Contact us at: sooddram@gmail.com

 

பாராளுமன்ற கதிரை சண்டையை நிறுத்தி ஒன்று படுங்கள் தலைமைகளே
குரங்கின் கை புண் போலாகிவிட்டது எம்அரசியல்பிரச்சனை. ஆளாளுக்கு சொறிந்து பெரிதானதே தவிர ஆறவில்லை. எல்லோரும் ஆரம்பத்தில் பொதுநலம் பேசுவதும் பின் தம் சுயநலம் பார்ப்பதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.
மீண்டும் மீண்டும் பழையதை எழுதி பயனில்லை ஏனெனில் அவை நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய நிலவரம் பற்றி பார்ப்போம் சிந்திப்போம் செயல்படுவோம்.
அண்மையில் தெற்கில் நடந்த ஆட்சி மாற்றத்தில் எம்மவர் பங்களிப்பு இருந்தது. ஆனால்அமைந்திருப்பது நிரந்தர ஆட்சியல்ல. ஜனாதிபதி தொடர்ந்தாலும் பாராளுமன்றம் மாற்றத்துக்குள்ளாகும் என்பது நாமறிந்ததே.
எதிர்வரும் தேர்தலில் நல்லாட்சி அமையுமா அமைக்கவிடுவார்களா என்ற கேள்வி நுகேகொடை முதல் மாத்தறை வரை மகிந்தரை அழைக்கும் கூட்டங்களால் எழுகிறது. இந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உதவியவர்கள் அதிகாரபகிர்வை பகிரங்கமாக கேட்கமுடியாத நிலையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எம் பிரச்சனையின் மையப்புள்ளியே அதுதான். அதை வைத்துதான் சிங்களம் தன் அரசியலை இதுவரை செய்தது. தமிழருக்கு எதைகொடுக்க மாட்டோம் என கூறித்தான் இதுவரை தெற்கின் தலைமைகள் தேர்தலை சந்தித்திருக்கின்றன.
இப்போதுதான் முதல் தடவை தேசிய அரசாங்கம் அமைப்போம் பிரச்னைகளை தீர்ப்போம் என வெளிப்படையாக பேசப்படுகிறது. மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் இனப்பிரச்சனையில் எதிர் எதிராககவே இதுவரை செயல்பட்டனர்.
இனி வரும் என எதிர் பார்க்கப்படும் தேசிய அரசில் அந்த நிலை தோன்றாது என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மைத்திரி அமையும் புதிய அரசில் எதிர்கட்சியும் உள்வாங்கப்படும் என உறுதிபட கூறுகிறார். இப்படித்தான் பலரும் முன்பு பல வாக்குறிதிகள் தந்து தேர்தல் முடிந்ததும் எம் காலை வாரினார்கள் என பழையதை கிழற நடைமுறை சூழல் என்னை அனுமதிக்கவில்லை. சிங்களம் எதையும் தராது போராடித்தான் பெறவேண்டும் என புறப்பட்டு பாதை மாறிய பயணங்களால் மக்களை பலிகொடுத்து மண்ணை பறிகொடுத்து, போராளிகளை விதைத்து, விதவைகளை பெருக்கி, சிறுவர்களை அனாதையாக்கி, பலரை சொந்தமண்ணிலும் அன்னிய நாடுகளிலும் அகதிகளாக்கி எம்மண் ராணுவ முகாம்களால் சூழப்பட்டு நாம் வாழும் நிலையில் என்னால் அது முடியவில்லை.
நம்பிக்கை தான் வாழ்க்கை. அந்த நம்பிக்கையை புதிய தலைமை மீது வைக்க மனம் விளைகிறது. இழப்பதற்கு உயிரைத்தவிர எதுவும் இல்லாத கையறுநிலையில் இருக்கும்போது, இதையும் முயன்றுபார்த்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது. கூறுபவரின் தரம் தராதரம் பொறுத்தே அவர் கூற்று கொள்ளப்படும்.
மைத்திரியை பொறுத்தவரை அவர் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை. ஜனாதிபதி வேட்பாளரான பின்புதான் பிரபலமானார். அதுவும் கோலியாத் (பராக்கிரமசாலி) எனும் மகிந்த முன் நிறுத்தபட்ட டேவிட் (சிறுவன்) தான் மைத்திரி. மொத்தத்தில் ஒரு பலிக்கடா. கரணம் தப்பினால் குடும்பத்தோடு புத்தரிடம் போயிருப்பார்.
