Contact us at: sooddram@gmail.com

 

மாற்றம் என்றே மாறாதது

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முதலாக அதிரடி மாற்றங்களுடன் கூடியதுமானதும் எதிர்பார்க்கமுடியாத தீர்ப்புக்களை வழங்கக்கூடியதுமான பாராளுமன்றத் தேர்தல் ஒன்றினை இலங்கைவாழ்மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8 ஆந் திகதிக்கு பின்பு இலங்கையிலே நிகழ்ந்த ஆட்சி மாற்றமானது எந்தளவிற்கு எதிர்பார்க்க முடியாத ஒரு மாற்றமாக இருந்ததோ அதேயளவிற்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலும் மாற்றங்களைக் கொண்டுவருமென அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். 2005ம் ஆண்டிற்குப்பிறகு இலங்கை அரசியல் வரலாற்றில் தமக்கென ஒரு முத்திரை பதித்துக்கொண்ட ராஜபக்ஸ சகோதரர்களின் யுகம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆந் திகதிக்கு பிறகு முடிவுக்கு வந்துவிட்டதென்ற தன்மை தற்சமயம் உள்நாட்டு அரசியல் சக்திமட்டுமல்லாது வெளிநாட்டு அரசியல் சக்திகளையும் சிந்திக்க வைத்துள்ளது.
மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை மையமாகக்கொண்டு இலங்கையிலே கோலோச்ச இருந்த ஏகாதிபத்தியத்தன்மை தற்சமயம் பாராளுமன்றக்கலைப்பில் இருக்கின்ற ஒத்திவைப்புத் தன்மை மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

100 நாள் ஆட்சி என்பது ஒரு காபந்து அரசாங்கம் போலன்றி எந்தவிதமான அபிவிருத்தி செயற்பாடுகளும் நடைபெற்றதாக எவ்விதமான பதிவுகளும் இல்லை. 100, 19, 20 போன்ற இலக்கங்களை காட்டி மக்களை ஏமாற்ற அரசு முயல்வதாக பெரும்பான்மைக்கட்சிகள் மட்டுமன்றி சிறுபான்மைக் கட்சிகளும் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

இது இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாகாணசபை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களையும் இந்த இரண்டு மாகாணங்களிலும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இடையிடையே கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகள்ää சச்ரவுகள் போல இந்த பதியப்படாத தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள்ளேயும் அரசியல், அதிகாரம், மேலாதிக்கம், தன்னாதிக்கம்ää சுயநலவாதம் ஆகிய போட்டிகள் காலத்திற்கு காலம் ஏற்படுவது வழமை.

ஆனால் தேர்தல் நேரங்களில் ஒற்றுமையாக இருப்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியிலே தோற்றுவித்து ஆசனங்களைக் கைப்பற்றுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவமான வித்தை. இந்த ஏமாற்றுவித்தை தெரியாததன் காரணத்தினால் அந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகள் தோல்வியைத் தழுவுகின்றன.

காலாகாலமாக இலங்கைää இந்தியா போன்ற நாடுகளில் கட்சிகளுக்கோ அல்லது சின்னங்களுக்கோ வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்கள் தமக்குப்பிடித்தமான தலைவர்களை நம்பி அந்தக்கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை அளிப்பதை காணக்கூடியதாக இருந்தது. உதாரணமாக இந்தியாவில் இந்திராகாந்திää ராஜீவ்காந்தி ஆகியோருக்கு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்புப்பெற்ற தலைவர் எவருமில்லை. ஆனால் பாரதிய ஜனதாக்கட்சியினுடைய வெற்றிக்கு மோடி அலைதான் முக்கிய காரணம்.
தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாää புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோருக்கு பிறகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அலை தமிழ்நாட்டில் அமோகமாக அடிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையிலே ஐக்கிய தேசியக்கட்சியில் ஜேஆர்ää பிறேமதாஸ ஆகியோருக்கு பிறகு மக்களை கவரக்கூடிய முகமாக ரணில் விக்கிரமசிங்க இல்லையென்பது தென்னிலங்கை மக்களின் கருத்து.

இதேபோல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அஸ்ரப்பிற்கு நிகரான தலைவர் இல்லையெனவும்ää அதேபோல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நிகரான தலைவர் இல்லை எனவும் கருதலாம்.
பண்டாரநாயக்க சிறிமாää சந்திரிக்கா, மஹிந்த ஆகியோருக்கு நிகராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு மைத்திரி ஆளுமை மிக்கவர் அல்ல. இதன் காரணமாகவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாது என்று கூறப்படுகின்றது.

