Contact us at: sooddram@gmail.com

 

விண்வெளி வீரர்கள் சந்திரனில் கண்ட வேற்றுக் கிரகவாசிகள்

பறக்கும் தட்டு தகவல்களை மூடி மறைக்க வல்லரசுகள் முற்படுவது ஏன்?

இந்தப் பேரண்டப் பெருவெளியில் அறிவு படைத்த மனிதர்களையும் ஏனைய எண்ணற்ற உயிரி னங்களையும் கொண்ட ஒரே கிரகம் இந்த பூமி மட்டும்தானா அல்லது வேறு எங்காவது சிற்றறிவு படைத்த அல்லது நம்மைவிட பேரறிவும் அதிக ஆற்றலும் கொண்ட உயிரினங்கள் உண்டா என்ற கேள்வி மிக நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. எழுபதுகளில் ‘செரியட் ஒப் கோட்’ என்ற புத்தகம் வெளியாகி பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன் இன்னொரு அயல்வாசி கோட்பாட் டையும் நிறுவிச் சென்றது. அதாவது, மனிதனின் அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வெளியில் இருந்து வந்த வெளிக்கிரக வாசிகளே காரணமாக இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இந்நூல் நிறுவியது.

வெளிக் கிரக வாசிகளின் உதவியுடனேயே பிரமிட்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவ்விமானங்கள் இறங்குவதற்கான இறங்குத் தளங்கள் இருந்திருக்கின்றன எனவும் இந்நூல் ஆதாரங்களுடன் நிறுவியது.

இந்நூல் வெளியான பின்னர் பறக்கும் தட்டு கோட்பாடு உரம் பெற்றது. நாம் இப் பேரண்டத்தில் தனியாக இல்லை; வேறெங்கோ நம்மைவிட புத்திசாலிகள் இருக்கின்றனர்; அவ்வப்போது இங்கு வந்து போகின்றனர் என்று பல இலட்சக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.

இக் கட்டுரை இந்த அடிப்படையி லேயே ஆய்வு ரீதியாக எழுதப்பட்டுள்ளது. சந்திரனுக்கு சென்றவர்கள் அங்கே விநோதமான அனுபவங்களை சந்தித்தனர் என்பது இக்கட்டுரையின் சாரம்.

‘சந்திரனில் மனிதன்’ என்று யாராவது உங்களிடம் சொன்னால் உடன் உங்கள் ஞாபகத்தில் வருவது ‘அப்போலோ 11’ (Apollo 11) விண்கலத்தின் மூலம் சந்திரனில் காலடியெடுத்து வைத்த முதல் மனிதர்களான நீல் ஆம்ஸ் ட்ரோங்கும், எட்வின் ஆல்ட்ரினும் தான். அல்லது ‘அப்போலோ 12’ முதல் ‘அப்போலோ 17’ வரையான விண்கலங்களில் சந்திரனுக்குச் சென்று வந்த வானியல் ஆராய்ச்சியாளர்களும் (Astronauts) உங்கள் ஞாபகத்திற்கு வரலாம்.

ஆனால் கடந்த சில தினங்களாகச் ‘சந்திரனில் மனிதன்’ என்று சொல்லும் போது அதன் அர்த்தமே வேறாகிப் போயிருக்கிறது. சமீபமாக இணையத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்து சுற்றித்திரியும் ஒரு புகைப்படம் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. அந்த ஆச்சரியத்துக்குக் காரணம். சந்திரனின் மேற்பரப்பில் அச்சு அசலாக மனிதனைப் போலவே காணப்படும் ஒரு உருவம் நிற்பது போன்று அந்தப் புகைப்படம் இருந்ததுதான்.

அது யாரோ ஒருவரால் வெளியி டப்பட்டு, இணையம் மூல மாக இன்று உலகம் பூராவும் பரவியிருக்கிறது. அந்த உருவம் சந்திரனில் நிற்பது போல் தோற் றமளிப்பது மட்டுமில்லாமல், அதன் நிழலும் மனிதனின் நிழலைப் போலவே சந்திரத் தரையில் விழுந்திருப்பதாக அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது.

