Contact us at: sooddram@gmail.com

 

உலகக் கிண்ணம் 2015
முறியடிக்கப்படும் சாதனைகள்

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொட ரில் அவுஸ்திரே லியா மற்றும் நியூசிலாந்து மைதானங்க ளில் பந்துகள் வேகமாகவும் பவுண்சர் பந்துகளுக்கும், சுவீங் பந்துகளுக்கும் பிரபலமான மைதானங்கள். எனவே பந்து வீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக அமையும் என்று விமர்சகர்களாலும், கிரிக்கெட் வல்லுநர்களாலும் பலவாராகப் பேசப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ஆட்டங்களைப் பார்க்கும்போது இம் முறை கூடுதலான சதங்கள் பெறப்படும் தொடரகவும் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற 28 போட்டிகளில் 22 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்தியாவில் நடைபெற்ற 10வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போதுதான் 43 ஆட்டங்களிலும் 24 சதங்கள்பெறப்பட்டு தொடரொன்றில் கூடுதலான சதங்கள் பெறப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை இச்சாதனை முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.

23 வருடங்களுக்கு முன் இதே அவுஸ்திரேலிய- நியூசிலாந்து மைதானங்களில் நடைபெற்ற 5வது உலகக் கிண்ணப் போட்டிகளின் போது கூட 39 ஆட்டங்களில் வெறும் 8 சதங்களே பதிவாகியிருந்தன. மேலும் இம்முறை இதுவரை நடைபெற்ற 56 இன்னிங்ஸ்களில் 19 தடவைகள் 300 மேற் பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இது உலகக் கிண்ண வரலாற்றில் தொட ரொன்றில் 300 ஓட்டங்களுக்கு மேல் அதிக தடவைகள் பெற்ற சந்தர்ப்பமாகும். இதற்கு முன் 2011ம் ஆண்டு நடைபெற்ற 10வது உலகக் கிண்ணத் தொடரில் 17 முறை 300 ஓட்டங்களுக்கு மேல் பெற் றதே சாதனையாகவிருந்தது. இதில் மூன்று தடவைகள் 400க்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க அணி இரு தடவைகளும் அவுஸ்திரேலிய அணி 1 தடவையும் இச் சாதனையைப் புரிந்துள்ளன. உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற ஆகக் கூடுதலான ஓட்டங்களாக கடந்த 4ம் திகதி பேர்த் நகரில் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி பெற்ற 417 ஓட்டங்களே இதுவரை பதிவாகியுள் ளன. இதற்கு முன் 2011 ஆம் இந்திய அணி நமீபியாவுக்கு எதிராகப் பெற்ற 413 ஓட்டங்களே கூடுதலான ஓட்டங்க ளாகப் பதிவாகியிருந்தது. இம்முறை 3 தடவைகள் 300 ஓட்டங்களை துரத்தி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி வெற்றிபெற்றுள்ளது.

ஆனால் மேலோட்டமாகப் பார்த்தால் துடுப்பாட்டத்துக்குச் சாதகமான ஆடுக ளங்கள் போலத் தெரிந்தாலும் இம்மை தானங்களில் பல பந்துவீச்சாளர்களும் திறமையாகச் செயற்பட்டு வருகிறார்கள். இதுவரை நடைபெற்ற அட்டங்களில் 4 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுக்கள் பெற்ற சந்தர்ப்பங்கள் 10 தடவைகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளத்தி கூடுதலாக 4 போட்டிகளில் 13 விக்கெட் டுகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் போட்டியாக இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றாலும் ஓரிரு போட்டிகளில் பந்துவிச்சாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாகவும் நடைபெற்று வருகின்றன. கடந்த 28ம் திகதி வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து- அவுஸ்திரேலிய அணி களுக்கிடையில் நடைபெற்ற போட்டி யில் பந்துவீச்சாளர்களின் திறமையை மிளிரச் செய்யும் போட்டியாக அமை ந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவ்வணி சார்பாக கூடுதலான ஓட்டமாக பிரெட் ஹெடின் பெற்ற 43 ஓட்டங்களே பதிவாகின. பந்துவீச்சில் பெளல்ட் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப் பற்றினார்.

