Contact us at: sooddram@gmail.com

 

பின்தங்கிய விவசாயக் கிராமமான மத்தள இன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிறது

(எம். இர்பான் ஸகரியா)

2005 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தினை பெற்ற ஆண்டாக கருத முடியும். இதற்கான காரணம் யாதெனில் இதற்கு முன்னர் எமது நாட்டில் மக்கள் நிம்மதியிழந்து, சொத்துக்களை இழந்து அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். வடக்கு, கிழக்கு உட்பட நாடுபூராவும் இந்த நிலையே காணப்பட்டது. பயங்கரவாதப் பிரச்சினை முழு நாட்டையும் சிறியோர், பெரியோர், வடக்கு, தெற்கு, இன வேறுபாடின்றி சகலரையும் ஆட்கொண்டிருந்தது. நாடும் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவினை எதிர்நோக்கியிருந்தது.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் சிலர் இந்த யுத்தத்திற்கே பலியானது வரலாறாகும். இதுபோன்றதொரு சூழ்நிலையில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவது, கிராமிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது உட்பட பல்வேறு முன்மொழிவுகளை மஹிந்த சிந்தனை திட்டத்தினூடாக மக்களுக்கு முன்வைத்து இதனை மக்கள் ஏற்றுக்கொண்டதன் பயனாக ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வெற்றியீட்டினார்.

இதன் பயனாக கொடூர யுத்தம் இரண்டரை வருடங்களுக்குள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட்டு நாட்டுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.

தன்னை அரசியலுக்கு கொண்டு வந்து பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, அமைச்சராக, பிரதமராக மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றிக்கடனாக வழங்கிய மிகவும் முக்கிய வாக்குறுதியையும் ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். எமது நாட்டின் நீண்ட காலக் கனவான இரண்டாவது சர்வதேச விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு ராஜபக்ஷ விமான நிலையமாக தனது சேவையினை ஆரம்பித் துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் விவசாய மாவட்டமாக பூகோள ரீதியாக திகழ்ந்தது. இம்மா வட்டம் தற்பொழுது வர்த்தக மாவட்டமாக கட்டியெழுப்பப் பட்டு வருகின்றது.

இதில் உலகில் தரையில் முதன் முதலில் நிர்மாணிக்க ப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திலிருந்து இருபது நிமிடத்தில் செல்லக்கூடிய மத்தலை கிராமத்தில் 2000 ஹெக்டெயர் நிலப் பரப்பில் இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் ஒரு பகுதி நிலம் விமான நிலையப் பணிகளுக்கும்,விமான நிலையத்தோடு தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளதோடு ஏனைய நிலப்பரப்பில் இரண்டாம் கட்டத்திற்கு விமான திருத்த வேலைகள் தளம், விமானிகள் பயிற்சி நிலையம் தனியார் விமானங்கள் நிறுத்தும் இடம், தொழில்நுட்ப பயிற்சி கேந்திர நிலையங்கள் என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான ஓடுபாதை 3600 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கொண்டு காணப்படுவ தோடு இதனோடு இணைந்து சிறிய ஓடு பாதைகளும் நிர்மாணி க்கப்பட்டுள்ளன. உலகில் மிகப்பெரிய விமானமான ஏ 380 எயார் பஸ்கள் தரை இறங்கக் கூடிய விதத்தில் இந்த ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள தரிப்பிடத்தில் ஒரே தடவையில் பத்து விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இத்தோடு முதல் கட்டத்தில் எதிர்பார்க்கப்படும் பொருள் பரிமாற்றம் மெற்றிக் தொன் 45000 ஆகும்.

