Contact us at: sooddram@gmail.com

 

தெற்குடன் இணக்கமும் தமக்குள்ள முரண்படும் கொண்ட தமிழ் தலைமைகள்

(மாதவன் சஞ்சயன்)

சிங்கள பேரினவாதம் தமிழர் தம் உரிமைகளை தராது அதை நாம் போராடி தான் பெறவேண்டும் என கூறும் தலைமைகள் அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு எனும் பாலர் பாடத்தை செயல்படுத்த மறுக்கின்றனர். ஆரம்பம் முதலே சேர சோழ பாண்டியர் தம்முள் போரிட்ட வரலாற்றை தான் வழிமுறையாகவும் கொள்கின்றனர். வெள்ளையரின் விருப்பு தெரிவான தமிழர் பல உயர் பதவிகளை அலங்கரித்த போதும், முதலாவது படித்த இலங்கையர் என இராமநாதன் தெரிவு செய்யப்பட்ட போதும், 1915இல் நடந்த சிங்கள முஸ்லிம் கலவரத்தில் கைதான சிங்களவரை காப்பற்ற அவர் எடுத்த முயற்சிக்காக அவரது குதிரைவண்டியை சிங்கள தலைவர்கள் இழுத்து வந்த போதும் முதலாவது மந்திரி சபையில் ஒரு தமிழராவது இடம்பெறவில்லை.

தான் கேட்ட கொழும்பு தொகுதியை தரமறுத்ததால் அருணாசலம் கட்சியைவிட்டு வெளியேறுவதை தவிர வேறொன்றையும் சாதிக்க முடியவில்லை. அதே வேளை தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் சங்கம் பகிஸ்கரித்த தால் தெரிவு செய்யப்பட வேண்டிய 4 தமிழ் அங்கத்தவர் இல்லாமலே சிங்கள மந்திரி சபை அமைந்த்தது. 50/50 கேட்ட பொன்னம்பலம் அது நிறைவேறாத போது அடுத்த தேர்தலில் பங்குபற்றி மந்திரியானதும் அன்று முதல் தமிழரில் ஒரு பகுதி தெற்குடன் இணக்கத்துடனும் தமக்குள்ள முரண்படும் நிலை தொடர்ந்தது. தமிழர்களின் உரிமைகளை கேட்பதில் கூட அவர்கள் இரண்டு அணியாக பிரிந்து தமக்குள்ள தாமே எதிர் பிரசாரத்தில் ஈடுபட்டு தெற்கிற்கு ஏற்படவேண்டிய தலைவலியை தம் தலைகளில் வாங்கி கொண்டனர். தெற்குடன் இணங்கி மந்திரியான த.குமாரசாமி (சாவகச்சேரி) தான் முதலில் வடக்கிற்கு மகாவலியை கொண்டுவரலாம் என கூறியபோது இரண்டு யானை சோடா போத்தலை தூக்கி காட்டி இதற்குள்ளா கொண்டு வருவீர்கள் என தமிழ் அரசு கட்சி அமிர்தலிங்கம் நக்கலடித்தார்.

தமிழ் பல்கலை கழகம் திருமலையில் அமைக்க தமிழ் அரசு கட்சி முற்பட தமிழ் காங்கிரஸ் இந்து பல்கலை கழகம் கேட்டார்கள். எதுவேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கள் என டட்லி கூற இரண்டுமே வரவில்லை. ஏட்டிக்கு போட்டியாக எம்மவரே அடித்து கொள்ள ஆடுகள் மோதலில் பயனடையும் நரிபோல பேரினவாதிகள் சிங்கள் குடியேற்றம் முதல் அனைத்து விடயங்களையும் இலகுவாக நிறைவேற்றினர். இதில் கவனிக்க படவேண்டியது ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒருங்கிணைந்து உரிமை கேட்டு போராடும் நிலை எப்போதும் இருக்கவில்லை. ஒரு பகுதி போராட இன்னொரு பகுதியின் தோழில் தெற்கின் கரம் அரவணைத்த படி இருந்ததே வரலாறு. சிங்களம் தேர்தலில் பிளவுபட்டாலும் தமிழர் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் திருந்தது. ஆனால் எம்மவர் எல்லாவற்றிலுமே எதிர்மறையாகவே செயல்பட்டனர்.

