Contact us at: sooddram@gmail.com

 

விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட

யாழ்ப்பாணம் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபரை நினைவு கூரல்  - ஒரு மகனின் பிரதிபலிப்பு

1985 ஜூன் 25ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் எனது அன்பிற்குரிய தந்தை கொல்லப்பட்டு Rev.-Dev-Anandarajan--e1434929217411இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து பல விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முன்னெடுத்த வன்முறைப் பாதையை பற்றியும், மற்றும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான அவர்களின் மனக்குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக எல்.ரீ.ரீ.ஈக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைப் பற்றியும் எங்களால் சிந்தித்துப் பார்க்க முடியும் என நான் நம்புகிறேன். ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள், இரு தரப்பினரும் கையாண்ட வன்முறை வழிகள் மற்றும் அது நம்மை எங்கு இட்டுச் சென்றது என்பதைப் பற்றிய ஒரு பாடத்தை கற்பதற்கு, ஸ்ரீலங்கா குடிமக்கள் என்ற வகையில் (தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்) எங்களுக்கு ஒரு கூட்டான முதிர்ச்சி இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

நான் மோதல் தொடர்பான அரசியலில் தங்கியிருக்கவில்லை, ஆனால் மாறாக எல்.ரீ.ரீ.ஈ யினால் ஒரு துரோகி எனச் சித்தரிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட காலஞ்சென்ற எனது தந்தையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க விரும்புகிறேன். அவர்கள் அறியாததும் மற்றும் உணரத் தவறியதும் என்னவென்றால், அவர்கள் கொலை செய்த அப்படியான பல மனிதர்கள் தாங்கள் சேவை செய்த மண்ணையும் மற்றும் மனிதர்களையும் நேசித்தவர்கள் என்பதை.

அவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகளோ அல்லது தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கோ எதிரானவர்கள் அல்ல, ஆனால் மிகவும் வெடிக்கும் தன்மையுள்ள அரசியல் சூழ்நிலையில் தங்கள் கடமைகளை நிறைவேற்றி வந்தவர்கள். போராளிகளாலும் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலும் கொல்லப்பட்ட பலருக்கு எங்களைப் போன்றவர்கள் செய்ததைப் போன்று பசுமையான வளங்களையும் மற்றும் பாதுகாப்பையும் தேடி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஆனால் அவர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள் ஏனென்றால்; அவர்களின் உறுதியும் அர்ப்பணிப்பும்தான் அதற்கான காரணங்கள்.

நான் கடைசி முறையாக எனது தந்தையை கண்டது 1984 டிசம்பரில், அப்போது அவர் எனது தாய் மற்றும் சகோதரனுடன் ஒரு விடுமுறையை கழிக்க பெங்களுர் வந்திருந்தார். வசந்தி மற்றும் ஜெயந்தி என்கிற எனது இரண்டு சகோதரிகளும், நானும் ஏற்கனவே இந்தியாவில் தங்கியிருந்தோம். பெங்களுரிலுள்ள விஸ்ராந்தி நிலையத்தில் உள்ள ஒரு குடிலை வாடகைக்கு எடுத்து மகிழ்ச்சிகரமான ஒரு குடும்ப நேரத்தை செலவிட்டோம். எங்கள் குடும்பத்திலுள்ள சொர்ணா மட்டுமே அதை தவற விட்டிருந்தாள், ஏனென்றால் அவள் திருமணம் செய்து பிரித்தானிய கயானாவில் அப்போது வசித்து வந்தாள். அப்போதுள்ள அரசியல் சூழ்நிலை பற்றி அறிந்திருந்ததால் ஊட்டியில் உள்ள ஒரு மிஷன் பாடசாலையில் எனது தந்தையை சேர்த்து விடுவதற்கான விசாரணைகளை நான் மேற்கொண்டு வந்தேன், இதைப் பற்றி அவரிடம் நான் குறிப்பிட்டபோது அவரது உறுதியான பதில் ‘நான் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து அங்கேயே மடிவேன்’ என்பதாக இருந்தது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தரப்படுத்தல் கொள்கைகைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த மாணவர் அமைப்பு ஒன்று பாடசாலை அதிபர்களையும் மற்றும் கல்வியாளர்களையும் அதில் பேச வைப்பதற்காக அவர்களை அணுகியது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் இலக்கு வைக்கப் படுவோம் என அஞ்சி பலரும் அதில் பேச மறுத்துவிட்டனர். ஒரு பகிரங்க மேடையில் தான் கண்டிக்கும் கொள்கையைப் பற்றிப் பேச எனது தந்தை விருப்பத்துடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

