Contact us at: sooddram@gmail.com

 

இப்போது புரிகிறதா? தமிழக ஈழ ஆதரவு வேடதாரிகளின் சூட்சுமங்கள்?

ஈழத்தமிழர்களின் பெயரில் இந் தியாவில் நடக்கும் வியாபாரம் எல்லைகடந்து செல்கிறது. ஈழதமிழருக்காக குரல்கொடுக்கின் றோம் ஆதரவு தருகின்றோம் அனை த்தையுமே இழக்கின்றோம் என்று தமிழக அரசியல்வாதிகள் கொடுத்து வரும் குரல்களில் உள்ள போலிகளை அம்பலப்படுத்துவதில் இல ங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் யாருமே அக்கறை கொள்வதில் லை. அவர்கள் எப்படி பேசினாலும் அது எமக்கு சாதகமானதே என் கின்ற ஒரு பொத்தாம் பொது சிந் தனை எமது மக்களின் மனதிலும் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. கே ட்டால் தமிழ் நாட்டு தமிழர்கள் எமது தொப்புகொடி உறவுகள் எம க்கு எதுமென்றால் அவர்கள் எமக்கு கரம்கொடுப்பார்கள் என்று சப்பை கட்டுகட்டி வரும் இலங்கை எழுத்தா ளர்களுக்கு மட்டும் குறைவில்லை. அப்படி என்றால் அது என்ன தொப் புள் கொடி உறவு? அப்படிபார்த் தால் இலங்கைத்தமிழர்கள் இந்தியா வில் இருந்து இங்குவந்து குடியேறி யவர்கள் என்றும் அவர்கள் இங்கு பூர்வீகம் கொண்டாடுவது பொய்யா னது என்றும் சிங்கள இனவாதிகள் சொல்லிவருவதுதான் உண்மையோ எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

இந்த பூர்வீக ஆய்வுகள் ஒருபுற மிருக்க இந்த தொப்புள் கொடி உற வுக்காக வேண்டுமானால் தமிழ் நாட் டில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள் ஈழத்தமிழர் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த அனுதாப அலையை தமக்கு சாதக மாக பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை பெறுவ தில் nஜ.nஜயலலிதா தொடக்கி ப.நெடுமாறன் வரைக்கும் யாரும் சளைத்துவிடவில்லை. தனிநாட்டுக் கான பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றிக்கு ஐ.நா தலையிட வேண்டு மென கோரி ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வர போகிறாவாம். ஈழத் தில் வாழும் எந்த தமிழன் இன்று ஈழம் கேட்பான்? சுமார் 30 ஆண்டு கால யுத்தத்தில் தப்பி பிழைத்து நடைபிணங்களாக வாழும் எமது மக்களை வைத்து இவர்கள் பண் ணும் வியாபாரத்துக்கு அளவு கண க்கே இல்லையா? எமது மக்களில் வாழ்வில் இருக்கின்ற அமைதியை யும் மீண்டும் குழப்புகின்ற இந்த முயற்சிகளை ஈழத்து புத்திஜீவிகள் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும். அடுத்து ஜெயலலிதா வின் கடந்த ஆட்சிகாலத்தில் புலிகளின் பயங்கரவாத செயல்களை தடுத்துநிறுத்த தடா, பொடா என்று கண்ட கண்ட சட்டங்களை எல்லாம் அமுல்படுத்தியவர் அவர். இந்த சட் டங்களினால் எல்லாம் புலிகள் கட்டுபடுத்தப்பட்டார்களோ என்னமோ தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக் கும் ஈழ அகதிகள் மிகப்பெரும் உபாதைகளுக்குள்ளானர்கள். அப்போது புலிகளைகட்டுப்படுத்தும் வேகத்தில் பொதுமக்கள் பட்ட துன்ப ங்களை எல்லாம் கண்டுகொள்ள மறுத்தவர் இந்த nஜயலலிதா. ஆனால் இன்று இந்திய பிரதமரையே கொன்றொழித்த மரண தண் டனை கைதிகளை விடுவிக்க தீர் மானம் கொண்டுவந்துள்ளார்.

இந்த முடிவிற்கு சுமார் பத்து தின ங்களுக்கு முன்பு குற்றவாளி நளினி தன்னை ஒரு மாதம் கண்காணிப் புடன் விடுவிக்குமாறு நீதிமன்றத் தில் கோரியபோது தமிழக அரசின் சார்பில் அதை எதிர்த்தார்கள். இது முடியாது. இவரை வெளியே விட் டால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எழும். சிலர் இவரை தங்கள் அரசி யல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த முனைவார்கள். இவருடைய உயிரு க்கே கூட ஆபத்து நேரிடலாம்என்று வாதிடப்பட்டது.

