Contact us at: sooddram@gmail.com

 

சிவகுமாரன் பற்றிய இன்னொரு பார்வை......!
 

தியாகி சிவகுமாரனை பற்றி , தோழன் பவுல் பிரகலாதன்,சிறுவயதில் இருந்து பழகியதால் சிவகுமாரன் பற்றிய விமர்சனத்தை ,உங்களின் விழிகளுக்கும் வாசிப்புக்கும்
அதை இங்கு தருகின்றேன் ,.வீர வணக்கம் ..அவர் இருந்திருந்தால் பத்மநாபாவை போல அவரும் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் நல்ல மனிதர்களையும் போராளிகளையும் புலிகளின் பாசிசம் விட்டுவைத்தது கிடையாது. இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் சிவகுமார் அவர்களுடைய நாமம் என்றும் உயர்வாய் நிலைத்திருக்கும்.உரும்பிராய் தியாகி சிவகுமாரன் அவர்கள் பற்றிய 2013 பவுல் பிரகலாதன் இட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்.

தியாகி சிவகுமாரன் , வீரன் சிவகுமாரன், உரும்பிராய் சிவகுமாரன் பொன் சிவகுமாரன் என பலராலும் விழிக்கப்பட்ட சிவகுமாரன் அவர்கள் ஒரு தற்கொலை போராளியல்ல. ஒரு மகத்தான உன்னதமான போராளி. வெறுமனே தமிழ் உணர்ச்சியிலும் தமிழ் தேசிய உணர்வலையிலும் போராட கிளம்பிய ஆரம்பகால போராளிகள் மத்தியில் சமூக உணர்வும் தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற தெளிவிலும் போராட கிளம்பியவர் சிவகுமாரன் அவர்கள். அவரோடு சேர்த்து அவரது சகாக்கள் நால்வர். இவர்கள் அடங்கியதுதான் இவரது இயக்கம். இவர்கள் எல்லோருக்குள்ளும் தான் ஒருவரே சயனைட் குப்பியை கொண்டுதிரிந்தார். அப்பொழுது அவர் பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரசேகராவுக்கும் அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தியாகராஜா என நினைக்கிறேன் இருவருக்கும் குண்டுவைத்து கொலைசெய்ய முயற்சித்தார் என்ற காரணத்தால் இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார். இதன் காரணமாக தன்னை போலீசார் பிடித்தால் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்ற நோக்கத்தால் சயனைட்குப்பியை தான் மட்டும் தனது சகாக்களுக்கு கொடுக்காமல் கொண்டு திரிந்தார். சகாக்கள் பிடிபட்டால் எல்லாவற்றுக்கும் காரணம் சிவகுமாரன் தான் என சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவைத்திருந்தார். ஆனால் போராடக்கிளம்பிய ஆரம்பங்களிலேயே அவர் கோப்பாய் வங்கி கொள்ளை முயற்சியில் பொலிசாரால் பிடிபடும்போது சயனைட் உட்கொண்டு வைத்தியசாலையில் மரணித்தார்.

புலிகளுக்கும் இவருக்கும் ஏன் பிரபாகரனுக்குமே தொடர்பு எந்தக்காலத்திலும் இருந்தது கிடையாது. அப்பொழுது புலிகள் அமைப்பும் கிடையாது. இவரை ஒரு மகத்தான போராளி என்பதில் புடம் போட்டு எடுத்தது உரும்பிராயிலிருந்த சாதிப்பிரச்சனைதான். அங்குதான் இவர் தமிழ் சமூகத்தையும் அதன் படிகளையும் கற்றுக்கொண்டார். சாதி தீண்டாமை யாழ்ப்பாணத்தில் அதி உச்சத்தில் இருந்த அறுபதுகள் எழுபதுகளில் உரும்பிராயிலும் அது தாண்டவமாடிய காலம். உரும்பிராய் தேநீர் கடைகளில் உயர் சாதிக்காரனுக்கு ஒரு கோப்பையும் கீழ் சாதிக்காரனுக்கு மூக்குப்பேனியும் என்று பிரித்து வைத்திருந்த காலங்களில் அதே மூக்குப்பேணியில் தனக்கும் தேநீர் தரச்சொல்லி அருந்தியவர். கீழ்சாதிக்காரன் என்று நீங்கள் பிரித்து வைத்திருக்கும் அவர்களும் எம்மைப்போல மனிதர்கள்தான் என்று தனது குடும்பத்தாரோடும் தனது சாதி சமூகத்தோடும் முரண்பட்டவர் சிவகுமார் அவர்கள்.