பலரும் அறிந்திராத மற்றொரும் சம்பவமும் உள்ளது. 70களின் பிற்பகுதியிலும் மற்றும் 80 களின் ஆரம்பத்திலும் மாணவர்களின் அமைதியின்மை ஆரம்பித்த போது, பல குழுக்கள் முளைத்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தள நிலமை மற்றும் அரசியல் சூழ்நிலை என்பனவற்றை பற்றிய செய்தி சேகரிப்புக்காக ஒரு பிரபலமான பி.பி.சி செய்தியாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இந்த எதிர்ப்பு குழுக்களின் தலைவர்களை நேர்காணல் செய்வதற்கு அவர் மிகவும் ஆவல் கொண்டிருந்தார். பாதுகாப்புகள் பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில் ஒரு சந்திப்பை மேற்கொள்வது அசாத்தியமான ஒன்றாக இருந்தது. இதைப் பற்றி எனது தந்தை கேள்விப்பட்டபோது அதிபரின் இல்லத்தில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும் ஆபத்தான வேலையை அவர் ஏற்றெடுத்தார். பல்வேறு குழுக்களையும் சேர்ந்த தலைவர்கள் அந்த இல்லத்துக்கு வந்து செய்தியாளரைச் சந்தித்தார்கள். அன்று மாலையே அந்த செய்தியாளர் அந்த செய்தியை பி.பி.சி தலைமையகத்துக்கு பாடசாலை அதிபர் இல்லத்திலிருந்த தொலைபேசி வழியாக அனுப்பினார்.

இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைப் பாதையை எனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்கே போய் முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். விசேடமாக அவர் யாழ்ப்பாணம் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர்களைப் பாதுகாக்க விரும்பினார், அவரது கல்விப் பாதுகாப்பின் கீழ் போராளிகளின் பிரச்சாரத்துக்கு இரையாகாமல் மாணவர்கள் காப்பாற்றப் பட்டார்கள். வன்முறைப் பாதையை முன்னேற்றும் ஒரு மேடையாக சென்ட் ஜோன்ஸ் கல்லூரி மாறுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அந்த ஞ}னத்தின் பிரதிபலிப்பு நல்ல ஒரு காரியமாக இருந்தது.

ஒருமுறை ஒரு போராளிக்குழு பாடசாலைக்குள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க விரும்பியது. அவர் அதை தடுத்தது மட்டுமன்றி, போராளிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடம் சொல்லியது, தான் சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கு பொறுப்பாக இருப்பதாகவும் மற்றும் தனது கட்டளைக்கு எதிராக அவர்கள் செயற்பட்டால் அந்தக் கணமே தான் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியை விட்டு வெளியேறுவேன் என்று அவர்களிடம் உறுதிபடச் சொன்னார். போராளிகள் மரியாதையுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றார்கள்.

எனது தாய், எனது சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோர் இந்த 30 வருடங்களை நாங்கள் எப்படிப் பயணப் படுதினோம் என்பதைப் பற்றி பிரதிபலிக்க ஒரு நேரம் இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்கையில் வேதனை, கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி எல்லாமே அதில் கலந்திருந்தது. எங்கள் வேதனைகளை, இந்த அர்த்தமற்ற போரில் தங்கள் பிரியப்பட்டவர்களை இழந்து வேதனை அனுபவிக்கும் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம், அவர்கள் அரசியலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் நீண்ட காலமாக எங்கள் வலிகளுடன் அரசியல் விளையாட்டை விளையாடி வந்திருக்கிறோம் மற்றும் அதை நிறுத்த வேண்டியது அவசியம். இந்த வலிகளை மனிதத் தன்மை உள்ளதாக்கவேண்டும் எனவேதான் நாங்கள் எங்கள் பிரிவினை எல்லையை கடந்து அதை தீர்க்கவேண்டிய கரங்களைப் பற்றிக்கொள்ள முடியும் நாங்கள் சென்றுள்ள மனிதத் தன்மையற்ற வழிகளுடாக மீண்டும் செல்லக்கூடாது. குறைந்த பட்சம் எங்கள் பகுதியை உறுதிப் படுத்துவதற்குக் கூட அரசியல் பிரிவினைகளுக்கு இரையாகி விடக்கூடாது.

