Contact us at: sooddram@gmail.com

 

படிப்படியாக அகலும் இந்திய - சீன விரிசல்

சீரிய வரலாற்றுச் சந்திப் பொன்று 1954 இன் இலை யுதிர் காலத்தில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் நேருவும் சீன அதிபர் மாவோவும் பெய்ஜிங்கில் தனியாகச் சந்தித்து சுமார் நாலரை மணி நேரம் பேசியிரு க்கின்றனர். நேருவைச் சந்தித்த சில விநாடிகளுக் கெல்லாம் சகஜமாகப் பேசத் தொடங்கி யிருக்கிறார். மாவோ. “சீனத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய வளர்ச்சியை விடக் குறைவாக இருக்கிறது. இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆகும் தொழில்துறையில் வளர்ச்சியை எட்டுவதற்கு” என்று குறிப்பிட்ட மாவோ, “அமெரிக்கா வின் இராணுவ நீட்சி தென் கொரியா, தாய்வான், இந்தோனேசியா வரை இருப்பதால் தங்களால் நிம்மதியாகத் துங்க முடியவில்லை” என்றார். நேரு, “உலக மக்கள் தொகையில் சுமார் 100 கோடியைக் கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் ஆசியாவில் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்றார்.

“ஆனால் அமெரிக்கா நம்மிரு நாடுகளையும் பெரிய சக்தியாகக் கருதிக்கொள்ள வேயில்லையே” என்று கேட்ட மாவோவிடம் நேரு “பிற நாடுகளை அளக்க அமெரிக்கா இப்போது வைத்திருக்கும் அளவுகோல் எதிர்காலத்தில் பயன்படாது. அமெரிக்கா வலுவாக அதே சமயம் பிற நாடுகள் தங்க ளைத் தாக்கக்கூடும் என்று அச்சப்பட்ட நிலையில் இரு க்கிறது” என்று பதிலளத்தார்.

அமெரிக்க முன் முயற்சி யில் ‘தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒப்பந்த ஸ்தாபனம் (சீட்டோ) என்ற புதிய அமைப்பு உருவான சமயத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர். இதைக் கருத்தில் கொண்டு பேசிய மாவோ, இந்த அமைப்பில் சேர வேண்டும் என்று அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்த போதும் கூட இந்தியா அதை ஏற்காமல் தவிர்த்ததைப் பாராட்டினார்.

“நாங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல என்றாலும் யாரையும் பார்த்து அஞ்சுவது கிடையாது, எனவே இதுபோன்ற இராணுவக் கூட்டு ஒப்பந்தங்களில் சேர வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது” என்று மாவோவுக்குப் பதிலளித்தார் நேரு.

உலகப் போர்களின் விளைவுகள் குறித்து இரு தலைவர்களும் நீண்ட நேரம் பேசியிருக்கின்றனர். “இரு உலகப் போர்களின் விளைவாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேசிய வாதக் கட்சிகளுக்கும் வெற்றி கிட்டியது. மூன்றாவது உலகப் போர் வந்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை முன்பை விடப் பல கோடிக்கணக்கில் இருக்கும்.

சீனாவிடம் இதுவரை அணுகுண்டு ஏதும் இல்லை. இப்போதுதான் அணுசக்தி ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறோம்” என்று வெளிப்படையாகப் பேசினார் மாவோ.

சீனா தன்னுடைய முதல் அணுகுண்டை 1964 செப்டம்பரில் வெடித்துச் சோதனை நடத்தியது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நேருவிடம் இதுபற்றி அவர் தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது.

முதலாவது உலகப் போர் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளுக்கு வெற்றியைக் கொடுத்தது போல இரண்டாவது உலகப் போர் சீன விடுதலைக்கு வழிவகுத்தது என்று மாவோ நம்பினார்.

“சீனாவில் நாங்கள் 22 ஆண்டுகள் போர் செய்தோம். எந்த முடிவும் ஏற்படவில்லை. இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது, நாங்களும் எழுந்து நிற்க வாய்ப்பு கிடைத்தது” என்றார் மாவோ.

நேருவும் இந்திய விடுதலை பற்றிப் பேசினார். “இரண்டாவது உலகப் போர் வராமலே இருந்திருந்தால் கூட இந்தியா விடுதலை அடைந்திருக்கும். உண்மையில் இரண்டாவது உலகப் போர் தொடங்கிய நேரத்திலே இந்தியா விடுதலையடைந்த நிலையை எட்டிவிட்டது. அந்தப் போர் காரணமாகத்தான் ஆட்சியை மேலும் சில ஆண்டுகளுக்கு பிரிட்டன் நீடித்தது” என்றார் நேரு.