அதனால், அந்தப் புகைப்படத்திலி ருக்கும் உருவம், மனிதன் போன்ற ஒரு உயிரினம்தான் என்பதை நம் மனம் நம்ப விரும்புகிறது. ஆனால், அப்போலோ விண்கலங்களில் சென்று சந்திரனில் இறங்கியவர்களின் ஒருவரின் உருவமாக அந்த உருவம் இருக்க முடியாது. காரணம் அப்போலோ விண்கலங்களில் சென்ற விண்வெளி வீரர்கள், விண்வெளி ஆடைகளையும், தலைக் கவசங்களையும் அணிந்தே சந்திரனில் இருந்திருக்கிறார்கள்.

அவற்றை அணியாமல் அவர்களால் இருந்திருக்கவும் முடியாது. இந்த உருவமோ, எந்தத் தலைக் கவசத்தையும். விண்வெளி உடையையும் அணியாமல். சாதாரண ஒரு மனிதனைப் போன்று காணப்படுகிறது. அப்போலோ விண்வெளி வீரர்களையும், அந்த உருவத்தையும் ஒப்பிட்டுச் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அப்போலோ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள்தான், சந்திரனில் காட்சி தரும் அந்த உருவத்தைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

அதனால் ‘அந்தப் படத்தில் இருப் பவரும் அப்போலோ விண்வெளி வீரர்களில் ஒருவராக ஏன் இருக்கக் கூடாது?’ என்ற கேள்வியும் எழலாம் அல்லவா? 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி புறப்பட்ட ‘அப் போலோ 17’ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், சந்திரனில் எடுத்த புகைப்படங்களுள் ஒன்றில்தான், இந்த மனித உருவமுள்ளது.

உயிரினத்தின் படமும் இருந்திருக்கிறது. ஆனால் இப்படி ஒரு படம் இருப்பது பற்றி இதுவரை நாஸாவோ (NASA) அல்லது ‘அப்போலோ 17’ இன் விண்வெளி வீரர்களோ வாயே திறக்கவில்லை. ஆனால் ஆச்சரியகரமாக ‘அப்போலோ 17’ விண்கலம்தான். சந்திரனுக்கு அனு ப்பப்பட்ட கடைசி விண்கலமானது.

அதற்குப் பின்னர் அமெரிக்கா எந்த ஒரு விண்கலத்தையும் சந்திரனுக்கு அனுப்பவேயில்லை. திடீரென தனது அனைத்துச் சந்திர சோதனைகளையும் நாசா முடித்துக் கொண்டதாக அறிவித்தது. இது ஒரு தற்செயலா? அல்லது....

மனிதர்களுடன் சந்திரனுக்குச் செல்லும் ‘அப்போலோ பயணத் திட்டம்’ (Apollo Mission) என்பது வெறும் மூன்றே மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்ட ஒரு திட்டமாகும். 1969 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டு வரையுள்ள மூன்று வருட இடைக் காலத்தில், ‘அப்போலோ 11’ முதல் ‘அப்போலோ 17’ வரையிலான ஏழு விண்கலங்களை ‘நாசா’ நிறுவனம் சந்திரனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஏழு விண்கலங்களில் ‘அப்போலோ 13’ விபத்துக்குள்ளாகி வெடித்துச் சித றியது. (13 ஆம் இலக்கம் துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இதனால் மேலும் வலுவடைந்தது.)

விண்கலத்தில் சென்ற மூன்று விண்வெளி வீரர்களும் விபத்தில் கொல்லப்பட்டார்கள். ஏனைய ஆறு விண்கலங்களும் சந்திரனில் இறங்கி, அவற்றில் சென்றவர்கள் சந்திரனில் நடந்த வெற்றி வீரர்களானார்கள் (மனி தர்கள் யாருமே சந்திரனில் காலடியெடுத்து வைக்கவில்லை என்னும் கோட்பாடு ஒன்று இருப்பது தனிக்கதை.)

‘அப்போலோ 17’ விண்கலத்திற்குப் பின்னர் அமெரிக்கா எந்தவொரு விண்கலத்தையும் ஆராய்ச்சிக்காகச் சந்திரனுக்கு அனுப்பி வைக்கவில்லை. இது அந்த நேரங்களிலேயே பலரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. “கோடி கோடியாக டொலரைக் கொட்டி. அடுத்தடுத்துப் பல விண்கலங்களையும்.

மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி வைத்த அமெரிக்கா, திடீரெனத் தனது பயணங்களை முடித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டு, முடங்கிப் போனது ஏன்? அப்படி அனைத்தையும் கைவிடும் அளவுக்கு சந்திரனில் என்னதான் நடந்து?’ என்ற கேள்விகள் அப்போதே பரவலாகப் பலரால் கேட்கப்பட்டன. இன்றைய நாணய மதிப்பின்படி பார்த் தாலும் 100 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமான பணத்தை அப்போலோ திட்டங்களுக்காக அமெரிக்கா செலவழித்தி ருக்கிறது. இது மிகப்பெரிய அளவு பணம்.

