காமல் இருந்து நாம் பட்டபாடு போதும்.
நாய்க்கு பயந்து பேயிடம் ஆட்சியை கொடுத்த கதையாகிப்போகும்.
எனவே நிச்சயமாக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
யாருக்கு என்பதில் தான் உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த திருட்டு கும்பல்களிடமிருந்து பக்கா திருடர்களை புறம்தள்ளி சில்லறைத்திருடர்களை தெரிவுசெய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் உள்ளோம்.
யாரைத் தெரிவு செய்வது என்பதற்கு முன்பாக இன்னும் சில கசப்பான உண்மைகளைசொல்லலாம் என நினைக்கின்றேன்.
1) இலங்கையில் 5% க்கும் குறைவான மிகச்சிறுபான்மை இனமே
நாம் ..
2) ஆயுதபலமோ, அரசியல் பலமோ, சர்வதேச ஆதரவோ இல்லாத
அரசியல் அனாதைகள் நாம்.
3) உலகில் எந்த ஒருநாடும் இதய சுத்தியுடன் எமக்கு ஆதரவு
அளிக்கப்போவதில்லை.
4) எதிர்ப்பு அரசியல் செய்து நாம் எதையுமே
அடையப்போவதில்லை.
5) முஸ்லிம் கட்சிகளின் தேசிய அரசியல் கொள்கைகளில் இருந்து
நாம் நிறைய விடயங்களை கற்கவேண்டும்.
6) தேசிய அரசாங்கத்துடன் இணைந்து இணைக்க அரசியலின்
ஊடாக எமது கோரிக்கைகளை மெல்ல மெல்ல
பெற்றுகொள்வதே எம்முன் இருக்கும் ஒரேஒரு வழி.
இதைதவிர வேறுவழியில்லை எமக்கு.
பகுத்தறிவின் அடிப்படையில் பார்த்தால் ஒன்றுபட்ட
இலங்கைக்குள் "மத்திய அரசுடன் இணக்க ஆட்சி,
மாகாணத்தில் சுயாதீன ஆட்சி" என்ற கோட்பாடே தமிழர்களுக்கான ,கிடைக்கக்கூடியதும் , நடைமுறைச் சாத்தியமானதும் , தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதும் , சர்வதேசம் ஏற்றுக்கொள்ள கூடியதும் ஆன ஒரே ஒரு தீர்வாகும்.
முப்பதாண்டுகால மிகமிக பலம்வாய்ந்த, தியாகங்கள் நிறைந்த , உலகமே வியந்து நின்ற ஆயுதப்போராட்டம் பெற்றுக்கொள்ள முடியாத தீர்வை வெறும் பாராளுமன்ற தேர்தல் மூலம் நாம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற கசப்பான யதார்த்தத்தை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
மத்திய அரசின் ஆதரவுடன் உடனடியாக நாம் தீர்வு காண வேண்டிய விடையங்கள் மூன்றே மூன்று தான்.
1) போரினால் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும்
முன்னாள் போராளிகள், பொதுமக்கள்
களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.
2) போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் தம் சொந்த
இடங்களில் மீள் குடியேற்றல்.
3) அரச நிர்வாகத்தை வினைத்திறன் உடன் இயங்க செய்தல்.
மேலே சொன்னவற்றைதவிர உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை நீண்ட கால அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக ராஜதந்திரம், அரசியல் மதிநுட்பம், அரசியம் வாக்குப்பலம் போன்றவற்றினூடாக பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இறுதியாக எந்த கட்சியை ஆதரிப்பது என்ற எனது கருத்துக்கு வருகிறேன்.
1) எடுத்த எடுப்பிலேயே தமிழ்மக்கள் நிராகரிக்க வேண்டிய கட்சி
EPDP ஆகும். எந்தவித தார்மீக கோட்பாடும்
இல்லாத ஒருகட்சி EPDP . கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம்
தவற விட்ட ஒரு கட்சி இது.
EPDP க்கு வாக்களிப்பது என்பது மீண்டும் ஒரு இருண்ட
யுகத்துக்குள் நாம் செல்ல வழிவகுக்கும். அதைத்தவிர
சொல்லமுடியாத மனிதத்தன்மையற்ற பல
கீழ்த்தரமான,மிருகத்தனமான செயல்களை செய்தவர்கள்
இவர்கள்.
2) இரண்டாவதாக நிராகரிக்கப்படவேண்டிய கட்சி தமிழ் தேசிய
மக்கள் முன்னணி. இதற்கான காரணம்:
மீண்டும் எதிர்ப்பு அரசியல் என்ற மாயைக்குள் தமிழர்களை
தள்ளி பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும்
பாதிக்க செய்வதே இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிகழும்.
இவர்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு
அபரிமிதமானது. இவர் ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ஆட்சியில்
தமிழ் தேசிய கூடமைப்பு இருந்த நிலையே
ஏற்படும். இதனால் தமிழர்களுக்கு கிடைக்ககூடிய அற்ப
சலுகைகளும் கிடையாது போய்விடும்.