இன்னொரு உலகப் போர் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று இருவரும் பேசிய போது, ஆண்டுகள் செல்லச் செல்ல மூன்றாவது உலகப் போர் வரும் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றார் நேரு.

“இன்னும் 15 ஆண்டுகள் இப்படியே பெரிய போர் இல்லாமல் கடந்துவிட்டால் மூன்றாவது உலகப் போர் வருவதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பது என் ஊகம். இனி தயாராகும் ஆயுதங்கள் பெருந்தொகையில் உயிரைப் பறிப்பவையாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்த ஏற்படும் அச்சத்தாலேயே மூன்றாவது உலகப் போர் தவிர்க்கப்படும்” என்றார் நேரு. திபெத் தொடர்பான ஒப்பந்தம் குறித்து மாவோ குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதிலிருந்து அது தன்னுடைய மனதைவிட்டு அகலவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். வேண்டாதவர்களைத் தண்டிப்பதை சீனாவில் ‘பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்பார்களாம். இதைக் குறிப்பிடும் மாவோ, “நாம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம்” என்றார் நகைச்சுவையாக.

இதற்குப் பதிலளித்த நேரு,

“நம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்காகப் பூசலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

இருவரும் இப்படிப் பேசிய அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய - சீனப் போர் வெடித்தது. இப்படியான மனம் திறந்த உரையாடலில் ஈடுபட்ட இருவரால் இந்த மோதலைத் தவிர்க்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அன்றைய இச்சந்திப்பை நினைவுபடுத்துவது அவசியமாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து திறமைமிக்க ‘செஸ்’ விளையாட்டு வீரரைப்போல ஆட்சியிலும், அரசியலிலும், வெளிநாடுகளின் உறவிலும் எதிராளிகளின் காய்கள் எப்படி நகர்த்தப்படுகிறது? என்று பார்த்து சரியாக ‘செக்’ வைத்து வருகிறார்.

குறிப்பாக வெளிநாட்டு உறவுகளில் நட்பும் வளர வேண்டும், இந்தியாவுக்கும் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதில் அவருடைய அணுகுமுறை வெற்றியும் அடைந்து வருகிறது. மோடி பதவியேற்றத்திலிருந்து ஒரு ஆண்டில் 18 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்.

சீனாவுக்கு 16வது வெளிநாட்டு சுற்றுப்பணத்தை மேற்கொண்டு புதிய அத்தியாயத்தைப் படைத்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லும் போது ‘யாதும் ஊரோ, யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றை உறுதிப்படுத்துவது போல ‘எல்லா ஊர்களும் எங்கள் ஊர்களே, எல்லா மக்களும் எங்கள் உறவினர்களே’ என்ற உணர்வை ஊட்டி வருகிறார்.

சீனாவில் அவருடைய இந்த உணர்வுபூர்வ பேச்சுக்கள், பண்டடைய காலத்தில் யுவான் சுவாங் காலத்தில் இருந்து ஆழமாக வேரூன்றி இருந்த நல்லுறவை கோடிட்டுக்காட்டியமை சீன மக்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. அதனால்தான் அவருடைய 3 நாட்கள் சுற்றுப் பயணத்தில் 2வது, 3வது நாட்களில் சீன மக்கள் அவர் சென்ற இடங்களில் எல்லாம் வீதியின் இருமருகிலும் திரளாக நின்று கொண்டு “மோடி - மோடி” என்று கோஷம் போட்டு வரவேற்றது உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

சீனாவிலும் ஹொங்கொங்கிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு நாட்களைவிட, இப்போது மோடி வருகைக்குப் பிறகு அவர்களுக்கு சீன மக்களின் அன்பும், நட்பும் ஒரு புதிய மலராக மலர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சீன அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது 20 பில்லியன் டொலர் சீன முதலீடுகளுக்கு உறுதி அளித்தார்.

ஆனால், இப்போது மோடியின் சுற்றுப் பயணம் 22 பில்லியன் டொலர் அதாவது ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சீன முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன. 21 முக்கிய சீன தொழில் அதிபர்களை மோடி சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடன் வந்த இந்திய தொழில் அதிபர்களும், அவர்களுடன் பரஸ்பர உடன்பாடு கொள்வதற்கான புதிய வாசலைத் திறந்து விட்டார்.

தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில், மோடியின் சீனப் பயணம் 2 புதிய திட்டங்களைத் தந்துள்ளது. ஒன்று சென்னையில் சீனாவின் துணைத் தூதரகம் அமைப்பது, மற்றொன்று சென்னையும், சீனாவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் சாங்கிங் நகரமும் சகோதரி நகரங்களாக செயல்பட சைதை துரைசாமியும், அந்த நகர மேயரும் ஒப்பந்தங்கள் செய்ததாகும். ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்துள்ள சென்னையை, இந்த ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தும்.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 3,488 கிலோ மீட்டர் எல்லை இருக்கிறது. இந்த எல்லையில் சில இடங்களில் குறிப்பாக அருணாசலப் பிரதேசம் போன்ற இடங்களில் உள்ள பிரச்சினைக ளுக்கான தீர்வு குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குறை இருந்தாலும், எல்லையின் இருபுறங்களிலும் அமைதிகாக்கப்படும், ஒரு சுமுக தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இரு நாட்டு பிரதமர்களும் உறுதி அளித்துள்ளமை புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எல்லைப் பிரச்சினைக்கு மட்டும். தீர்வு கண்டு விட்டால், நேரு காலத்தில் கூறியதுபோல “இந்தி சீனி பாய் பாய்” அதாவது இந்தியாவும், சீனாவும் சகோதரர்கள் என்று இருவருமே முழக்கமிடலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் சீனா, இந்தியா இடையிலான உறவுகளில் மட்டு மல்லாமல், பிராந்திய புவிசார் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சீனாவின் வட மேற்கு மாகாணமான ஷான்ஜியின் தலைநகரான ஜியானிலிருந்து தனது சீன சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் மோடி. கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்த அதிபர் ஜி ஜின்பிங், மோடியின் சொந்த ஊரான அகமதாபாத்திலிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கமான நடைமுறையில் அல்லாத இந்த “சொந்த ஊர்” அரசு நடைமுறை இரு நாடுகளும் தங்களுக்கிடையில் கலாசாரப் பரிமாற்றங்களை அதிகரிப்பதிலும் இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவதிலும் உறுதியுடன் இருப்பதை உணர்த்துகிறது.

இந்தியப் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியத் தலைநகரான புது டெல்லிக்குச் செல்லாமல், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு முதலில் சென்றார் அதிபர் ஜி ஜின்பிங். இதற்குப் பதில் மரியாதை செலுத்தும் வகையில் ஜியான் நகரில் தரையிறங்க மோடி முடிவு செய்தார்.

வரலாற்றைப் பார்த்தோமா னால் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும் பயணி யுமான யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்தை ஜியான் நகரிலிருந்துதான் தொடங்கினார். அப்போது சீனாவின் டாங் வம்ச அரசின் தலைநகராக ஜியான் இருந்தது. இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி புத்த மத வேதங்களைச் சேகரித்தார் யுவான் சுவாங். மோடியின் மாநிலமான குஜராத்துக்கும் யுவான் சுவாங் சென்றிருக் கிறார் என்ற தகவல் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் கலாசார மற்றும் வரலாற்று ரீதியான உறவு களை எடுத்துக்காட்டுகிறது.

சீனாவுக்கும் இந்தியாவு க்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்து வரும் இருதரப்பு உறவு, இந்த இரண்டு பிராந்திய சக்திகளை ஒன்றுக்கொன்று ஈர்க்கச் செய்திருக்கிறது. கடந்த பத்தே ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு ரூ. 44 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 4.4 இலட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ. 6.3 இலட்சம் கோடியாக இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008 லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக சீனாதான் இருக்கிறது.

சீனா இறக்குமதி செய்யும் நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கிகள் நிறுவப்பட்டதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கை வகித்தன.

இத்தனை இருந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆரோக்கியமானதாகவும் பல காலம் நீடிக்கக்கூடியதாகவும் வைத்திருப்பதில் சீனாவும் இந்தியாவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வர்த்தக நிலைப்புத் தன்மையின்மை, குறைந்த அளவிலான நேரடி முதலீடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருக்கிறது.

இந்தியத் தொழில்துறை மற்றும் உள்ள கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடு இன்னும் 5 ஆண்டுகளில் ரூ. 1.26 இலட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்த போது அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு வருகை தந்த மோடி தன்னுடன் 3 மாநில முதல்வர்களையும் அழைத்து வந்தார். உள்நாட்டு வளர்ச்சியில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்க ரீதியான தடைக்கல்லாகவும், சில சமயம் இரு நாட்டு உறவு மேம்பாடு அடைவதற்குத் தடையாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை.

எனினும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைப்பிடிப்பதால் எல்லையில் இரு நாடுகளும் ஒரு முறை கூடத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளவில்லை என்பது ஆறுதலான விஷயம். அமைதி மற்றும் இராஜாங்கக் கொள்கையில் சீனாவும் இந்தியாவும் கவனம் செலுத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல் ஆசிய வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும்.

(Thinakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com