வெள்ளையர் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்த போது ஜின்னா வின் தீர்க்க தரிசனம் பாகிஸ்தான் எனும் நாட்டை முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது. காந்தி என்னதான் வாக்குறிதிகளை கொடுத்தாலும் எல்லோரும் காந்திகள் அல்ல என்பதை ஜின்னா புரிந்து கொண்டதால் தான் பிரிவினையில் தீவிரம் காட்டினர். நிர்வாக இலகுவிற்காக ஆங்கிலேயர் இணைத்ததே ஒருமைப்பட்ட இலங்கை. போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் இந்த நாட்டை தனி தனி இராச்சியங்களாகவே நிர்வகித்தனர். கண்டி ஒப்பந்தத்தின் பின் ஒரே நாடாக ஆங்கிலேயர் இணைத்த பல இராச்சியங்கள் சுதந்திரம் வழங்கும்போது சிறுபான்மையினரின் உரிமைகள் பெரும் பான்மையினர் கையில் தாரை வார்க்கபட்ட போது ஜின்னா போல் சிந்திக்கும் தமிழ் தலைவர்கள் இல்லாமல் போனதே எமது இன்றைய தூரதிஸ்ட நிலைக்கு காரணம்.

அன்று கொழும்பை மையப்படுத்தியே எம் தமிழ் அரசியல் காணப்பட்டது. வடக்கு கிழக்கில் வென்றாலும் தலிமைகள் தம்மை கொழும்பில்தான் தக்க வைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கொழும்பு தலைநகரானதால் கொழும்பை மையப்படுத்தியே சகல அரசியல் முன்னெடுப்புகளும் இடம்பெற்றமை அதற்கான காரணம். சட்டசபை முதல் பாராளுமன்றம் வரை கொழும்பிலும் துறைமுகம் முதல் விமான நிலையம் என கொழும்பு மயப்படுத்தியது அனைவரையும் அத்திசை நோக்கி செலுத்தியது. மேலும் வர்த்தகம் , வங்கி என அமைந்ததால் பெரும் தமிழ் வர்த்தகர்கள் கொழும்பை தம்வசமாக்கினர். இராமநாதன் மாட்சிமை செலுத்தியதும் தேசிய காங்கிரஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டு பின் கொழும்பு தொகுதியில் போட்டியிட மறுக்கபட்டதால் அதிலிருந்து விலகி அருணாசலம் தமிழ் மகாசபை தொடங்கியதும் கொழும்பை மையப்படுத்தி தான்.

பின் வந்த பொன்னம்பலம் செல்வநாயகம் தலைமையும் வடக்கு கிழக்கில் போட்டியிட்டாலும் ஆரம்பத்தில் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தனர். எனவேதான் சுதந்திரம் பெறும் காலத்தில் முன்பிருந்த தமிழ் இராச்சியத்தை தமிழரிடம் மீள கையளிக்கவேண்டும் என்ற எண்ணக்கரு தமிழ் தலைமைகளிடம் உருவாகவில்லை. அபிவிருத்தியடைந்த தென் இலங்கையின் கொழும்பில் ஆட்சியில் பங்குகேட்கும் மனநிலை தான் அவர்களிடம் காணப்பட்டது. ஆங்கிலேயரால் தெற்குடன் இணைக்கபட்ட வடக்கு கிழக்கு தமிழர்கள் பாரம்பரிய மாக ஆட்சி செய்த பூமி என்ற அடிப்படியில் தமிழர் சுதந்திரத்தை வேண்டி நிற்கவில்லை. வெறுமனே மொத்த பிரதிநிதிகளில் 50/50 கேட்டதால் அது மறுக்கபட்டது. குடித்தொகை அடிப்படையில் 70% மேல் காணப்பட்ட சிங்களவர் 50க்குள் தம்மை அடக்க மறுத்தனர். 3/2 தான் அவர்கள் முடிவு.மேலும் பெரும் தோட்ட செய்கைக்காக கூட்டி வரப்பட்டவர்கள் கையகப்படுத்தியது தம் நிலங்கள் என்ற எண்ணம் சிங்களவர் மத்தியில் விதைக்கப்பட்டது. அது விருச்சமாகி தோட்டமக்களின் வாக்குரிமையை காவுவாங்கியது. ஆங்கிலேயர் நிர்வாக இலகுவிற்காக ஒருங்கிணைத்த பிரதேசங்களில் பின் நாளில் பிரதேசவாதம் ஏற்படவும் அதுவே காரணமாயிற்று. பெரும்பான்மை சமூகத்தின் நிலம் தொழில் வாய்ப்புக்கள் சிறுபான்மையினரால் அபகரிக்க படுவதாக ஆங்கில ஆட்சிகாலத்தில் அபிப்பிராய பேதம் நிலவியது.