இவர்களுக்கு தெளிவாக தெரியும் தாம் ஆட்சிக்கு வந்தாலும் தாம்
சொன்ன ஒருநாடு இருதேசம் என்பது
ஒருபோதும் நிகழாதென்று. அப்படி தெரிந்தும் இவர்கள் மக்களை
ஏமாற்றுகிறார்கள்.
3) அடுத்து நிராகரிக்கப்படவேண்டிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.
இதடற்கான காரணங்களை நான் சொல்ல
தேவை இல்லை.
4) அடுத்து அனைத்து சுயேட்சை போட்டியாளர்களும்
நிராகரிக்கப்படவேண்டும்
5) இறுதியாக எம்முன் இருப்பது TNA யும் UNP யும் தான்.
எமது நோக்கம் "மத்திய அரசுடன் இணக்க ஆட்சி,
மாகாணத்தில் சுயாதீன ஆட்சி" ஆகவே இருக்கவேண்டும்.
நுணுக்கமாக பார்த்தால் இம்முறை மத்தியில் UNP ஆட்சி
அமைவதற்கே சாத்தியங்கள் உண்டு.
அதையும் மீறி அது எதிர்கட்சி ஆனாலும் ஜனாதிபதியின் ஆசி
வரும் ஐந்து வருடங்களுக்கு UNP இருக்கும்.
UNP தமிழர்களுக்கு இளைத்த கொடுமைகளை பெரும்
மனதுடன் மறந்து ,ராஜதந்திரரீதியாக
அவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த தவறும் இல்லை. இது
பலவிதமான அனுகூலங்களை
தமிழர்களுக்கு ஏற்படுத்தலாம் . மத்தியில் தமிழ் அமைச்சர்கள்
வருவதற்கு இது வழிசெய்யலாம் .இதன் மூலம்
தமிழர்களுக்கு ஓரளவுக்காவது சில பலன்கள் கிடைக்கலாம்
.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பலவிதத்திலும் இந்த அமைச்சர்கள் உதவலாம் .
6) அடுத்து எம் கையிலிருப்பது சர்ச்சைக்குரிய தமிழ் தேசிய
கூட்டமைப்புதான்.
இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய சவாலுக்கு
ஆளாகியுள்ளது.
யுத்ததிற்கு பின்னதான அனைத்து தேர்களிலும் தமிழ் மக்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோக வெற்றி
அடையச் செய்திருக்கிறார்கள். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு
புலிகளால் உருவாக்கபட்டவர்கள் என்பதாலும்
புலிகள் இல்லாத ஒரு சூழலில் தமிழ் தேசிய
கூட்டமைப்பையே நம்பவேண்டிய நிலைக்கு தமிழ்
மக்கள் தள்ளப்பட்டதாலும் , அதிகாரத்தில் இருந்த EPDP யின்
அட்டூளியங்களாலும் உருவான எண்ணக்கரு. இந்த எண்ண
நிலைப்பாட்டில் இருந்து தமிழர்கள் கடந்த ஆறு வருடங்களில்
மாறவில்லை.தமிழர்கள் எல்லோரும்
ஓரணியில் இருப்பதே எமக்கான அரசியல் பலம் என்பதில்
தமிழர்கள் மாறவில்லை.
இருந்தாலும் இன்றைய சூழலில் தமிழர்களின் அந்த எண்ண
கருவில் சிறு மாற்றம் தெரிகிறது.
படித்த கல்விமான்கள் மத்தியிலும் சரி, சாதாரண மக்கள்
மத்தியிலும் சரி, புலம்பெயர் மக்கள் மத்தியிலும் சரி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய அதிருப்பதி அலை
ஏற்பட்டிருக்கின்றது. படித்த மட்டங்களில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் குளறுபடிகள், எதுக்குமே லாயக்கில்லாத
முதலமைச்சர், நிர்வாக திறமையின்மை,
திறைமையற்ற மாகாண சபை அமைச்சர்கள், மாகாண
சபைக்கான நிதியினை முறையாக நிர்வகிக்காமை,
முடங்கிக்கிடக்கும் மாகாண சபை நிர்வாகம் என பல
காரணங்கள் அதிருப்தியை எற்படுதியிருக்கிறது.