இருந்தாலும் பொது நன்மை கருதி வந்தார் நின்றார் வென்றார். சாதாரண விவசாய குடும்ப பின்னணி, விவசாயி, விவசாயபடிப்பு பின் அதுசார்ந்த உத்தியோகம், அரசியலில் இதுவரை ஊழலில் அறியப்படாதவர்.
அவர் மீது உள்ள குற்றசாட்டு யுத்த இறுதிநாளில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமை. திருமலை அரசியல் பொறுப்பாளர் எழிலன் மேலிட உத்தரவு படிதான் மாவிலாறு தண்ணீரை தடுத்தார் என அனந்தி கூறியதை ஏற்பவர்கள் தான் மைத்திரி மீது குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்.
இறுதி யுத்தத்தை நடத்தியது அராஜகங்கள் அரங்கேறியது அவர் உத்தரவுபடியல்ல என்பதை அறிய கோத்தாவின் யுத்தம் (Gota’s War ) என்ற புத்தகத்தை படியுங்கள். அப்படிபட்டவரின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைப்பதில் என்ன தவறு. ஆயுத போராட்டம் எம்மவர் தவறால் தோற்கடிக்கபட்ட பின் இந்தியாவும் சர்வதேசமும் கூறும் ஒன்றுபட்ட இலங்கையுள் அதிகாரபகிர்வுதான் தற்போது சாத்தியம் எனும் நிலையில் அதனை தரக்கூடிய சூழ்நிலை தெற்கில் உருவாகும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாமல் தமக்குள் மோதுகிறது பொதுநலம் பேசும் சுயநல தலைமைகள்.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் எம்மக்களுக்கு எதை பெற்று தந்தீர்கள் என ஆடறுக்குமுன் அதை அறுக்க சொல்லி கூட்டமைப்பை பார்த்து கேட்கும் டக்ளஸ் தான் கடந்துவந்த பாதையை மறந்து பேசுவது சரியல்ல. தொண்டமான் அரசியல் செய்கிறேன் அஸ்ரப் அரசியல் செய்கிறேன் என 2 தசாப்தமாக கூறுபவரால் வடக்கிற்கு இடைக்கால சபையை கூட கொண்டுவர முடியவில்லை.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பிரிபடாத வடக்கு கிழக்கு என்றவர் கிழக்கு பிரிந்தபோது மகிந்தரின் மந்திரி. வடக்கின் வசந்ததில் பசில் பல வேலை திட்டங்களை தடுத்தபோது மௌனம். அண்மையில் வந்த மோடி அடிக்கல் வைத்த இந்தியகலாசார மண்டபத்திற்கு ஏற்கனவே இவர் அடிக்கல் வைத்து பசில் நடவடிக்கையால் அது தொடரவில்லை.
20 வருடங்கள் அவர் செய்த, நல்லவற்றை மட்டும் யாரும் மறுக்க மாட்டார்கள். அவை அபிவிருத்தியோடு சம்மந்தபட்டது. அதிகார பகிர்வு சம்மந்தமாக பெற்றது என்ன ?. மாகாணசபை தேர்தலுக்காக திறந்து விடப்பட்ட ஓமந்தை சோதனை சாவடி கூட ( டக்ளஸ் கூறும் வடக்கின் சொர்க்கவாசல்) பின்பு எம்மை வாகனத்தில் இருந்து இறக்கி நடக்கவைத்து ஏற்றியது.
இங்கு தந்தை செல்வாவின் இறுதி அஞ்சலியின் போது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பலரும் 20நிமிடம் 30 நிமிடம் எனபேசியபோதும் மட்டுநகர் இராஜதுரை பேசவந்த போது அமிர்தலிங்கம் ஒலிவாங்கியில் இனிபேசுபவர்கள் 3 நிமிடங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். சொல்லின் செல்வர் இராஜதுரை 30வருடங்கள் தந்தைசெல்வாவுடன் பயணித்ததை 3 நிமிடங்களில் எப்படி சொல்வேன் என கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். 30 வருட அகிம்சை 30வருட ஆயுத போராட்டம் தராததை 100 நாளில் பெறுவது சாத்தியமா ? சிந்தியுங்கள்.
