Contact us at: sooddram@gmail.com

 

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை

பருத்தித்துறை நகரில் மகளிர் கல்வியின் நிலைக்களனாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை விளங்கி வருகின்றது. நூற்றுத் தொண்ணூறு ஆண்டுகள் தொன்மையும் பெருமையும் மிக்க இப்பாடசாலையைமுன்னோக்கி மேல்நோக்கி ஒளியை நோக்கிஎன்னும் மகுடவாசகம் தாங்கி ஆங்கில அதிபர்களாலும் தேசிய அதிபர்களாலும் வளர்க்கப்பட்டுள்ளது. இப்பாடசாலை 1823 ஆம் ஆண்டு வண தோமஸ் ஸ்குவான்ஸின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் ஆரம்பத்தில் கிறிஸ்தவ பாதிரிமாரே முகாமையாளர்களாக இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டு வரை ஆங்கில மாதர்களான செல்வி பெஸ்ரல், செல்வி றிஸ்டேல், செல்வி பிற்aஸ்வால்ஸ், செல்வி பியூச்சம்ப் ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றினர்.

1910 ஆம் ஆண்டில் செல்வி பாக்ஸ் அம்மையாரும் செல்வி பிராங்பேட் அம்மையாரும் 1926 ல் செல்வி றொபின்சன் அம்மையாரும் அதிபர்களாகக் கடமையாற்றிய காலங்களில் இப் பாடசாலை கல்வியில் மாத்திரமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் வளர்ச்சியைக் கண்டது.

1938ல் செல்வி எவறெட் அம்மையார் அதிபராக இருந்த காலத்தில்துவிபாஷாபாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு 1942 ஆம் ஆண்டு இது உயர்தர ஆங்கில பாடசாலையாக வளர்ச்சி கண்டது. தொடர்ந்து செல்வி பாக்ஸ், செல்வி டோர் ஆகியோர் கடமையாற்றினர்.

இப் பாடசாலையில் முதலாவது தேசிய அதிபராக 1950 ஆம் ஆண்டு செல்வி ஆர். எம். சின்னையா பதவியேற்றார். இவரின் முயற்சியால் பாடசாலையின் பெளதிக வளங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. இவரது காலத்தில் தரம் 1ற்குரிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பாடசாலைக்கென தனியான மகுடவாசகம், பாடசாலைக் கீதம் என்பன உருவாக்கப்பட்டன.

1964ம் ஆண்டு செல்வி ம. ஆறுமுகம் பாடசாலையின் அதிபராகக் கடமையேற்றார். இவரின் காலத்தில் உயர்தரத்தில் கலை, விஞ்ஞான பிரிவுகளில் பெருமளவிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர்.

நுண்கலைப் பிரிவும் நுண்கலைப் பாடங்களும் ஆரம்பிக்கப்பட்டன. சாரண அமைப்பின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வலுவூட்டப்பட்டன. பாடசாலைக்கென பாண்ட் வாத்தியக் குழுவும் ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலப் பகுதியில் தினகரன் விழாவில் எமது பாடசாலையின் செம்பு நடனம் முதலிடம் பெற்று பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

1975ம் ஆண்டு காலப் பகுதியில் செல்வி ஆர். ஜே. மான் அதிபராக இருந்த காலப்பகுதியில் பாடசாலை மேலும் வளர்ச்சி கண்டது. ஆங்கில போட்டிகளில் மாணவர்கள் அதிக பரிசில்களைப் பெற்றார்கள்.

ஆங்கிலப் போட்டிகளில் தேசிய மட்டத்திலும் பரிசில்களைப் பெற்றனர். 1984ல் அதிபராகக் கடமையாற்றிய திருமதி தேவமலர் அரியரட்ணம் தமது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார். பல இன்னல்கள், இடர்கள் நிறைந்த காலப் பகுதியிலும் துணிச்சலுடன் செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். இவரின் காலத்தில் பாடசாலை வணிக மன்றத்தினரால்கலை நிதியம்எனும் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் குருளைச் சாரணர் இயக்கத்தையும் ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் இவர். இவரின் காலத்தில் நாட்டுச் சூழ்நிலை காரணமாக எமது பாடசாலை வட இந்து மகளிர் கல்லூரியில் தற்காலிகமாக இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்காலகட்டத்திலும் கல்வி மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகள் மேன்மையடைந்தன.

1987 ல் திருமதி லீ. சந்திரசேகரம் அதிபராகப் பொறுப்பேற்றார். இக்காலப் பகுதியில் பாதிப்புக்குள்ளான எமது பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் எமது பாடசாலையிலேயே செயற்பாடுகள் தொடர்ந்தன. இக்காலத்திலும் பாடசாலை தனது தனித்துவத்தை இழக்கவில்லை. கல்வி வளர்ச்சிப் படியில் முன்னேற்றம் கண்டது.

