Contact us at: sooddram@gmail.com

 

தப்பினார் அப்துல் கலாம்

“என் மீது அன்பும் மதிப்பும் வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல தலைவர்களும் வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அன்பை மதிக்கிறேன். ஆனாலும் தற்போது எழுந்துள்ள சூழநிலைகள் அனைத்தையும் முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமென்று எப்போதுமே நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆகவே தற்போதைய தேர்தல் களத்தில் இறங்க நான் விரும்பவில்லை”. வருவார் ஆனால் வரமாட்டார் என்ற ரஜனி காந்த் பாஷையில் முழு இந்தியாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தனது இறுதி முடிவைத் தெரிவித்துவிட்டார். தேர்தல் களத்தில் அவர் நிற்கிறார் என்ற போது சிலர் தலைமுடியை பிய்த்துக் கொண்டார்கள். இப்போது அவர் மறுத்ததும் வேறு சிலர் தலைமுடியைப் பிய்க்கிறார்கள். இதுதான் அரசியல்.

கலாம் தேர்தல் போட்டியை விரும்பாதவர். சென்ற 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆன அரசு ஜனாதிபதியைத் தேடிய போது அப்துல் கலாமை முன் மொழிந்தது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுதான்.

பெப்ரவரியில் முஸ்லிம்களுக்கு எதிராக குஜராத்தில் நடந்த வன்முறையால் பாரதிய ஜனதா அரசு உலக நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தது. நியாயமான அளவு முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி எதிர்காலத்தில் தனது வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்று கவலையடைந்த நேரத்தில் அதனை சரி செய்வதற்காக அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்தது. பா.ஜ கவினர் அவ்வளவாக ஆதரிக்கவில்லை. ஆனால் சந்திபாபு நாயுடு பா.ஜ.கவில் பிரதான பங்காளியாக அமைச்சரவையில் இருந்ததால் அவர் விருப்பை மீற வாஜ்பாயால் முடியவில்லை.

அப்துல் கலாமோ போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுத்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்று நின்றார். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கோ வெற்றி வாய்ப்பு குறைவு. கலாமை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு தோல்வி வேட்பாளரை நிறுத்தினால் முஸ்லிம்களின் அதிருப்தியை பெற வேண்டி இருக்கும். ஆகவே அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆனால் என்ன காரணத்தாலோ இடதுசாரிகள் கலாமை ஆதரிக்க முன்வரவில்லை. எதிர்த்தார்கள். அவரோடு மோத ஒரு வேட்பாளரை களத்தில் இறக்கினர். தமிழ் பேசும் கலாமை எதிர்க்க ஒரு தமிழ் பேசும் பெண்மணியை தேர்ந்தெடுத்தனர். ஆச்சரியமாக இருக்கிறதா?

அவர் பெயல் லட்சுமி சாகல். பிறந்தது சென்னையில். தந்தை சுவாமிநாதன். பிரபலமான வழக்கறிஞர். தாயார் அம்முகுட்டி கேரளத்தைச் சேர்ந்தவர். சமூக சேவகி. இந்திய விடுதலைப் போராட்டங்களில் முன்நின்றவர். லட்சுமி மருத்துவம் படித்தவர். சிங்கப்பூரில் சில காலம் தொழில் செய்தார். ஏழைப்பங்காளன். ஆகவே இடது சாரி ஈர்ப்பு இயற்கையாக இருந்தது.

இராணுவ அதிகாரியான பிரேம் குமார் சாகலை மணந்தார். சுபாஸ் சந்திரபோஸின் இராணுவப் படையில் காயமடைந்த வீரர்களுக்கு பணி செய்யும் போது ஏற்பட்ட காதல் அது.

1971 இல் பொது உடைமை இயக்கத்தில் சேர்ந்து ராஜ்ய சபாவிற்கு தெரிவானார். லட்சுமியின் மகள் சுபாசினி, முசாபர் அலி, திரைப்பட தயாரிப்பாளரை மணந்தார். முழு குடும்பமும் ஒரு கலவனாக பொது உடைமைக் கொள்கையில் மட்டுமல்ல நாத்திகத்திலும் நாட்டம் கொண்டவர்கள்.

அப்துல் கலாமை எதிர்க்க இடது சாரிகளின் வேட்பாளரானார் லட்சுமி. பெற்ற வாக்குகள் 107,366. அப்துல் கலாம் பெற்ற வாக்குகள் 922,884.