இலகுவான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி 7 ஓவர்களில் 70 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெல்லும் என்றே எதிர்பார்த்தனர். பிரென்டன் மெக்கலம் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தைத் தொடர்ந்து அவ்வணியின் ஏனைய விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தது. அவுஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர்களின் துலலியமான பந்துவீச்சில் 9 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது நியூசிலாந்து அணி. பந்து வீச்சில் திறமையாகச் செயற்பட்ட மிச்சல் ஸ்ட்ராக் திறமையாகப் பந்து வீசி 6 விக்கெட்டுக்ளைக் கைப்பற்றினார். சிறப்பாட்டக்காரராக நியூசிலாந்து வீரர் பெளல்ட் தெரிவானார்.

கடந்த 01ம் திகதி நியூசிலாந்து வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 22வது போட்டியில் இலங்கை அணியுடன் இங்கிலாந்து போ¡தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்துடன் 303 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திறமையான துடுப்பாட்டத்தின் மூலம் கடினமான இலக்கை மிக இலகுவாகத் துரத்திப் பிடித்தது. இதில் திரிமான 137 ஓட்டங்களையும் சங்கக்கார 115 ஓட்டங்களையும் பெற்றனர். இதில் சங்கக்கார 69 பந்துகளில் சதத்தைக் கடந்து தனது குறைந்து பந்துகளில் (72) கடந்த 26 திகதி பங்களாதேஷ் அணிக்கெதிராகப் பெற்ற வேக சதத்தை இதன் மூலம் கடந்து சென்றார். சங்கக்கார இத்தொடரில் பெற்ற 2வது சதமாகவும் இது பதிவானது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்.

அன்றைய தினமே 23து போட்டியாக பேர்த் நகரில் நடைபெற்ற யூ.ஏ.ஈ- இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலகுவான 9 விக்கெட் வெற்றியைப் பெற்று ‘பி’ பிரிவில் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.

கடந்த 1ம் திகதி அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 23வது போட்டியில் பாகிஸ்தான்- சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஏற்கனவே பாகிஸ்தான் சந்தித்த இரு போட்டிகளிலும் படுதோல்வியடைந்திருந்தது. சிம்பாப்வே 3போட்டிகளில் 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருப்பதாலும் போட்டித் தொடரில் அடுத்த சுற்றுக்குத் தெரிவாக இப்போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு இரு அணிகளும் தள்ளப்பட்டிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் தடுமாறியது. 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் விழ அவ்வணியின் ஓட்டவேகமும் குறைந்தது. இறுதியில் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸின் அதிரடியான 54 ஓட்டங்கள் உதவியுடன் 235 ஓட்டங்கள் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி முதலில் தடுமாறி விரைவாக இரு விக்கெட்டுகளை இழந்தாலும் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் இலக்கை நோக்கி இலகுவாக நகர்ந்தது. 35 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பு 153 ஓட்டங்கள் பெற்று வலுவான நிலையில் இருந்தது அவ்வணி. ஆனால் இறுதியில் சகல விக்கெட்டுகளையும் 215 ஓட்டங்களுக்கு இழந்து 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், இர்பான் ஆகியோர் 4 விக்கெட் வீதம் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக வஹாப் ரியாஸ் தெரிவானார்.

போட்டித் தொடரின் 24வது போட்டியாக அவுஸ்திரேலிய கென்பரா மைதானத்தில் அயர்லாந்து- தென்னாபிரிக்க அணிகள் மோதின. அயர்லாந்து அணி தான் சந்தித்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்ததால் இப்போட்டியிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அதிரடியாக ஆடி 4 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்க அணி சார்பில் ஹஷிம் அம்லா 159 ஓட்டங்களையும், டுபிளஸிஸ் 109 ஓட்டங்களையும் பெற்றனர். கடின இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி பந்து வீச்சில் அல்போட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஹஷிம் அம்லா தெரிவானார். இது ஹாஷிம் அம்லாவின் 20வது சதமாகும். அத்துடன் அவரின் கூடிய தனி நபர் ஓட்டமாகவும் இது பதிவானது. மேலும் 105 போட்டிகளில் அதி வேகமாக 20 சதம் என்ற சாதனையையும் இச் சதத்தின் மூலம் அம்லா முறியடித்தார். இதற்கு முன் 130 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோஹ்லி இச்சாதனையைப் புரிந்திருந்தார்.