அவ்வளவு பணத்தை இத்திட்டத்துக்குச் செலவழித்துவிட்டுத் திடீரென நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு அப்போலோ பயணங்களில் குறிப்பாக ‘அப்போலோ 17’ இன் பயணத்தில் என்ன விபரீதம் நடந்தது? இது போன்ற கேள்விகளுக் கெல்லாம் நாசாவிடமிருந்து கிடைத்த பதில், “நாம் சந்திரனை முழுமையாக ஆராய்ந்துவிட்டோம். சந்திரனில் ஆரா ய்வதற்கு இதற்குமேல் ஒன்றுமேயில்லை. அதனால் அதிகப் பணச் செலவுடன் இன்னுமொரு சந்திரப் பயணம் அவசியமற்றது” என்பதே. ஆனால் நாசாவின் இந்த அறிவித்தலை நம்ப முடியாமல் சந்தேகக் கண்கொண்டுதான் பலரும் பார்த்தார்கள்.

‘சந்திரனின் அனைத்துப் பகுதிகளையும் நாசா உண்மையிலேயே ஆராய்ந்து முடித் துவிட்டதா?’ என்று பார்த்தால் இல் லையென்றுதான் சொல்ல வேண்டும். பூமியிலிருந்து சந்திரனைப் பார்க்கும் போது தெரியும் அதன் மேற்பரப்புப் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும் ‘The Far side of the Moon’ என்று சொலலப்படும் சந்திரனின் மறுபக்கத்தை நாசா முழுமையாக ஆராயவேயில்லை.

சந்திரனில் தரையிறங்குவதற்கு முன்னர் அதைச் சுற்றி வலம் வரும்போது அந்தப் பகுதியைப் படமெடுத்ததோடு சரி. அந்த இடத்தில் மனிதன் நேரடியாக இறங்கி இதுவரை ஆராயவில்லை. சந்திரனின் மறுபகுதியில் மனிதன் இறங்கினால், பூமியுடனான தொலைத் தொடர்புகள் அனைத்தும் தொலைந்து போகும் என்னும் காரணத்தினால் அந்த இடங்களில் இறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று காரணங்கள் மட்டும் சொல்லப்பட்டன. கடைசிப் பயணங்களில் சந்திரனில் வாகனங்களைக் கொண்டு சென்று.

அதன் மூலம் பயணங்களை மேற்கொண்ட சம்பவங்கள் நடந்தன. அப்படியொரு வாகனம் மூலமாகவாவது எதிர்ப்புறத்துக் கான ஒரு பயணத்தை மேற்கொண்டி ருக்கலாமே என்ற கேள்விகளும் எழா மலில்லை. அப்போதிருந்த சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லாவிட்டாலும் பின் னராவது அதைச் சாத்தியமாக்கியிருக்க லாமல்லவா? இப்படிப் பல கேள்விகள் கேட்கப்படும் நிலையில், ஒரேயடியாகச் சந்திரப் பயணங்கள் முடிக்கப்பட்டதாக நாசா அறிவித்து சந்தேகத்தையே கொடுத்தது.

“சந்திரனுக்கு விண்கலங்களை நாசா அனுப்ப மறுத்ததற்கு உண்மையான காரணமே வேறு. நாசா உண்மையை மறைக்கப் பார்க்கிறது. சந்திரனுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் ஏலியன்களைக் (Alien) கண்டிருக்கிறார்கள். ஏலியன்கள் சந்திரனில் இருப்பது தெளிவாகத் தெரிந்ததனால் அங்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா பயப்படுகிறது” என்னும் வதந்திகள் அப்போதே உலாவர ஆரம்பிதிருந்தன.

அப்போதெல் லாம் அவை சந்தேகத்துக்குரிய வதந் திகளாக மட்டும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் புகைப் படம் அவை வதந்திகள் இல்லையென்று நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறது. ஏற்கனவே ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சிலர் சொல்லியிருந்தும் அவை பெரிதுபடுத்தப்படாத நிலையில் இந்தப் புகைப்படம் சிறிய சலனத்தை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.

ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சொன்னவர்கள் சாதாரண மனிதர்கள் இல்லை. அவர்களும் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியம் வாய்ந்தவர்கள் தான். அவர்களின் கூற்றையும் பொய் யானவை என்று எளிதில் தட்டிவிட்டுச் செல்ல முடியாது. எந்த மனிதர்களைச் சந்திரனுக்குச் செல்வதற்குத் தகுதியான வர்கள் என்று அமெரிக்கா தெரிவு செய்து அங்கு அனுப்பியதோ, அந்த விண்கல வீரர்களில் சிலர்தான் தாங்கள் ஏலியன்களைச் சந்திரனில் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘நீல் ஆம்ஸ்ட்ரோங்’, ‘எட்வின் ஆல்ட்ரின்’, ‘மைக்கேல் காலின்ஸ்’ ஆகிய மூவரும் ‘அப்போலோ 11’ விண்கலப் பயணிகளாவார்கள். இதில் காலின்ஸ், விண்கலத்தைச் செலுத்துபவராகக் கடமையாற்றினார். ஆம்ஸ்ட்ரோங்கும். ஆல்ட்ரினும் சந்திரனின் தரையில் இறங்கியவர்கள். இந்த இருவரும் சந்திரனைப் பலவிதமாக ஆராய்ந்து படங்களை எடுத்திருந்தார்கள்.

இவர்கள் எடுத்த படங்கள் அனைத்தும் உடனடியாக நாசாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டது. மனித வரலாற்றி லேயே எப்படியொரு சாக சத்தை நிகழ்த்தியவர்கள் வேறு யாருமேயில்லை. நீல் ஆம்ஸ்ட்ரோங் இந்த மூவரிலும் முதன்மையானவராகக் கருதப்பட்டார். சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மூவரும் பூமியை நோக்கித் திரும்பினார்கள். இவ்வளவு பெருமைக் குரிய அந்த மூவரும், பூமிக்கு வந் திறங்கியதும் செய்த ஒரு காரியம் அனைவரையும் திகைக்க வைத்தது.

அமெரிக்காவின் நிஜமான கதாநாயகர்க ளாக அறியப்பட்ட அந்த மூவரும், பூமிக்கு வந்திறங்கிய சில நாட்களிலேயே. அனைத்து விண்வெளி ஆராய்ச்சிகளிலிருந் தும் ஒரேயடியாக விலகிக் கொண்டார்கள். மூவரும் ஒரே சமயத்தில் ஏன் வில கினார்கள் என்னும் கேள்விக்கான பதில் தெளிவாக்கப்படாமல் வெற்றிடமாக இருந்து கொண்டது.

ஆச்சரியங்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. படிப் படியாக நீல் ஆம்ஸ்ட்ரோங் யாருடனும் வெளிப்படையாகப் பேசவே மறுத்தார். இரண்டொரு பேட்டிகளைத் தவிர்த்து வேறு எந்தப் பேட்டிகளிலும் அவர் பங்கு கொள்ளவில்லை. இவருடைய இந்த மெளனம், உலகம் முழுவதையும் வியப்பிலாழ்த்தியது. உலக வரலாற் றிலேயே யாரும் செய்துவிட முடியாத ஒரு சாதனையைச் செய்துவிட்டு வந் திருக்கும் ஒருவர், அப்படியே மெளனி யாகிவிட்டதில் ஏதோவொரு செயற் கைத்தனம் காணப்பட்டது.

மிகப்பெரிய சாதனையைச் செய்துவிட்டதால் ஏற் பட்ட ஒருவித ஞான நிலையில் இவர் மெளனமானாரா? இல்லை, இவர் மெளனமாக இருக்க வேண்டுமென்று யாராலும் வற்புறுத்தி வைக்கப்பட்டாரா? அல்லது மக்களுக்குப் பொய் சொல்லக் கூடாது, உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தில் அவற்றைத் தவிர்த்து வந்தாரா என்பது எதுவும் தெரியவில்லை.

இவருடைய இந்த மெளன காலங்களில் அவரைப் பற்றிய ஒரு முக்கிய வதந்தியும் வெளி வந்தது. ‘நீல் ஆம்ஸ்ட்ரோங் முஸ்லிமாக மாறிவிட்டார்’ என்ற வதந்த உலகமெங்கும் தீயாகப் பரவியது. ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்கே பின்னாளில் மறுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் அமைதிக்குக் காரணத்தைப் பின்னாட்களில் ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகளின் மூலம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆல்ட்ரின் உடைத்துப் போட்ட உண்மைகளைத் தன் பேட்டிகளின் மூலம் ஆமோதிக்க வேண்டி வரலா மென்பதால் ஆம்ஸ்ட்ரோங் அமைதியா னார் என்றே பலரும் புரிந்து கொண் டார்கள்.

