Contact us at: sooddram@gmail.com

 

கொல்வார்களாம் ஆனால் கண்காணிக்கக் கூடாதாம், நேருவைக் காயும் இந்துத்துவவாதிகள் அ.மார்க்ஸ்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் யதீஷ் யாதவ் என்பவரின் பெரிய கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. காந்தி கொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சிறிது காலம் தடை செய்ததையும், கோல்வால்கரைச் சந்திக்க மறுத்ததையும் நேரு செய்த ஜனநாயக விரோதச் செயலாக இக்கட்டுரை குற்றஞ்சாட்டுகிறது. எக்ஸ்பிரஸ் நாளிதழ் அப்பட்டமாக பா.ஜ.க வைஆதரிக்கும் இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. காந்தி கொலை உள்ளிட்ட பயங்கரவாதச் செய்ல்களை நிகழ்த்துவது, பின் அவற்றில் தமக்குத் தொடர்பே இல்லை எனச் சொல்வது. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க எந்த அளவிற்கும் இறங்கி யார் காலையும் தயங்காமல் பிடித்துக் கெஞ்சுவது என்பதெல்லாம் இந்துத்துவவாதிகளின் வழக்கம் என்பதை இந்துத்துவத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை.

காந்தி கொல்லப்பட்டபோது நாங்கள் இல்லை, நாங்கள் இல்லை எனச் சொன்னவர்கள் இன்று தாங்கள்தான் காந்தியைக் கொன்றோம். என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றனர். நாதுராம் கோட்சேயின் சகோதரனும் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவனுமான கோபால் கோட்சே இதைப் பெருமையோடு சொன்னான். அப்படிச் சொல்லத் தயங்கிய அத்வானியைக் கோழை எனப் பகிரங்கமாகத் திட்டினான். "நானும் நாதுராமும் எங்கள் வீட்டில் வளர்ந்ததைக் காட்டிலும் ஆர்.எஸ் எஸ் அலுவலகத்தில்தான் அதிகம் வளர்ந்தோம்" என்றான்.

காந்தி கொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டதையும், அந்த இயக்கம் கண்காணிக்கப்பட்டதையும் நேரு இழைத்த மிகப் பெரிய குற்றமாகவும், ஜனநாயக விரோதச் செயலாகவும், படேல் வற்புறுத்திப் பணிய வைக்கப்பட்டார் எனவும் இன்றைய எக்ஸ்பிரஸ் கட்டுரை புலம்புகிறது.

1947 - 50 காலகட்டச் சூழலை நாம்புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக அமையாமல் ஒரு மதச் சார்பர்ற அரசாக அமைந்ததில் காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு.அன்றைய மக்கள் மத்தியில் மிகப் பெரும்செல்வாக்குடன் விளங்கிய காந்தியின் பங்கு இதில் கூடுதல் எப்பதால் அவரை ஜென்மப் பகையாகக் கருதியது இந்துத்துவம். அவரைத் தீர்த்தும் கட்டியது.

காந்தியைத் தீர்த்துக் கட்டியது என்பது ஏதோ அவரை மட்டும் கொன்று தீர்த்துப் பழிதீர்த்துக் கொள்ளும் செயலாக மட்டும் இல்லை. அதன் மூலம் துளிர் விட்டு முகிழ்த்து வந்த ஒரு ஜனநாயத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயலாகவும் அவர்கள் அதை முயற்சித்தனர்.

அன்று காங்கிரஸ் கட்சிக்குள்தான் இன்றைய பா.ஜ.க இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடுத்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்சின் ஆணையை ஏற்று பாரதீய ஜனசங் கட்சியைத் தொடங்கிய சியாமா பிரசாத் முகர்ஜி காந்தியைக் கொன்றபோது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்லாது நேருவின் அமைச்சரவையிலும் இருந்தவர் என்பதும், ஒரே நேரத்தில் அவரும் அவரது சக இந்துத்துவவாதிகளும் காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபையின் உறுப்பினர்களாகவும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கன.

தவிரவும் துணைப் பிரதமர் வல்லபாய் படேல், உ.பி முதல்வர் வல்லப பந்த், குல்ஜாரி லால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி முதலானோர் மட்டுமின்றி குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் உட்படக் காங்கிரசுக்குள் இருந்த பலரும் இந்துத்துவச் சார்பு உடையோர்.

