Contact us at: sooddram@gmail.com

 

வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும்

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று. இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள் கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால் அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம் தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால் உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.

இங்கு பணி புரியும் பல தொழிலாளர்களின் நிலை பரிதாபமானது. ஏறத்தாழ 90 வீதத்தினர் வறுமையில்தான் வாழுகின்றனர். காலையில் இரண்டு குபூசை டீயில் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர் பலர் உள்ளனர். தங்கள் வசதிகளுக்கென்று மிகக் குறைவாக செலவழித்து மீதிப்பணத்தை ஊரில் காத்து நிற்கும் மனைவி பிள்ளைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலோர் ஒப்பந்த ஊதியத்தில் வருபவர்கள். ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். வேலைக்கு ஆளெடுக்கும் பல ஏஜெண்டுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இவர்கள், கட்டார் நாட்டில் வேலை, கை நிறையச் சம்பளம், குளிர்விக்கப்பட்ட வீடுகள், நல்ல உணவு, போக வர வாகன வசதி என்று அள்ளி விடுவார்கள். சொந்த நாட்டில் போதுமான அளவிற்குச் சம்பாதிக்க முடியவில்லை, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலர் இந்த ஏஜெண்டுகள் விரிக்கும் மாய வலையில் சிக்கி விடுவார்கள். கடவுச்சீட்டுக்காக, விசாவிற்காக இரண்டு இலட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஏஜெண்டுகள் வற்புறுத்துவார்கள். நிறையச் சம்பளம்தான் கிடைத்து விடுமே என்ற நம்பிக்கையிலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற ஆர்வத்திலும் கையிலிருக்கிற சேமிப்பு, மனைவி, பிள்ளைகளின் தங்க நகைகள் அனைத்தையும் அடகு வைத்து வருகிற பணம், சொந்தக்காரர், நண்பர்களிடம் வாங்கிய கடன் அனைத்தையும் கொண்டுவந்து ஏஜெண்டுகளிடம் கொடுப்பார்கள். கண்களில் கனவுகளுடன் - மனதில் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் மனைவி மக்கள் விடை கொடுத்து அனுப்புவர்.

இங்கு வந்து இறங்கும்போதுதான் தெரியும், எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று. இவர்களின் கடவுச்சீட்டு ஏஜெண்டுகள் கையில் இருக்கும். தப்பிக்க இயலாது. தஙகுவதற்கு கோழிக்கூண்டு போன்ற 'போர்ட்டாகேபின்' கள், ஒரே அறையில் அடுக்குக் கட்டில்களில் பலர், வேலை செய்யாத ஏர் கண்டிஷன்கள், வேலைக்குச் செல்ல குளிர்விக்கப்படாத பேருந்துகள்இவர்கள் படும் அவதி சொல்லக்கூடியவை அல்ல. இந்தத் துன்பங்களை எல்லாம் தாண்டி பெருந்துன்பம் ஒன்று காத்துக்கொண்டிருக்கும். அதுதான் மிகக் குறைந்த ஊதியம். சாதாரணமாக ஒருவருக்கு ஆயிரம் ரியாலுக்கும் மிகக் குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அறுநூறிலிருந்து எண்ணூறு ரியால் ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதில்தான் வேலை வாங்குவதற்கென்று பட்ட கடன்களை அடைக்க வேண்டும், நகைகளை மீட்க வேண்டும், குடும்பத்தினர் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும். என்ன செய்ய இயலும்? சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியாது. நிர்ப்பந்தமான நிலை. தங்களையே மாய்த்துக்கொள்ளத் துணிந்து விடுகின்றனர் பலர்.

இந்நிலை மாற என்ன செய்ய முடியும்? இந்த நாட்டின(கட்டார்) ஆட்சியாளர்களைக் குறை சொல்ல இயலாது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தாலும் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த ஏஜெண்டுகள் 75 வீதத்தை தங்களுக்கென்று எடுத்துக் கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் ஏஜெண்டுகள்தாம். ஆசை காட்டி மோசம் செய்கிறவர்கள்.

பல நாடுகளில் அரசாங்கமே வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் பணிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன. இங்கு பணிகளுக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

(ஜெபராஜ் தேவசகாயம்
)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com