இந்திய மக்களவை தேர்தல் நெருங்க நெரு ங்க இலங்கைத் தமிழர் மீதான இந்திய அரசி யல் வாதிகளின் பாசம் பொத்துக்கொண்டு வரு கின்றது என்பதன் அடையாளமே இது வாகும். ஜெயலிதாவின் அரசியலை ஆகோ ஓகோ என்று புழுகி எழுதி வரும் துக்ளக் சோ கூட இந்த ராஜீவ் காந்தி கொலை குற்ற வாளிகள் ஏழுபேரையும் விடுவிக்கும் தமிழக முதலமைச்சரின் முடிவை அரசியல் இலாப நட்ட கணக்கினை அடிப்படையாக கொண்டது என குற்றம் சாட்டியுள்ளார்."ஏழு பேரில் ஒருவரை ஒரு மாதம் வெளியே விடக் கூட சம்மதிக்காத தமிழக அரசுபத்தே நாட்களில் ஏழு பேரு க்குமே விடுதலையையே தந்துவிட முன்வந்தது ஏன்? அரசியல்தான். அரசியல் என்று ஆன பிறகு அதில் நியாய அநியாயம் பார்க்க முடி யாது. லாப நஷ்டம்தான் பார்க்க வேண்டும். இதில் லாபமும் இருப்ப தாக நாம் நினைக்கவில்லை. ராஜீவ் கொலையாளிகளை தமிழகம் மன்னி த்து விட்டதாகக் கருத இடமில்லை. நடந்திருப்பது நல்லதற்கல்ல".என அவர் எழுதியுள் ளார்.

மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக் கில் ஆயுள் தண் டனை விதிக்கப் பட்டு மருத்துவ மனையில் கவ லைக்கிடமான நிலையில் உள்அபு தாஹிரை விடுதலை செய்ய வேண்டும். 17 வயதில் சிறை சென்ற அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரு கிறார். இதுபோன்ற பல ஆயுள் தண் டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என் றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான ஜவாஹி ருல்லா. அப்படி செய்தால் அது ஜெயலலிதாவின் காருண்யத்தின் அடையாளமாக இருக் கும் அதை செய்ய முடியாது.

இதேபோன்று இந்த ராஜீவ் காந்தி கொலைகுற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கும் படி கோரி பல்வேறு போராட்டங்களை பல ஆண்டுகளாக நடாத்திவரும் நெடு மாறன் போன்றவர்களின் செயல்பா டுகள் எல்லாமே சர்வதேச புலிகளின் நிதி வலைப்பின்னல்களினால் வழிநடத்தப்படுபவை என்கின்ற செய் திகள் இன்று அம்பலமாக தொடங் கியுள்ளன. அது சீமானாக இருக்க லாம் அல்லது திருமாவளவனாக இருக்கலாம் ஏன் கோபால்சாமியாக கூட இருக்கலாம். நெடுமாறன் ஐயாவா என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழலாம். ஆம் சாட்சாத் நெடுமாறன் ஐயாவேதான்.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் என அறியப்பட்ட சிவயோகம் அறக்கட்டளையும் அதன் ஸ்தாபகர் நாகரட்ணம் சீவரட்ணமும் கோயில் உண்டியல் பணத்தில் 500 பவுண்கள் தமிழகத்தில் உள்ள தமிழ் தலைவர் பழ நெடுமாறனுக்கு மாதந்தம் அனுப்பி வந்துள்ளனர். என்னும் இரகசியங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. அப்படியென்றால் இந்த கோயிலுக்கு புகலிடத்தமிழர்கள் வழங்கிவரும் உண்டியல் பணத்தில் மற்றைய தலைவர்களுக்கு எவ்வளவு மாதாந்தம் சென்றடைந்தது என்கின்ற கேள்விகள் உண்டு.

அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் இருக்கின்ற ஏனைய நாடுகளில் கனடா வில் அவுஸ்ரேலியாவில் என்று புகலிடத்தமிழர்களின் சுமார் நூற்றுக்கும் அதிகமான கோவில்கள் உண்டல்லவா? அங்கிருந்தெல்லாம் எத்தனை ஆயிரம் டொலர்களும் ஈரோக்களும் இந்த தமிழ் நாட்டு ஈழ ஆதரவாளர்களுக்கு மாதாந்தாம் சென்றிருக்கும்? போரிலிருந்து தப்பி பிழைத்த தமிழன் அந்த பனியிலும் குளிரிலும் அடிபட்டு உழைக்கின்ற பணம் ஏன் இந்த பித்தலாட்டகாரர்களை சென்றடைய வேண்டும்? இங்கு கஞ்சிக்கும் கூழுக்கும் வழியின்றி போரில் நிர்க்கதியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு சென்றடைய வேண்டிய இந்த நிதிகள் ஏன் இப்படி தமிழ் நாட்டு அரசியல் வியாபாரிகளின் வங்கி கணக்குகளை நிரப்பவேண்டும்? என்று இனிமேலாவது நாம் குர லெழுப்ப வேண்டாமா? இலங்கை தமிழர்களே?

இப்போது புரிகிறதா? தமிழ்நாட்டு ஈழ ஆதரவு வேடதாரிகளின் சூட்சுமங்கள்?

மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com