அதற்கு முன்பே அனகாரிக தர்ம பாலாவின் சிந்தனையில் தமிழகத்தில் காணப்படும் நிலைமைகள் காலப்போக்கில் சிங்கள மொழியை கபளீகரம் செய்துவிடும் என்ற எண்ணம் உருவாகி அதை காக்க அவர் புத்த மத சிந்தனைக்கு வித்திட்டு அதன் மூலம் சிங்கள மொழியையும் சிங்களவரையும் காக்க முற்பட்டார். அவர் வழிவந்த டி எஸ் சேனநாயக்கா அதனால் தான் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தது மட்டுமல்ல இந்திய பாகிஸ்தான் சட்டமூலம் இங்கிருந்த இந்திய பாகிஸ்தானியரை வெளியேற அல்லது சிங்களவருடன் கலக்க வழிசமைத்தது. மேலும் சிங்கள மக்களுடன் மலையாளிகள்,தெலுங்கர், சிறியதொகை கன்னடர் கலந்து அந்த இனம் மேலும் பெரும்பான்மையானது.

அதே வேளை தமிழ் தலைமைகள் இந்த பெருக்கத்தை கண்டு கொள்ளாது ஒரே மொழி பேசும் வடக்கு கிழக்கு மலையக மக்களை இணைக்க தவறினார்கள். சிங்களவரிடம் கூட்டாட்சியில் தம் பங்கு என்ன என வாதிட்டவர்கள் ஆங்கிலேயரிடம் தாம் முன்பு ஆட்சி செய்து போத்துகீச, ஒல்லாந்த ஆங்கிலேயரிடம் இழந்த உரிமையை மீளப்பெற முயலவில்லை. அதனால் தமிழ் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் டி எஸ் சேனநாயக்கா மலையக மக்களை அரசியல் அநாதை ஆக்க அதனால் உதயமானது தமிழ் அரசு கட்சி. இவர்கள் இருவருமே மாறி மாறி தெற்குடன் உடன்பாடும் தமக்குள்ள முரண்பாடும் கொண்டு செயல்பட்டதால் வடக்கு கிழக்கு மலையக தமிழர் பெற்றது எதுவும் இல்லை.

பல பாராளுமன்ற விவாதங்களில் இவர்கள் தமக்குள்ள மோதுவதை தென்னிலங்கை உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தனர். உள்ளே இருந்து கொல்லும் வியாதியாக இவர்களின் முரண்பாடு காணப்பட்டது. இன்றுவரை அதே நிலைதான் தொடர்கிறது.  1974 ல் இவர்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டாலும் முன்வைக்கபட்ட தனி நாடு (தமிழ் ஈழம்) தீர்மானம் தொண்டமானை வெளியேற செய்தது. யு என் பி கல்குடா தேவநாயகம் கழண்டு கொண்டார். மிஞ்சிய தமிழ் காங்கிரஸ் தமிழ் அரசு கூட்டணியாக மாறினாலும் 1977 தேர்தலில் குமார் பொன்னம்பலம் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து களம் கண்டார்.
இருந்ததாலும் கூட்டணி ஒரு சில இடங்கள் தவிர்த்து வென்றது. 2 வருடங்களுள் ராஜதுரை, கனகரத்தினம் கூட்டணியுடன் முரண்பட்டு தெற்குடன் இணைந்தனர். எதிர்பார்த்த எதுவுமே நடக்காததால் இளைஞர்களும் தலைமையுடன் முரண்பட தொடங்கினர். அனால் தலைமை தெற்குடன் பின் கதவால் இணக்கம் காட்டியே செயல் பட்டன.