இந்நிலையில் காந்தியைக் கொன்று, ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி முகிழ்த்து வரும் இந்த மதச்சார்பற்ற ஜனநாயகத்தை முளியிலேயே கருக்க முயலும் செயலாகவும் காந்தி கொலை இருந்தது.

இந்நிலையில் நேரு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தத. இந்தச் சதிச் செயலை முற்றியடிக்க இந்துத்துவ அமைப்புகளைக் கண்காணிக்க வேண்டிய தேவை அன்று இருந்தது. ஐரோப்பிய பாசிஸ்டுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை அவர்கள் பேணியவர்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்சைத் தடை செய்தது என்பதோடு, ஒரே நேரத்தில் இந்து மகா சபையிலும் ஆட்சியில் உள்ள காங்கிரசிலும் இருக்கக் கூடாது என்கிற நிலையையும் காங்கிரஸ் எடுத்தது.

இங்கொன்றை நாம் மரந்துவிடக் கூடாது. அரசியல் சட்ட அவையில் சிறுபான்மையர் மற்றும் தலித் பிரச்சினைகளில்மிக மோசமாக நடந்து கொண்டவராயினும், அடிப்படையில் மதச் சார்பில் நாட்டமற்றவராயினும் வல்லபாய் படேல் காந்தியைக் கொல்வது என்கிற அளவிற்கு நினைத்தவரல்ல.அது உண்மையிலேயே அவரைப் பாதித்தது. ஆர்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரு சொன்னபோது அவர் அதை ஏற்றுக் கொண்டது இந்தப் பின்னணியில்தான். அதே போல ராஜாஜி போன்றோர் வலதுசாரிக் கருத்தியல் சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை இந்துத்துவவாதிகள் எனச் சொல்லிவிட இயலாது.

ஆர்.எஸ்.எஸ்சின் மீதிருந்த தடையை நீக்கி, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விடுதலை செய்வது என்பதற்கு ஆர்.எஸ் எஸ் தரப்பிலிருந்து, அவர்களது ஆதரவாளர்கள் மூலமாகத் தோடர்ந்து நேரு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளைவாக மிக விரைவில் தடை நீக்கப்பட்டு, அதன் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

நடந்தது இதுதான்.

தொடர்ந்த காலங்களில் நேருவின் கரம் வலுப்பெற்றது. இந்துத்துவவாதிகளின் சதி வேலைகள் வலுவிழந்தன.

காந்தி கொலையை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக நேருவைச் சந்திக்க கோல்வால்கர் முயற்சித்தபோது நேரு அதை மறுத்ததை ஒரு மிகப் பெரிய குற்றமாக இன்றைய எக்ஸ்பிரஸ் கட்டுரை பினாத்துகிறது.

ஒரு பயங்கரவாத அமைப்பு, அதன் பயங்கரவாதச் செயல்களுக்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருந்த சூழல், இந்நிலையில், உலகளவில் மதிக்கப்பட்ட ஒரு சிந்தனையாளரும், பிரதமருமான நேரு. அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவரை, ஒரு பிளவு சக்தியைச் சந்திக்க மறுத்தது எப்படித் தவறாக இயலும்.

எந்த வகையில் நேரு சந்திக்கும் அளவிற்கு கோல்வால்கர் ஒரு முக்கியமான மனிதன்?

எக்ஸ்பிரசும் அதன் கட்டுரையாளரும் ஒன்றை மறந்திருக்கலாம். நாம் அதை மறக்க இயலாது. ஆர்.எஸ்.எஸ்சைத் தோற்றுவித்தவர்களில் ஒரு நபர் மூஞ்சே. இவர் இத்தாலி சென்று பாசிஸ்ட் முசோலினியைச் சந்தித்து அடி தொழுது வழிந்து வந்த கதையை நான் என் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். ஆனால் நேருவோ முசோலினி கெஞ்சிக் கெஞ்சி அழைத்த போதும் அவனைச் சந்திக்க மறுத்தவர்.. மரணப் படுக்கையிலிருந்த மனைவி கமலாவைப் பார்க்க வந்து கொண்டிருந்த நேரு, சில மணி நேரங்கள் இத்தாலி விமான நிலையம் ஒன்றில் காத்திருந்தபோதுதான் முசோலினி தூதனுப்பியதும், நேரு அதை மறுத்ததும் நடந்தது.

நேருவின் பெருமைகளில் ஒன்று முசோலினியையும் கோல்வால்கரையும் சந்திக்க மறுத்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com