Contact us at: sooddram@gmail.com

 

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்.......

உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்... இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை மறுத்து அவர்களை வேலைக்கு வரச்செய்ததைத் தமிழகத்தில் பார்த்தோம்.

விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களூம்(சுடக் ஷோ தவிர்த்த) தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று பணிசெய்தன.  அதை அறிந்த தேர்தல் ஆணையம் அந்நிறுவனங்களுக்குச் சென்று ஊழியர்களை வெளியேற்றியது, அது மட்டுமின்றித் தேர்தல் நாளில் பணி செய்ததற்கு அந்நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தன.

நேற்று ஹெச் சி எல்-லில் பணி புரியும் ஊழியர்களுக்கு மேலிடத்திலிருந்து பின்வரும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
//Important: Extra day pay for Election Day and May Day working
The employees who have worked on Election day and/or May Day are eligible for extra day pay.
This communication is intended for all India-based permanent employees of HCL Apps and Infra.
Allowance for Working on Election Day and/ or May Day
·Employees who have worked on Election Day and/ or May Day  are eligible for double wages for these days.
·For billable employees up to E3: Employees, who have worked on Election and / or May Day, should raise the request in SMM with necessary approval from their Reporting Managers./////

தேர்தல் நாளிலும், மே நாளிலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு  அவ்விரு தினங்களுக்கு இரட்டை ஊதியம்  வழங்கப்படுமென்றும், அந்நாளில் பணி புரிந்தவர்கள் இதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மேலே உள்ள இம்மின்னஞ்சலின் சாரம்...  அதுமட்டுமின்றி இந்த இரட்டை ஊதியம் அதே நிறுவனத்தில் பணி புரியும், ஒப்பந்த, பணி நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு உண்டா, இல்லையா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்தியாவில் இருக்கும் எந்த நிறுவனமானாலும் முக்கியமான அரசு விடுமுறை நாட்களான "சுதந்திர நாள், குடியரசு நாள்,  தேர்தல் நாள்" உள்ளிட்ட நாட்களில் வேலை செய்யக்கூடாது. அப்படி வேலை செய்தால் அந்நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை அதிகாரம் அரசுக்கு உள்ளது.  ஆனால் இங்கோ தேர்தல் நாள், மே நாளில் பணிபுரிந்தது மட்டுமின்றி, அவ்வேலை நாட்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க உள்ளது ஹெச்.சி.எல் நிறுவனம். இதே நிலையைத் தான் மற்ற நிறுவனங்களும் எடுத்திருக்கும். அதாவது தான் தவறு செய்தது மட்டுமின்றி... ஆமாப்பா நாங்க அப்படித் தான் செய்வோம் உன்னால என்ன செய்ய முடியும்? என்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சியைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன இந்நிறுவனங்கள்...  இதே நிறுவனங்கள் தான் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளிற்கெல்லாம் இங்கே இந்தியாவில் விடுமுறை விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உடனே நீங்கள் சொல்லலாம்... அவர்களின் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா சார்ந்து இருப்பதால் அவர்கள் அங்கு விடுமுறை இருக்கும் பொழுது, இங்கும் விடுமுறை விடுகின்றார்கள் என்று... விடுமுறை மட்டும் ஏன்... ஊதிய முறைகளிலும், வேலைப்பாதுகாப்பு சட்டங்களிலும் ஏன் அதைத் தொடரவில்லை ????  அப்பொழுது மட்டும் உங்களுக்கு இம்மண்ணின் சட்டம் (Law of the Land)  வரும்.. சரி அதையாவது இவர்கள் கடைபிடிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.

உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நினைவு கூறும் நாள் தான் மே நாள்,  இந்தியாவின் பல மாநிலங்களில் மே நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றும் தங்கள் பணியாளர்களைப் பணிக்கு வரச்சொல்வதிலிருந்தே  தெரிகின்றது, இந்நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உரிமைகளை மதிக்கும் இலட்சணமும், இம்மண்ணின் சட்டங்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையும்... இந்தியாவில் அமைப்பு சார் பணியாளர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சட்டங்கள் கூடத் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இல்லை, அதைக்கூட நான் செயல்படுத்த மாட்டேன் என்பது சர்வாதிகாரத்தனமேயன்றி வேறல்ல... மக்களாட்சியையும், இம்மண்ணின் சட்டங்களையும் கொஞ்சமும் மதிக்காத இந்நிறுவனங்களுக்குத் தான் சென்ற முறை மின்சாரக்கட்டணம் தமிழகத்தில் குறைக்கப்பட்டது. அதே சமயம் அரசின் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றும் பொது மக்களுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது, இவ்வரசுகள் முதலாளிகளின் நலன்களுக்காவே இயங்குகின்றன  என்பதும்,  விதிகளும் , சட்டங்களும் சாமானியர்களுக்காகவே என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றன...

முதலாளிகள் இருக்கும் கொஞ்ச, நஞ்ச விதிகளையும் தங்கள் காலில் போட்டு மிதித்து வரும் நிலையில், இதைப் பற்றிய பிரஞையற்று தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பதும், தாங்கள் தொழிலாளி என்று அழைக்கப்படுவதையே அவமானமாகக் கருதுவதும்,  அடுத்த முதலாளி என்ற கனவில்  இருப்பதும் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.  ஐ.டி பணியாளர்கள் முதலில் இம்மாய உலகில் இருந்து யதார்த்த உலகிற்கு வரும் நேரம் வந்துவிட்டது. முதலில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மறுக்கப்படும் உரிமைகளைக்காகப் போராடத்தொடங்க வேண்டும்....

(நற்றமிழன்.ப‌
)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com