1983 கலவரம் இளைஞர்கள் கையில் அரசியலை தாரைவார்த்தது. எழுச்சியுடன் தொடங்கியவர்கள் கூட தமக்குள்ள ஒருந்கிணையவில்லை. பாதைகள் வேறு ஆனால் பயணம் ஒன்று என ஆரம்பத்தில் கூறினார். மக்களும் தமக்கு விருப்பமானவர்களை ஆதரித்தனர். ஒரு கட்டத்தில் பலவகையான புறச்சூழல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இருந்த 5 பெரிய இயக்கங்களில் நால்வர் கைகோர்த்தனர். ஒருவர் கழட்டி விடப்பட்டார். மூத்த தலைமை இவர்களை ஒன்றுபட சொல்லி அறிக்கை மட்டுமே விடும். அதற்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யாது.

திம்புவுக்கு கூட மூத்த தலைமை, நால்வர் அணி, மற்றும் 5வது அணி எனவே போனார்கள். பாதை வேறு பயணம் ஒன்று தான் என்றவர்கள் சந்தியில் சந்தித்த வேளை தமக்குள் மோதினார்கள். பலர் சமாதியாக தப்பியவர்களில் ஒரு பகுதி தெற்குடன் இணக்கமானார்கள். எதிரி முகாம்களில் இவர்களுக்கு அடைக்கலம் கிடைத்தது.( எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இதுதானோ? ) தம்மை தாக்கிய தம்மவரையே அளிக்க ஆயுதம் பெற்றார்கள். இந்தியா வந்தபோதும் இவர்கள் ஒன்றுபடவில்லை. ஒரு பகுதி அழிப்பை தொடர மற்றவர்கள் வேறுவழி இன்றி இந்திய அமைதிப்படையுடன் சங்கமமாகினர். வடக்கு கிழக்கில் இந்திய படையின் பாதுகாப்போடும் தெற்கில் சுதந்திரமாகவும் இவர்கள் செயல்பட பொதுமன்னிப்பு அனுமதிதித்தது.

இந்திய அனுசரணையுடன் வந்த மாகாண சபைக்கு கூட்டணியை போட்டியிடுமாறும் தாம் ஒத்துழைப்பு தருவதாகவும் புலி தவிர்ந்த ஏனைய இயக்கத்தவர் அப்போது தப்ரபேன் ஹோட்டலில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்தை கேட்டனர். அன்று சம்மதித்தவர் மறுநாள் மறுத்தார். காரணம் சம்மந்தர் திருமலை புலி பொறுப்பாளர் சொர்ணத்தின் சொல்கேட்டு அமிரை எச்சரித்தது. மூத்தவர் முகம் கொடுக்க பயந்ததை இளையவர் எதிர் கொண்டனர். அதிலும் ஈ பி ஆர் எல் எப் , ஈ என் டி எல் எப், டெலோ மட்டுமே முதலில் கூட்டு. புளட் கழட்டி விடப்பட்டது. ஈரோஸ் புலி வாலானது. தேர்தல் மனு தாக்கல் தினத்தில் டெலோ தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கிவிட்டதால் வடக்கில் போட்டியின்றி ஈ பி யும், ஈஎன் டி யும் மொத்த ஆசனத்தையும் பங்கிட்டன. திருமலை யிலும் மட்டக்களப்பிலும் இவை இரண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் மோத இவை மூன்றுடனும் அம்பாறையில் யு என் பி யும் களம் கண்டது. மொத்தம் 73 ஆசனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17ம் யு ன் பி 1 ஆசனமும் பெற மிகுதி ஈ பி , ஈ என் டி வசமானது.

