Contact us at: sooddram@gmail.com

 

பிழையான பாதையில் தமிழ் தேசிய பயணம்!

மகிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர். சுமார் ஆறுமாதங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே யார் பெரிது என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது வடமாகாணசபைக்கு தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிஅளித்தமை தொடர்பில் பிரஸ்தாபித்தது கோடிட்டு காட்டுகிறது.

மக்கள் பணிசெய்வதில் இவர்களிடையே போட்டியில்லை. வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களும் வடமாகாண தமிழ் பேசும் மக்களினால் மக்கள் பணிசெய்வதற்காக தமது பொன்னான வாக்குகளை அளித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதனை போட்டியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

மகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களுக்கோ ஒன்றும் தரவில்லை என்று ஒப்பாரி வைத்தவர்கள் மைத்திரி அரசாங்கம் எனக்குத் தான் தரவேண்டும். உனக்குத் தரக்கூடாது என்ற கோதாவில் நிற்பது முழுத் தமிழ் மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மகிந்த அரசாங்கத்துடன் நெருங்கமாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களை தாங்கள் சார்ந்த பிரதேச அபிவிருத்திக்காக செலவளித்ததனை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலொன்று வருகின்ற நிலையில் பல சவால்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அந்தக் கட்சியினர் எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுமிடையிலான அதிகார போட்டி, குறிப்பாக வடமாகாண சபையில் காணப்படுகின்ற குறைபாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே சட்டத்தரணிகளுடைய மேலாதிக்கம், வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை விமர்ச்சிக்கின்ற தன்மை ஆகியன இந்தக் கட்சியினுடைய எதிர்கால செயற்பாடுகளை ஒரு மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எக்காலத்திலும் சவால் விடுகின்ற அளவிற்கு தனித்துவமாக காணப்படுகின்ற ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள், மைத்திரி அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலை, புலம்பெயர் தமிழர்களுடைய தற்கால நிலைப்பாடு ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அவளவு மகிழ்ச்சிதரக் கூடியதாக இல்லை.

வடமாகாண சபையை பொறுத்தளவில் முன்னைய ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். அமைச்சு செயலாளர்கள் உள்ளக ரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் மாற்றப்பட்டிருக்கின்றார்.

மேற்கொண்ட மாற்றங்கள் ஒரு பெயரளவிலான மாற்றங்களாக மட்டுமே இருப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.

வடமாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பாரியளவு ஊழல் இருப்பதாக கூறப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல்சிப் திட்டம் வடமாகாண சபை உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற உள்ளுராட்சி திணைக்களத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளினுடைய வீதி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால் பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தினர்.

சாதாரண ஒரு சிறிய விடயத்திற்கே ஒரு பிரேரணையை நிறைவேற்றும் வடமாகாண சபை இந்த பாரிய நிதிமோசடி தொடர்பில் எந்தவொரு பிரேணையும் நிறைவேற்றாதது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக நெல்சிப் திட்டத்திற்கு பொறுப்பான உள்ளூராட்சி ஆணையாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மகிந்த ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது ஆட்சி நடைபெறும் வடமாகாண சபையில் நெல்சிப் திட்ட ஊழலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

வடமாகாண சபையில் கீழ் வருகின்ற அமைச்சுக்கள் யாவற்றினதும், பொதுச்சேவை ஆணைக்குழுவினதும், பிரதம செயலகம், ஆளுநர் செயலகத்தினுடையதும் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது பொது நிர்வாக சுற்றறிக்கையிலும் இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது,

ஆனால், பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர், உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவை விசேட ஆளணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதில் என்ன வேடிக்கையென்றால் விவசாய அமைச்சு செயலாளரும், பேரவை செயலாளரும் இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட சேவை மூப்பு குறைந்த உத்தியோகத்தர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சிலருடைய தயவிலும் அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடைய அழுத்தத்திலும் பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி வடமாகாண சபையில் மட்டுமே செய்யப்பட்ட இந்த நூறுவீத அரசியல் நியமனங்கள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறப் போகும் தபால் மூல வாக்குகள் குறைவடைவதற்கு வாய்ப்பாகின்றது.

இதேபோன்று பொது நிர்வாக சுற்றறிக்கை, இலங்கை நிர்வாக சேவை பிரமாண குறிப்பு இரண்டையும் மீறி இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு திணைக்களத்தலைவர்களாக முடிசூட்டி அழகுபார்க்கப்படுகின்றது.

உண்மையில் திணைக்களத் தலைவர்களாக கட்டாயம் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டுமென்பதே விதி. கடந்த ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் சரி பிழைக்கு அப்பால் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் தற்போது தங்களுடைய ஆளுநர் தங்களுடைய பிரதம செயலாளர் என்று கூறிக் கொண்டு பிழையைச் சரியெனவும், சரியை பிழையெனவும் காட்டி அதிகாரிகளை வேண்டுமென்றால் ஏமாற்றலாம் ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது.

தவறுகள் திருத்தப்பட வேண்டும் ஒரு தவறை தொடர்ந்து செய்வதனால் தவறு சரியாகாது. பிழையானது சரிக்கு நிகராகாது. சரியை பிழையென்று காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த காலத்தில் சரியென நினைத்து புள்ளடி (x) போட்ட மக்கள் எதிர்காலத்தில் பிழையை நினைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு புள்ளடி (x) போடவும் தயங்க மாட்டார்கள் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(வீரவவுனியன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com