Contact us at: sooddram@gmail.com

 

எம் சமூக, தனிநபர் சீரழிவுகளில் இருந்து மீண்டு வருவோமா ?

(மாதவன் சஞ்சயன்)

இந்த கட்டுரையின் தலையங்கத்துக்கே கேள்விக்குறி வைக்கும் நிலைக்கு எம்சமூகம் இன்று தள்ளப்பட்டுள்ளது. தினசரிகள், வார சஞ்சிகைகள், உட்பட இணையங்களை பார்த்தால் அதீத மதுபாவனை, போதைபொருள் விநியோகம், கடத்தல், கப்பம் கேட்டல், பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஸ்பிரயோகம், கூட்டு பாலியல் வன்புணர்வு, வாள் வெட்டுகள், ஆசிரியர் மாணவர் காதல் என நாறிக்கிடக்கிறது எம் சமூக கட்டமைப்பு. 1950 பதுகளில் பிறந்த எம்போன்றவர், எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட, ஒரு சில சம்பவங்கள் இன்று நாளாந்தம் பல்கிபெருகி நடந்தேறுகிறது. அன்று உருத்திரபுரம் கோகிலாம்பாள் (கள்ளதொடர்பால் கணவனான ஐயரை கொலை செய்வித்தவர்) கொலை வழக்கு, ஆனைக்கோட்டை கூளாவடி தாய் மகள் (வேலைக்காரன் உலக்கையால் அடித்து கொன்றது) கொலை, கம்பர்மலை கொலை (கொலை குற்றவாளிகளை கொல்லபட்டவரின் உறவினர் நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து வெட்டி சாய்த்தது.) ஆனையிறவு அழகி மாலினி தற்கொலை (கணவனின் நண்பனுடன் கள்ளத்தொடர்பால் விளைந்தது) போன்றவைதவிர க. பொ. த. சோதனை தோல்வியால் பொலிடோல் குடிப்பது, என வரும் சில செய்திகள் எம்மை திகைப்பில் ஆழ்த்தும்.

நாம் அப்போது காதலில் தோல்வியா ? கடன்காரர் தொல்லையா ? பரீட்சையில் சித்தியில்லையா ? உடனே அருந்துங்கள் பொலிடோல் என பகிடிவேடுவோம்.
அந்தளவிற்கு கட்டுபாடான ஒரு நிலைமை கானாப்பட்டது. மேலும் இவ்வாறான செய்திகள் ஒரளவு தணிக்கையுடன் தான் பத்திரிகையில் வரும். மித்திரன், தந்தி போன்றவை சற்று வெளிப்படையாக எழுதும். அதனால் எனக்கு தெரிந்து பலவீடுகளில் ஈழநாடு பத்திரிக்கை மட்டும் வாங்கப்படும். சிலர் பூலான்தேவி தொடர் வாசிக்க மித்திரன் வாங்குவார்கள்.
அன்று சமூக கட்டுப்பாட்டின் பாதுகாவலர்கள் பாடசாலை அதிபர்களே. யாழ் சென் ஜோன்ஸ் முதல் பருத்தித்துறை ஹாட்லிவரை இருந்த அதிபர்கள் நல்மாணாக்கரை உருவாக்கினார்கள். ஆனந்தராஜா, பூரணம்பிள்ளை, கொக்குவில் இந்து ஹண்டி மாஸ்டர், யாழ் இந்து சபாலிங்கம், ஸ்கந்தா ஒறேற்ரர் சுப்ரமணியம், மகாஜனா ஜெயரட்ணம் வட்டுக்கோட்டை தியாகராஜ மாஸ்டர், செல்வி ஆறுமுகம் என மேலும் பல யாழ் மாவட்ட பாடசாலை அதிபர்கள் அனைவரும் எம் மாணவர்களின் காவலர்களாகவே செயல்பட்டனர்.