1988ல் மாகாண சபைக்கு போட்டியிட தடுத்த சம்மந்தர் அதன் பின் சில மாதங்களில் வந்த பாராளுமன்ற தேர்தலில் பயமின்றி போட்டியிட்டது தான் வேடிக்கை. (ஈரோஸ் ராஜாவிடம் படு தோல்வியும் அடைந்தார்). மாகாண சபைக்கு தன் பூ சின்னத்தில் கேட்ட ஈ பி பாராளுமன்ற தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது மட்டக்களப்பு தெருவெங்கும் முன்பு பூ சின்னம் வரைந்த மதி (தொடர்பாடல்) என்பவர் சில மாதங்களின் பின் அதன்மேலேயே சூரியனை வரைந்த வேடிக்கையும் சுவாரசியமானது.  தமிழர் வாழும் மாகாணசபைக்கு இளையவரை பலிக்கடாவாக்கிவிட்டு மூத்ததலைமை தெற்கிற்கு போக முற்பட்டது. ஆனால் விதி வலிது என்பது தேர்தல் முடிவில் தெரிந்தது. யாழ் தேர்தல் மாவட்டத்தை புலி வால் ஈரோசும், கூட்டணியில் கேட்ட ஈ பி யும் பங்கிட வன்னி, திருமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை அனைத்தும் ஈபி, டெலோ,ஈரோஸ் வசமாகியது. அமிர்தலிங்கம் தேசியபட்டியல் மூலம் உள் வாங்கப்பட்டார்.

 இன்று சம்மந்தருக்கு வந்திருக்கும் பட்டறிவு அன்றே அமிர் அண்ணாவுக்கு வந்ததால் அவர் மாகாண அதிகாரபகிர்வு குறித்து இலங்கை இந்திய அரசுடன் வாதிட்டார். அன்று இருந்த மாகாண சபைகளில் நிர்வாக சேவை முதல் தரம் (எஸ் எல் ஏ எஸ் ) அமைந்த ஒரே ஒரு சபையாக வ ட -கிழக்கு மாகாண சபையே காணப்பட்டது.ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சந்தித்த ஆபத்தை விட ஆபத்தான பதவிகளை  தம் பிடரியின் பின் புலிகளை துப்பாக்கிகள் நீண்டபோதும் துணிந்து ஏற்று செயல்பட்ட அந்த அதிகாரிகள் கொடுத்த ஆலோசனைகளால் செயல்பட்ட முதல்வரை எமக்கும் சேர்த்து தான் மாகாணங்களுக்கான அதிகார பகிர்வுக்காக போராடுகிறார் என ஏனைய மாகாண முதல்வர்கள் பாராட்டினர். மத்திய அரசுடன் முட்டி மோதுவதே வட-கிழக்கு முதல்வருக்கு பெரும்பாடகியது. அவரின் செயல்பாட்டை வசிஸ்டர் ( அமிர் ) வாயால் வாழ்த்து பெற்றவர் (வரதன் ) என பனை அபிவிருத்தி சபை தலைவர் நடராஜா சிலாகித்து பேசினார். என்ன நடந்து என்ன இந்தியா தன் நிலைப்பாட்டில் இறுக்கம் காட்ட முற்பட்ட வேளை அமிர்தலிங்கம் காவு வாங்கப்பட்டார். கூட்டணி அத்துடன் தன் வாலை சுருட்டிகொண்டது. காரணம் தமிழ் இயக்கங்களுடன் முரண்பட்ட புலி பிரேமதாசாவுடன் இணக்கம் காட்டியமையே. இந்திய எதிரிக்கு எதிரியான புலி எனக்கு நண்பன் என பிரேமதாச பாலசிங்கத்துடன் பேச தொடங்கி காலத்தை கடத்தினார். இந்திய படைகளை வெளியேற்ற அது அவருக்கு உதவியது. அதன் மூலம் அதிகார பகிர்வை தவிர்க்க முனைந்தார்.