ஆம்ஸ்ட்ரோங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான ஆல்ட்ரின் கொடு த்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பய ணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ் ட்ரோங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப் பட்டுப் பூமியை நோக்கி விண்கலத் தில் வந்து கொண்டிருக்கையில், ஆல்ட் ரின் கலத்துக்கு வெளியே விண் வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார்.

ஆல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலி னூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண் டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண் கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ரோங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார்,

மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர் களைப் பற்றிக் கொண்டது. விண்கலங் களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசா கட்டுப் பாட்டு நிலையத்துடன் உரை யாடும் போதும் ஒரு விதியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பது நியதி, இதுபோன்ற சிக்கலான சமயங் களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடி யாது. காரணம், இந்த உரையா டல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம்.

எனவே பேசுபவை அனைத்தும் அவதான மாகப் பேசப்பட வேண்டும். அத் துடன் இதுபோன்ற சிக்கலான சமய ங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மெளனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் ஆல்ட்ரின், ஹ₯ஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “ஸ₯ஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது?(‘where was the S4B?)’ என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்க மாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது.

அதற்கு “6000 நோட்டிக் மைகல்களுக்கு அப்பால் அது இருக்கிறது” என்னும் பதில் ஹ₯ டனிடமிருந்து கிடைத்தது. S4B என்பது இவர்கள் பயணம் செய்த ரொக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். ‘அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான் தாங்கள் ‘ஜன்னலினூடாகக் காண்கி றோமோ?’ என்ற சந்தேகம் ஆல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வ தற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காண வில்லை என்று மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது, காலின்ஸ், தொலை நோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால் உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் தூங்கச் சென்றுவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தில் அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். ஆல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தைப் பல பேட்டிகளில் தெளிவாக ஆல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும் தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார்.

சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் ஆல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ‘எலியன்கள் நிச்சயம் இருக்கின்றன’ என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. ஆல்ட்ரினைப் போல வெளிப்ப டையாக ஆம்ஸ்ட்ரோங் எப்போதும் பேசியதில்லை. ஆனால் தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ரோங்கும் கண்டார் என்பதை ஆல்ட்ரின் உறுதிப் படுத்தினார். ‘ஆம்ஸ்ட்ரோங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண் டதாகவும் அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்’ தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த ‘மெளரிஸ் ஷட்டலின்’ (Maueice Chatelain) என்பவர் 1979 ஆம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ரோங்.

‘இரண்டு பறக்கும் தட்டுகள் தங் களை அவதானிப்பதாகச் சொன்னதை ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.

இத்துடன் முடிந்துவிட விடவில்லை விசயம். ‘அப்போலோ 14’ விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான ‘எட்கார் மிட்செல்’ (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் ‘சந்திர நடை’ (Moon Walk)நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் போது நாம் என்ன சொல்வது?

ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சச் கண்டமாக ‘அப்போலோ 17’ சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன் ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள்.

முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன் “அங்கே பார்! அந்த ஒளி என்ன?” என்று அடுத்தவரிடம் அலறுவது படக் காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. ‘அப்போலோ 17’ விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே ‘அப்போலோ 17’ இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம் தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

சந்திரனில் மனிதனை ஒத்த உருவம் என்று இந்தப் படம் வெளியாகிய ஆரம்ப நாட்களில் அமெரிக்க அரசும், நாசாவும் இது சம்பந்தமாக எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து வந்தன. ஆனால், எவ்வளவு காலத்துக்குத்தான் அமைதி காக்க முடியும்? அதனால், வழமைபோல அந்தப் படத்தைப் பற்றிய விபரங்களை மறுப்பதற்கு நாசா வாயைத் திறந்திருக்கிறது.

“குறிப்பிட்ட அந்தக் படத்தில் கைவிரல்கள் அடையாளமோ, எண்ணெய்ப் படிவமோ, கறுப்புக் கறையோ பட்டிருக்கலாம் அல்லது அந்தப் படத்தின் நெகட்டிவில் கீறல்கள் ஏதும் விழுந்திருக்கலாம். அவையே மனிதனைப் போன்ற காட்சியாக நமக்குத் தெரிகிறது” என்று சொல்லி அந்தப் படத்தைப் பார்த்த அனைவரையும் குப்புறத் தள்ளியிருக்கிறது நாசா. போதாததற்கு, “இப்படியெல்லாம் தெரிவது சாதாரணமம்தான்.

