Contact us at: sooddram@gmail.com

 

சிங்கள மக்களின் மனங்களை வெல்ல தமிழ் தேசியத்தின் துரும்பாக டக்ளஸ், இது காலத்தின் தீர்ப்பு!

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களில் ஒரு தொகையினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் அணி சேர முயற்சித்து வருகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூர விசுவாசிக்கின்றது. இந்நிலையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் வெளிப்படையான மாற்றங்கள் வெளியில் தெரிகின்றன. குறிப்பாக புலிகள் இயக்கத் தலைமையால் வேண்டத் தகாதவர்கள், தீண்டத் தகாதவர்கள், துரோகிகள், விரோதிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள், தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரமுகர்களால் இப்போது அரவணைக்கப்பட்டு வருகின்றார்கள்.

இராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, பிரதிப் பாதுப்பு அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம். இவர்கள் மீது புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தி இருந்தனர். ஆனால் தமிழர்களின் எதிர்கால நலனை ஒட்டிய இராஜதந்திரம் என்கிற பெயரில் இவர்களுக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி உள்ளது.

இதே போல ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒட்டி உறவாடி வருகின்றது. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எப்போதும் தலையில் வைத்து கொண்டாடுகின்றது.

ஸ்ரீலங்காவின் ஆட்சி மையம் ரணில் விக்கிரமசிங்கவிடம் வருகின்றமையை புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒருபோதும் விரும்பி இருக்கவில்லை. இதனால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் புலிகளால் அறிவுறுத்தப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஸவை யதார்த்தவாதியாக கண்டு கொண்டார் புலிகளின் தலைவர்.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி, மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு உரம் சேர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதில் பங்களித்து, ஆட்சி மாற்றம் என்கிற பெயரில் அதிகார மையத்தை ரணிலிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்து உள்ளது.

புலிகள் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் பத்மநாபா. ஆனால் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைகளுக்கு மறைமுக கரங்களாக தமிழ் தேசிய அரசியல் வடிவங்களே இருந்து வந்து உள்ளன.

மேயர் துரையப்பா படுகொலையில் இருந்து வெளிநாட்டு அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் வரை இடம்பெற்று இருக்கக் கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள் படுகொலைகளில் தமிழ் தேசிய அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்படுத்தி பேசப்படுகின்றார்கள்.

ஆனால் வவுனியாவில் கடந்த தினங்களில் பத்மநாபாவுக்கு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக மாவை சேனாதிராசா பங்கெடுத்து இருந்தார். பத்மநாபாவை தியாகியாக பிரகடனப்படுத்தினார்.

மாற்று ஆயுதக் குழுக்களை புலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் மாற்று ஆயுதக் குழுக்களாக இயங்கியவர்களின் செல்வாக்கு ஓங்கிக் காணப்படுகின்றது என்கிற விமர்சனம் உண்மையானதுதான். உதாரணமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று இக்கட்சியின் பேச்சாளர்.

சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல வடிவங்களிலும் போராடி வந்து இருக்கக் கூடிய தமிழ் தேசியம் இன்று வேறு அரசியல் கண்ணோட்டத்தை ஆங்காங்கு வெளிப்படுத்துகின்றது.

சிங்கள தேசத்தால் இனவாதிகளாக காணப்படக் கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்சமயம் கவனம் காட்டுகின்றது. இதனால்தான் ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றி உள்ளார்கள். மேலும் வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுக்க தவறுவதற்கு இதுவே பிரதான காரணம் என்று அடையாளம் பெற்று உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இருந்தால் இக்கூட்டமைப்பின் தலைவராகவே எப்போதோ வந்து இருப்பார் என்று தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து இருந்தார். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால் டக்ளஸ் தேவானந்தா அரசியல் கொள்கைகளை மாற்ற வேண்டிய தேவை இப்போது கிடையாது. இவரின் கொள்கைகளை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்ந்து வருவதாக தோன்றுகின்றது. உச்ச கட்ட உதாரணமாக இன்றைய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்துகின்றது. இதே போல வரும் காலத்தில் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணக்க அரசியல் நடத்தவும் கூட்டமைப்பு தயங்காது என்றே தெரிகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் இணக்க அரசியலை உருவாக்குகின்ற முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி சாதுவாக ஈடுபட்டு இருக்கின்றார். இதே போல சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி புகழ் ஜே. ஸ்ரீரங்கா எம். பி இப்போது இம்முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

சிங்கள தேசத்தால் நல்ல சக்தியாக அடையாளம் காணப்பட்டு இருப்பவர் கே. என். டக்ளஸ் தேவானந்தா. இவர் பிரதமராக வருகின்றமையைக்கூட சிங்கள மக்கள் எதிர்க்க மாட்டார்கள். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்குகின்ற இவர் மாத்திரமே வடக்கு - கிழக்கு இணைப்பை மீண்டும் பெற்றுத் தர வல்ல தமிழ் தலைவர் என்பதும் இவர் இவ்வாறு கோருகின்றமையை இனவாதமாக சிங்கள மக்கள் இனவாதமாக பார்க்க மாட்டார்கள் என்பதும் வெளிப்படை உண்மை.

இச்சூழலில் சிங்கள தேசத்தின் மனோ நிலை என்கிற விடயத்தை துரும்புச் சீட்டாக அல்லது பிரமாஸ்திரமாக பயன்படுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு தொகையினர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னிறுத்தி அரசியல் நடத்த தயாராகி உள்ளார்கள். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான தளபதிகளும் அடங்கப் பெறுகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய மாற்றங்களில் பல ஏமாற்றங்களை கொடுத்து இருக்கின்ற நிலையில் இப்புதிய மாற்றம் ஏற்றம் கொடுக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(மிதிலைவாசன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com