இக்கட்டான நிலையில் தான் வரதர் 19 அம்ச கோரிக்கையை முன் நிபந்தனையாக வைத்து தீர்மானம் நிறைவேற்ற அதனை ஈழப் பிரகடனம் என விஸ்வரூபமாக்கி தெற்கை நம்பவைத்து தன் மலின அரசியலை செய்தார் பிரேமதாசா. 1 வருட காலத்துள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற 19 அம்ச கோரிக்கையில் எந்த இடத்திலும் அது அன்றே அமுலுக்கு வரவேண்டும் என்று கூறப்படவில்லை. 1990ல் வந்த தீர்மானத்தில் 19 கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் 1991ம் ஆண்டு பங்குனி மாதத்தின் பின் தான் சபை சட்டவாக்க சபையாக செயல்பாடு என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை ஈழ பிரகடனமாக்கி பெரும் பிரளயத்தை தெற்கில் ஏற்படுத்தி புதிய சட்டமூலம் கொண்டுவந்து சபையை கலைத்தார் பிரேமதாசா. அவர் பின் வந்தவரும் அதற்கு தேர்தலை நடத்த வில்லை.  சந்திரிகா ஆட்சியில் கூட அவருக்கு நெருக்கம் காட்டிய எவரும் எம் மண்ணில் இணைந்திருந்த சபைக்கு உயிரூட்ட முயலவில்லை. ஈ பி டி பி மட்டும் இடைக்கால சபைக்கு ஓடித்திரிந்தது. ஏனையவர் எவரும் அது ஆளுநர் அதிகாரத்தில் இருப்பது பற்றி அலட்டி கொள்ளவில்லை. தொடர்ந்து வந்த தேர்தல்களில் தென் இலங்கை பாராளுமன்ற கதிரைகளே அவர்களை கவர்ந்தது.

 
கிடைத்ததை கொண்டு மேலெழுந்து செல்லும் வித்தையை சிங்கப்பூரின் சிற்பியிடம் இவர்கள் கற்றிருக்க வேண்டும். மலேசியா கழட்டிவிட்ட எந்தவித வளமுமற்ர தீவை உலக வர்த்தக மையமாக்கியவர் அவர். வட -  கிழக்கு மாகாணசபை பூரண அதிகாரத்துடன் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை செயலாக்கம் செய்யும் முதலாம் தர செயலாளர்கள் முன்வந்தார்கள். மன்சூர் கல்வி, நச்சினர்கினியன் வைத்தியம்/சுகாதாரம், சிவதாசன் விவசாயம்/கமநல சேவை, தருமலிங்கம் நிதி,வாமதேவன் பொதுநிர்வாகம், பத்மநாதன், பஞ்சாச்சரவேல், சிவராஜா என செயலாளர்கள் தம் அமைச்சு சார்ந்த விடயங்களை கூடியவரை பகிர்ந்து எடுத்தனர். வடக்கு கிழக்கு மாகாண அரசு என அவர்கள் செயல்பட்ட விதம் மத்திய அரசின் வயிற்றை கலக்கியது.


பிரேமதாசா ஜனாதிபதி ஆனதும் அவரை சூழ்ந்து கொண்ட அதிகார பகிர்வுக்கு எதிரானவர்களின் இசைக்கேற்ப அவர் செயல் பட்டதால்தான் அது பூரணமடையவில்லை. ஆனால் அன்று அவர்கள் இட்ட அத்திவாரம்தான் நின்று நிலைக்கிறது. அன்று புலிகள் தெற்குடன் இணக்கம் காட்டி இருக்காவிட்டால் அச்சபை பூரணத்துவம் பெற்று பல ஆண்டுகளாகி இருக்கும்.


காவல்துறை வடக்கு கிழக்கு இரண்டிற்கும் ஒரே டி ஐ ஜி யாக ஆனந்தராஜா முதலமைச்சரின் கீழ் செயல்பட்டார். அப்போது சி வி எப் செயல்பட தொடங்கியது. புலிகள் பிரேமதாசா இணக்கம் தான் அதனை ஏ சி எப் ஆக பெருக்க வைத்தது. இல்லை என்றால் காவல்துறை ராணுவமயமாகி இருக்காது. தமிழ் தேசிய ராணுவம் தோற்றம் பெற்றிராது. ஏதோ வகையில் எம்மவரிடையே காணப்பட்ட முரண்பாடும் தெற்குடனான இணக்கமும் தான் இதற்கான முழு முதல் காரணிகள்.