இரண்டாம் கட்டத்தில் இது வருடத்திற்கு 150000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கப்படவுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சேவை பிரிவாக இயங்கவுள்ள இந்த விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளைக் கொண்ட 43 மீற்றர் உயரமான தாமரை வடிவிலான விமான கட்டுப்பாட்டு கோபுரமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனூடாக வருடாந்தம் 30000 விமானங்களின் பயணங்களை பரிமாற்றிக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திலிருந்து செல்லும், வருகை தரும் பயணிகளுக்காக இரண்டு பயணிகள் பாலங்கள் உள்ளதோடு இதில் ஏ 380 விமானங்களோடு சிறிய விமானங்களும் இவற்றைப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வருகை தரும் பயணிகளும், வெளியே செல்லும் பயணிகளுக்கும் தடங்கலின்றி உள்ளே வெளியே செல்வதற்கு வெவ்வேறான இரு மாடிகள் ஒதுக்கப்படுவதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் விசேட அதிகூடிய பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு தீயணைக்கும் பிரிவு அதிநவீன வாகனங்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு இதில் 32,000 லீற்றர் நீரை சேமித்து வைக்கக்கூடிய மூன்று வாகனங்களையும் கொண்டுள்ளது. பிரதான பரிமாற்று கட்டடத் தொகுதி உள்நாட்டு கட்டடக் கலைஞர்களினால் வடிவமைக்கப் பட்டு 12,000 சதுர அடியில் நிர்மாணிக் கப்பட்டுள்ளதோடு இதனைச் சூழ அனைவரையும் கவரும் விதத்தில் சுற்றாடலை பேணி நடு முற்றமும் வடிவமைக் கப்பட்டுள்ளது. விமான நிலைய முதல் கட்டட நிர்மாணப் பணிகளு க்கென 209 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் பட்டுள்ளதோடு இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக் கென 120 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

சீன அரசாங்கத்தின் சீன துறைமுக பொருளியல் கம்பனி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு இவர்களுக்கு உள்ளூர் துறைசார் நிபுணர்களும் அவர்களது பங்களிப்பினை வழங்கியுள்ளனர். ருஹுணு பிரதேசத்தின் சிறப்பினை எடுத்துக்கூறும் குரக்கன் நிறத்திலான வர்ணங்களைக் கொண்ட அழகிய சித்திரமும் இதன் உள்ளே அனைவரையும் கவரும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. இதில் பத்து இலட்சம் பயணிகள் வந்து செல்லக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொழிலற்று இருந்த 2000 இளைஞர், யுவதிகள் முதல் கட்டத்தில் தொழில் வாய்ப்பு க்களையும் பெற்றுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து ள்ளதோடு இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டாகும் போது நிறைவடைந்து ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமான கேந்திர நிலையமாக திகழவுள்ளது.

மத்தள விமான நிலையத்தினூடாக விமான பாதைகள் எட்டுக்கு சர்வதேச விமான சேவைகள் சபை விமானங்களினை சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் சீனா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு விமான சேவை நிறுவனங்கள் இனங்கியுள்ளன. மத்தலையையும் கட்டுநாயக்க விமான நிலையத்தினையும் இணைக்கும் வகையில் இலங்கை விமானப் படையினால் உள்ளூர் விமான சேவையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த கால வரலாற்றில் கைவிடப்பட்டிருந்த பிரதேசமாக திகழ்ந்த விவசாயக் கிராமமான மத்தள கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக பொருளாதார ரீதியாக பாரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது இம்மக்களில் பலர் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். காணிகளின் விலைகள் என்றும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றன.

நவீன வசதிகளைக் கொண்ட பாதைகள் நீர், மின்சார வசதிகள், விவசாயம், சுற்றுலா, மீன்பிடி, தொழிநுட்பம் போன்ற தொழில் முயற்சிகளினூடாக சர்வதேச வர்த்தகத்தினை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படை வசதிகளற்று திகழ்ந்த மத்தள கிராமம் தற்பொழுது சர்வதேச கவனத்தினை ஈர்த்துள்ளது. இவ்வாறு திகழச் செய்தமைக்காக இக்கிராம மக்கள் பாதையோரங்களில் பதாகைகளை வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் சிறப்புமிக்க இரண்டாவது சர்வதேச ராஜபக்ஷ விமான நிலையம் இன்று 2013/03/18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்படுகிறது. இன்றைய தினம் சுபவேளையில் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com