சாதாரண மக்கள் மத்தியில் அதிருப்திக்கான காரணங்கள்
வேறாக இருக்கிறது. புலிகள் மீது என்ன தான் கடும்
விமர்சனங்களை சொன்னாலும் "புலிகள்-தமிழ் தேசியம்- மக்கள்
மனநிலை" என்ற இறுக்கமான ஆத்மார்த்த
பந்தத்தை எதிர்த்து யாருமே வெற்றி பெறமுடியாது என்ற
உளவியலை தமிழ் தேசியகூட்டமைப்பு சற்று தளர்த்த
முற்பட்டதன் எதிரொலியே தேசிய கூட்டமைப்பின் மீது சாதாரண்
மக்கள் மத்தியில் சலசலப்பை
வெளிப்படிதியிருக்கிறது. அத்துடன் புலம் பெயர் தமிழர்களை
புறக்கணித்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு
காணமுடியும் என்ற தமிழ் தேசியகூட்டமைப்பின் பரிசோதனை
முயற்சியும் புலம் பெயர் தமிழர்கள் மட்டத்தில்
பாரிய சலசலப்பை ஏற்படுதியிருக்கிறது. இதுவும் சாதாரண
மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை
ஏற்படுதியிருக்கிறது.
உண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள குறைபாடுகளாக பின் வருவனவற்றை சொல்வேன்.
1) நிர்வாக திறமையின்ன்மை
2) உட்கட்சி முரண்பாடுகள்
3) முன்னுக்கு பின் முரணான அறிக்கைகள்
4) எதுக்குமே இலாயக்கில்லாத முதலமைச்சர்.
5) திறமையற்ற மாகாண அமைச்சர்கள்
6) திறமையற்ற நிதிநிர்வாகம்
7) திறமையாளர்களை உள்வாங்காமை
8) புதியவர்களுக்கு இடம் கொடுக்காமை.
9) மக்களை ஏமாற்றும் தேர்தல் விஞ்ஞாபனம்
10) கடந்த ஆறு வருடங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
எதுவுமே செய்யாமை.
11) அரச திணைக்களங்களில் நடக்கும் ஊழல்களையும் பெரும் பண
விரயத்தையும் கண்டறியும் திறனின்மை
12) இரத்த கறை படிந்தவர்கள் இன்னும் கூட்டமைப்பில் இருப்பது.
13) ஊழல் பெருஞ்சாளிகள் இன்னும் கூட்டமைப்பில் இருப்பது.
14) எது செய்தாலும் மக்கள் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற
monopoly நினைப்பில் எதுவுமே செய்யாதிருந்தது .
இவ்வாறு பலகாரணங்களை சொல்லலாம்.
கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தவரை சற்று தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதே என் கருத்து.
மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நாம் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு மத்திய அரசுடன் இணக்க அரசியலை ஏற்படுதிக்கொள்வதே சாலச் சிறந்ததும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும்.
சுய நிர்ணய உரிமையோ ,சமஸ்டி தீர்வோ, வடக்கு கிழக்கு இணைப்போ , ஒருநாடு இரு தேசமோ ஒருபோதும் எமக்கு கிடைக்கப்போவதில்லை . தென்னிலங்கை அரசாங்கமும் மக்களும் ஒருபோதும் இதற்கு இடமளிக்க மாட்டார்கள். மாகணசபைக்கும் மேலாக சர்வதேசம் எமக்கு எதையுமே பெற்று தரப்போவதில்லை .
இதை தெளிவாக கூட்டமைப்பு புரிந்துள்ளது . அதன் வெளிப்பாடே கூட்டமைப்பின் மைத்திரி அரசுடனான இணைக்க அரசியலுக்கான முதல் தடம்.
இடம் பொருள் காலம் உணர்ந்த முதிர்ச்சி அரசியல் நகர்வே இது.
காலத்தின் தேவையறிந்த மிகச் சரியான முடிவு இது.
எனவே கூட்டமைப்பின் அரசியல் நகர்வில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
அதற்காக கூட்டமைப்பின் நிர்வாக குளறுபடிகளை தட்டிக்கேளாமல் , தண்டிக்காமல் இருந்தால் அது ஒருவித சர்வாதிகார போக்கிற்கு கூட்டமைப்பை இட்டுச்செல்லும்.
கூட்டமைப்பின் அரசியல் கொள்ககைக்காக அவர்களை பலம் பெறச் செய்யவேண்டிய அதேவேளை அவர்களின் நிர்வாக குளறுபடிகளுக்காக அவர்களை தண்டிக்கவும் வேண்டும்.
இதுவே இன்றைய சூழலில் தமிழர்கள் செய்யவேண்டியது.
அதற்கு ஒரேவழி ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்றில் இரண்டு பங்கினர் கூட்டமைப்புக்கும் மூன்றில் ஒரு பங்கினர் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்களிப்பதே .
இதைவிடுத்து வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதென்பது தற்கொலை அரசியலுக்கு சமமானது........
இதையும் மீறி கூட்டமைப்பு தொடர்ந்தும் தவறுகளை செய்யுமானால் அடுத்து வரும் தேர்கல்களில் தமிழ் மக்கள் எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் வாக்களிக்காமல் நேரடியாகவே தேசியக்கட்சிகளுக்கு வாக்களித்து ஆளும் கட்சியுடன் இணக்க அரசியலை ஏற்படுத்தி எமக்கானவற்றை நாமே நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.......
(நவாதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com