சந்திரிகா புதியதை தர முயன்றாரே தவிர இருந்ததை செயல்பட விடவில்லை. அதை கேட்டு பெறும் மனநிலையிலும் எம் தலைமைகள் செயல்படவில்லை. அவர் கொண்டுவர முற்பட்டதும் எம்மவர் பங்களிப்புடன் நிரகரிக்கபட்டது இறுதியில் மகிந்த சிந்தனையில் கிழக்கு இணைந்த சபை துண்டாடப்பட்டு கிழக்கு சபை முன்னாள் புலிகள் வசமானது. வடக்கில் தேர்தல் வராததால் டக்ளஸ் இலகு காத்த கிளியானார்.


நீண்ட இடைவெளியின் பின் இந்தியாவின் நெருக்குதலால் வந்த வட மாகாணசபை பாதி நோண்டிய நுங்கு போலானது. பானையில் முழுமையாக இல்லை அதனால் அகப்பை நிறைய வரவில்லை என முதல்வர் ஆதங்கப்பட வருவதை பங்கிடுங்கள் மிகுதியை பின்பு பார்ப்போம் என எதிகட்சி தலைவர் பத்திரிகை போர் நடத்துகிறார்.


மத்திய அரசு அதிகாரத்தை பகிரவேண்டும் என்றால் ஒன்றுபட்ட குரல் வடக்கு கிழக்கில் இருந்து வரவேண்டும். பல குரல் மன்னர்களான தமிழ் தலைவர்களால் அது முடியவில்லை. எம்மிடையே பல அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். ஆனால் அனைவரையும் இணைக்கும் தலைமைத்துவ பண்பாளர் இல்லை. பல மரங்கள் தனி மரங்களாக இருப்பதால் அவை தோப்பாகி மக்களுக்கு பலன் தர வில்லை.


எந்த செயலிலும் ஏட்டிக்கு போட்டியாகவே இன்றும் செயல்படுகின்றனர். மகிந்த சிந்தனைக்கு முடிவு கட்டிய பின்பாவது எம்மவர் புதிய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒன்றுபட மறுக்கின்றனர். இதனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாகாண அதிகாரம் எதனையும் பெற முடியவில்லை. ஆளுநர் மாற்றமும் பிரதம செயலாளர் மாற்றமும் நிர்வாகம் சம்மந்தபட்டது. அதிகார பகிர்வல்ல.


வடக்கின் முன்னாள் அமைச்சர் மகிந்தரின் மீள் வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார். இன்று அவரது இருப்புநிலை கவலைக்கிடம் என்பதால் கூட்டமைப்பை அவரும் குழுக்களின் பிரதி தலைவரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வறுத்து எடுக்கின்றனர். இரணை மடு தண்ணீர், சுண்ணாகம் நீர்மாசு முதல் வித்தியா கொடூரம் வரை அவர்கள் குரல் கூட்டமைப்புக்கு எதிராகவே. தாம் தான் கடந்த பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்ததும் அப்போது நடந்தவற்றை மூடிமறைக்க தம் அதிகாரத்தை பயன்படுத்தியதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். நேற்று வரை மந்திரி இன்று கதிரை இல்லாததால் காலில் சக்கரம் பூட்டி ஓடி ஓடி மக்களை சந்தித்து நாளாந்தம் மக்களின் பாதுகாப்பு பற்றி அறிக்கை, பொலிஸ் இடையூறின்றி செயல்பட வேண்டும் என்ற புதிய ஞானோதயம் , மக்கள் காணி அபகரிப்பு பற்றிய கவலை என டக்ளஸ் திரிசங்கு நிலையில். விட்டேனா பார் என சந்திரகுமார் இம்முறையும் வென்றே தீருவேன் என வீராவேசமாக கனகாம்பிகை சந்திமுதல் தாளையடி வரை மக்கள் சந்திப்பு.