தனிமனித விருப்பு வெறுப்புகள் எம் இனத்தை பாதித்தது போதாதென்றா எந்த ஒரு விட்டுகொடுப்புக்கும் சமரசத்துக்கும் தயாரின்றி செயல்படுகிறார் கஜேந்திரன். ஒருநாடு இருதேசம் கேட்பதற்கு நன்று அதை பெறுவதற்கு வழி ?.
புலிகளின் பலத்தில் செயல்பட்டவர்கள் இன்று சர்வதேசத்திடம் சாய்ந்து நிக்கின்றனர். புலிகளையே கைவிட்ட சர்வதேசம் தன் நலன் சார்ந்த விடயங்களை தான் எங்கும் செய்யும். பல மாநிலங்களை கொண்ட இந்திய அனுசரணை அதற்க்கு கிடைக்குமா ?. அதற்காக நாம் தொடர்ந்தும் போராடவேண்டும் என்கிறார். யார் போராடுவது எவ்வளவு காலம் ?. சிந்தியுங்கள்.
பாராளுமன்றம் செல்வது மட்டுமே என்செயல் எனும் பிரேமசந்திரன் நடத்தும் உள்ளக விமர்சனங்களால் உணர்ச்சிகளை தூண்டலாமே தவிர வேறெதை செய்யமுடியும். ஈழத்துக்கு போராடி மாகாணசபையை ஏற்று முதல் சபையிலும் உறுப்பினராக இருந்து பின் சிலமாதங்களில் பாராளுமன்றம் சென்றவர் அப்போது அதிகாரபகிர்வு கேட்டு மத்தியுடன் மோதிய அந்த சபைக்காக எதனை மத்தியிடம் பெற்று கொடுத்தார் என்பதை அதன் அன்றைய முதல்வரிடம் கேளுங்கள்.
அன்று மாகாண சபை மூலம் அரசியலுக்கு வந்து பாராளுமன்றம் சென்றவர் இன்று வட மாகாணசபை முதல்வரை விமர்சிக்கின்றார். மாகாணத்துக்கான நிதியை தம்மிடம் தரும்படி அவர் கேட்டது தவறாம்.
அதிகாரபரவலுக்கான அலகாக இதுவரை எமக்கு கிடைத்திருப்பது மாகாணசபை மட்டுமே. அதை முளுமைப்படுத்தி வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் நிர்வாகத்தின் மூலம் எமது பிராந்தியத்தை நாமே நிர்வகிக்ககூடிய நிலைமையை ஏற்படுத்தினால் எம் பிரச்சனையின் மையப்புள்ளியை நாம் இலகுவாக தீர்க்கலாம். அவர் கூறுவது போல் வெறுமனே கிராமவீதிகளை போடவும் சிறுவிவசாய நவடிக்கைக்கும் மாகாணசபை எதற்கு ?.
தென் இலங்கைக்கு கலக்கத்தை ஏற்படுத்துபவர்களாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காணப்படுகின்றன. அவர்கள் பற்றி யானையை கண்ட குருடன் நிலையில் தான் சிங்களம் இருக்கிறது. இன்று மைத்திரி கூறும் நல்லாட்சி முழுநாட்டிலும் ஏற்படவேண்டும் என்றால் அதற்கு அந்த அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை. குறைத்து மதிப்பிட முடியாத அளவிற்கு பொருளாதரத்தில், தாம் வாழும் நாட்டு அரசியலில், கல்வியில் அதியுயர் சேவைகளில் என அவர்கள் பெருவிருட்சமாக உள்ளனர்.
அமையும் என எதிர்பார்க்கப்படும் நல்லாட்சியில் அவர்களின் பங்களிப்பை பெறவும் நீண்டகால இனப் பிரச்சனைக்கு ஏற்புடைய தீர்வை பெறவும் தென்னாபிரிக்க உதவியுடன் எரிக்சொல்கையும் சுமந்திரன் உட்பட புலம்பெயர் அமைப்புடன் ( எல்லாவற்றுடனும் அல்ல) நடத்திய சந்திப்புக்கு கரி பூசுவதை விடுத்து ஏற்படக்கூடிய நன்மைகளை ஆராய்வோம்.