வெற்றிபெற்ற கலாம் கூறியது “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கணனி மூலமாகவும் வேறு ஊடகங்கள் மூலமாகவும் மக்கள் பலர் என்னிடமிருந்து செய்தியை எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு என்ன சொல்ல போகிறேன் என்றுதான் நானும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார் அவர்.

கலாம் நேர்மையாகவும் எளிமையாகவும் வாழ்ந்தார். ஜனாதிபதி தனது பதவியேற்பிக்காக ராமேசுவரத்தில் இருந்து வந்த உறவினர்களின் ரயில் பயணச் செலவை அவரே கொடுத்தார். டெல்லியில் அவர்கள் தங்கிய செலவையும் தானே கொடுத்தார். அரச சலுகை எதனையும் பாவிக்கவில்லை.

கலாமின் பதவிக் காலம் குறை சொல்லும்படி இல்லை. ஆனாலும் அவருக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுக்க அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மறுத்தது. காரணம் அரசியல் தான். அடுத்த தேர்தல் முடிவு எப்படி வரும் என்று தெரியாததால் இந்த நேர்மையான மனிதர் தங்களுக்கு உதவ மாட்டார் என்றே காங்கிரஸ் நினைத்தது. இப்போதும் அதே நினைப்புதான். அதன் எதிரொலிதான் பிரணாப் முகர்ஜி.

கலாம்தான் வேட்பாளர் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடித்து நின்ற போது மெளனமாக இருந்த பா.ஜ.க பின்பு பிரணாப் களத்திற்கு வந்த பிறகு கலாமை நெருங்கியது - நெறுக்கியது. சுப்பிமணிய சுவாமி முதல் தூதராகப் போனார். 55% விகித வாக்கு வங்கி உண்டா என்று கலாம் கேட்டபோது ‘நீங்கள் ரிஸ்க் எடுத்துப் பார்க்க வேண்டும்’ என்றே அவர் பதில் தந்தார். அது திருப்தி தரவில்லை கலாமிற்கு. அத்வானி மூன்று முறை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இறுதியாக கலாம் மறுத்து விட்டார். அறிக்கை விட்டார்.

இதன் மூலம் பா.ஜ.கவிற்கு தலைவலி உண்டாயிற்று. அடுத்த செய்வது என்ன என்ற பிரச்சினை கூட்டணியில் சிலர் போட்டி போட வேண்டும் எனவும் அது அடுத்த பொது தேர்தலுக்கு இணைப்பாக இனிப்பாக இருக்கும் என்றும் வாதிட்டபோது வேறு சிலர் பிரணாப்பை ஆதரிக்க விரும்புவதாக அறிவித்தனர். இதில் முக்கியமானவர் மேனகா காந்தி, சிவசேனை தலைவர் பால்தக்கரே, கர்நாடகாவின் எடியூரப்பா போன்றவர்கள்.

திருமணம் செய்வதா இல்லையா. செய்வதாயின் மாப்பிள்ளை யார் என்று பா.ஜ.க அணி திண்டாடியது. பின்பு முன்னாள் காங்கிரஸ் சபாநாயகர் சங்மா மீது பார்வை விழுந்தது. சங்மாவை முதலில் களத்தில் விட்டது ஜெயலலிதாதான். அப்படி என்ன சிறப்பு அவரிடம் இருந்தது. இருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. சோனியா காந்தி முன்பு பிரதமராக முயன்ற போது அவரை எதிர்த்து வெளிநாட்டுக்காரி என்ற பிரசாரத்தை முதன் முதலில் தூக்கியவர் அவர்தான். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் போல கொலைவெறியில் சற்று சளைக்காத ஜெயலலிதா சோனியாவை மூக்கறுக்க சங்மாவை சிபாரிசு செய்தார் என்பதுதான் உண்மை.

தன்னை சென்னையில் சந்தித்த அத்வானியிடம் சங்மாவை ஆதரிக்க கேட்டார் ஜெயா. அத்வானி ஜெயாவை குளிரவைப்பவர். பா.ஜ.கவில், அவர் கலாமிற்கு பிறகு சங்மாவிற்காக வாதாடினார். இப்போது பா.ஜ.க சங்மாவை ஆதரிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஜெயாவுடன் கூட்டணி அமைத்து இரண்டு மூன்று ஆசனங்களையாவது பா.ஜ.க வெல்லலாம். ஜெயாவின் துணையோடு ஆட்சி அமைக்கலாம். தான் பிரதமராகலாம் என்பதை அத்வானியின் கணிப்பு-கனவு. சுப்பிரமணிய சுவாமி தனக்கும் ஓர் ஆசனம் கிடைக்கும் என நம்புகின்றார்.