புதிய பிரதி அமைச்சரோ முன்னாள் ஆயுத குழுக்கள் மீது காய்ச்சல் கொண்டவராக இருக்கிறார். முன்னாள் புலி பினாமி பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் மீண்டும் வர சகலரையும் விமர்சிக்கிறார். அங்கஜனோ அடுத்த தேர்தலில் 1 ஆசனத்தையாவது பெற தேசிய மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்த ஜனாதிபதியுடன் செயல்படுகிறார்.
எல்லோராலும் குறிவைக்கப்படும் கூட்டமைப்பு உள்கலவரத்தால் கதிகலங்கி நிற்கிறது. தெற்கிடம் கிடைப்பதை மட்டும் கேட்டு பெறுவோம் என்ற நிலைப்பாட்டில் சம்மந்தர் சுமந்திரன். முழுமையான தீர்வுதான் என சுரேஸ். ஆனந்தியை வேட்பாளர் பட்டியலில் இடுவதை தவிர வேறுவழி இல்லை எனும் நிலையில் மாவை. தீவுப்பகுதியில் தன் வாக்கு வங்கியை தக்கவைக்க வித்தியா விடயத்தில் தமிழ்மாறனை தன் இணையத்தில் தோலுரித்த சிறிதரன். உதயன் எனது பத்திரிக்கை என்பதால் நான் வேட்பாளர் என்ற இறுமாப்பில் சப்ரா சரவணபவன்.


இவர்கள் அனைவரதும் நோக்கம் அடுத்த பாராளுமன்ற கதிரை, தெற்குடனான தனித்தனி இணக்கம். இத்தனை போராட்டம் இழப்புகளுக்கு பின்பும் இவர்கள் ஒருமித்து எவ்வகையான தீர்வு வேண்டும் என்ற தீர்வு வரைபை இதுவரை தயாரிக்கவில்லை. 20வது திருத்தத்தில் தேர்தல் முறையில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு பாதகம் என்பதால் தம் இருப்பு நிலைக்கு ஆபத்து என்றவுடன் அலறி அடித்துக்கொண்டு அனைவரும் கூடி கூடி பேசினார்கள். எலி பாம்பு கீரி பருந்து எல்லாம் ஒரு இடத்தில் சங்கமமாகினர். ஆனால் அடிப்படை பிரச்சனையான அதிகார பகிர்வு பற்றி இந்த தீர்வை தான் நாம் அனைவரும் ஏற்போம் என ஒரே குரலில் கூற இவர்கள் கூடமாட்டர்கள்.


அதிகாரபகிர்வின் அளவு எந்த அளவிற்கு இருந்தால் ஏற்போம் என ஒரு முடிவுக்கு வர இவர்களால் முடியவில்லை. ஒரு நாடு இரு தேசம், சமஸ்டி, மாகாணங்களுக்கு பூரண சுயாட்சி, இந்தியன் மொடல் என ஆளாளுக்கு ஒவ்வொன்றை கூறுவார்கள். கூடி பேசினாலும் முடிவுக்கு வரமாட்டார்கள். தனக்கு தனக்கெனில் சுளகு படக்கு படக்கு என அடிப்பதுபோல் 20 வது திருத்தம் அவர்கள் கதிரைகளில் கை வைப்பதால் மக்கள் பிரதி நிதித்துவம் குறைந்து விடும் என அலறுகிறார்கள். தொகுதிவாரி தேர்தல் முறை வந்தால் பல தலைகள் உருளும் என்பதே உண்மை. மாவட்டரீதியாக பொறுக்கும் வாக்குகளே இன்றும் சிலரை வெல்லவைக்கிறது.
புதிய தேர்தல் முறையால் பிரதி நிதித்துவம் குறைய வாய்ப்புண்டு என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். பல வாய் சொல் வீணர்களை விட சில செயல் வீரர்களால் பலவற்றை சாதிக்க முடியும்.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com