அப்போது பொலிஸ் நிலையங்கள் மிகவும் குறைவு. இருந்தும் குற்றங்கள் குறைவு. ஒரு ஊரில் வசிப்பவரை அந்த ஊரை சேர்ந்த பெரும் பான்மையோர் அறிந்திருந்தனர். நீ இன்னாரின் மகன் அல்லவா என வழிமறித்து கேட்கும் அளவிற்கு நெருக்கமான சமூக அமைப்பு இருந்தது.
பாடசாலை விட்டதும் ஒழுங்கையால் வரும்போது யார் வீட்டு மாமரத்துக்காவது கல் எறிவது எம்சிறு பிராய சேட்டை. ஆனால் வீடு சென்று சேருமுன் வாசலில் மருதோன்றி கம்புடன் வரவேற்புகிடைக்கும். அவ்வளவு வேகமாக சயிக்கிளில் எம்மை முந்தி சென்றவர் எம் வீட்டில் செய்தி வாசித்திருப்பார்.

ஒருமுறை சுதுமலை அம்மன் தேர் இழுக்க யானை வந்திருப்பதாக அறிந்து பாடசாலை விட்டதும் ( வீட்டில் பின்னேர வகுப்பு நடந்ததாக பொய் கூறலாம் என்ற திட்டத்துடன் ) யானை பார்க்க போனோம். கடும் கோடை என்பதால் யானை கோவில் கேணியில் சூடு தணித்து கொண்டிருந்தது. நாம் மேலே நின்றபடி கையில் அகப்பட்ட சிறு கற்களை யானை மீது போட அது பதிலுக்கு சேற்று தண்ணீரை எம்மீது பிசிறி அடித்தது. வெள்ளை பாடசாலை உடை மண்ணிறமாக மாற வசமாக வீட்டில் வாங்கிகட்டினோம். யானை கூட எம்மை காட்டிக்கொடுத்த காலமது. கொழும்பில் செய்யும் தவறுகள் கூட காலை முதல் இரவு தபால் ரயில் வரை ஓடிய 4 ரயில்களில் பயணிப்பவர்களால் அவரவர் வீடுகளுக்கு சென்று சேரும் காலமது. அப்படி இருந்த நாமா இப்படியாகி விட்டோம் என எண்ணத் தோன்றுகின்றது.

விடுதலை போராட்டம் எமக்கு எதையும் தரவில்லை என்றாலும் அதன் பின்பான சமுதாய சீரழிவுகள் பல்கி பெரு கிவிட்டன. இடப்பெயர்வுகள், அகதிவாழ்வு, இளம் விதவைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, தொழில் இன்மை, புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியை துஸ்பிரயோகம் செய்பவர், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர், போராட்ட காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கியமை என பல காரணிகள் தான் இதற்கு காரணம்.
பாடசாலைகள், காவல்நிலையம் நீதிமன்றம் என்பன மீண்டும் செயல்பட தொடங்கினாலும் அவை இந்த சீரழிவுகளை கட்டுப்படுத்த தவறிவிட்டன எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

சில பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் தம் மாணவருடனே மதுவருந்தும் நிகழ்ச்சிகளும், பொலிசாருக்கும் ராணுவத்துக்கும் விருந்து வைக்கும் கூட்டமும், கேடுகெட்ட செயலை செய்தவனுக்கு பிணை வாங்கி கொடுக்கும் பணத்தாசை வக்கீல்களும் தினம் தினம் நாம் அறியும் விடயங்கள். ஆரம்பத்தில் திக்குக்கு ஒன்றாக மறைவாகவே கள்ளு கொட்டில்கள் இருந்தன.1970 ல் என் எம் பெரேரா நிதியமைச்சராக இருந்தபோது தான் அவை தெருவோர தவறணைகளாக மாறியது. கூடவே சாராயம், பியர் அருந்தும் பார்களும் வந்தது. அரசுக்கு வருமானம் தரும் துறையாக அது காணப்பட்டபோதும் அவர்கள் மீதான கண்காணிப்பும் கலால் துறையினரால் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. ஒரு சில பெரும் குடி மக்கள் மின்கம்பத்தை நாய் கண்டதும் காலை தூக்குவதுபோல தாமும் மின்கம்பத்துக்கு முட்டுக்கொடுத்து மேலதிகமாக குடித்ததை வாயால் வெளியேற்றும் ஒரு சில சம்பவங்களே அன்று காணப்பட்டன.