எனது தந்தையின் மரணம் கூட நீதி, மனித உரிமைகள், மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பு பாதைகள் என்பனவற்றை என்பனவற்றில் எங்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி உள்ளது. போரின் கொடுமையான முடிவு எங்களுக்கு தரும் சமிக்ஞை, எல்.ரீ.ரீ.ஈயின் தோற்றுப்போன கொள்கைகள், அதேபோல ஸ்ரீலங்காவின் ஆளும் உயரடுக்கினர் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார லாபங்களுக்காக நாட்டையும் மற்றும் மக்களையும் சூறையாடத் தயங்காத சுயலாபம் தேடும் அரசியல்வாதிகள் ஆகியோரை நாங்கள் உறுதியாக உடைத்தெறிய வேண்டும் என்பதையே. அதற்குப் பதிலாக சுரண்டப்பட்ட, பின்தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட அனைவரையும் ஐக்கியப் படுத்துவதற்கு புதிதாக துணிவுமிக்க ஒரு இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

அதேவேளை ஸ்ரீலங்காவிலுள்ள இனங்களுக்கு இடையேயான தொடர்புகள் சம்பந்தமாக செய்யவேண்டிய தேவைகள் நிறைய உள்ளன. அடிப்படையான இயக்கங்கள் இது தொடர்பாக திட்டங்களை ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, இதன்மூலம் தொடர்பாடல்கள் நடைபெறுகின்றன. புலம்பெயர் சமூகங்களுக்கும் அழைப்புகள் விடுக்கப் பட்டுள்ளன. எங்களுக்கு முன் உள்ள சவால், எங்களை தத்தெடுத்த நாடுகளில் வாழும் பல்வேறு இன மற்றும் மத பின்னணியை கொண்ட ஸ்ரீலங்கா வம்சாவளி மற்றும் பின்னணியினைக் கொண்ட மக்களின் மாதிரியான ஒரு இணைந்த சமூகமாக எங்களால் இருக்க முடியுமா என்பதுதான். இந்த சமூகம் ஒரு ஊக்கியாக, ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிடைத்த வாய்ப்புகள் தோற்றுப் போனதுக்கு மற்றும் தவறிப் போனதுக்கு மாற்றீடாக ஒரு முன்மாதிரியை ஏற்படுத்த முடியும்.

இந்த சமூகம் ஒரு திறந்த சமூகமாக அங்குள்ள அங்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் செவி மடுப்பவாகளாக, கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்களாக மற்றும் அங்கு பகிரப்பட்ட கருத்துக்களை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி ஒவ்வொரு சமூகத்தினதும் நன்மைகளை உறுதிப்படுத்தும் விதமாக ஒருமித்து நிற்க வேண்டும். மேலும் அங்கு மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் என்பன குறிப்பிட்ட ஒரு இனக் குழுவின் நலன்களுக்காக மட்டுமன்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டியதை வலுவான அர்ப்பணிப்புடன் செயற்படுத்துவது அவசியம்.

இன்னமும் கசப்பு, வெறுப்பு, சந்தேகம், தூஷித்தல் போன்றவை சமூகங்களுக்கு இடையேயும் மற்றும் உள்ளேயும் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து சமூகங்களிலும் அரசியல், குடியியல் மற்றும் மத மட்டங்களில் தலைவர்கள் இருப்பது அவசியம் அது சகிப்புத் தன்மை உள்ள இலட்சியம், ஏற்றுக்கொள்ளல், மற்றும் மிகவும் முக்கியமாக மன்னிப்பு என்பனவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கும், எனவே வெறுப்பு மற்றும் கசப்பு என்பனவற்றை அமைதியாக்கி புரிந்துணர்வின் அடிப்படையில், நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி வேலை செய்வதற்கான வலுவான விருப்பத்துடன் நியாயமான பேச்சுக்களை ஆரம்பிக்க முடியும். இந்த பாதை அத்தனை இலகுவானதல்ல. ஆனால் எங்கள் சொந்த மனிதர்கள் மற்றும் எங்கள் எதிர்காலச் சந்ததி என்பனவற்றின் நன்மைக்காக நாம் இதை தொடரவேண்டும், எனவேதான் சமாதானமான ஒரு ஸ்ரீலங்கா உருவாக கனவு கண்ட எனது தந்தை மற்றும் அவரைப் போன்றவர்களின் மரணம் வீணாகப் போய்விடாமல் இருக்கும்.

(வண. தேவ் ஆனந்தராஜன் அவுஸ்திரேலியாவில் உள்ள தேவாலய ஒருங்கிணைப்பில் ஒரு சமய அமைச்சர். அவர் 1996ல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஒருங்கிணைந்த தேவாலய மிஷன் ஆணையத்தின் விக்டோரியா மற்றும் டாஸ்மானியா ஆயர்களின் கீழ் உள்ள உள்ளக கலாச்சார பிரிவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணி புரிகிறார்.)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com