அது ஒரு ‘பரடோலியா’ (Pareidolia) விளைவுதான்” என்று சொல்லியுமிருக்கிறது. இப்போது அந்தக் படத்தைப் ‘பரடோலியா’ என்று சொல்லிவிட்டு எல்லாரும் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டார்கள். “அதுசரி, பரடோலியா என்றால் என்ன? நாசா ஏன் இதைப் பரடோலியா என்று சொல்லியது?” இதுதானே இப்போது உங்கள் கேள்வி.

வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் வெண் முகில்களிலோ, வீட்டுச் சுவர்களில் உள்ள கறைகள், கோடுகள், வெடிப்புகளிலோ. மரக்கிளைகளிலோ. மரப்பட்டைகளிலோ நாம் பார்வையைச் செலுத்தும் போது நமக்குப் பழக்கப்பட்ட மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் ஆகியவற்றின் உருவங்கள் தெரிவது போலத் தோற்றமளிக்கும். நிழல்கள், கறுப்புத் திட்டுகள், இரத்தக் கறைகள் கூட இப்படியான தோற்றங்களை நமக்குத் தரும். சம்பந்தமே இல்லாத இடத்தில் நமக்குப் பழக்கமான உருவங்கள் தெரிவதைத்தான் ‘பரடோலியா’ என்பார்கள்.

இதையே அந்தப் புகைப்படத்தை மறுப்பதற்கும் அமெரிக்க ‘நாசா’ (னிதிஷிதி) நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், அந்தப் புகைப்படத்தை மேலும் பெரிதாக்கி நிதானமாகப் பாருங்கள். நெகட்டிவ் கீறல் விழுந்தது போலவே தெரிகிறது? நாசாவின் இந்த நனைச்சுவையான பதிலைக் கேட்கும் போது வெறுப்புத்தான் மக்களுக்கு மீதமாகின்றது. இப்படிச் சொல்வதனால் அந்தப் புகைப்படத்தில் தெரிவது ஏலியன்தான் என்று அர்த்தமாகிவிடாது. நாசா போன்ற நிறுவனங்கள், மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு இது பற்றிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.

‘SETI’ (Search for Extra Terrestrial Inteligence) என்று வெளிக் கிரகங்களில் உயிரினங்களைத் தேடும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல இலட்சம் கோடிகள் பணத்தைச் செலவழித்து, அயல் கிரகங்களிலும். வான்வெளிகளிலும் அங்குலம் அங்குலமாக ஏலியன்களைத் தேடுகிறார்கள். ‘யாராவது எங்காவது இருக்கிறார்களா?’ என்று தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா தொடங்கி அகில உலக அரசுகள் வரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறும்போது மட்டும், ‘மக்களை முட்டாள்கள்’ என்பது போன்ற பதில்களைக் கூறிவிட்டு அமைதியாகி விடுகின்றன.

ஒரு பொதுமகன் வானத்திலோ, பூமியிலோ, பறக்கும் தட்டு ஒன்றைக் கண்டேன் என்று சொல்லிவிட்டால் போதும் அதை மறுப்பதிலும் அதை மறைப்பதிலுமே அரசுகள் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிக்கின்றன. பின்னர் அதே அரசுகள் விஞ்ஞானிகளுக்குக் கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து, ‘எங்காவது உயிரினம் இருக்கிறதா?’ என்று தேடுங்கள் என்று கட்டளையிடுகின்றன. இந்த முரணான நடவடிக்கை ஏன்? நீங்கள் இவ்வளவு பணம் செலவழித்து ஏலியனையோ, பறக்கும் தட்டையோ தேடும் போது பொதுமகன் சொல்பவற்றுக்கும் கொஞ்சம் செவிகொடுக்கலாம் அல்லவா?

ஏலியன்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகள் சந்தேகமாக நம்முன் ஒலித்துக் கொண்டிருக்க, நாமே ஏலியன்கள்தான் என்னும் முடிவுக்கு நவீன விஞ்ஞானம் வரக்கூடிய சாத்தியங்களும் உண்டு என்பது மட்டும் உண்மை.

நன்றி: உயிர்மை
ராஜ்சிவா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com