போராட்டகாலத்தில் இவை பெருமளவு குறைந்திருந்தன. ஆனால் யாழ்பாணம் விடுவிக்க பட்டதும் அது மீண்டும் முளைவிடதொடங்கி யுத்தம் முடிவிற்கு வந்த பின் விருச்சமாகிவிட்டது. அண்மைய செய்தியின்படி அதிக மது பாவனை உள்ள மாவட்டங்களாக மட்டக்களப்பும், யாழ்பாணமும் முன்னிலை வகிக்கின்றன. இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது இதற்கான லைசன்ஸ் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதே. பெரும்பான்மையான அனுமதி பத்திரங்கள் எம். பி மாரின் சிபாரிசில் அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு உதவுபவர்களுக்கே பெற்றுகொடுக்க பட்டிருப்பதாக உள்ளக தகவல். தமக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மை சொல்ல விரும்பினால் வடக்கு கிழக்கு எம் பி கள் தாம் பெற்றுகொடுத்த அனுமதிகளை பகிரங்கபடுத்துவார்களா?

அன்று இலைமறை காயாக இருந்த மது விருந்துகள் இன்று பகிரங்கமாக சமுதாயத்தின் அங்கீகரிக்கபட்ட விடயம்போல் நடைபெறும் அளவுக்கு நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டோமா என எண்ணத்தோன்றுகிறது. முன்பு அம்மை நோய் வந்தால் பனங்கள் அருந்தும் பழக்கம் சில கிராமங்களில் இருந்தது. அது மருந்தாகவே கொள்ளப்பட்டது. ஆனால் அண்மையில் சுண்ணாகம் நிலைத்தடி நீர் நஞ்சு கலந்தமைக்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்து தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் பின் ஆளுநர் உத்தரவாதத்தால் அதை முடித்தவர்கள் சில மணி நேரத்தின் பின் பியர் குடித்து கொண்டாடிய படங்கள் பார்த்து புளகாங்கிதம் அடையவா முடியும்?

முன்பு தமிழ் பரியாரிமார் வைத்தியத்துக்காக அபினும், முஸ்லிம்கள் இறைச்சியை மென்மையாக்க கஞ்ஜாவும் பயன்படுத்துவதாக கூறுவார்கள். அவை வெளியில் பெரிதாக புழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் இன்று பொதி பொதியாக மாதகல் கரையில் வந்து இறங்குகிறது கேரளத்து கஞ்சா. மிக வேதனையான விடையம் அதே மாதகல் கரையில் தான் மகிந்தவும் சங்கமித்தையும் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரக் கிளையுடன் வந்திறங்கினர். பின் மிகிந்தலையில் தேவனம்பியதீசனை சந்தித்தனர். இலங்கையில் புத்தமதம் பரவியது.
இன்று அதே கரையில் வந்திறங்கும் கேரளத்து கஞ்சா எம் வடபகுதி வாலிபர்களின் வாய்களினால் உள்வாங்கப்பட்டு அவர்களை கேடுகெட்ட செயல்களை செய்யத்தூண்டி வாள்வெட்டுகள் முதல்கூட்டு வன்புணர்வுகள் வரை அத்தனை சமூக சீர்கேடுகளும் அரங்கேறுகின்றன.

மதுவும் போதையும் அவர்களை மனித மிருகங்களாக மாற்றுவது சமுதாயத்துக்கு மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்துக்கும் கேடாகி அவர்களை மனநலம் குன்றியவர்களாகவும் (பைத்தியம்) மாற்றுகின்றது. யாழ் வைத்திய சாலையிலும் அங்கொடை முல்லேரியா வைத்திய சாலையிலும் பல தமிழ் இளைஞர்களை பார்த்து பரிதாபபட்டேன். அனைவரும் இளவயதினர்.
குளங்களில் மழைகாலத்தில் நீர் நிரம்பும் போது அளவுக்கதிகமான நீரை துருசை திறந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மடைதிறந்த வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தும். அதே போல் 30 வருட யுத்த சூழலில் அடங்கி கிடந்த இளைஞரை ஆற்றுபடுத்தும் நடவடிக்கையை யுத்தம் முடிவுக்கு வந்தபின் எம் தமிழ் தலைமைகள் செய்ய தவறிவிட்டன.