30 வருட அழிவை அரசால் மட்டும் நிவர்த்தி செய்ய முடியாது. அதனால் மாகாண முதல்வர் நிதியம் உருவாக்கபட்டு அதை நிர்வகிக்கும் அதிகாரம் முதல்வரிடமும் கண்காணிப்பு மட்டும் மத்திய கணக்காய்வாளரிடமும் விடப்பட்டால் புலம்பெயர் தமிழர் அந்த நிதியத்துக்கு பங்களிப்பு செய்வர்.
வடக்கு கிழக்கு வழங்கள் சரியாக பயன்படுத்தப்பட பெருநிதி தேவை. அதன் மூலம் நன்னீர் ஏரிகளை பாதுகாத்தல், குளங்களை புனரமைத்தல், விவசாய அபிவிருத்தி, கூட்டுறவு பண்ணைகள், மீன்பிடித்துறை சிறுதானிய உற்பத்தி, விவசாய கடன் வழங்கும் நிதியங்கள், சிறுகைத் தொழிற் சாலைகள் என பிராந்திய அபிவிருத்தி ஏற்பட்டு தன்னிறைவு காணமுடியும். மேலும் புலம்பெயர் தமிழர்களின் துறைசார் அறிவும் அவர் தம் ஆலோசனைகளும் எமக்கு கிடைக்கும்.
இன்று தெற்கில் ஏற்படும் என எதிர்பார்கப்படும் மாற்றத்தை நாம் அனைவரும் ஒருமித்த நோக்கில் பயன்படுத்தினால் மட்டுமே எம்மால் அழிவுகளில் இருந்து மீள் எழுந்து வரமுடியும்.
வெறுமனே வஞ்சம் தீர்க்கும் மனநிலையில் இருந்தால் நாம் தான் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாவோம். 2 அணுகுண்டுகளை தன் மண்ணில் போட்ட அமெரிக்காவை ஜப்பான் வென்றது அதன் பொருளாதார அபிவிருத்தியால்.
இறுதி அழிவிக்கு பழிவாங்க சர்வதேச விசாரணை கேட்பவர்கள் புலிகள் (பெருமளவில் செய்தவர்கள்) உட்பட மற்றவர்களும் செய்த படுபாதக செயல்களுக்கு உள்ளக விசாரணையாவது வைக்க தயாரா?
பல தசாப்தங்களாக வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களை சில மணி நேரத்தில் சகலதையும் பறித்து பஞ்ச பராரிகள் போல் வெளியேற்றியதை விசாரிப்பார்களா ? எனக்கொரு நீதி அடுத்தவனுக்கொரு நீதியா ? சிந்தியுங்கள்.
இந்தியாவோ சர்வதேசமோ தம் நலன் சார்ந்தே செயல்படும். தென்னிலங்கை கூட அவர்களின் நெருக்குதல் காரணமாகவே மாற்றத்தை ஏற்படுத்தவிரும்புகிறது. ஜனாதிபதியாக வந்திருப்பவர் கூட உலக உள்ளூர் நிலைமைகளையே கவனத்தில் கொள்கிறார்.
அவர் வடக்கு கிழக்கை மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களையும் கவனத்தில் கொண்டதால் தான் தேசிய அரசாங்கம் பற்றிய சிந்தனையில் இருக்கிறார்.
அதனால் வெறுமனே பாராளுமன்ற கதிரைகளுக்காக நாலுகால்கள் போல சண்டையிடாமல் இனியாவது ஒரு பொது முடிவிற்கு வாருங்கள். சாம்பாலில் இருந்து மீண்டு வருவது பீனிக்ஸ் பறவை மட்டுமல்ல எம் ஈழ தமிழ் இனமும் தான் என்பதை நிகழ்த்தி காட்டுவோம்.
உங்களால் ஒன்றுபட முடியவில்லை என்றால் பகிரங்கமாக அதை தெரிவித்து விட்டு விலகி வடக்கு கிழக்கில் ஏன் தெற்கிலும் வாழும் எம் புத்திஜீவிகளுக்கு கல்விமான்களுக்கு சமூகசேவையாளருக்கு வழிவிடுங்கள்.
தொடர்ந்தும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும். நீங்கள் ஏற்படுத்திய அழிவுகளுக்கு நீங்களே நிவாரணம் ஆகுங்கள். இல்லை என்றால் இன அழிப்புக்கு வித்திட்டவர்கள் துணைபோனவர்கள் என்ற தீராப்பழி உங்களை வரலாற்றில் பதியும்.
மாதவன் சஞ்சயன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com