உரும்பிராயில் இந்தியாவின் சேரிகளை போல கொடுமையான சூழலில் இருந்த ஒரு பகுதி செல்வபுரம் எனப்படுவது. பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் அவர்களை முன்னேற விடாமல் அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சமூகத்தோடு நல்லுறவும் சிறுவர்களுக்கு படிப்பையும் சொல்லி தந்ததோடு செல்வபுரத்தில் தனது தலைமையில் சமபந்தி போசனம் ஒன்றையும் செய்திருந்தார் சிவகுமாரன். கல்வியறிவும் சமூகம் சார்ந்த முன்னேற்றகரமான தெளிவும் கெட்டித்தனமும் அஞ்சா நெஞ்சமும் மன உறுதியும் மனிதர்மேல் அன்பும் பெண்கள் மீது மரியாதையும் கொண்டிருந்தவர் சிவகுமார் அவர்கள்.

கண்டி போகம்பரை சிறையிலும் அனுராதபுர சிறையிலும் சில காலம் தீவிரவாதத்தை தழுவுவதற்கு முன்னால் இருந்தவர். அவர் போராட தொடங்கி சில காலங்களிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கிவிட்டார். அப்பொழுதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தது பெரும்பாலும் சிறுபான்மை தமிழ் குடும்பங்கள் மத்தியில்தான். விஞ்ஞான அறிவும் பொது அறிவும் நகைச்சுவை உணர்வும் பழகும் பண்பும் எதையும் நேருக்கு நேர் பேசுகின்ற பண்பும் அதிகம் பெற்றவர் சிவகுமார் அவர்கள். மனித பண்பும் பிறர்மேல் அன்பும் பொருந்திய மக்கள் போராளிகளை காண்பது அரிது. தமிழர்களின் சாபமோ என்னவோ சிவகுமாரனும் இளம் வயதில் எம்மிடமிருந்து இல்லாமல் போனார். ஆனால் அவர் இருந்திருந்தால் பத்மநாபாவை போல அவரும் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி.

ஏனெனில் நல்ல மனிதர்களையும் போராளிகளையும் புலிகளின் பாசிசம் விட்டுவைத்தது கிடையாது. இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் சிவகுமார் அவர்களுடைய நாமம் என்றும் உயர்வாய் நிலைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் சயனைட் குப்பிகள் அணிந்திருந்தும் கேணல்களும் தலைவரும் வெள்ளைக்கொடியோடு சரணடைந்து கொல்லப்பட்ட போது கொள்கைவீரர்களும் மறவர்களும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு சிவகுமாரன் அவர்கள் கண்முன்னே வந்து நிற்கின்றார். அவர் நாமம் வாழ்க. சின்ன வயதில் ஒரே வீட்டில் ஒன்றாக பழகிய சிவகுமார் அண்ணனின் நினைவுகள் என் நெஞ்சை விட்டு என்றும் அகலாது.


சிவகுமார் அவர்கள் நல்ல கவித்துவமும் உள்ளவர். அவர் ஒரு சினிமா பாடலை தனது வரிகள் போட்டு நிரப்பியிருந்தார்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.. அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நாம் அடிமைகள் இல்லை என்று பாடு ராஜா என்ற பாடலில் சரணத்தை இப்படி எழுதியிருப்பார்,
‘’அண்ணார்ந்து பார்க்கின்ற அலறி மாளிகை அதில் அம்மா குடியிருக்கும் அந்த மாளிகை நீ பொன்னான உரிமையை தர மறுத்தால் பெரும் புரட்சி வெடிக்கும் தனி நாடு பிறக்கும்.’’
சிவகுமார் அவர்கள் இந்து குடும்பத்திலிருந்து வந்த போதும் கிறீஸ்தவ செபங்களும் பாடல்களும் தெரிந்தவர். பாடல்களை அழகாக பாடிக்காட்டுவார். இவர் ஒரு சிறந்த தற்காப்பு கலை வீரர். இன்னும் எத்தனையோ நினைவுகள் இவருடனானவை இன்னும் என்னுள் நிழலாடுகின்றன.

நன்றி

(தோழர் பவுல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com