தமது பதவி இருப்பு நிலைக்காக அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. பாடசாலை அதிபர்களும் எவன் எந்த இயக்கத்தில் உறவினரை கொண்டிருந்தானோ என்ற பயத்தில் ஒழுக்கம் பற்றி பேசப்பயந்தனர். மேலும் அவர்களில் பலர் போராளிகள் காலத்தில் அவர்கள் சொல்கேட்டு செயல்பட்டதால் இப்போது அவர்கள் இல்லாததால் நானே ராஜா எனவும் செயல்படுகின்றனர் . போராட்டம் தொடங்கியதும் முதலில் இழுத்து மூடப்பட்டது நீதிமன்றங்கள் தான். பல பிரபல சட்டத்தரணிகள் வெளிநாடுசென்றனர். எம் மண்ணில் கொடிகட்டி பறந்த பலர் அங்கு ஆரம்பத்தில் மிகவும் கஸ்டப்பட்டதாகவும் பின் எம்மவரின் தஞ்ச வழக்குகளே அவர்களை கைதூக்கி விட்டது என நண்பர்கள் கூறுவார்.

இங்கிருந்தவர்கள் பெரும் கஸ்டத்துக்கு முகம் கொடுத்தனர். யுத்த முடிவு அவர்களை மீண்டும் களம் காணவைத்தது. பலர் கொள்கைப்படி நடக்க சிலர் பணமொன்றே குறியாக கொண்டனர். போதை வஸ்து கற்பழிப்பு வழக்குகள் தான் அவர்களின் இலக்கு. அவரை பிடித்தால் வெளியில் வரலாம் எனும் எண்ணம் பலரை மீண்டு மீண்டும் குற்றசெயல்களை கிலேசமின்றி செய்ய வைக்க இவர்களும் பெருநிதி ஈட்டினார்கள். மக்கள் பாதுகாவலரான பொலிசாரும் நாட்டின் பாதுகாவலரான ராணுவமும் பல சமூக விரோதிகளுடன் நண்பேண்டா (எல்லோரும் அல்ல) எனவே பழகுவதும் மிகவேதனையானது. அவர்கள் வைக்கும் மது விருந்தில் மயங்கி அவர்கள் கடமை தவறுவது குற்றசெயல்களை அதிகரித்தது. அண்மையில் புங்குடுதீவு சம்பவம் பற்றி விசாரித்தபோது சம்மந்த பட்டவர்களின் மீது பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் நடவடிக்க எடுக்காதது பற்றி பலர் விசனம் தெரிவித்தனர்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அடிமட்டத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும். இடப்பெயர்வுகள் அகதிமுகாம் வாழ்வு எம் சமூககட்டமைப்பை சின்னா பின்னமாக்கி விட்டது என நாம் ஒதுங்கி விடக்கூடாது. எம் அயலவரும் எம் இனம் என்பதால் எமக்குள் பிணைப்பினை ஏற்படுத்த வேண்டும். நான் மல்லாகம் அவர் வடமராட்சி என மானிப்பாயில் பேசி பயனில்லை. நாம் அனைவரும் இடம் பெயர்ந்தவர்கள் (உள்ளூர் அகதிகள்). எமது பிள்ளைகளை கட்டுப்பாடுடன் கண்காணிக்க வேண்டியது எம் கடமை.
பாதை மாறிய போராட்டத்தில் பலத்தை இழந்த நாம் எம் ஆத்ம பலத்தை இழக்க கூடாது.

எம் மூலதனம் கல்வி. அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்மாணாக்கரை உருவாக்க வேண்டும். அன்று நல்லாசிரியர்கள் தான் எம் சமூகத்தை பெருமைப்பட செய்தவர்கள். குறைந்த வளங்களுடன் நிறைந்த சேவை செய்து கல்வியில் விளையாட்டில் ஒழுக்கத்தில் எம் மாவட்டத்தை முன்னிலைக்கு கொண்டுவந்தவர்கள். பெற்றோரை விட அதிக நேரத்தை மாணவர் ஆசிரியர்களுடன் செலவிடுகின்றனர். அவர்களை நல்வழி படுத்தும் கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. அவர்கள் வழிமாறி போகாமல் கண்காணிப்பதும் அவர்தம் செயல்தான். ஆசிரிய மாணவர் உறவு பெற்றோர் பிள்ளைகள் உறவுபோல் மீண்டும் மலரவேண்டும்.