இதேபோல் வடக்கு கிழக்கிலும் இப்படியான ஒரு நிலை காணப்படுகிறது. வெறுமனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறிக்கொண்டாலும் அங்கே தமிழரசுக்கட்சியினுடைய ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது.
தந்தை செல்வா, அண்ணன் அமீர், ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோர் போல சாணக்கியமான தலைவர்கள் எவரும் தற்சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இல்லை. கடந்தகால வரலாற்றை பார்த்தால் மேற்படி தலைவர்களுக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கு அவர்கள் சார்ந்த கட்சியை வளர்த்ததை காணக்கூடியதாக இருந்தது.

தற்சமயம் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் டக்ளஸ் அலை அடிப்பதனை கண்கூடாக காணலாம்.

1991 ம் ஆண்டிற்குப்பிறகு ஒரு அரசியல் சக்தியாக வடிவெடுத்த டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் ஒரு மென்போக்கினை கடைப்பிடித்து தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்சென்றவர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

தொடர்ச்சியாக யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றமை அத்துடன் சந்திரிக்கா ஆட்சியிலும்ää மஹிந்த ஆட்சியிலும் அவர் வகித்த அமைச்சுப் பதவிகள் மூலம் செய்த மக்கள் பணிகள் ஆகியவற்றில் ஒரு வீதத்தினையும் மைத்திரி ஆட்சியின் பங்காளிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்யமுடியவில்லை.

மேலும் தனித்துவமான ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருக்கின்ற வடக்கு மாகாண சபையாலும்ää கிழக்கு மாகாண சபையாலும் எந்தவொரு மக்கள் சார்ந்த பணிகளும், அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை.
டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றாகிய மத்தியில் கூட்டாட்சிää மாநிலத்தில் சுயாட்சி என்பதினை விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது அரசியல் வாழ்க்கையில் முதற்தடவையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று டக்ளஸ் தேவானந்தாவின் கோ~த்துடன் தேர்தலுக்கு செல்லுகின்றனர். அன்று இதே கோசத்தினை டக்ளஸ் முன்வைத்த போது தம்முடைய வாயில் வந்ததையெல்லாம் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றியவர்களை இம்முறை மக்கள் ஏமாற்றுவார்கள் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும்.

10 வருடங்களுக்கு பிறகு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது தனித்துவமான சின்னமாகிய வீணையில் போட்டியிட இருப்பதும்ää இதேபோல டக்ளஸ் அலை வீசுவதும் அத்துடன் டக்ளஸிற்கு நிகராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்தவொரு தலைவரும் இல்லையென்பதும்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமாக உள்ளது.

இதேபோல் பாராளுமன்ற அரசியலில் சிரே~;ட பாராளுமன்ற உறுப்பினராக உள்ள டக்ளஸ் தேவானந்தா போட்டியிடும் தொகுதியில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கமாட்டார்கள் என்பது வெள்ளிடை மலை.

தென்னிலங்கை அரசியலில் ஜனவரி 8 ஆந் திகதிக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படப்போகும் மாற்றம் ஆகியன போன்று வடக்கு கிழக்கிலும் அதிர்ச்சிதரக்கூடிய மாற்றங்கள் காத்திருக்கின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தற்சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற கட்சிகளின் உள்ளடி வேலைகளினாலேயே தோற்கடிக்கப்படவுள்ளனர்.

குறிப்பாக சவாலே சமாளி என்ற அடிப்படையில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட முன்வந்திருக்கின்ற தேசியப்பட்டியல் எம்.பி எம்.ஏ.சுமந்திரன் அவர்களை தோற்கடிப்பதற்கான முழுமுயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதே தொடங்கிவிட்டனர்.

இதேபோல் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு தேர்தலில் சீட்கொடுத்து தோற்கடிப்பதற்கு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

எது எப்படியிருப்பினும் மத்தியில் ஆட்சியாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தனித்தனியே யாழ்மாவட்டத்தில் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்ட நிலையில் டக்ளஸ் தேவானந்தாவும் தனித்து களமிறங்க இருக்கின்றார் எனக் கூறப்படுகிறது.

இதைவிட கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தல் வேலைகளில் முனைப்பாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கடந்த காலத்தில் விழுந்த வாக்குகள் இம்முறை மைத்திரி யுகத்தினாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினாலும் சிதறடிக்கப்படுவது உண்மை.

இந்த வாக்குச்சிதறல் மற்றும்ää டக்ளஸ் அலை ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் தற்போதிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வரலாம்.

மாற்றம் எந்த வடிவத்திலும் நிகழலாம். மாற்றம் தோல்வியையும் கொண்டுவரலாம், அமோக வெற்றியையும் கொண்டு வரலாம், ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது.

தமிழ்நாட்டான்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com