முறைசாராக் கல்வி புதிதாக அறிமுகமாக்கப்பட்டது. 1993ல் அதிபராகக் கடமையாற்றிய திருமதி இ. நந்தகுமார் ஆளுமை மிக்கவராக பாடசாலையின் வளர்ச்சியினை வலுப்படுத்தினார். இவருக்குப் பின் திருமதி எம். ஜி. தவரட்ணம் அவர்கள் 1996ல் பாடசாலைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

மிகுந்த மன உறுதியும் செயலாக்கமும் நிர்வாகத்திறமை மிக்க அதிபராக விளங்கி பாடசாலையை திறம்பட வழிநடத்தினார்.

1997 ஆம் ஆண்டு திருமதி செ. சுந்தரேசன் அதிபராகப் பதவியேற்றார். இவரின் வரவு பாடசாலையின் வளர்ச்சிக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். கணனி கற்கை அறிமுகம் செய்யப்பட்டதுடன் புதிதாக பல கட்டடங்களும் அமைக்கப்பட்டு பாடசாலை புத்தெழுச்சி பெற்றது. இவரின் நிர்வாகத்திறமை பல வெற்றிகளை இப்பாடசாலைக்கு ஈட்டித்தந்தது.

இப்பாடசாலை மாணவிகள் இணைப்பாடவிதான அடைவுகளில் மாவட்ட, தேசிய மட்டங்களில் பங்குபற்றி வெற்றிபெற்றனர். 1997 இல் இப் பாடசாலை மாணவிகள் மாகாண மட்ட 17 வயதிற்கு உட்பட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வலைப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டில் 07 விளையாட்டு அணியினர் தேசிய மட்டத்தில் பங்குகொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

2008 ஆம் ஆண்டு ஆங்கில சொல்வதெழுதல் நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை சாதனையாகும். கடந்த ஆண்டுகளில் சிறுகதை, கட்டுரைப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் 1ம், 2ம் இடங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும்.

2009 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் செல்வி பிரியங்கா ரத்தினேஸ்வரன் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சாரண ஜம்போரியில் இப் பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் பங்குபற்றியமை இப் பாடசாலையின் இணைப்பாடவிதான உயர்வை வெளிக்காட்டும் குறிகாட்டியாகும்.

அதிபர் திருமதி செ. சுந்தரேசன் 20.10.2001 – 28.10.2001 வரையான காலப் பகுதியில் புதுடில்லியில் நடைபெற்ற கல்வி முகாமைத்துவமும் மேற்பார்வையும் சம்பந்தமான இலங்கை அதிபர்கள், கல்வி அதிகாரிகளுக்கான கருத்தரங்கிலும் மற்றும் 28.04.2003 – 16.05.2003 வரையான காலப் பகுதியில் கனடா ஒன்ரோரியோவில் இடம்பெற்ற இலங்கை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியிலும் கலந்துகொண்டார். இப் பயிற்சி நெறியானது இப் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது.

இக் காலப் பகுதியில் இவரின் முயற்சியினால் தரம் 06 தொடக்கம் 11 வரை ஆங்கில மொழி மூலமான கற்பித்தல் ஷி}&யினிl8t@pனி முதன் முதல் க. பொ. த. உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவு ஆங்கில மொழி மூலமான கற்பித்தல் எமது பாடசாலையில் 2009ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் இம் மாணவர்கள் க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இம் மாணவர்கள் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சையில் 100 வீதம் சித்தியடைந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.

துடிப்புமிக்க அதிபரின் முயற்சியினால் அரச நிறுவனம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பழைய மாணவர் சங்கம் போன்றவற்றினால் பெறப்பட்ட பயன்கள் பின்வருமாறு,

* 1998 இப்பாடசாலை பிரதேச ரீதியான பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில்  (D. S. D)  இணைக்கப்பட்டது.

பிரார்த்தனை மண்டபம் திருத்தம், மின்சார விசிறி, ஒலிபெருக்கி சாதனங்கள், கணனி

* 2003 G. T. Z. – வகுப்பறைத் திருத்தம், மலசலகூடம்

* NECOD – புதிய அதிபர் காரியாலயம், நூலகம், 06 வகுப்பறைகள் கொண்ட மாடிக் கட்டடம்.

*  UNICEF  – தளபாடங்கள்

*  UNOPS  – பாலமும் புதிய நுழைவாயில்

* UMCOR – 1200 அடி சுற்றளவுள்ள சுற்றுமதில்

* மெதடிஸ்த திருச்சபைகிறிஸ்தவ பிரார்த்தனை மண்டபம்

கனடா பழைய மாணவர் சங்கம்துவிச்சக்கர வண்டித் தரிப்பிடம், புகைப்படக் கருவிகள், 20 கணனிகள், புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகின்றது.

* அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்கம் - எறிகருவி, 02 கணனி

* லண்டன் பழைய மாணவர் சங்கம் - போட்டோ பிரதி இயந்திரம்

* ஜேர்மன்  Bielefeldமுச்சக்கர வண்டி. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com