இடதுசாரிகள் மெளனமாகவே உள்ளனர். காங்கிரசோடு போர்க்கொடி உயர்த்தி சென்ற முறை ஆதரவை வெட்டினர். முகர்ஜி வங்கத்தை சேர்ந்தவர். இடதுசாரிகளுக்கு சொல்லும்படியான ஆதரவு மேற்கு வங்கத்திலும் கேரளாவிலுமே உண்டு. முகர்ஜியை எதிர்த்தால் வங்க மக்களின் கோபக் கண் திறக்கப்படலாம் என்ற பயம் உண்டு. ஆகவே கழுதைக்கும் நண்பன். நொண்டிக்கும் நண்பன் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுக்கலாம். இல்லையேல் முகர்ஜியையே ஆதரிக்கலாம்.

இது நிற்க, 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்¨யில் செஞ்சுரி புத்தக வெளியீட்டாளர்களால் நடத்தப்பட்ட கலாமின் அக்கினி சிறகுகள் புத்தக வெளியீட்டிற்கு நானும் போயிருந்தேன். அங்கு கலாம் அவர்களைக்கண்டு, உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் தனது செயலருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார். அதன்படி தொடர்பு கொண்டதில் கலாம் அவர்களே தொலைபேசிக்கு வந்து என்னோடு சிறிது நேரம் பேசி குறிப்பிட்ட திகதி ஒன்றைத் தந்தார்.

இதேவேளை ஹொங்கொங்கில் வசிக்கும் எனது சகோதரனின் மகன், சிறுவர் பூங்காவில் ஊஞ்சலில் ஆடிய போது கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டதால் அவசரமாக சென்னைக்கு அவனைக் கூட்டிக்கொண்டு அவன் தாயார் வந்தார். கலாம் எனக்கு தந்த அதே திகதியிலேயே சத்திரசிகிச்சையும் தம்பி மகனுக்கு செய்ய வேண்டி வந்தது. சிகிச்சை முடிந்து செல்லலாம் என்று இருந்தபோது, மருத்துவமனையில் இருந்த சோக சூழல் என்னைச் செல்லவிடவில்லை. ஆகவே தொடர்பு கொண்டு பேசி வரமுடியவில்லை என்று தெரிவித்தேன். அடுத்த நாள் நான் தென் தமிழகம் செல்ல உள்ளதால் ஓரிரு வாரத்தில் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.

எதிர்பாராதவிதமாக அடுத்த சில தினங்களில் அப்துல் கலாம் அவர்கள் பெயர் ஜனாதிபதி பதவிக்கு அடிபட துவங்கிவிட்டது. பின்பு நான் சென்னை வந்தபோது அவர் மிகவும் பிசி ஆகிவிட்டார். ஆகவே சந்திக்க முடியவில்லை.

சென்ற ஜனரியில் அவர் இலங்கை வந்தபோதுதான் தாஜ் சமுத்திராவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலாம் அவர்கள் போட்டியில் இருந்து விலகியது புத்திசாலித்தனமான செயல். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை ஆதரித்தது உண்மை. கணனி சமூகவலைதளங்களில் பலர் இவரை வற்புறுத்தியது உண்மை. ஆனால் அவர்கள் எல்லாம் இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் அல்லர். மேலும் இவரை ஆதரித்த அரசியலாளர்கள் தங்களது அபிலாசைகளுக்காக ஆதரித்தார்களே தவிர பொது நன்மைக்காக அல்ல - கலாமிற்காக அல்ல.

உத்திரபிரதேசத்தின் முலாயம் சிங் தனது ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்ததோடு வெற்றி பெறும் வாக்கு பலம் காங்கிரசுக்கு வந்துவிட்டது. ஒதுங்கியதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல்வாதிகளின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு, தான் பலியாகாமல் தப்பினார் அப்துல் கலாம்.

(எம்.எஸ்.ஷாஜஹான்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com