போட்டித் தொடரின் 25வது போட்டி கடந்த 4ம் திகதி நியூசிலாந்து நெப்பியர் விளை யாட்டு மைதானத்தில் பாகிஸ்தான்- ஐ. அ. இ. அணியும் மோதின. முதலில் துடுப் பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை 9 ஓட்டங்கள்பெறவதற்குள் இழந்தது. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹரிஸ்- செஷாட் ஜோடி நிதானமாக ஆடி பாகிஸ்தான் ஓட்ட எண் ணிக்கையை உயர்த்தினர். இறுதயில் அவ்வணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களைப் பெற்றது. இத் தொடரில் முதல் தடவையாக பாகிஸ்தான் அணி 300 ஓட்டங்களைக் கடந்து சென்றது. கடின இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஐ. அ. இராச்சியம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் பெற்று 121 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அப்ரிடி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக 97 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் வீரர் அஹமட் செஷாட் தெரிவானார்.

11 உலகக் கிண்ணத் தொடரின் 26வது போட்டியாக அவுஸ்திரேலிய பேர்த் நகரில் நடைபெற்றது. முதலில் துடுப்பொடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 417 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேவிட் வோனர் 177 ஓட்டங்களையும், மெக்ஸ¤வல் 39 பந்துகளில் 89 ஓட்டங்களையும் பெற்றனர். இவ்வோட்ட எண்ணிக்கையானது உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முன் 2011ம் ஆண்டு நபீபிய அணிக்கு எதிராக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 413 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

418 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஐ. அ. இராச்சியம் 142 ஓட்டகளைப் பெற்று 272 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலிய அணியின் இவ்வெற்றியானது உலகக் கிண்ணப் போட்டியொன்றில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்ட வெற்றியாகவும் இது பதிவானது. ஆட்டநாயகனாக 177 ஓட்டங்கள் விளாசிய டேவிட் வோனர் தெரிவானார்.

தொடரின் 27வது போட்டி கடந்த ஐந்தாம் திகதி நியூசிலாந்து நெல்சன் மைதானத்தில் பங்களாதேஷ்- ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொ டலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்களைப் பெற்றது இதில் ஆரம்ப வீரராகக் களமிறங்கிய கைல் கோட்ஜேர் 156 ஓட்டங்களைப் பெற்றார். கடின இலக்கைத் துரத்திய பங்களாதேஸ் அணி தமிம் இக்பால், முஸ்பிகுல் ரஹீம். மஹமதுல்லா, ஷகீப் அல் ஹஸன் ஆகியோரின் அரைச்சதங்களுடன் வெற்றி இலக்கை 4 விக்கெட்களை இழந்து பெற்றது. இதுவே இம்முறை அதிகூடிய ஸ்கோர் சேஸ்ஸாகவும் பதிவானது.

தொடரின் 28வது போட்டியாக ‘பி’ பிரிவில் மேற்கிந்தித்தீவுகள்- இந்திய அணிகள் அவுஸ்திரேலிய பேர்த் மைதானத்தில் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பம் முதலே ஓட்டங்கள் எடுப்பதற்கு சிரபப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 35வது ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களே எடுத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கப்டன் ஜேஸன் ஹோல்டர் 57 ஓட்டங்களைப் பெற்றதால் இறுதியில் 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலகுவான வெற்றி இலங்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் ஆரம்ப வீரர்களின் தடுமாற்றமான ஆட்டத்தால் ஓட்டங்கள் எடுப்பதற்கு அவ்வணியினர் சிரமப்பட்டனர். 30 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை நோக்கிச் சென்ற அவ்வணியை கப்டன் டோனியின் பொறுப்பான ஆட்டத்தால் மேலும் விக் கெட் இழப்பின்றி 39.4 பந்துகளில் வெற்றி இலக்கை அடைந்தது. தோனி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களைப் பெற்றார். ஏ பிரிவில் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பி. பிரிவில் இந்திய அணி 8 புள்ளுகளுடன் முதலிடத்துலும் உள்ளன.

எம்.எஸ்.எம். ஹில்மி
அரநாயக்க

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com