சட்டம் ஒழுங்கின் காவலர்கள் பொலிசாரே. அவர்களை நம்பித்தான் நாம் பய பீதியின்றி வாழ்கின்றோம். அவர்கள் தம் கடமைகளை பாரபட்சமின்றி செய்தாலே போதும் சமூகவிரோதிகள் களையெடுக்க பட்டுவிடுவர். எனவே பொலிசார் அவர்களுக்கு விலைபோபவர்களாக தம்மை சிறுமைப்படுத்த கூடாது. பொலிஸ் சேவையில் இன மத பேதம் இல்லை. சட்டத்தை பாதுகாத்தாலே அவர்கடமை. அதை அவர்கள் செய்யவேண்டும். அண்மையில் வெள்ளவத்தையில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ் வந்திருக்கும் அதிகாரியின் செயல்பாடுகள் பொலிசாரின் நடவடிக்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையும் அண்மையில் மாவட்ட நீதிபதியாக வந்துள்ளவர் நடவடிக்கைகளால் ஏற்படுகிறது. அதற்காக ஏற்கனவே இங்கு செயல்படும் நீதிபதிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அதீத சமூக சீர்கேடுகளால் தினம் தினம் அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் படிப்படியாகவே குற்றசெயல்களை குறைக்கும். வந்திருப்பவர் சற்று அதிரடியாக பிணை மறுப்பு அறிவிப்பை செய்திருப்பது பணமிருந்தால் அதற்கான வக்கீல்களின் அனுசரணையில் வெளியே வந்து விடலாம் என எண்ணும் பிரகிருதிகளின் பிடரியில் விழுந்த அறை.

ஆசிரியர் பொலிசார் நீதிமன்றம் மட்டும் சமூக சீர்கேடுகளை களையெடுக்க முடியாது. அதற்கு எம் முழு மையான ஒத்துழைப்பு தேவை. உன்னை திருத்து உலகம் திருந்தும் என்பார்கள். அதே போல் நாம் அனைவரும் சீர்திருத்தத்தை எம் வீடுகளில் தொடங்கவேண்டும். பெற்றோரின் கண்காணிப்பு பிள்ளைகளின் மேல் இருக்கவேண்டும். இன்று பாவனையில் உள்ள இலத்திரனியல் சாதனங்கள் இளைஞர் தவறான பாதையில் செல்ல இலகுவான வழியாகும். அவற்றின் பாவனையில் பெற்றோர் கண்காணிப்பு அவசியம். தம் பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசும் பெற்றோர் அவர்களின் நண்பர்களின் பின்புலத்தையும் அவதானிக்க வேண்டும். முக்கியமாக அயலவருடனான உறவை வளர்த்து கொள்ளவேண்டும். பல இடங்களில் எம்மால் மீளக்குடியமர முடியாதநிலையில் நாமிருக்கும் சூழலுக்கு எம்மை எம் பிள்ளைகளை பரிச்சயமாக்க வேண்டும். அப்போது தான் எதுநடந்தாலும் உடன் தகவல்கள் பரிமாறபட்டுவிடும் என்ற பயம் சமூக விரோதிகளுக்கு ஏற்படும்.

30 வருடங்கள் பின்னோக்கி பயணித்து விட்டோம். 3 தலைமுறைகளை தொலைத்து விட்டோம். மீண்டுவர எம்மை நாமே புடம் போடவேண்டும். எம்மீது திட்டமிட்டு மதுவும் போதை பொருளும் எம் இளைஞரை திசைதிருப்ப திணிக்கபடுவதாக நொண்டிச்சாக்கு சொல்வதில் பயன் இல்லை. ஏனென்றால் மதுவை விற்பவர் எம்மவர், கஞ்சா கடத்துபவர் எம்மவர், மாவா எனும் போதை பாக்கை மாணவர்க்கு விற்பவரும் எம்மவரே.
(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com